Latest Updates
-
துவரம் பருப்பும், தேங்காயும் இருந்தா.. இட்லி, தோசைக்கு இப்படி சட்னி செய்யுங்க.. ருசி அள்ளும்.. -
இன்றைய ராசிபலன் 24 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ராஜயோகம் தேடிவரப்போகுதாம் -
செவ்வாயால் உருவாகும் நீச்சபங்க ராஜயோகம்: செப்டம்பரில் இந்த 4 ராசிகளின் வளர்ச்சியை யாராலும் தடுக்க முடியாது! -
ப்ளீச்சிங் செஞ்ச மாதிரி முகம் பளிச்சுன்னு இருக்கணுமா? அப்ப இந்த ஃபேஸ் பேக்கை போடுங்க.. -
September Matha Rasipalan 2026: செப்டம்பரில் இந்த 3 ராசிக்காரர்களுக்கு பெரிய ஜாக்பாட் அடிக்கப்போகுது.. -
ஆசிரியையின் ஒரு அறை.. உயிரிழந்த சிறுவன்! இது எப்படி சாத்தியம் என்பது குறித்து விளக்கும் டாக்டர்! -
1/2 கிலோ மட்டன் வெச்சு.. இப்படி ஒருவாட்டி மசாலா அரைச்சு பிரியாணி செய்யுங்க.. டேஸ்ட் தாறுமாறா இருக்கும்.. -
சிம்ம ராசிக்கு சென்றுள்ள புதன்: இன்று முதல் இந்த 3 ராசிக்கு வெற்றியும், பணமும் குவியப்போகுது.. -
சிக்கன் எடுத்தா இப்படி மசாலா அரைச்சு கிரேவி செஞ்சு பாருங்க.. பூரி, சப்பாத்திக்கு அல்டிமேட்டா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 23 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு நல்ல செய்திகள் தேடிவரப்போகுதாம்
பிள்ளைகளிடம் மன்னிப்பு கேட்பது தப்பில்லை!

டீன் ஏஜ் பிள்ளைகளை வளர்ப்பது சாதாரண காரியமில்லை. பெற்றோர்களுக்கும் பிள்ளைகளுக்கும் இடையே ஏற்படும் உறவுச்சிக்கல்கள் மிகப்பெரிய போராட்டத்தை ஏற்படுத்தக்கூடியவை. நாங்க சொன்னா கேட்க மாட்டேங்கிறான் என்று கூறும் பெற்றோர்கள் ஒருபக்கம், என்னை புரிஞ்சிக்கவே மாட்டேங்கிறாங்க என்று கூறும் பிள்ளைகள் மறுபக்கம் என இருவேறு திசைகளில் பயணித்துக்கொண்டிருப்பார்கள்.
இதைக் கருத்தில்கொண்டு பெற்றோர்கள் தங்களின் டீன் ஏஜ் பிள்ளைகளிடம் எவ்வாறு நடந்து கொள்ளவேண்டும் என்று இணையதளம் ஒன்று ஆய்வினை நடத்தியிருக்கிறது.
தனக்கு இருக்கும் தனித்திறமையை பெற்றோர்கள் பாராட்டவேண்டும் என்று எதிர்பார்க்கின்றனர். எனவே பெற்றோர்களே, உங்கள் பிள்ளையிடம் உள்ள நல்ல திறமைகளை சுட்டிக்காட்டிப்பேசுங்கள். நான் உன்னை நினைச்சுப் பெருமை படுறேன் என்று கூறுங்கள். அந்த மந்திர வார்த்தைக்கு உங்கள் பிள்ளைகள் கட்டுப்படுவார்கள்.
உங்கள் குழந்தைகள் எப்படியிருந்தாலும் அப்படியே ஏற்றுக்கொள்ளுங்கள். அளவுகடந்த கட்டுப்பாடுகள் அற்ற அன்பைக்காட்டுங்கள் ஏனென்றால் பிள்ளைகள் எதிர்பார்ப்பதும் அதைத்தான்.
பெற்றோர்கள் பேசிய வார்த்தைகள் காயப்படுத்தியிருக்கலாம், எனவே ஈகோ பார்க்காமல் மன்னிப்பு கேளுங்கள். இதனால் உங்கள் பிள்ளைக்கு உங்கள் மீதான மதிப்பு குறைந்து விடாது. தவறை ஒப்புக்கொள்கிற உங்களை கூடுதலாக கூடுதலாக நேசிக்கவும் மதிக்கவும் வைக்கும்.
பதின் பருவம் என்பது மிகவும் சிக்கலான பருவம். எந்த சூழ்நிலையில் என்ன செய்வது என்று தெரியாமல் தவிக்கும் பருவம். தாம் எப்படியாவது வெற்றி பெறவேண்டும் என்ற ஏக்கம் நிறைந்துள்ள காலம். குழப்பம் நிறைந்த இந்த காலத்தில் உங்கள் குழந்தைகளை நீங்கள் நம்புங்கள். ஏனெனில் அவர்கள் எதிர்பார்ப்பதும் அதைத்தான்.
அட்வைஸ் செய்கிறேன் பேர்வழி என்று மொக்கை போடாதீர்கள் அப்புறம் உங்களைக் கண்டாலே காததூரம் ஓடுவார்கள். எனவே பிள்ளைகள் உறங்கும் நேரத்தில் பேச்சை ஆரம்பியுங்கள். ஏனெனில் அந்த நேரத்தில் உங்களை எதிர்த்துப் பேசும் உணர்வு குறைவாக இருக்கும். சொல்லும் விசயங்களை நினைவிலும் வைத்துக்கொள்வார்கள்.



Click it and Unblock the Notifications