Latest Updates
-
வாடகைக்கு மனைவி கொடுக்கும் வினோத நாடு? இதற்கு எவ்வளவு கட்டணம் வாங்குறாங்க தெரியுமா? -
இட்லிக்கு இந்த தண்ணி சட்னியை செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 07 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம் -
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்..
குழந்தைகளின் காய்ச்சல் வலிப்பு : இரும்பு கொடுப்பது மூடநம்பிக்கை

குழந்தைகளுக்கு காய்ச்சல் வருவது அவர்களின் உடலில் ஏற்பட்டிருக்கும் தொற்றுநோயை உணர்த்தும் தற்காப்பு ஆயுதம் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். குழந்தையானது காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருக்கிறதா? என்பதை அறிய வெப்பமானியைக் கொண்டு அறிந்து கொள்ளலாம். 5 வயதிற்கு குறைவாக உள்ள குழந்தைகளுக்கு அக்குளிலில் வைத்து பார்த்து வெப்பத்தை அறிந்து கொள்ளவேண்டும். பொதுவாக 97 முதல் 99 ஃபாரன்ஹீட் வரை உள்ள வெப்பம் இயல்பானதுதான். அதற்கு மேற்பட்டு இருந்தால் மட்டுமே காய்ச்சல் என்பதை உணரலாம். அதன் பின்னர் மருத்துவரிடம் அழைத்துச் சென்று அவர்கள் பரிந்துரைக்கும் மருந்துகளை மட்டுமே அளிக்கவேண்டும்.
லேசான துணிகள்
காய்ச்சல் நேரத்தில் குழந்தைகளின் உடலில் கனமாக உடைகள் இருந்தால் அவற்றை நீக்கிவிட்டு லோசான ஆடைகளை அணிவிக்கவேண்டும். உடல் சூடு அதிகமாக இருக்கும் பட்சத்தில் வெது வெதுப்பான தண்ணீரில் மெல்லிய துணியை நனைத்து ஒத்தடம் தரலாம். இவ்வாறு செய்வது குழந்தையின் காய்ச்சலை குறைக்கும்.
வலிப்பு நோய்
சில குழந்தைகளுக்கு காய்ச்சல் அதிகமாகிவிட்டால் வலிப்பு ஏற்படுவது இயல்பு. இந்த வலிப்பு 10 நிமிடங்களுக்கு மேல் நீடிக்காது. இந்த சமயத்தில் பெற்றோர்கள் பதற்றமடையாமல் உடனடியாக மருத்துவரிடம் கொண்டு செல்லவேண்டும். வலிப்பு நேரத்தில் இரும்பினையோ, சாவிக்கொத்தினையோ கொடுப்பது மூட நம்பிக்கை என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
வலிப்பு வரும் சமயத்தில் குழந்தையை சுற்றி நின்று வேடிக்கைப் பார்ப்பதை விட உடனடியாக காற்று வருமாறு விலகி நிற்க வேண்டும். பின்னர் குழந்தை நாக்கை கடித்துக்கொள்ளாமல் இருக்க அதன் வாயில் பற்களின் இடையே உறுதியான பிளாஸ்டிக் துண்டினை வைக்கவேண்டும். சற்று ரிலாக்ஸ் செய்து விட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சை அளிப்பது நலம் அளிக்கும்.



Click it and Unblock the Notifications
