Latest Updates
-
இன்றைய ராசிபலன் 26 மே 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களை ஆபத்துகள் சூழ்ந்திருக்குமாம் -
சனிப்பெயர்ச்சியால் சகல துன்பங்களையும் அனுபவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் - உங்க ராசி இதுல இருக்கா? -
வெயிலுக்கு ஏற்ற ஜில்லென்ற நன்னாரி பால் சர்பத் ரெசிபி - செஞ்சு பாருங்க, குளுகுளுனு சூப்பரா இருக்கும் -
கேரளா ஸ்டைல் தக்காளி குருமா ரெசிபி - இப்படி செஞ்சு பாருங்க, இட்லி, தோசைக்கு வேற லெவலில் இருக்கும் -
குருபகவான் கடக ராசியில் உச்சமடைவதால் கோடீஸ்வர யோகத்தைப் பெறப்போகும் 4 ராசிகள் இவங்கதான் -
விவாகரத்து விகிதம் குறைவு என்பது பெருமையா? குடும்ப கௌரவத்திற்காகத் தம்பதிகள் அனுபவிக்கும் மௌனமான சித்திரவதை இதுதானா? -
திருமண உறவில் வரதட்சணை கொடுமை! உச்ச நீதிமன்றத்தின் இந்த அதிரடி தீர்ப்பு உங்கள் பாதுகாப்பிற்கு எவ்வளவு முக்கியம் தெரியுமா? -
சாணக்கிய நீதி படி பெண்கள் அவர்களின் கணவரிடம் எப்போதும் மறைக்கும் 5 ரகசியங்கள் என்னென்ன தெரியுமா? -
ஐயங்கார் ஸ்டைல் வெந்தய குழம்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, ஹோட்டலில் சாப்பிடுவதை விட செமையா இருக்கும் -
வெயில் கொளுத்துதா? இந்த வாஸ்து செடிகளை வீட்ல வைங்க… குளிர்ச்சியும் அதிர்ஷ்டமும் தானா வரும்!
குழந்தைகளின் காய்ச்சல் வலிப்பு : இரும்பு கொடுப்பது மூடநம்பிக்கை

குழந்தைகளுக்கு காய்ச்சல் வருவது அவர்களின் உடலில் ஏற்பட்டிருக்கும் தொற்றுநோயை உணர்த்தும் தற்காப்பு ஆயுதம் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். குழந்தையானது காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருக்கிறதா? என்பதை அறிய வெப்பமானியைக் கொண்டு அறிந்து கொள்ளலாம். 5 வயதிற்கு குறைவாக உள்ள குழந்தைகளுக்கு அக்குளிலில் வைத்து பார்த்து வெப்பத்தை அறிந்து கொள்ளவேண்டும். பொதுவாக 97 முதல் 99 ஃபாரன்ஹீட் வரை உள்ள வெப்பம் இயல்பானதுதான். அதற்கு மேற்பட்டு இருந்தால் மட்டுமே காய்ச்சல் என்பதை உணரலாம். அதன் பின்னர் மருத்துவரிடம் அழைத்துச் சென்று அவர்கள் பரிந்துரைக்கும் மருந்துகளை மட்டுமே அளிக்கவேண்டும்.
லேசான துணிகள்
காய்ச்சல் நேரத்தில் குழந்தைகளின் உடலில் கனமாக உடைகள் இருந்தால் அவற்றை நீக்கிவிட்டு லோசான ஆடைகளை அணிவிக்கவேண்டும். உடல் சூடு அதிகமாக இருக்கும் பட்சத்தில் வெது வெதுப்பான தண்ணீரில் மெல்லிய துணியை நனைத்து ஒத்தடம் தரலாம். இவ்வாறு செய்வது குழந்தையின் காய்ச்சலை குறைக்கும்.
வலிப்பு நோய்
சில குழந்தைகளுக்கு காய்ச்சல் அதிகமாகிவிட்டால் வலிப்பு ஏற்படுவது இயல்பு. இந்த வலிப்பு 10 நிமிடங்களுக்கு மேல் நீடிக்காது. இந்த சமயத்தில் பெற்றோர்கள் பதற்றமடையாமல் உடனடியாக மருத்துவரிடம் கொண்டு செல்லவேண்டும். வலிப்பு நேரத்தில் இரும்பினையோ, சாவிக்கொத்தினையோ கொடுப்பது மூட நம்பிக்கை என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
வலிப்பு வரும் சமயத்தில் குழந்தையை சுற்றி நின்று வேடிக்கைப் பார்ப்பதை விட உடனடியாக காற்று வருமாறு விலகி நிற்க வேண்டும். பின்னர் குழந்தை நாக்கை கடித்துக்கொள்ளாமல் இருக்க அதன் வாயில் பற்களின் இடையே உறுதியான பிளாஸ்டிக் துண்டினை வைக்கவேண்டும். சற்று ரிலாக்ஸ் செய்து விட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சை அளிப்பது நலம் அளிக்கும்.



Click it and Unblock the Notifications