Latest Updates
-
August Month Rasi Palan 2026: உங்க ராசியை சொல்லுங்க.. ஆகஸ்ட் மாதம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்... -
சந்திரன் விருச்சிக ராசிக்கு செல்வதால் தொந்தரவுகளையும், துன்பங்களையும் அனுபவிக்கப்போகும் 3 ராசிகள் -
செட்டிநாடு கொண்டைக்கடலை குருமா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - தோசை, சப்பாத்திக்கு அட்டகாசமா இருக்கும் -
ஆடி வெள்ளி ஸ்பெஷல் தேங்காய் பாயாசம் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
சருமம் அதிகமா வறண்டு போகுதா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க.. -
சிவன் கோவிலில் ஏன் பக்தர்கள் தங்கள் வேண்டுதல்களை நந்தியின் காதில் மெதுவாக கூறுகிறார்கள் தெரியுமா? -
வக்ர நிவர்த்தி அடையும் புதன்: நாளை முதல் இந்த 3 ராசிக்கு பணம், புகழ், வெற்றி தேடி வரப்போகுது! -
ராகு-கேது ஆசியால் டிசம்பர் மாதம் வரை கொடிகட்டி பிறக்கப்போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
கிராமத்து ஸ்டைல் முருங்கைக்காய் பொரிச்ச குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இந்தியாவின் அண்டார்டிகா என்று அழைக்கப்படும் நடுங்கவைக்கும் குளிர் நிலவும் இடம் எது தெரியுமா?
குழந்தைகளின் காய்ச்சல் வலிப்பு : இரும்பு கொடுப்பது மூடநம்பிக்கை

குழந்தைகளுக்கு காய்ச்சல் வருவது அவர்களின் உடலில் ஏற்பட்டிருக்கும் தொற்றுநோயை உணர்த்தும் தற்காப்பு ஆயுதம் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். குழந்தையானது காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருக்கிறதா? என்பதை அறிய வெப்பமானியைக் கொண்டு அறிந்து கொள்ளலாம். 5 வயதிற்கு குறைவாக உள்ள குழந்தைகளுக்கு அக்குளிலில் வைத்து பார்த்து வெப்பத்தை அறிந்து கொள்ளவேண்டும். பொதுவாக 97 முதல் 99 ஃபாரன்ஹீட் வரை உள்ள வெப்பம் இயல்பானதுதான். அதற்கு மேற்பட்டு இருந்தால் மட்டுமே காய்ச்சல் என்பதை உணரலாம். அதன் பின்னர் மருத்துவரிடம் அழைத்துச் சென்று அவர்கள் பரிந்துரைக்கும் மருந்துகளை மட்டுமே அளிக்கவேண்டும்.
லேசான துணிகள்
காய்ச்சல் நேரத்தில் குழந்தைகளின் உடலில் கனமாக உடைகள் இருந்தால் அவற்றை நீக்கிவிட்டு லோசான ஆடைகளை அணிவிக்கவேண்டும். உடல் சூடு அதிகமாக இருக்கும் பட்சத்தில் வெது வெதுப்பான தண்ணீரில் மெல்லிய துணியை நனைத்து ஒத்தடம் தரலாம். இவ்வாறு செய்வது குழந்தையின் காய்ச்சலை குறைக்கும்.
வலிப்பு நோய்
சில குழந்தைகளுக்கு காய்ச்சல் அதிகமாகிவிட்டால் வலிப்பு ஏற்படுவது இயல்பு. இந்த வலிப்பு 10 நிமிடங்களுக்கு மேல் நீடிக்காது. இந்த சமயத்தில் பெற்றோர்கள் பதற்றமடையாமல் உடனடியாக மருத்துவரிடம் கொண்டு செல்லவேண்டும். வலிப்பு நேரத்தில் இரும்பினையோ, சாவிக்கொத்தினையோ கொடுப்பது மூட நம்பிக்கை என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
வலிப்பு வரும் சமயத்தில் குழந்தையை சுற்றி நின்று வேடிக்கைப் பார்ப்பதை விட உடனடியாக காற்று வருமாறு விலகி நிற்க வேண்டும். பின்னர் குழந்தை நாக்கை கடித்துக்கொள்ளாமல் இருக்க அதன் வாயில் பற்களின் இடையே உறுதியான பிளாஸ்டிக் துண்டினை வைக்கவேண்டும். சற்று ரிலாக்ஸ் செய்து விட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சை அளிப்பது நலம் அளிக்கும்.



Click it and Unblock the Notifications