Latest Updates
-
பட்டாணி மசாலா சாதம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, பிரியாணி மாதிரியே இருக்கும் -
சனி பகவான் உதயமாகியிருப்பதால் இன்று முதல் இந்த 5 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்களுக்கு இந்த அறிகுறிகள் இருந்தால் உங்க உடலில் நீரின் அளவு ஆபத்தான கட்டத்திற்கு சென்றுவிட்டதாம் - ஜாக்கிரதை -
கோடை வெயிலில் வீடு அனல் பறக்குதா? இந்த வாஸ்து செடிகள் இருந்தா போதும்… குளிர்ச்சியும் அதிர்ஷ்டமும் தேடி வரும்! -
வாஸ்துப்படி மணி பிளாண்ட் வைக்கும் திசை இதுவா? பணவரவு தடையின்றி கொழிக்க இதை உடனே மாற்றுங்க! -
கசப்பில்லாத பொன்னாங்கண்ணி கீரை கூட்டு - 10 நிமிடத்தில் எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு சாப்பிடுங்க.. -
மே மாதத்தில் உருவாகும் கப்பார் யோகத்தால் பெரிய ஆபத்துகளையும், நஷ்டத்தையும் சந்திக்கப்போகும் 3 ராசிகள் -
வெறும் 5 ரூபாயில் கிடைக்கும் இந்த பொருள் கோடையில் சந்திக்கும் பாதி பிரச்சனையை தடுக்குமாம் - கூறும் டாக்டர்! -
அடிச்சது ஜாக்பாட் - தென்னிந்தியாவின் இந்த மாநிலத்தில் மிகப்பெரிய தங்கச் சுரங்கம் கிடைத்திருக்காம் -
சுக்கிரன் நட்சத்திர பெயர்ச்சியால் ஏப்ரல் 27 முதல் இந்த 3 ராசிக்கு தொழிலில் லாபமும், வெற்றியும் குவியப்போகுது..
குழந்தைகளோட சேர்ந்து தூங்குங்க.. மனசுக்கு நல்லது!

நன்னடத்தை அதிகரிக்கும்
குழந்தைகளும் பெற்றோர்களும் ஒரே படுக்கையறையில் உறங்குவதால் குழந்தைகளின் நடத்தையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்படுகிறதாம். அவர்களின் சுய சிந்தனை, நன்னடத்தை அதிகரிக்கிறதாம். மன அழுத்தம் போன்ற நோய்கள் ஏற்படுவதில்லை என்கின்றனர் நிபுணர்கள்.
உடல், மன வளர்ச்சி
உளவியல் ரீதியான முன்னேற்றங்கள் ஏற்படுகின்றன. நாம் தனித்து விடப்பட வில்லை. நம்மை பாதுகாக்க பெற்றோர்கள் இருக்கின்றனர் என்ற நம்பிக்கை ஏற்படுகின்றதாம். பெற்றோருடன் உறங்கும் குழந்தைகளின் உடல், மன நலம் குறித்து கடந்த முப்பது ஆண்டுகளாக நடைபெற்ற ஆய்வில் இது தெரியவந்துள்ளது. குழந்தைகளின் வளர்ச்சி முன்னேற்ற மடைந்துள்ளது. மேலும் அவர்கள் புத்திசாலி குழந்தைகளாக வளர பெற்றோர்களுடன் உறங்குவதே ஏற்றது என்கின்றனர் உளவியல் நிபுணர்கள்.
மன அழுத்தம் குறைகிறது
பெற்றோருடன் உறங்கும் குழந்தைகள், பறவை கூட்டில் தாய் பறவையின் அரவணைப்பில் குஞ்சு பாதுகாப்பாக உறங்குவதைப்போல உணர்கின்றனர். அவர்களின் உளவியல் ரீதியான ஹார்மோன் நன்றாக செயல்படுகிறது. குழந்தைகள் தனியாக உறங்கும்போது மன அழுத்தம் தரும் கார்டிசோல் ஹார்மோன் அதிகம் சுரக்கிறதாம். அதேசமயம் பெற்றோருடன் உறங்கும் போது ஹார்மோன் சுரப்பு குறைகிறதாம். ஹார்வார்டு பல்கலைக்கழக உளவியல்துறை ஆய்வாளர்கள் மேற்கொண்ட ஆய்வில் இது தெரியவந்துள்ளது.
தொந்தரவில்லாத உறக்கம்
குழந்தைகளுடன் உறங்கும் போது அவர்களுக்கு தூக்கத்தில் தொந்தரவு ஏற்படுவதில்லை. ஆழ்ந்த உறக்கம் ஏற்படுகிறது. இதனால் பகல் வேலைகளில் குழந்தைகளால் உற்சாகமாக செயல்படமுடிகிறது.
பாதுகாப்பு உணர்வு
குழந்தைகள் தங்கள் பெற்றோருடன் உறங்குவதனால் அவர்களுக்கு ஒரு பாதுகாப்பு உணர்வு கிடைக்கிறது. அவர்களின் தன்னம்பிகையும், சுதந்திர உணர்வும் அதிகரிப்பதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். பெற்றோர்களுக்கும் குழந்தைகளுக்கும் இடையே ஒரு அட்டாச்மென்ட் ஏற்படும் என்றும் நிபுணர்கள் கூறுகின்றனர்.
படுக்கயறையில் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் அதிக நேரம் ஒன்றாக தங்களின் அன்பை பகிர்ந்து கொள்ள முடிகிறது. இந்த குடும்ப படுக்கையறை ஸ்டைல் மூலம் குடும்ப உறவுகளின் மீது குழந்தைகளுக்கு ஒரு நெருக்கம் ஏற்படுகிறது.



Click it and Unblock the Notifications