Latest Updates
-
இன்றைய ராசிபலன் 08 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு கேட்ட வரங்கள் கிடைக்கப்போகுதாம் -
வக்ரமாகும் சனிபகவான்: ஜூலை முதல் 138 நாட்களுக்கு இந்த 4 ராசிக்கு தொழில் வளரும், வருமானம் அதிகரிக்கும்! -
வெயில் காலத்தில் ஏன் அடிக்கடி சண்டை வருது? தம்பதிகளே, இந்த ஒரு விஷயத்தை கவனிங்க! -
திருமண சீசன்ல வெயில், மழையால் கவலையா? பட்ஜெட் வீணாகாம இருக்க இந்த 5 டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க! -
வயசானாலும் இளமையா தெரியணுமா? அப்ப இந்த நேச்சுரல் ஃபேஸ் பேக்குகளை போடுங்க.. -
1 கப் உளுந்து இருந்தா, ஈவ்னிங் டைம்-ல இப்படி செஞ்சு குடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
பாபா வாங்கா கணிப்புப்படி, அடுத்த 6 மாதம் இந்த 5 ராசிக்கு ராஜவாழ்க்கை தான்.. உங்க ராசி இதுல இருக்கா? -
ஜூன் மாத வானிலை மாற்றமா? இந்த 5 வாஸ்து செடிகள் இருந்தா வீடே குளிர்ச்சியாகவும் அதிர்ஷ்டமாகவும் மாறும்! -
அடிக்குற வெயிலுக்கு மாம்பழத்தை இப்படி சர்பத் செஞ்சு குடிங்க.. குளுகுளுன்னு இருக்கும்.. -
உங்களுக்கு மாரடைப்பு வரக்கூடாதா? அப்ப டாக்டர் சொல்ற இந்த டயட்டை ஃபாலோ பண்ணுங்க..
இந்த உணவுகள் குழந்தைகளுக்கு முதல் முறை கொடுக்கும் போது அலர்ஜியை உண்டாக்குமாம்... கவனமா ஊட்டுங்க...!
6 மாதங்கள் வரை உள்ள அனைத்து குழந்தைகளுக்கும் தாய்ப்பால் கொடுக்க வேண்டியது அவசியமாகும், ஏனெனில் இதனை விட குழந்தைக்கு சிறந்த ஊட்டச்சத்து எதுவுமில்லை. குழந்தைகளுக்கு திட உணவுகளை அறிமுகப்படுத்துவது பெரும்பாலான பெற்றோருக்கு ஒரு சவால் நிறைந்த காலகட்டமாக இருக்கும்.
இருப்பினும், உங்கள் குழந்தை திரவங்கள் அல்லது திடப்பொருட்களை உட்கொள்கிறார்களா என்பதைப் பொருட்படுத்தாமல், புதிய உணவுகளுக்கு அவர்களின் உடல் எப்படி ரெஸ்பான்ஸ் செய்கிறது என்பதை கண்காணிப்பது முக்கியம்.

பல குழந்தைகள் ஆரம்ப காலக்கட்டத்தில் உணவு ஒவ்வாமைக்கு ஆளாகிறார்கள். ஒரு குறிப்பிட்ட உணவுக்கு அசாதாரண உடல் எதிர்வினைகளை அனுபவிக்கிறார்கள்.
உணவு ஒவ்வாமை என்றால் என்ன?
உங்கள் உடலின் நோயெதிர்ப்பு அமைப்பு நீங்கள் உண்ணும் ஒரு குறிப்பிட்ட உணவுக்கு எதிர்மறையான எதிர்வினையை ஏற்படுத்தும் போது உணவு ஒவ்வாமை ஏற்படுகிறது. குழந்தைகள் பெரும்பாலும் ஒவ்வாமைக்கு ஆளாகலாம், எனவே அவர்களின் தூண்டுதல்களை அடையாளம் காண வேண்டும்.
5 வயதுக்குட்பட்ட குழந்தைகளில் 8% மற்றும் பெரியவர்களில் 4% வரை உணவு ஒவ்வாமை இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. சில நேரங்களில், உணவு ஒவ்வாமை உணவு சகிப்புத்தன்மையுடன் குழப்பமடையலாம். குழந்தைகளின் நோயெதிர்ப்பு அமைப்பைப் பொறுத்து இது மாறுபடும்.
குழந்தைகளுக்கு உணவு அலர்ஜி இருப்பதன் அறிகுறிகள்
குழந்தைகளில் உணவு ஒவ்வாமை பெற்றோர்கள் பாலூட்டும் செயல்முறையை நிறுத்தும் போது தொடங்குகிறது. தாய்ப்பாலில் இருந்து பிற உணவுகளுக்கு பெற்றோர்கள் குழந்தையின் உணவை மாற்றும்போது கவனமாக இருக்க வேண்டும்.
குழந்தைகளின் உணவு அலர்ஜி இருப்பதன் பொதுவான அறிகுறிகள் தோலில் அரிக்கும் தோலழற்சி, மூக்கு ஒழுகுதல், தும்மல்-நாசியழற்சி மற்றும் பிடிப்புகள், வயிற்றுப்போக்கு போன்ற வயிற்று அறிகுறிகள் ஆகியவை அடங்கும். உணவு ஒவ்வாமைகள மூச்சுத் திணறலுக்கு வழிவகுக்கும் மற்றும் குழந்தைகளுக்கு ஆஸ்துமாவைத் தூண்டும்.
குழந்தைகளுக்கு உணவு அலர்ஜியை ஏற்படுத்தும் உணவுகள்
- பசும் பால்
- முட்டை
- கோதுமை
- சோயாபீன்
- வேர்க்கடலை
- மீன் மற்றும் இறால்
இது மட்டுமின்றி சீஸ், பருப்பு, தேங்காய், சோளம் மற்றும் ஆட்டிறைச்சி போன்ற உணவுகளும் குழந்தைகளுக்கு உணவு அலர்ஜியை ஏற்படுத்தும்.
குழந்தைகளின் உணவு அலர்ஜியை சமாளிப்பதற்கான வழிகள்
உணவு ஒவ்வாமை குழந்தைகளில் கண்டறிய கடினமாக இருக்கலாம். மருத்துவர்களின் கூற்றுப்படி, ஒவ்வாமைக்கான மூலக்கூறு நோயறிதல் மிகவும் முக்கியமானது, ஒவ்வாமையை ஏற்படுத்தும் சரியான மூலக்கூறு புரதம் சிறப்பு முக்கியத்துவம் வாய்ந்தது. உதாரணத்திற்க்கு, கேசீனுக்கு பால் ஒவ்வாமை ஏற்பட்டால், பாலில் உள்ள முக்கிய புரதம் முக்கியத்துவம் வாய்ந்தது. கேசீன் புரதத்திற்கு ஒவ்வாமை உள்ளவர்கள் காலப்போக்கில் அதிலிருந்து விடுபடலாம்.
உணவு அலர்ஜி ஒருமுறை கண்டறியப்பட்டால், மருத்துவர்கள் ஒவ்வாமையை உண்டாக்கும் உணவுப் பொருட்களை உட்கொள்வதை நிறுத்தி, கொஞ்சம் கொஞ்சமாக மெதுவாக உணவுகளை அறிமுகப்படுத்தலாம்.
பெற்றோர்கள் என்ன செய்ய வேண்டும்?
உணவு ஒவ்வாமை உங்கள் குழந்தைகளின் வாழ்க்கைத் தரத்தை பாதிக்கலாம் என்பதை பெற்றோர்கள் புரிந்து கொள்ள வேண்டும். இது புத்திக்கூர்மை குறைதல் அல்லது பள்ளி செயல்திறன் குறைதல் போன்ற சிக்கல்களுக்கு வழிவகுக்கும். உங்கள் குழந்தை ஒவ்வாமை அறிகுறிகளால் பாதிக்கப்பட்டிருந்தால், குழந்தை மருத்துவரை அணுகி, ஒவ்வாமை பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும். ஒரு எளிய இரத்த பரிசோதனையானது பல்வேறு வகையான ஒவ்வாமைகளின் உணர்திறனைக் கண்டறிய முடியும்.



Click it and Unblock the Notifications
