பெண்களே! நீங்க கருக்கலைப்பு செய்யும்போது... இந்த பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்குமாம் தெரியுமா?

Abortion In Tamil: கருக்கலைப்பு தாயின் ஆரோக்கியத்தில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும். கருக்கலைப்புக்குப் பிறகு ஒவ்வொரு பெண்களும் தங்கள் மனநலத்தையும் உடல்நலத்தையும் பாதுகாப்பாக நிர்வகிக்க வேண்டும். தேவையற்ற விஷயங்கள் மற்றும் பழைய கட்டுக்கதைகளை நம்புவதை முதலில் நிறுத்த வேண்டும்.

கருக்கலைப்பு செய்வது ஒரு பெண்ணின் வாழ்க்கையில் மிகவும் சவாலான மற்றும் வேதனையான விஷயங்களில் ஒன்றாகும். கருத்தடை தோல்விகள் முதல் பெண் சிசு எனத் தெரிந்த பிறகு சட்டவிரோதமாக கருக்கலைப்பு செய்வது, அசாதாரணமாக வளரும் குழந்தையை கருக்கலைப்பு செய்ய நிர்ப்பந்திக்கப்படுவது வரை, பெண்கள் தங்கள் அன்றாட வாழ்க்கையில் இத்தகைய கடினமான தாங்குதல்களுக்கு ஆளாக நேரிடும் பல காரணங்கள் உள்ளன.

Emotional And Psychological Impact Of Abortion In Tamil

இவற்றில் பெரும்பாலானவை குடும்பம் மற்றும் சமூகம் காரணமாக மிகக் குறைவான அளவே வெளியில் தெரிகிறது. இவை அனைத்தும் நிச்சயமாக ஒவ்வொரு பெண்களின் உடல், மன மற்றும் சமூக நல்வாழ்வில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. மேலும், கருக்கலைப்பு செய்வது என்பது சட்டவிரோதமானது.

அந்த வகையில், கருக்கலைப்பு செய்யும் பெண்களின் உணர்ச்சி மற்றும் உளவியல் அம்சங்களை முன்னிலைப்படுத்துவது இன்றியமையாதது. இந்தியாவில் பெண்கள் பாதுகாப்பான மற்றும் நன்கு ஆதரிக்கப்படும் கருக்கலைப்பை பெறுவதை உறுதிசெய்ய அனைவரும் ஒன்றாக பங்களிக்க வேண்டும். கருக்கலைப்பு செய்வதால், உணர்ச்சி மற்றும் உளவியல் ரீதியாக பெண்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் பற்றி இக்கட்டுரையில் தெரிந்துகொள்ளலாம்.

இந்தியாவில் கருக்கலைப்புகள் பொதுவானவை
இந்தியாவில் மூன்றில் இரண்டு பங்கு கருக்கலைப்புகள் பாதுகாப்பற்றவை என்று சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்று கூறுகிறது. குறிப்பாக பீகார், ஹரியானா, பஞ்சாப், ஜார்கண்ட் மற்றும் ஒரிசா ஆகிய மாநிலங்களில் கிராமப்புறங்களில் அதிக கருக்கலைப்புகள் நடப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

பெரும்பாலான பெண்கள் வயிற்றில் இருக்கும் சிசுவின் பாலினத்தை அறிந்து பிறகு கருக்கலைப்பு செய்வதாக கூறப்படுகிறது. வயிற்றில் இருக்கும் சிசு பெண் குழந்தை என்று தெரிந்த பின்பு கருக்கலைப்பு செய்ய கட்டாயப்படுத்தப்படுவதாக கூறப்படுகிறது.

எதற்காக கருக்கலைப்பு செய்கிறார்கள்?
மோசமான சமூக பொருளாதாரம்
வீட்டில் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகமாக இருப்பது
மோசமான பாலியல் நடைமுறைகள்
தேவையற்ற கர்ப்பம்
பாதுகாப்பான குடும்பக் கட்டுப்பாடு நடவடிக்கைகள் பற்றிய கல்வியறிவின்மை
ஆண் குழந்தை வேண்டும் என்ற பழமையான மூட நம்பிக்கை
மேலே குறிப்பிடப்பட்டுள்ள இந்த காரணிகள் அனைத்தும் ஒரு இந்தியப் பெண்ணின் ஆரோக்கியத்தை மிகுந்த ஆபத்தில் ஆழ்த்தலாம்.

கருக்கலைப்பு செய்யும் இளம் தலைமுறையினர்
15-19 வயதுக்குட்பட்ட இளம் டீனேஜ் பெண்கள் கருக்கலைப்பு தொடர்பான சிக்கல்களை எதிர்கொள்ளும் அதிக ஆபத்தில் உள்ளனர். ஆரம்பகால உடலுறவு, மோசமான பாலுறவு நடைமுறைகள் மற்றும் கருத்தடை பற்றிய விழிப்புணர்வு இல்லாமை போன்ற பல காரணிகள் இளம் பெண்களை வலுக்கட்டாயமாக கருக்கலைப்பு செய்வதற்கு வழிவகுக்கும் சில காரணிகளாகும்.

கருக்கலைப்பு சட்டப்பூர்வமாக இருந்தாலும் (பல்வேறு சூழ்நிலைகளில்), பாதுகாப்பற்ற கருக்கலைப்பு அதிகமாக இருப்பது இந்தியாவில் ஒரு பெரிய பொது சுகாதாரப் பிரச்சனையாகும். சமூகப் பொருளாதார பாதிப்பு மற்றும் மோசமான சுகாதார சேவைகள் ஆகியவற்றால் இந்தியாவில் பாதுகாப்பற்ற கருக்கலைப்பு மற்றும் கருக்கலைப்பு தொடர்பான மரணம் ஏற்படும் ஆபத்து அதிகம் உள்ளது.

கருக்கலைப்புக்குப் பிறகு சிகிச்சை அவசியம்
கருக்கலைப்பு செய்யும் ஒவ்வொரு பெண்ணின் வாழ்க்கையிலும், இது உணர்ச்சி மற்றும் மன அச்சுறுத்தலை உருவாக்குகிறது. கருக்கலைப்புக்கு உட்படுத்தப்படும் இனப்பெருக்க வயதுடைய எந்தவொரு பெண்ணும், பெரும் மன உளைச்சலுக்கு ஆளாக நேரிடும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

குற்ற உணர்வு மற்றும் வருத்த உணர்வு, குறைந்த சுயமரியாதை, கனவுகள், தாயாகத் தவறிவிட்ட உணர்வு, மன குழப்பம் மற்றும் நிலையற்ற எண்ணம் ஆகியவை ஒரு பெண்ணை கடுமையாக பாதிக்கலாம். இந்த துயரத்திலிருந்து பெண்கள் வெளிவர, தற்போதைய சமூக அமைப்பில் உளவியல் உதவி மற்றும் ஆலோசனை கிடைக்க வேண்டும்.

இந்த முக்கியமான மற்றும் சவாலான கட்டத்தில் ஒரு பெண்ணுக்கு தேவைப்படுவது மென்மையான அன்பு மற்றும் கவனிப்பு. அத்துடன் இதற்கு சிகிச்சை வாழ்க்கை முறை மாற்றங்களும் தேவை. அவை;
ஆரோக்கியமான உணவு மற்றும் ஊட்டச்சத்தை உண்ணுதல்
யோகா மற்றும் தியான பயிற்சி உட்பட நல்ல உடற்பயிற்சி முறைகள்
மனைவி, குடும்பத்தினர் மற்றும் நண்பர்களிடமிருந்து உறவு மற்றும் சமூக ஆதரவு, தளர்வு மற்றும் மன அழுத்த மேலாண்மை
மனநலப் பாதுகாப்புப் பணியாளர்களால் நேர்மறை மற்றும் மதிப்புமிக்க ஆலோசனை அமர்வுகள். இவை அனைத்தும் மொத்தத்தில், கடினமான மற்றும் சவாலான வாழ்க்கைக் கட்டத்தில் இருந்து பெண்கள் வலுவாகவும் ஆரோக்கியமாகவும் வெளிவர உதவும். அதேநேரம், கருக்கலைப்பு பற்றிய கட்டுக்கதைகளை நம்புவதை முதலில் நிறுத்துங்கள்.

கட்டுக்கதை: மீண்டும் தாயாக முடியாது
உண்மை: கருக்கலைப்பு செய்த பிறகு, ஒவ்வொரு பெண்ணும் தாயாக இருக்க தகுதியற்றவர்களாகவும் உரிமையற்றவர்களாகவும் உணருவது இயற்கையானது. நல்ல சமூக மற்றும் மன ஆதரவுடன், உங்கள் மகளிர் மருத்துவ நிபுணர்கள், ஆலோசகர்கள், சிகிச்சையாளர்கள் மற்றும் மனநல மருத்துவர்களின் மதிப்புமிக்க வழிகாட்டுதலுடன், நீங்கள் மீண்டும் ஒரு தாயாக முடியும் என்பதை இளம் பெண்கள் புரிந்துகொள்வது மிகவும் முக்கியம்.

உங்களுக்கு தேவையானது, சரியான நேரத்தில் மருத்துவ உதவியை நாடுவது மற்றும் உங்கள் அடுத்த கர்ப்பத்தைத் தொடங்குவதற்கு முன் விரிவான முன் கருத்தரிப்பு ஆலோசனை அமர்வுகளைப் பெற வேண்டும்.

கட்டுக்கதை: கருக்கலைப்புக்குப் பிறகு உடற்பயிற்சி செய்யக்கூடாது
உண்மை: கருக்கலைப்புக்குப் பிறகு உங்கள் உடலுக்கு புரதங்கள், பழங்கள் மற்றும் வைட்டமின் சப்ளிமெண்ட்ஸ் நிறைந்த ஆரோக்கியமான உணவு தேவைப்படுகிறது. யோகா, தியானம், ஏரோபிக்ஸ், பைலேட்ஸ், நீண்ட விறுவிறுப்பான நடைப்பயிற்சி அல்லது ஒவ்வொரு நாளும் சுமார் 30-45 நிமிடங்கள் சைக்கிள் ஓட்டுதல் போன்ற சீரான உடற்பயிற்சி முறையும் முக்கியமானது.

நீங்கள் ஒரு வாரத்தில் குறைந்தது 5 நாட்களாவது உடற்பயிற்சி செய்ய வேண்டும். நீங்கள் எப்போது வசதியாகவும், தயாராகவும் மற்றும் உடல் ரீதியாக போதுமான வலிமையாகவும் உணரும் போதெல்லாம் தொடங்கலாம். நீங்கள் மற்றொரு கர்ப்பத்தைத் திட்டமிடுவதற்கு முன் உங்கள் உடலை மீட்க சுமார் 2-3 மாதங்கள் தேவைப்படும்.

நமது அன்றாட வழக்கத்தின் ஒரு பகுதியாக ஆரோக்கியமான உடல் மற்றும் மன வாழ்க்கை முறையை முழுமையாக புகுத்துவது முக்கியம். ஒவ்வொரு பெண்ணும் சில நியாயமான மற்றும் பகுத்தறிவு வாழ்க்கை முறை நடவடிக்கைகளை எடுப்பது கடினமான மற்றும் பொதுவான வாழ்க்கைச் சூழ்நிலைகளில் இருந்து வலிமையாகவும் ஆரோக்கியமாகவும் வெளிவர உதவும்.

Story first published: Monday, May 29, 2023, 16:48 [IST]
Desktop Bottom Promotion