Latest Updates
-
செவ்வாய் மேஷ ராசிக்கு செல்வதால் கோடீஸ்வர யோகத்தை பெறப்போகும் 4 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
இந்தியாவின் தேசிய காய் என்று அழைக்கப்படும் காய்கறி எது? அதற்கான காரணம் என்ன தெரியுமா? -
ஏப்ரல் இறுதியில் குரு-புதன் சேர்க்கையால் உருவாகும் அரிய ராஜயோகம்: இந்த 3 ராசிகளின் வருமானம் உயரும்! -
வெயில் காலத்தில் திருமணமா? இந்த 5 விஷயங்களைச் செய்யாவிட்டால் விசேஷமே வீணாகிவிடும்! -
மட்டன் சுவையை மிஞ்சும் சோயா உருளைக்கிழங்கு குருமா ரெசிபி - செஞ்சு பாருங்க, செமையா இருக்கும் -
பொருளாதாரச் சுரண்டல் இனி குடும்ப வன்முறை! மனைவியிடம் கையேந்த வைக்கும் கணவர்களுக்கு நீதிமன்றம் கொடுத்த செக்! -
செவ்வாயின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டகாத்து வீசும்! உங்க ராசியும் இதுல இருக்கா? -
ஏசி ஓடினாலும் கரண்ட் பில் கம்மியா வரணுமா? ஏசியை இந்த மாதிரி யூஸ் பண்ணுங்க -
வீட்டிலேயே மாம்பழ ஐஸ்க்ரீம்மை ஈஸியாக செய்வது எப்படி-ன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணுங்க.. -
40 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் இந்த உணவுகளில் ஒன்றை தினமும் சாப்பிடணுமாம் - அதான் நல்லது
தன்னுள் உருவாகி கலைந்து போன குழந்தைக்காக தாய் எழுதிய கடிதம்!
உணர்வுகள் மிகவும் உயர்ந்தவை மற்றும் விலை மதிப்பற்றவை; இந்த பதிப்பில் தன்னுள் உருவாகி கலைந்து போன குழந்தைக்காக தாய் எழுதிய கடிதம் பற்றி படித்து பாருங்கள்!
பெண்கள் தங்கள் வாழ்வில் மிகவும் பெரிய விஷயமாக கருதுவது தாய்மையை தான். தான் ஒரு குழந்தைக்கு அன்னையாகி, தன்னுள் உருவாகும் உயிரை உணர்ந்து, உருவாக்கி, பெற்று எடுத்து வளர்க்க வேண்டும் என்பது பெண்களின் வாழ்க்கை கனவு ஆகும். உணர்வுகள் மிகவும் உயர்ந்தவை மற்றும் விலை மதிப்பற்றவை என்று கூறுவர்; தன்னுள் வளர்ந்த தான் வாழ்க்கையாய் நினைத்த கரு, எதிர்பாராத விதமாய் கலைந்து போகும் பொழுது பெண்கள் அடையும் உணர்வுகளை வர்ணிக்க வார்த்தையும் உண்டோ?!

இந்த பதிப்பில் தன்னுள் உருவாகி கலைந்து போன குழந்தைக்காக தாய் எழுதிய கடிதம் பற்றி படித்து பாருங்கள்!

அன்பு குழந்தையே!
என் அருமை அன்புக் குழந்தையே! நீ எனக்குள் உருவான நொடி, அந்த வானத்தையே தொட்டு விட்டு வந்தது போன்ற சந்தோஷத்தை, மகிழ்ச்சியை உணர்ந்தேன். உன் அப்பாவிடம் நீ எனக்குள் உருவான செய்தியை கூறிய தருணம் என் நெஞ்சில் பசுமரத்தாணி போல பதிந்து இருக்கிறது. நான் கூறிய செய்தியை கேட்டு உன் தந்தை எத்துணை மகிழ்ச்சி அடைந்தார் தெரியுமா?

தீர்மானித்து விட்டோம்!
மகிழ்ச்சியின் சுவையை உணர்ந்து கொண்டு இருந்த எங்களுக்கு அடுத்த நிமிடமே பொறுப்பும், எதிர்பார்ப்பும் தொற்றிக் கொண்டது. உனக்கான பொருட்களை, உனக்கு கதை சொல்ல புத்தகம், நீ விளையாட பொம்மைகள் என அனைத்தையும் வாங்க தொடங்கி விட்டோம். நீ எனக்குள் வளர்வதால், என்னை தரை மேல் கூட பாதம் பட விடாமல் பார்த்து பார்த்து கவனித்து கொண்டார், உன் தந்தை!

எதிர்பாராத ஏமாற்றம்!
எல்லாம் நன்றாக சென்று கொண்டு இருக்கும் தருணத்தில், திடீரென என் வயிற்றில் உயிர் போவது போன்ற வலி ஏற்பட்டது; அச்சமயம் நான் எத்தனை கடவுள்களிடம் உனக்காக பிரார்த்தித்தேன் என்று நீ அறிவாயா? ஆனால், விதியின் சதி உன்னை என்னில் விட்டு வைக்காமல் அழித்து விட்டது.
நீ உருவான பொழுது எத்துணை சந்தோஷத்தை அடைந்தேனோ, அதை விட பல மடங்கு சோகமும், வருத்தமும், உன்னை இழந்த உணர்வும் என்னை பீடித்து கொண்டது.

நடமாடும் பிணம் ஆனோம்!
நீ எங்களை விட்டு பிரிந்த பின், நானும் உன் தந்தையும் உயிருடன் இருக்கும் ஜடங்கள் ஆனோம். உன்னை அத்தனை ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டு இருந்த எங்களுக்கு எதிர்பாராமல் நடந்த அந்த நிகழ்வு பெரும் அடியாய் அமைந்தது. அதன் பின் எவ்வளவு முயன்றும் உன்னை இழந்ததால் ஏற்பட்ட காயத்தின் வீரியம் குறையவோ, ஆறவோ இல்லை; மாறாக உன் நினைவு ஒவ்வொரு நாளும் அதிகரித்து கொண்டே சென்றது.

முயற்சி மேற்கொண்டோம்!
உன்னை இழந்த பல மாதங்களுக்கு பின் மீண்டும் உன்னை போன்ற கரு உருவாக முயற்சி மேற்கொண்டோம்; முதன் முறை மாதிரியே உன்னை போலவே உருவாகியது கரு. உருவான கரு நன்றாகவே வளர்ந்து கொண்டு இருந்தது; இருப்பினும் உன்னை இழந்தது போல், உன் தம்பி அல்லது தங்கையையும் இழந்து விடுவேனோ என்ற பயம் மனதில் நீடித்து கொண்டே இருந்தது.

கடவுள் கருணை!
நல்ல வேளையாக உன்னை இழந்தது போல், உன் உடன் பிறப்பை நான் இழக்கவில்லை. உனக்கு தம்பி பிறந்தது; உன் தம்பி நல்லபடியாக உருவாகி, பிறந்து என் கையில் அளிக்கப்பட்ட போது, அவன் பிறந்ததற்கு எத்துணை சந்தோசம் அடைந்தேனோ, அதை விட அதிகம் உன்னை இப்படி கையில் ஏந்தாமல் போனேனே என்ற வருத்தம் மனதில் இருந்தது.

நினைவுகள்!
உனக்கு என்று பார்த்து பார்த்து வாங்கிய பொம்மைகள், ஆடைகளை தம்பிக்கு பயன்படுத்தும் பொழுதும், அவற்றை பார்க்கும் பொழுதும் உன்னை பற்றி எண்ணாமல் என்னால் இருக்க முடியுமா என்ன? உன் சகோதரன் வளர்ந்து என்னை அணைக்கும் பொழுதும், அவனுக்கு கதைகள் கூறும் பொழுதும், நீ வயிற்றில் இருக்கையில் ஏற்பட்ட தொடுதலும், உனக்காக நான் கூறிய கதைகளும் என் நினைவுக்கு வந்து என்னை பாடாய் படுத்துவதை நீ அறிவாயா?

உனக்கு தெரியுமா?
நீ வயிற்றில் கருவாக உருவான தருணம், என் இதயத்தில் உனக்கென ஒரு இடம் ஒதுக்கப்பட்டது; அதை இன்று வரை யாரும் நிரப்பவில்லை. தம்பி பிறந்த பொழுது அவனுக்கு என்று தனி இடம் கொடுத்தேனே தவிர, உன் இடத்தை அப்படியே சேமித்து வைத்து இருக்கிறேன். இதயத்தில் இருக்கும் நீ இல்லாத அந்த வெற்று இடம் எனக்கு தரும் வேதனையை நீ அறிவாயா?! என் இனிய செல்வமே!

மறக்கவில்லை!
உன்னை கண்ணால் காணாமல் போய்விட்டேன்; ஆனால், உன்னை உணர்ந்த அந்த மூன்று மாதங்கள் என்றும் மறவாது. உன்னை என்றும் மறவேன் கண்மணி; உன் தந்தையும் உன்னை மறக்கவில்லை. உன்னை பற்றிய எண்ணமும், உன் மீதான எங்கள் பாசமும் என்றும் மாறாது; என்றும் மறையாது. உன் ஆத்மா சாந்தி அடைய வேண்டும். என்றும் நீ எங்களுடன் அதிர்ஷ்ட தேவதையாக, எங்களுக்கு வழி காட்டும் ஒளியாக இருக்க வேண்டும்.
என்றும் அன்புடன் - உன்னை கருவில் சுமந்து, உன்னை காண கொடுத்து வைக்காத அபாக்கியசாலி, உன் அம்மா.!



Click it and Unblock the Notifications