Latest Updates
-
உடுப்பி தேங்காய் கொத்தமல்லி சட்னி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, வேற லெவலில் இருக்கும் -
லிவ்-இன் உறவு முறிவு குற்றமா? உச்ச நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு இளைஞர்களுக்கு நிம்மதி! -
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சியால் இன்று முதல் இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்..! -
Mothers day 2026: உலக அன்னையர் தினம் எப்போது கொண்டாடப்படுகிறது? அதற்குப்பின்னால் உள்ள வரலாறு என்ன தெரியுமா? -
லிவ்-இன் உறவில் பிரிவது குற்றமா? உச்ச நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு ஜோடிகளுக்கு நிம்மதி! -
வெறும் 4 பொருளை வெச்சு ஈஸியா மாம்பழ புட்டிங் செய்யலாம் தெரியுமா? எப்படி-ன்னு பாருங்க.. -
தங்கம் போல ஜொலிக்குற சருமம் வேண்டுமா? அப்ப மாம்பழத்தை வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க.. -
நெல்லை ஸ்டைல் முருங்கைக்காய் புளிக்குழம்பு ரெசிபி - செஞ்சு பாருங்க, அட்டகாசமாக இருக்கும் -
சுக்கிரனால் விபரீத ராஜயோகத்தை பெறப்போவது இந்த 3 ராசிக்காரங்க தான்.. உங்க ராசி இதுல இருக்கா? -
மாரடைப்பு பற்றிய கட்டுக்கதைகளும், உண்மைகளும்: யாருக்கெல்லாம் மாரடைப்பு வரும் வாய்ப்பு அதிகம் தெரியுமா?
கர்ப்ப காலத்தில் மல்லாந்து படுத்தால் குழந்தை இறந்து பிறக்குமாம் - வேறு எப்படி படுக்கவேண்டும்?
பெண்கள் மல்லாக்கப் படுத்திருந்தால் குழந்தை பிறப்பதில் சிரமம் உண்டாகும் என்ற ஆய்வு முடிவு மற்றும் அதுபற்றிய விவாதங்கள் இங்கே குறிப்பிடப்பட்டுள்ளன.
கர்ப்ப காலத்தில் பெண்கள் மல்லாக்க படுப்பதால் குழந்தைக்கு ஏற்படும் அபாயம்
பெண்களுக்கு கர்ப்ப காலம் தொடங்கி விட்டாலே சேயுடன் சேர்ந்து தினசரி தாங்கள் செய்யும் நடவடிக்கைகளிலும் மிகுந்த கவனம் வேண்டும். கர்ப்ப காலத்தில் மல்லாக்க மற்றும் குப்புற படுத்து உறங்குவது என்பது முற்றிலும் தவறான விஷயம்.

இப்படி மல்லாக்க படுத்து உறங்குவது சில சமயங்களில் கருச்சிதைவை கூட ஏற்படுத்தக் கூடும். மேலும் குழந்தை குறை மாதத்திலேயே இறக்கக் கூட நேரிடலாம்.

ஆராய்ச்சி தகவல்கள்
மகப்பேறியல் மற்றும் பெண்ணோயாலஜி குறித்து பிரிட்டன் இதழில் வெளியிடப்பட்ட தகவல் படி கர்ப்ப காலத்தில் தாய்மார்கள் மல்லாக்க படுத்து உறங்குவது 28 வாரத்திற்குள் 2.3 மடங்கு அபாயத்தை விளைவிக்கிறது என்று கூறுகிறார்.

குழந்தைக்கு அழுத்தம்
இப்படி தாய்மார்கள் மல்லாக்க படுக்கின்ற சமயத்தில் குழந்தையின் மொத்த எடை இரத்த குழாய்களில் அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. அது மட்டுமல்லாமல் மல்லாக்க படுக்கும் போது குழந்தைக்கு போதுமான இரத்த ஓட்டம் மற்றும் ஆக்ஸிஜன் செல்வதில்லை. இதை கண்டிப்பாக தாய்மார்கள் புரிந்து கொள்வதோடு கவனமாக செயல்பட வேண்டும் என்று அலெக்சாண்டர் Heazell, மான்செஸ்டர் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர், ஒரு பிபிசி சேனல் பேட்டியில் கூறியுள்ளார். எனவே தூங்க போற நிலை மிகவும் முக்கியம் என்கிறார் அவர்.

தூங்கும் நிலை
இந்த ஆராய்ச்சி குறித்து கிட்டத்தட்ட 1000 தாய்மார்கள் இதில் கலந்து கொண்டு தங்கள் தூங்கும் நிலையை பகிர்ந்து கொண்டனர்.

அபாயம்
இதிலிருந்து தெரிய வந்தது என்னவென்றால் மல்லாக்க படுக்கும் தாய்மார்கள் மற்ற தாய்மார்களை காட்டிலும் இரு மடங்கு குழந்தை பிறப்பு அபாயத்தை கொண்டுள்ளனர். எனவே கர்ப்ப காலத்தில் பெண்கள் இடது புறமாக ஒரு பக்கமாக சாய்ந்து படுக்க வேண்டும்.

குழந்தை பிறப்பு
அதுமட்டுமல்லாமல் பிரசவம் முடியும் வரை தாய்மார்கள் குறைந்த மற்றும் நீண்ட தூக்கத்தை பெறுகின்றனர். எப்பொழுதும் பாத்ரூமிலேயே இருக்க வேண்டிய நிலையும் உள்ளது. இதனால் அவர்களின் தூக்கம் இரவிலும் பகலிலும் கெடுகிறது.



Click it and Unblock the Notifications