Latest Updates
-
வார ராசிபலன் (21 June 2026-27 June 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கப்போகுது..! -
உங்க ஸ்கின் டைப் சொல்லுங்க.. அரிசி மாவு வெச்சு எப்படி ஃபேஸ் பேக் போடுறது-ன்னு சொல்றோம்.. -
சர்க்கரைவள்ளிக் கிழங்கு இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இப்படி ஸ்நாக்ஸ் செய்யுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
Father's Day 2026:இந்த 4 ராசிக்காரங்க சிறந்த தந்தையாக இருப்பதோடு, பிள்ளைகளுக்கு ரோல்மாடலாகவும் இருப்பாங்களாம்! -
முட்டைக்கோஸை இப்படி ஒருடைம் கூட்டு செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட விரும்பி சாப்பிடுவாங்க... -
International Yoga Day 2026: தினமும் யோகா செய்வதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
புதன் பெயர்ச்சியால் ஜூன் 22 முதல் இந்த 4 ராசிக்காரங்க பண மழையில் நனையப்போறாங்க.. உங்க ராசியும் இதுல இருக்கா? -
1 கப் ஜவ்வரிசி இருந்தா.. காலையில் 5 நிமிடத்தில் இந்த டிபனை செய்யுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
இன்றைய ராசிபலன் 20 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு பெரிய நஷ்டம் ஏற்பட வாய்ப்பிருக்காம் - ஜாக்கிரதை -
ஜூன் 23-ல் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: எந்த ராசிக்கு அதிர்ஷ்டமாகவும், யாருக்கு மோசமாகவும் இருக்கும்?
வாயோடு வாய் வைத்து தன் குழந்தையின் உயிரை காப்பாற்றிய தந்தை!
வாயோடு வாய் வைத்து தன் குழந்தையின் உயிரை காப்பாற்றிய தந்தை
எந்த மருந்து பொருளும் இன்றி ஒருவரின் உயிரை காப்பாற்ற முடியுமா? நிச்சயமாக முடியும் ஒருவரின் அன்பும், நம்பிக்கையும் கட்டாயமாக ஒருவரின் உயிரை காப்பாற்றும் ஆற்றல் கொண்டது என்பதற்கு மும்பையில் நடந்த ஒரு நிகழ்ச்சி ஆதாரமாக இருக்கிறது.

மூச்சு திணறல்:
பிறந்து 45 நாட்களே ஆன குழந்தை தீடிரென மூச்சு திணறாலால் பாதிக்கப்பட்டுள்ளது. இதற்கு உடனடியாக அந்த குழந்தையின் தந்தை தனது வாயோடு குழந்தையின் வாயை வைத்து முத்தம் கொடுத்துள்ளார். இதனால் குழந்தை உயிர் பிழைத்து விட்டது.

சுவாச கோளாறு
மும்பையை சேர்ந்த 45 நாட்களே ஆன குழந்தை ஒன்று சுவாச பிரச்சனை மற்றும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்தது. அந்த குழந்தை திடீரென மூச்சு திணறலால் பாதிக்கப்பட்டுவிட்டது.
மருத்துவமனைக்கு அழைத்து வரும் வழியில் குழந்தையின் நிலை மிகவும் கவலைக்கிடமாகிவிட்டது. இதனையடுத்து அந்த குழந்தையின் தந்தை வாயோடு வாய் வைத்து அந்த குழந்தையை முத்தமிட்டுள்ளார்.

கட்டி
பின்னர் மருத்துவர்கள் ஆராய்ந்து பார்த்ததில், குழந்தைக்கு இருதயத்தின் மேற்பகுதியில் கட்டி இருப்பது தெரியவந்தது. அந்த குழந்தை உடனடியாக ஐ.சி.யுவில் அனுமதிக்கப்பட்டுள்ளது. அறுவை சிகிச்சையின் மூலம் கட்டியும் நீக்கப்பட்டது.

கருவில்..!
இந்த குழந்தைக்கு கருவில் இருக்கும் போதே கட்டி உருவாகியிருக்கக்கூடும் என்று மருத்துவர்களின் குழு தெரிவித்துள்ளது.

கார்டியோபூமோனேரி ரெசசிடிஷன்
கார்டியோபூமோனேரி ரெசசிடிஷன் (Cardiopulmonary resuscitation) இது ஒரு அவசர சிகிச்சை முறையாகும். இரத்த ஓட்டத்தை மீட்டெடுக்கவும், சுவாச கோளாறை சரி செய்யவும் இந்த முறை பயன்படுத்தப்படுகிறது. வாயிலிருந்து வாய்க்கு சுவாசத்தை கொடுப்பதன் மூலம் அவசர காலத்தில் ஒரு நபரை காப்பாற்ற முடியும்.



Click it and Unblock the Notifications