Latest Updates
-
30 ஆண்டுக்கு பின் சனியும்-செவ்வாயும் மீனத்தில் இணைவதால் இந்த 3 ராசிக்காரங்க டபுள் ஜாக்பாட் அடிக்கப்போறாங்களாம் -
No Oil Noi Boil Recipe: அடுப்பே தேவைப்படாத ஆரோக்கியமான, சுவையான இட்லி மற்றும் சட்னி ரெசிபி...ட்ரை பண்ணுங்க...! -
1 வருடத்துக்கு பின் மேஷம் செல்லும் சுக்கிரன்: இந்த 3 ராசிக்காரங்க ஜெயிக்கிற குதிரையா ஜொலிக்கப் போறாங்களாம்...! -
336 ஆண்டுகளுக்கு முன் சத்ரபதி சாம்பாஜி மகாராஜாக்கு 11 மார்ச் 'இதே' நாளில் என்ன நடந்தது தெரியுமா? -
4 பிரெட், 1 கப் தயிர் இருந்தா 10 நிமிஷத்துல இந்த மாதிரி வடை சுடுங்க... மொறுமொறுனு டேஸ்ட் பிரமாதமா இருக்கும்... -
இந்த 4 ராசி ஆண்கள் ரொம்ப பொஸசிவான கணவர்களாக இருப்பார்களாம்...இவங்க மனைவிகள்தான் பாவம்..உங்க ராசி இதுல இருக்கா? -
LPG Gas: தலைவிரித்தாடும் சிலிண்டர் தட்டுப்பாடு... சிலிண்டர் சீக்கிரம் தீராம இருக்க இப்படி சமையல் பண்ணுங்க...! -
கோதுமை ரவா தோசையும்.. புதினா சட்னியும்..- 10 நிமிடத்தில் எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 11 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு மனஉளைச்சலான நாளாக இருக்குமாம்...! -
குரு-புதன் உருவாக்கும் சக்தி வாய்ந்த ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது...
கருத்தடை மாத்திரைகளை எடுத்துக் கொள்வதால் ஏற்படும் பக்க விளைவுகள்!!!
கருத்தரிக்காமல் இருப்பதற்கு எத்தனையே கருத்தடை முறைகள் இருந்தாலும், அவை அனைவரும் சரியாக வேலை செய்வதில்லை. ஆனால் கருத்தடை மாத்திரைகளை உட்கொண்டால், நிச்சயம் கருத்தரிப்பதை தடுக்கலாம். இத்தகைய கருத்தடை மாத்திரைகள் அனைத்து மருந்து கடைகளிலும் கிடைக்கின்றன. மேலும் இவற்றை உட்கொண்டால் 72 மணிநேரத்திற்கு காதல் வாழ்க்கையில் ஈடுபடலாம். இருப்பினும், இப்படி கருத்தடை மாத்திரைகளை உட்கொண்டால் ஒருசில பக்கவிளைவுகள் ஏற்படும் என்று கேள்விப்பட்டிருப்போம்.
தற்போது பெரும்பாலான பெண்கள் கருத்தரிக்காமல் இருப்பதற்கு எடுத்து கொள்ளும் ஒன்று தான் கருத்தடை மாத்திரை. இப்படி எடுத்துக் கொள்ளும் போது ஒருசில உடல்நல பிரச்சனைகளுக்கு ஆளாக நேரிடும்.
அதிலும் இவை சிறியதாகவோ அல்லது பெரியதாகவோ பக்க விளைவுகளை ஏற்படுத்தலாம். குறிப்பாக இந்த கருத்தடை மாத்திரைகளை அதிகமாக உட்கொண்டால், கருத்தரிக்கும் வாய்ப்பு குறைவதோடு, கருச்சிதைவின் அளவு அதிகரிக்கும். இதனால் நாளடைவில் மலட்டுத்தன்மை கூட ஏற்படும் வாய்ப்புள்ளது. சரி, இப்போது கருத்தடை மாத்திரைகளை எடுத்துக் கொள்வதால் ஏற்படக்கூடிய சில பக்க விளைவுகளைப் பார்ப்போம்.

மாதவிடாய் சுழற்சியை பாதிக்கும்
கருத்தடை மாத்திரைகளை அதிகமாக எடுத்துக் கொண்டால், அவை கருத்தரிப்பதை கட்டுப்படுத்தும். ஆனால் அதே சமயம் அது மாதவிடாய் சுழற்சி மற்றும் கருத்தரிக்க முயலும் போது தடையை ஏற்படுத்தும்.

குமட்டல்
கருத்தடை மாத்திரையினால் ஏற்படும் பிரச்சனைகளில் ஒன்று தான் குமட்டல். இப்படி கருத்தடை மாத்திரை எடுத்த பின்னர் குமட்டல் ஏற்பட்டால், அது கர்ப்பத்திற்கான அறிகுறி அல்ல. மாறாக அது கருத்தடை மாத்திரையினால் ஏற்படும் ஒரு பக்க விளைவாகும்.

இரத்தப்போக்கு
கருத்தடை மாத்திரை எடுத்துக் கொண்ட பின்னர், மாதவிடாய் சுழற்சியின் போது அதிகப்படியான இரத்தப்போக்கு மற்றும் கடுமையான வயிற்று வலியை சந்திக்கக்கூடும்.

தலை வலி
கருத்தரிக்கக் கூடாது என்று கருத்தடை மாத்திரை எடுத்துக் கொண்டால், கடுமையான தலை வலி ஏற்படும். இப்படி தலை வலி ஏற்படும் போது, அதற்கான மாத்திரைகளை எடுப்பதற்கு பதிலாக தண்ணீரை அதிகம் குடிக்க வேண்டும்.

பிடிப்புகள்
மாதவிடாய் சுழற்சியின் போது அதிகப்படியான பிடிப்புகள் ஏற்படும். அப்படி பிடிப்புகள் ஏற்படும் போது மாத்திரைகளை எடுத்துக் கொள்ளாமல், சுடு தண்ணீரைக் கொண்டு ஒத்தடம் கொடுக்க வேண்டும் மற்றும் சுடு தண்ணீரை குடிக்க வேண்டும்.

மனநல மாற்றம்
கருத்தடை மாத்திரையினால் ஹார்மோன்களில் மாற்றங்கள் ஏற்படுவதால், அது அவ்வபோது மனநல மாற்றத்தை ஏற்படுத்தும்.

காதலுணர்ச்சி குறையும்
அதிகப்படியான கருத்தடை மாத்திரைகளை எடுத்துக் கொள்ளும் போது, நாளடைவில் காதலுணர்ச்சியை அதிகரிக்கும் டெஸ்டோஸ்டிரோன் அளவு குறைந்துவிடும். காதல் வாழ்க்கையில் உள்ள நாட்டம் குறையும்.

மார்பகங்கள் மென்மையாகும்
இது கருத்தடை மாத்திரையை எடுத்துக் கொள்வதால் ஏற்படும் மற்றொரு பக்க விளைவாகும். அதில் மார்பகங்கள் மென்மையாவதோடு, அதனை தொட்டால் வலி ஏற்படும். ஆனால் இத்தகைய வலி விரைவில் குணமாகிவிடும்.



Click it and Unblock the Notifications











