Latest Updates
-
12 ஆண்டுகள் கழித்து கடகம் செல்லும் குரு பகவான்: இந்த 4 ராசிக்கு போதும் போதும் என்ற அளவுக்கு பணம் கொட்டபோகுது! -
5 பச்சை மிளகாயும், 1/4 கப் தேங்காயும் இருந்தா.. இட்லி, தோசைக்கு இப்படி சட்னி செய்யுங்க.. செமயா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 24 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க குடும்பத்தில் பிரச்சினைகள் அதிகரிக்கும் -
சுக்கிரன் ரிஷப ராசிக்கு சென்றதால் தோல்வியையும், துரதிர்ஷ்டத்தையும் அனுபவிக்கப்போகும் 4 ராசிகள் -
ஏப்ரல் மாத இறுதியில் நடக்கும் புதன் பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரங்க ஜாக்கிரதையா இருக்கணும்.. -
உங்கள் கால் விரலின் நீளம் எவ்வளவு இருக்குனு சொல்லுங்க? உங்களை பற்றிய ரகசியத்தை நாங்க சொல்றோம் -
Vastu Tips: வாஸ்துப்படி, ஆந்தை சிலையை வீட்டின் இந்த இடத்துல வையுங்க.. வீட்டில் பண வரவு அதிகரிக்கும்.. -
தித்திக்கும் கேரளாவின் மாம்பழ பாயாசம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, அட்டகாசமாக இருக்கும் -
திருமண வாழ்க்கையில் சிக்கலா? AI சாட்பாட்களிடம் ஆலோசனை கேட்கும் இந்திய தம்பதிகள் - இது ஆபத்தா? -
3 முட்டை, 2 வெங்காயம், 1/2 மூடி தேங்காய் இருந்தா.. சப்பாத்திக்கு இந்த சைடு டிஷ் பண்ணுங்க.. தாறுமாறா இருக்கும்.
பாட்டில் பால் கொடுப்பதால் உண்டாகும் தீமைகள் - மாற்று வழிகளும், தீர்வுகளும்!
பாட்டில் பால் கொடுப்பதால் உண்டாகும் தீமைகள் பற்றி கொடுக்கப்பட்டுள்ளன
குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பது அனைவராலும் பரிந்துரைக்கப்படுகிறது. ஏனெனில் தாய்பால் கொடுப்பது தாய் மற்றும் குழந்தை இருவரின் ஆரோக்கியத்திலும் முக்கிய பங்குவகிக்கிறது.
நீங்கள் ஏதேனும் மருத்துவ காரணங்களினால் குழந்தைக்கு தாய்பால் கொடுக்க முடியாத நிலை நேர்ந்தால், பாட்டில் பால் கொடுக்கும் வழியை தான் நீங்கள் தேர்ந்தெடுக்க வேண்டியிருக்கும். அதற்கு முன் பாட்டிலில் பால் கொடுப்பதால் உண்டாகும் விளைவுகளை பற்றி அறிந்திருக்க வேண்டியது அவசியம்.

1. இரப்பர்
குழந்தைக்கு பால் மற்றும் தண்ணீர் கொடுப்பதற்கு ஃபீடிங் பாட்டிலை உபயோகப்படுத்துகின்றனர். இதில் உள்ள இரப்பரில் கண்ணுக்கு தெரியாத அழுக்குகள் இருக்கும். இதில் நிறைய பாக்டீரியாக்கள் இருக்கும் இவை குழந்தையின் உடல்நலனுக்கு ஆபத்தாக அமையும்.

2.வாயுத்தொல்லை
பாட்டிலில் பால் குடிக்கும் போது பாலுடன் சேர்ந்து காற்றும் உள்ளே செல்லும். இதனால் குழந்தைக்கு வாயுத்தொல்லை வயிறு உப்புசம் போன்ற பிரச்சனைகள் ஏற்படும்.

3.சத்துக்கள்
தாய்ப்பால் அருந்தும் குழந்தைகளுக்கு இயற்கையாகவே உடலுக்கு தேவையான சத்துக்கள் கிடைத்துவிடுகின்றன. மேலும் தாய்பால் குழந்தைகளுக்கு எளிதில் ஜீரணமாகிவிடுகிறது. ஆனால் பாட்டில் பால் அவ்வாறு இல்லை. இதனால் பாட்டில் பால் குடிக்கும் குழந்தைகளுக்கு அதிகமாக உடல் எடை கூட வாய்ப்புள்ளது.

4.நோய் எதிர்ப்பு சக்தி
தாய்பால் குடிக்கும் குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி தாராளமாக கிடைக்கிறது. ஆனால் பாட்டில் பால் குடிப்பதால் நோய் எதிர்ப்பு சக்தி கிடைப்பதில்லை. எனவே பாட்டில் பால் அருந்தும் குழந்தைகளுக்கு வயிற்றுப்போக்கு, சிறுநீர் பாதை, காது சம்பந்தப்பட்ட தொற்றுகள் ஏற்பட வாய்ப்புள்ளது.

5. சங்கு பால்
உங்களால் தாய்ப்பால் தர முடியவில்லை என்றால் சங்கில் பால் தரலாம். சங்கில் பால் குடிப்பது சுகாதாரமானதும் கூட. சங்கில் பால் குடிக்கும் குழந்தைகள் எளிதில் டம்ளரில் பால் குடிக்க கற்றுக்கொள்ளும். பல், தாடை சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் வராது. பேச்சு சீக்கிரம் வரும்.

6.பாட்டில் பால் தீமைகள்
பாட்டில் பால் சுகாதாரமானது அல்ல. பாட்டிலில் பால் குடிக்கும் குழந்தைகளின் வார்த்தை உச்சரிப்பு சரியாக இருக்காது. பல் வரிசை மாறும் வாய்ப்புகள் அதிகம். மேலும் பல் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளும் அடிக்கடி வரும்.

7. பொது இடங்களில் பால் தர சிரமமா?
இளம் தாய்மார்கள் பலர் பொது இடங்களான ரயில் நிலையம், பேருந்து நிலையம், கடற்கரை, பூங்காக்கள், கோவில்கள் ஆகிய இடங்களில் குழந்தைக்கு பால் தர தயங்குகின்றனர். இதனால் குழந்தைகளை பாட்டில் பழக்கத்திற்கு மாற்றுகிறார்கள். ஆனால் பொது இடங்களில் பால் தர ஏற்ற வகையில் உடைகள் வந்துவிட்டன.

8. தாயின் அரவணைப்பு
தாய்ப்பால் குடிக்கும் குழந்தைகளுக்கு தாயின் சூடு, அரவணைப்பு ஆகியவை கிடைக்கும். தாயின் அரவணைப்பு மற்றும் பரிசம் குழந்தைக்கு கிடைப்பதால் குழந்தைக்கு பல்வேறு நண்மைகள் உண்டாகும். குறைந்தது பாட்டிலில் பால் தருவதை தவிர்த்து, டம்ளர்களிலாவது பால் தரலாம்.



Click it and Unblock the Notifications