Latest Updates
-
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க
தாய்ப்பால் கொடுப்பதால் பெண்களுக்கு இந்த நோய்கள் எல்லாம் எட்டி கூட பாக்காதாம்!!
குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பதால் உண்டாகும் நன்மைகளையும், தடுக்கப்படும் நோய்களையும் இங்கே தரப்பட்டுள்ளது.
இப்பொழுது உள்ள புதிய தகவல் என்னவென்றால் குழந்தைக்கு பாலூட்டும் தாய்மார்களுக்கு எதிர் காலத்தில் எந்த வித இதய நோயும் பக்க வாதமும் ஏற்பட வாய்ப்பில்லை என்பது தான்.
இந்த தகவல் அமெரிக்கன் ஹார்ட் அசோசியேஷன் நாளிதழ் ஒன்றில் வெளியிட்டுள்ளது. பாலூட்டும் தாய்மார்களுக்கு 10% அளவில் இதய நோய்கள் மற்றும் பக்க வாதம் வருவது தடுக்கப்படுகிறது என்று தகவலை கூறியுள்ளனர்.

குழந்தைக்கு பாலூட்டும் செயல் தாய்மார்களுக்கு அவர்கள் கருவுற்ற காலத்தில் இருந்த உடல் மெட்டா பாலிசம் விரைவாக பழைய நிலைக்கு வருவதற்கு உதவுகிறது என்று ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைகழ ஆராய்ச்சி மாணவர் சேன் பீட்டர்ஸ் விவரிக்கிறார்.
கருவுற்ற காலத்தில் தாய்மார்களின் உடல் மெட்டபாலிசம் குழந்தையின் வளர்ச்சிக்கு தேவையான கொழுப்பை சேமித்து வைக்கிறது. அதுவே பாலூட்டும் போது அந்த கொழுப்புகளை எல்லாம் கரைத்து விடுகிறது என்று பீட்டர்ஸ் கூறுகிறார்.
இந்த தகவல் சீன கடூரி பயோபேங்க் ஆய்வில் பங்கு பெற்ற 289,573 சைனீஸ் பெண்களை ஆராய்ச்சி செய்து இனப்பெருக்க உறுப்புகள் மற்றும் வாழ்க்கை காரணிகள் போன்றவற்றை பற்றிய விளக்கத்தை கூறியுள்ளனர்.
இதற்கு முன் செய்யப்பட்ட ஆராய்ச்சிகள் பாலூட்டும் செயல் தாய்மார்களுக்கு குறுகிய கால பயனான எடை குறைதல், கொழுப்பை குறைத்தல், இரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை அளவு சமநிலைப்படுத்துதல் போன்றவற்றை தருகிறது என்றே கூறியுள்ளனர்.
ஆனால் தற்போது அதன் தொடர்ச்சியாக செய்யப்பட்ட ஆராய்ச்சிகள் பாலூட்டும் தாய்மார்களுக்கு இதய நோய்கள் மற்றும் பக்க வாதம் வராமல் தடுக்கப்படுகிறது என்று தெரிவிக்கின்றனர்.
இதை பார்த்து உங்களால் முடிந்த அளவு பாலூட்டும் செயலில் குழந்தைக்கும் தாய்க்கும் கிடைக்கும் நன்மைகளை பற்றிய தகவலை பரப்புங்கள் என்று ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக் கழக விரிவுரையாளர் 'ஜென்மிங்க் கென் ' அவர்கள் கூறியுள்ளார்.



Click it and Unblock the Notifications

