Latest Updates
-
ராகு-கேதுவால் உருவாகியுள்ள கால சர்ப்ப யோகம்: இந்த 3 ராசிக்கு மார்ச் 26 வரை வெற்றியும், பணமும் குவியப்போகுது... -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
மரணமிலா வாழ்க்கையை வாழ்வதற்கு ஒரு வழி கிடைத்துவிட்டது..ஆனா இதுக்கு எவ்வளவு செல்வாகும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க! -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: மார்ச் 15 முதல் இந்த 5 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்..
பிறந்த குழந்தைக்கு ஏற்படும் வயிற்று வலியை குணப்படுத்த சில டிப்ஸ்...
பெரும்பாலான பிறந்த குழந்தைகளுக்கு 3-6 மாத கால இடைவெளியில் வயிற்று வலியானது ஏற்படும். இவ்வாறு குழந்தைகளுக்கு வயிற்று வலி ஏற்படும் போது, அவர்கள் தொடர்ந்து அழுது கொண்டே இருப்பார்கள். இதற்கு பெரும் காரணம் குழந்தைகளுக்கு பொதுவாக குடலானது சிறிதாக இருக்கும். ஆகவே அவர்கள் பிறந்து மூன்று மாதங்களுக்கு மேல் ஆகும் போது, குடலானது சரியான வடிவத்திற்கு வர ஆரம்பிப்பதால், அப்போது குழந்தைகளுக்கு கடுமையான வயிற்று வலி ஏற்படுகிறது.
ஆகவே தான் மருத்துவர்கள் குழந்தைகளுக்கு கிரேப் வாட்டரை கொடுக்கச் சொல்கிறார்கள். ஆனால் கிரேப் வாட்டர் இல்லாத காலத்தில், ஒரு சில இயற்கை வைத்தியங்கள் மூலமே, குழந்தைகளுக்கு ஏற்படும் வயிற்று வலியானது குணமாக்கப்பட்டது.
எனவே குழந்தைகளின் குடல் வளர்ச்சிக்காக ஏற்படும் வயிற்று வலியைப் போக்குவதற்கு எந்த மாதிரியான இயற்கை வைத்தியத்தை மேற்கொள்ள வேண்டும் என்று கொடுத்துள்ளோம். அதைப் படித்து தெரிந்து கொண்டு, குழந்தையின் வயிற்று வலியை குணப்படுத்துங்கள்.

பட்டை
பட்டைக்கு உடலின் உட்பகுதியில் ஏற்படும் காயங்களை போக்கும் தன்மை அதிகம் உள்ளது. மேலும் செரிமானமின்மை மற்றும் வாயுத் தொல்லையை குணப்படுத்தவும் பெரிதும் உதவியாக இருக்கும். அதுமட்டுமின்றி குழந்தைகளுக்கு ஏற்படும் வயிற்று வலியையும் சரிசெய்ய, பட்டையை டீ போட்டு கொடுக்கலாம்.

சீரகம்
சீரகம் குழந்தைகளது குடலுக்கு ஏற்படும் எந்த ஒரு பிரச்சனையையும் சரிசெய்யும் தன்மையுடையது. குறிப்பாக குழந்தைகளுக்கு ஏற்படும் வயிற்று வலிக்கு மிகவும் சிறந்தது.

துளசி
மருத்துவ குணம் அதிகம் நிறைந்த துளசியில் உள்ள இரசாயப் பொருள், குழந்தைகள் வயிற்று வலியால் ஏற்படும் அவஸ்தையைப் போக்கி, அவர்களுக்கு நிம்மதியான தூக்கத்தைக் கொடுக்கும். எனவே குழந்தைகளுக்கு துளசியின் சாற்றை வயிற்று வலியின் போது கொடுக்க வேண்டும்.

ஏலக்காய்
ஏலக்காய் குழந்தைகளுக்கு ஓய்வெடுக்கவும், குமட்டலை போக்கவும் சிறந்ததாக உள்ளது. அதிலும் குமட்டலின் காரணமாக சில நேரங்களுக்கு குழந்தைகளுக்கு வயிற்று வலி ஏற்படும். எனவே இவற்றை தடுப்பதற்கு, ஏலக்காய் கொண்டு டீ போட்டு கொடுப்பது நல்லது.

சீமை சாமந்தி டீ
சீமை சாமந்தியில், உடலில் அழற்சியை ஏற்படுத்தும் கிருமிகளை அழிக்கும் பொருள் அதிகம் உள்ளது. மேலும் இது குழந்தைகளின் வயிற்று வலியை குணப்படுத்தவும் சிறந்ததாகவும் உள்ளது. ஆகவே அதற்கு சீமை சாமந்தியை டீயைக் கொடுக்கலாம்.

புதினா
பிறந்த குழந்தையின் குடலில் கடுமையான பிடிப்பு இருப்பதால், அது வயிற்று வலியை ஏற்படுத்தும். எனவே இத்தகைய பிடிப்புக்களை போக்குவதற்கு புதினாவின் சாற்றினை குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டும்.

தாய்ப்பால்
குழந்தைகளது உடலில் ஏற்படும் பிரச்சனைகளைப் போக்குவதற்கு சிறந்த மருந்து என்றால் அது தாய்ப்பால் தான். எனவே குழந்தைகள் தொடர்ச்சியாக வயிற்று வலியினால் அழும் போது, அவர்களுக்கு அவ்வப்போது தாய்ப்பால் கொடுத்தால், அவர்களுக்கு வலி குறைவதோடு, நல்ல தூக்கமும் வரும்.

சோம்பு
தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சூடேற்றி, சோம்பை ஒரு துணியில் போட்டு இறுக்கமாக கட்டி, அதனை தோசைக்கல்லில் தொட்டு, குழந்தையின் வயிற்றில் மிதமான சூட்டில் ஒத்தடம் கொடுக்க வேண்டும்.

தண்ணீர்
குழாயிலிருந்து ஓடும் தண்ணீரிலோ அல்லது வாளியில் உள்ள நீரிலோ குழந்தையை உட்கார வைத்தால், வயிற்று வலி குணமாகும். குறிப்பாக அவ்வாறு உட்கார வைக்கும் போது, தண்ணீர் குழந்தையின் மூக்கு, கண் அல்லது காதுகளுக்குள் செல்லாதவாறு கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டும்.

தூக்கம்
குழந்தைக்கு வயிற்று வலியின் போது தூங்க வைத்துவிட்டால், குழந்தைகளுக்கு வலி தெரியாமல், குழந்தைகள் மெய் மறந்து தூங்குவார்கள்.



Click it and Unblock the Notifications











