Latest Updates
-
ஜூன் 15-ல் உருவாகும் புதாதித்ய யோகத்தால் ராஜவாழ்க்கை வாழப்போகும் 3 ராசிகள் இவங்கதான் - உங்க ராசி என்ன? -
நாட்டுக்கோழி வாங்குனா கர்நாடகா ஸ்டைலில் இந்த மாதிரி குழம்பு வைச்சு பாருங்க - சுருக்குனு வேற லெவலில் இருக்கும் -
இந்த வாரம் உங்கள் ராசிக்கு எப்படி இருக்கப்போகுது தெரியுமா? இந்த 4 ராசிகளுக்கு ராஜயோகம் காத்திருக்காம் -
200 பேர் மட்டுமே வாழும் இந்தியாவின் தனித்துவமான 8 கிராமங்கள் - இந்த கிராமங்களுக்கு போறதே ரொம்ப கஷ்டமாம் -
1 கப் அவல் இருந்தா ஈவ்னிங் டைம்ல இந்த பக்கோடாவை செஞ்சு பாருங்க - மொறுமொறுனு சூப்பரா இருக்கும் -
சாணக்கிய நீதி படி இந்த 6 குணங்களில் ஒன்று உங்களுக்கு இருந்தாலும் உங்களுக்கு ஆயுள் ரொம்ப கம்மியாம் - ஜாக்கிரதை -
உருளைக்கிழங்கை இந்த மாதிரி கல்யாண வீட்டு ஸ்டைல் பால் கறி செஞ்சு பாருங்க - சூப்பர் சைடிஷா இருக்கும் -
ஜூன் 28-ல் நிகழும் குரு-செவ்வாய் சேர்க்கையால் கோடிகளை குவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
1 கப் சேமியா இருந்தா.. காலையில் இந்த டிபனை செய்யுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
இன்றைய ராசிபலன் 13 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு நினைத்தது பலிக்கும் நாளாக இருக்குமாம்
குழந்தைக்கு திடமான உணவு கொடுக்கலாம்-னு இருக்கீங்களா!!!

முதலில் குழந்தை திட உணவுகளை உண்ண தயாராக உள்ளதா என்று பார்க்க வேண்டும். ஏனெனின் குழந்தை பிறந்ததிலிருந்து, 6 மாதம் வரை தாய்ப்பாலை தான் குடித்துக் கொண்டிருக்கும். அதன் பின்னர் குழந்தைக்கு திட உணவுகளை சிறிது சிறிதாக கொடுக்க ஆரம்பித்து விட வேண்டும். அதிலும் குழந்தைக்கு பற்கள் முளைப்பது போல் தோன்றிவிட்டால், கண்டிப்பாக பயப்படாமல் திட உணவுகளைக் கொடுக்கலாம்.
முக்கியமாக குழந்தையை மிகவும் கட்டாயப்படுத்தி கொடுக்கக் கூடாது. இதனால் குழந்தை பயந்த, பின்னர் எவற்றையுமே சாப்பிடாமல் இருக்கும். ஏனெனில் எவற்றை கட்டாயப்படுத்தி கொடுத்தோமோ, அவற்றையே கொடுக்கிறார்கள் என்று நினைத்து எதையுமே சாப்பிடாமல் இருக்கும். ஏனென்றால் அனைத்து குழந்தைகளுக்கும் புரிந்து கொள்ளும் திறன் ஒரே போல் தான் தெரியும். ஆனால் அது தெரியாமல், நிறைய தாய்மார்கள் குழந்தைகளுக்கு செரலாக் மற்றும் மாட்டுப் பால் என்ற உணவுகளைக் கொடுத்து பழக்கிவிட்டுகின்றனர். ஆகவே மறுமுறை குழந்தைக்கு மற்றதை கொடுக்கும் போது, அந்த குழந்தை அந்த ருசியில் உணவு இல்லையென்றால் அதை சாப்பிடாமல் மறுக்கிறது. ஆகவே எப்போது குழந்தைகக்கு ஏற்ற உணவான பால் கலந்திருக்கும் உணவைக் கொடுக்க வேண்டும்.
இப்போது புதுவிதமான உணவை கொடுக்க வேண்டும் என்றால் அப்போது குழந்தையின் மனநிலையை மாற்றி உணவைக் கொடுத்தால், குழந்தை கண்டிப்பாக உண்ணும். இல்லையென்றால் குழிந்தையிடம் சில பொம்மைகள் கொடுத்து, விளையாடும் போது ஊட்டினாலும் குழந்தை நன்கு உண்ணும். அதிலும் குழந்தைக்கு ஒரே பொம்மைகளை கொடுப்பதை விட, சற்று வித்தியாசமாக இருக்கும் சில பொருட்களை கொடுத்தால், குழந்தை உணவில் கவனத்தை செலுத்தாமல், அந்த பொருளின் மீது கவனத்தை செலுத்தும். அதனால் ஈஸியாக உணவை ஊட்டலாம்.
இவற்றையெல்லாம் விட குழந்தை நன்கு சாப்பிட, குழந்தையையே அதன் கைகளாலே சாப்பிட வைக்கலாம். அதாவது ஒரு டேபிளின் மீது, உணவைத் தூவி, குழந்தையை விளையாடும் படி, அதை எடுத்து சாப்பிடச் சொல்லி செய்தால், குழந்தையும் விரும்பி உண்ணும். ஆகவே ஒரு பொம்மையை கொடுத்து அதன் மேல் கவனம் வைத்து குழந்தை சாப்பிடுவதை விட, குழந்தையையே அதன் பிஞ்சு விரல்களால் எடுத்து சாப்பிடச் சொன்னால், விரும்பி சாப்பிடும். முக்கியமாக உணவுகளை மிகவும் சிறியதாக, மென்மையாக இருக்க வேண்டும். கடினமான உணவுகளைக் கொடுத்தால், குழந்தையின் தொண்டையில் மாட்டி குழந்தைக்கு தொந்தரவை ஏற்படுத்தும். ஆகவே அவற்றில் கவனம் தேவை.
உணவுகளை குறைந்த அளவில் சிறு இடைவெளி விட்டு விட்டு கொடுக்க வேண்டும். இது மிகவும் முக்கியமான திட உணவுகளை கொடுக்கும் டிப்ஸ். இதனால் குழந்தைக்கு வயிறு நிறைவதோடு, அதன் ருசியும் பிடித்துவிடும்.



Click it and Unblock the Notifications