Latest Updates
-
சனிபகவானின் வக்ர பெயர்ச்சியால் 138 நாட்களுக்கு ஜெயிக்கிற குதிரையா மாறப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
சீதா நவமி: உங்கள் வீட்டில் இந்த மாற்றங்களைச் செய்தா பணமழை கொட்டுமா? அதிர்ஷ்டம் தரும் வாஸ்து ரகசியம்! -
கோடையில் இந்த கஞ்சியை தினமும் 1 கப் குடிங்க.. உடல் எடையும் குறையும், உடல் சூடும் தணியும்.. -
இன்றைய ராசிபலன் 25 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ராஜயோகம் கூடிவரப்போகுதாம் -
செவ்வாய் மேஷ ராசிக்கு செல்வதால் கோடீஸ்வர யோகத்தை பெறப்போகும் 4 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
இந்தியாவின் தேசிய காய் என்று அழைக்கப்படும் காய்கறி எது? அதற்கான காரணம் என்ன தெரியுமா? -
ஏப்ரல் இறுதியில் குரு-புதன் சேர்க்கையால் உருவாகும் அரிய ராஜயோகம்: இந்த 3 ராசிகளின் வருமானம் உயரும்! -
வெயில் காலத்தில் திருமணமா? இந்த 5 விஷயங்களைச் செய்யாவிட்டால் விசேஷமே வீணாகிவிடும்! -
மட்டன் சுவையை மிஞ்சும் சோயா உருளைக்கிழங்கு குருமா ரெசிபி - செஞ்சு பாருங்க, செமையா இருக்கும் -
பொருளாதாரச் சுரண்டல் இனி குடும்ப வன்முறை! மனைவியிடம் கையேந்த வைக்கும் கணவர்களுக்கு நீதிமன்றம் கொடுத்த செக்!
குழந்தைக்கு திடமான உணவு கொடுக்கலாம்-னு இருக்கீங்களா!!!

முதலில் குழந்தை திட உணவுகளை உண்ண தயாராக உள்ளதா என்று பார்க்க வேண்டும். ஏனெனின் குழந்தை பிறந்ததிலிருந்து, 6 மாதம் வரை தாய்ப்பாலை தான் குடித்துக் கொண்டிருக்கும். அதன் பின்னர் குழந்தைக்கு திட உணவுகளை சிறிது சிறிதாக கொடுக்க ஆரம்பித்து விட வேண்டும். அதிலும் குழந்தைக்கு பற்கள் முளைப்பது போல் தோன்றிவிட்டால், கண்டிப்பாக பயப்படாமல் திட உணவுகளைக் கொடுக்கலாம்.
முக்கியமாக குழந்தையை மிகவும் கட்டாயப்படுத்தி கொடுக்கக் கூடாது. இதனால் குழந்தை பயந்த, பின்னர் எவற்றையுமே சாப்பிடாமல் இருக்கும். ஏனெனில் எவற்றை கட்டாயப்படுத்தி கொடுத்தோமோ, அவற்றையே கொடுக்கிறார்கள் என்று நினைத்து எதையுமே சாப்பிடாமல் இருக்கும். ஏனென்றால் அனைத்து குழந்தைகளுக்கும் புரிந்து கொள்ளும் திறன் ஒரே போல் தான் தெரியும். ஆனால் அது தெரியாமல், நிறைய தாய்மார்கள் குழந்தைகளுக்கு செரலாக் மற்றும் மாட்டுப் பால் என்ற உணவுகளைக் கொடுத்து பழக்கிவிட்டுகின்றனர். ஆகவே மறுமுறை குழந்தைக்கு மற்றதை கொடுக்கும் போது, அந்த குழந்தை அந்த ருசியில் உணவு இல்லையென்றால் அதை சாப்பிடாமல் மறுக்கிறது. ஆகவே எப்போது குழந்தைகக்கு ஏற்ற உணவான பால் கலந்திருக்கும் உணவைக் கொடுக்க வேண்டும்.
இப்போது புதுவிதமான உணவை கொடுக்க வேண்டும் என்றால் அப்போது குழந்தையின் மனநிலையை மாற்றி உணவைக் கொடுத்தால், குழந்தை கண்டிப்பாக உண்ணும். இல்லையென்றால் குழிந்தையிடம் சில பொம்மைகள் கொடுத்து, விளையாடும் போது ஊட்டினாலும் குழந்தை நன்கு உண்ணும். அதிலும் குழந்தைக்கு ஒரே பொம்மைகளை கொடுப்பதை விட, சற்று வித்தியாசமாக இருக்கும் சில பொருட்களை கொடுத்தால், குழந்தை உணவில் கவனத்தை செலுத்தாமல், அந்த பொருளின் மீது கவனத்தை செலுத்தும். அதனால் ஈஸியாக உணவை ஊட்டலாம்.
இவற்றையெல்லாம் விட குழந்தை நன்கு சாப்பிட, குழந்தையையே அதன் கைகளாலே சாப்பிட வைக்கலாம். அதாவது ஒரு டேபிளின் மீது, உணவைத் தூவி, குழந்தையை விளையாடும் படி, அதை எடுத்து சாப்பிடச் சொல்லி செய்தால், குழந்தையும் விரும்பி உண்ணும். ஆகவே ஒரு பொம்மையை கொடுத்து அதன் மேல் கவனம் வைத்து குழந்தை சாப்பிடுவதை விட, குழந்தையையே அதன் பிஞ்சு விரல்களால் எடுத்து சாப்பிடச் சொன்னால், விரும்பி சாப்பிடும். முக்கியமாக உணவுகளை மிகவும் சிறியதாக, மென்மையாக இருக்க வேண்டும். கடினமான உணவுகளைக் கொடுத்தால், குழந்தையின் தொண்டையில் மாட்டி குழந்தைக்கு தொந்தரவை ஏற்படுத்தும். ஆகவே அவற்றில் கவனம் தேவை.
உணவுகளை குறைந்த அளவில் சிறு இடைவெளி விட்டு விட்டு கொடுக்க வேண்டும். இது மிகவும் முக்கியமான திட உணவுகளை கொடுக்கும் டிப்ஸ். இதனால் குழந்தைக்கு வயிறு நிறைவதோடு, அதன் ருசியும் பிடித்துவிடும்.



Click it and Unblock the Notifications