Latest Updates
-
இன்றைய ராசிபலன் 09 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு ராஜயோகம் கதவை தட்டப்போகுதாம் -
சனி-சந்திர சேர்க்கை உருவாக்கும் விஷ யோகம்: நாளை முதல் இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்! -
சனிபகவானின் நட்சத்திர மாற்றத்தால் இந்த 3 ராசிக்காரர்களை துரதிர்ஷ்டம் விடாம துரத்தப்போகுதாம் - ஜாக்கிரதை -
2 குடைமிளகாயும், 2 வெங்காயமும் இருந்தா.. 10 நிமிஷத்துல இந்த கிரேவியை செய்யுங்க.. சப்பாத்திக்கு அள்ளும்.. -
தேங்காய் சட்னியை ஒருதடவை கேரளா ஸ்டைலில் இந்த மாதிரி அரைச்சு பாருங்க - டேஸ்ட் அட்டகாசமா இருக்கும் -
ஜூன் 8-10 கனமழை எச்சரிக்கை! உங்கள் திருமணத்தை மழையிலிருந்து காப்பாற்ற இந்த 5 டிப்ஸ் போதும்! -
பழங்களின் ராணி என்று அழைக்கப்படும் அந்த பழம் எது தெரியுமா? நீங்க இந்த பழத்தை சாப்பிட்டு இருக்கீங்களா? -
இந்த படத்துல உங்க கண்ணுக்கு முதல்ல என்ன தெரிஞ்சதுன்னு சொல்லுங்க.. நீங்க எப்படிப்பட்டவங்கன்னு சொல்றோம்.. -
ஜூன் 8, 9 திருமணமா? மழையால் உங்கள் கனவுத் திருமணம் பாழாகாமல் இருக்க, இந்த மாற்றங்களை உடனே செய்யுங்கள்! -
சுக்கிரன் கடக ராசிக்கு செல்வதால் செல்வத்தையும், புகழையும் குவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா?
செல்லத்துக்கு பல் முளைக்கும் போது என்னலாம் நடக்கும் தெரியுமா!!!

* குழந்தைகளுக்கு பற்கள் முளைக்க தொடங்கும் போது, அவர்களது வாயில் இருந்து அதிகமான அளவு எச்சில் வெளிவரும். அதுமட்டுமல்லாமல், அவர்களுக்கு தண்ணீர் அல்லது பால் கொடுக்கும் போதும், வாயில் அதிகமாக எச்சில் சொட்ட ஆரம்பிக்கும். அவ்வாறு ஏற்படும் போது அதனை அடிக்கடி துடைக்க வேண்டும். இல்லையென்றால் அந்த எச்சில் அவர்களது முகத்தில் நீண்ட நேரம் இருந்தாலோ அல்லது குழந்தையின் துணியில் இருந்தாலோ அவர்களுக்கு சளி அல்லது இருமல் போன்றவை ஏற்படும். ஆகவே துணிகள் ஈரமாக இருந்தால் அடிக்கடி மாற்ற வேண்டும்.
* பற்கள் முளைப்பது போல் இருந்தால் குழந்தைகளுக்கு வலி ஏற்படும். ஆகவே அப்போது அந்த வலியால் குழந்தை அடிக்கடி அழத் தொடங்கும். அதுமட்டுமல்லாம என்ன தான் சமாதானப்படுத்தி குழந்தை அழுதாலும், அது குழந்தைக்கு பற்கள் முளைக்கும் நேரம் என்பதை அறியலாம். அப்போது குழந்தை நல மருத்துவரை அணுகி, குழந்தைக்கு ஏற்ற வலி நிவாரணியை வாங்கி கொடுக்க வேண்டும்.
* எதையாவது குழந்தை அடிக்கடி வாயில் வைக்கும். அதுமட்டுமல்லாமல் கண்ணில் படும் அனைத்துப் பொருட்களையும் வாயில் வைக்கும். ஏனெனில் பற்கள் முளைக்கும் போது ஈறுகளில் அரிப்பு மற்றும் தோலை துளைத்து பற்களை வருவதால் வாயில் வலி போன்றவை ஏற்படும். இந்த நேரத்தில் குழந்தைகளுக்கு பால் கொடுக்கும் போது தாய்க்கு பெரும் சிரமம் ஏற்படும்.
* வலியின் காரணமாக சில சமயங்களில் குழந்தை பால் குடிப்பதை கூட மறுக்கும். ஏனெனில் அந்த வலி குழந்தைக்கு ஒருவித எரிச்சலை ஏற்படுத்துவதால், அது பால் குடிப்பதை மறுக்கும்.
* சிலசமயங்களில் குழந்தைகளுக்கு வயிற்றுப்போக்கு ஏற்படும். பல் வளர்வதற்கு முன் குழந்தைகளுக்கு தண்ணீர் போன்று கழிவுகள் வெளியேறும். இவ்வாறு வந்தால் உடனே மருத்துவரை அணுக வேண்டும். ஏனென்றால் வயிற்றுக்கோளாறுகள் இருந்தால் கூட இந்த பிரச்சனை ஏற்படும். ஆகவே இந்த விஷயத்தில் மிகவும் கவனமாக இருக்கவும்.
* பற்கள் முளைக்கும் ஆரம்ப காலத்தில் குழந்தைகளுக்கு தூக்கம் கூட வராது. பற்கள் முளைக்கும் போது ஏற்படும் வலி, குழந்தைகள் நிம்மதியாக தூங்கவிடாது. தூங்கும் போது புரண்டு புரண்டு படுக்கும். சொல்லப்போனால் நடு ராத்திரியில் கூட தூங்காமல் எழுந்து அழத் தொடங்கும்.
இவையெல்லாம் குழந்தைகளுக்கு பற்கள் முளைக்கும் போது ஏற்படும் அறிகுறிகள் ஆகும். ஆகவே இவற்றையெல்லாம் தெரிந்து கொண்டு, குழந்தைகளுக்கு வலி ஏற்படாமல், அதற்கான மருந்துகளை மருத்துவரை அணுகி முன்பே கொடுத்து, அவர்களை சந்தோஷமாக, எந்த ஒரு பிரச்சனையும் இல்லாமல் வளர்க்கலாம்.



Click it and Unblock the Notifications