Latest Updates
-
ராகி பச்சை பயறு தோசையும், வெங்காய சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 24 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ரொம்ப துக்கமான நாளாக இருக்குமாம் -
August Month Rasi Palan 2026: உங்க ராசியை சொல்லுங்க.. ஆகஸ்ட் மாதம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்... -
சந்திரன் விருச்சிக ராசிக்கு செல்வதால் தொந்தரவுகளையும், துன்பங்களையும் அனுபவிக்கப்போகும் 3 ராசிகள் -
செட்டிநாடு கொண்டைக்கடலை குருமா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - தோசை, சப்பாத்திக்கு அட்டகாசமா இருக்கும் -
ஆடி வெள்ளி ஸ்பெஷல் தேங்காய் பாயாசம் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
சருமம் அதிகமா வறண்டு போகுதா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க.. -
சிவன் கோவிலில் ஏன் பக்தர்கள் தங்கள் வேண்டுதல்களை நந்தியின் காதில் மெதுவாக கூறுகிறார்கள் தெரியுமா? -
வக்ர நிவர்த்தி அடையும் புதன்: நாளை முதல் இந்த 3 ராசிக்கு பணம், புகழ், வெற்றி தேடி வரப்போகுது! -
ராகு-கேது ஆசியால் டிசம்பர் மாதம் வரை கொடிகட்டி பிறக்கப்போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா?
இந்த 5 ராசிக்காரங்க எப்பவும் ஓவரா யோசிச்சே அவங்க அழிவை அவங்களே தேடிக்குவாங்களாம்...!
சிந்திப்பது என்பது மனிதர்களுக்கு மட்டுமே உரிய தனிச்சிறப்பாகும். ஆனால் அளவிற்கு அதிகமான சிந்தனை சிலசமயங்களில் பேரழிவை ஏற்படுத்தும். அளவிற்கு அதிகமாக சிந்திப்பது என்பது ஒரு வழக்கமான சிந்தனையை ஒரு குழப்பமான எண்ணங்களின் சங்கிலியாக மாற்றக்கூடிய ஒன்றாகும். இப்படி அளவிற்கதிகமாக சிந்திப்பவர்கள் எப்போதும் வேறொரு உலகத்தில் வாழ்ந்து கொண்டிருப்பார்கள்.
நாம் அனைவரும் சில சமயங்களில் விஷயங்களை அதிகமாகச் சிந்திக்கிறோம். அதிகமாகச் சிந்திப்பது அல்லது எதிர்மறையான தொனியில் சிந்திப்பது என்பது எப்போதும் அழிவை ஏற்படுத்தக் கூடியதாகும். ஜோதிட சாஸ்திரத்தின் படி சில ராசிக்காரர்கள் இந்த மோசமான குணம் கொண்டவர்களாக இருப்பார்கள்.

ஒவ்வொரு சூழ்நிலையும் ஒரு நபரை வித்தியாசமாகப் பாதிக்கிறது என்பதால், சில ராசிக்காரர்கள் மன அழுத்தத்திற்கும் அதிகம் எதிர்மறையாக சிந்திப்பதற்கும் அதிக வாய்ப்புள்ளது. இந்த பதிவில் எந்தெந்த ராசிக்காரர்கள் எப்போதும் அதிகமாக சிந்தித்து தங்கள் அழிவை தானே தேடிக்கொள்வார்கள் என்று பார்க்கலாம்.
கன்னி
கன்னி ராசிக்காரர்கள் அனைத்திலும் பர்பெக்ட்டாக இருக்க வேண்டுமென்று நினைப்பதால் அதிகமாக சிந்திப்பதில் ஆச்சரியமில்லை. கன்னி ராசிக்காரர்கள் மேலோட்டமாகச் சிந்திப்பதை மற்றொரு நிலைக்குக் கொண்டு செல்கிறார்கள். கன்னி ராசிக்காரர்கள் ஒவ்வொரு சிறிய விவரத்திலும் முழுமையைக் காண முனைகிறார்கள், அவர்கள் அந்த விவரத்தை அடையும் வரை சிந்திப்பதை நிறுத்த மாட்டார்கள்.
ஒவ்வொரு விஷயத்தையும் முழுமையாக அறிந்து கொள்வது மட்டுமே அவர்களுக்கு திருப்தியை ஏற்படுத்தக்கூடும், ஆனால் அது அவர்களை கடுமையான மனஅழுத்தத்திற்குள் தள்ளும். மேலும் அவர்கள் எப்போதும் தங்களை தாங்களே விமர்சனத்திற்கு உள்ளாக்குகிறார்கள், எனவே அவர்கள் தங்களைத் தாங்களே அழித்துக் கொள்பவர்களாக இருப்பார்கள்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்கள் அவர்களின் இரட்டைக் குணத்திற்கு பெயர் பெற்றவர்கள், மேலும் இந்த முக்கிய ஆளுமைப் பண்பு அவர்களை அதிகமாகச் சிந்திக்கவும், சிறிய விஷயங்களைக் கூட மிகைப்படுத்தவும் ஆளாக்குகிறது. மிதுன ராசியினரின் இந்த அதிகப்படியான சிந்தனைப் பண்பு அவர்களை முடிவெடுக்கும் நடுவில் சிக்க வைக்கும். எது நல்லது என்று சிந்தித்தே அவர்கள் நேரத்தை வீணாக்குவார்கள், சில நேரங்களில் சிந்தனைகள் எதிர்மறை எண்ணங்கள் சார்ந்ததாகவே இருக்கும்.
மிதுன ராசியினரைப் பொறுத்தவரை, அதிகமாகச் சிந்திப்பது அவர்கள் மிகவும் கவனமாக இருக்க உதவுவதாக நினைக்கிறார்கள், ஆனால் நீண்ட காலத்திற்கு, அது உதவாது. சொல்லபோனால் அவர்களின் இந்த அதீத கவனம் அவர்களை மற்றவர்களிடம் இருந்து விலக்கித்தான் வைக்கும்.
மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு, சூழ்நிலைகள் எப்பொழுதும் தவறான வழியில் இருப்பது போலவே தெரியும். அவர்கள் ஒரு முடிவுக்கு வருவதற்கு முன்பே, மகர ராசிக்காரர்கள் இந்த விஷயம் இப்படி முடிந்தால் எப்படி நடக்கும் என்று பல்வேறு விதத்தில் சிந்திப்பார்கள். மகர ராசிக்காரர்கள் பெரும்பாலும் நம்பத்தகாத எதிர்பார்ப்புகளை உருவாக்குகிறார்கள், எந்த விஷயத்தையும் மிகைப்படுத்துவது அவர்களின் வழக்கமாக இருக்கும். இது அவர்களுக்கு மன அழுத்தத்தை ஏற்படுத்துகிறது மற்றும் இது பல வழிகளில் அவர்களின் ஆரோக்கியத்தை பாதிக்கிறது.
மீனம்
மீன ராசிக்காரர்கள் சிறந்த சிந்தனையாளர்கள், ஆனால் அவர்கள் அதை எப்போதும் உச்சநிலைக்கு தள்ள முனைகிறார்கள், அதனால் பெரும்பாலும் பகுத்தறிவற்ற சிந்தனையில் ஈடுபடுகிறார்கள். தங்களைப் பற்றி மிகவும் சுயவிமர்சனம் மற்றும் தீர்ப்பளிக்கும் வகையில், மீன ராசிக்காரர்கள் எப்போதும் அதிகமாகச் சிந்திக்கும் தவறை செய்கிறார்கள். அவர்கள் மிகவும் கற்பனை செய்ய முடியும், தங்கள் மூளைக்குள் எப்போதும் சொந்த உலகத்தை உருவாக்கி, தங்கள் சொந்த எண்ணங்களில் வாழ்கிறார்கள்.
துலாம்
துலாம் ராசிக்காரர்கள் அனைத்து விஷயங்களுக்கும் தீர்ப்பளிக்கும் நீதிபதிகளாக கருதப்படுகிறார்கள். இது ஒரு நல்ல தரமாகத் தோன்றினாலும், துலாம் ராசிக்காரர்களின் பகுப்பாய்வு திறன் அவர்களை அனைத்து விஷயங்களையும் சூழ்நிலைகளையும் மறுபரிசீலனை செய்ய வைக்கிறது. வாதம் அல்லது பிரச்சினையின் நன்மை தீமைகளை எடைபோடவும் செய்கிறது. அவர்கள் எப்போதும் அவநம்பிக்கையாளர்களாகவும் இருக்கிறார்கள், மேலும் அதிகமாக சிந்திக்க முனைகிறார்கள். ஒரு துலாம் ராசிக்காரர் என்ன மனநிலையில் இருக்கிறார் என்று கணிப்பது மிகவும் கடினமாக இருக்கும்



Click it and Unblock the Notifications

