Latest Updates
-
பன்னீரை இந்த பக்குவத்துல மசாலா செய்யுங்க.. சப்பாத்திக்கு தாறுமாறா இருக்கும்.. -
இந்த 4 ராசிக்காரங்க மற்றவர்களை ஏமாற்றும் திருட்டு குணம் உள்ளவர்களாக இருப்பார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
முகத்தில் கருந்திட்டுக்கள் அதிகமா இருக்குதா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க.. -
இறந்தவர்கள் உடலை எரித்தாலும் இந்த ஒரு பாகம் மட்டும் அழியாதாம் - அது எந்த உறுப்பு தெரியுமா? -
Aadi 2026: ஆடி மாதத்தில் கோடீஸ்வர யோகத்தைப் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் தெரியுமா? -
வெண்டைக்காயும் வேர்க்கடலையும் இருந்தா.. இப்படி தொக்கு செய்யுங்க.. 3 வேளையும் சைடு டிஷ் பிரச்சனையே இருக்காது.. -
சூரியன் சனிபகவானின் நட்சத்திரத்திற்கு செல்வதால் இந்த 3 ராசிகளின் பலமும், செல்வாக்கும் அதிகரிக்கப் போகுதாம் -
1 கப் கொத்தமல்லி இருந்தா இந்த மணமணக்கும் சாம்பாரை வைச்சு பாருங்க - வித்தியாசமா அருமையா இருக்கும் -
எலுமிச்சை நீர் Vs தேன் கலந்த நீர் - இவற்றில் உடல் எடையைக் குறைக்க சிறந்தது எது? -
தாய் கிழவி இயக்குனருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த சிவகார்த்திகேயன் - என்ன செய்திருக்கார் பாருங்க?
மாத்திரை அட்டைகளில் இந்த சிவப்பு நிற கோட்டை கவனிச்சுருக்கீங்களா? இது ஏன் இருக்கு-ன்னு தெரியுமா?
Red Line On Packets Of Medicine In Tamil: இன்று நிறைய பேர் தினமும் ஏராளமான மாத்திரைகளை போடுகிறோம். அதில் பலர் மருத்துவர் பரிந்துரைக்கும் மாத்திரைகளை போடுவார்கள். இன்னும் சிலர் மருத்துவரிடம் ஆலோசிக்காமலேயே மாத்திரைகளை வாங்கி போடுவார்கள். பொதுவாக மாத்திரைகளை வாங்கும் போது, முதலில் அந்த மருந்து மாத்திரையின் உற்பத்தி தேதி மற்றும் காலாவதி தேதிகளை கவனித்து வாங்குவோம்.
ஆனால் அப்படி வாங்கும் ஒருசில மாத்திரை அட்டையின் பின் சிவப்பு நிற கோட்டை கவனித்திருக்கமாட்டோம். அப்படியே கவனித்திருந்தாலும், அது ஒரு டிசைன் என்று விட்டுவிடுவோம். ஆனால் மாத்திரை அட்டையின் பின் உள்ள சிவப்பு நிற கோடு அந்த மருந்து பற்றிய முக்கியமான செய்தியை தெரிவிக்கிறது என்று தெரியுமா?

அது என்னவெனில் இந்த மாதிரியான மாத்திரைகளை மருத்துவரின் வழிகாட்டுதலின்றி எடுக்கக்கூடாது என்பதாகும். எப்போதுமே எந்த ஒரு மருந்தையும் மருத்துவரின் அறிவுறுத்தலின்றி எடுத்தால், சில சமயங்களில் அது உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்திவிடும் என்பதை அனைவரும் அறிவோம். இருப்பினும், சிலர் ஒருமுறை ஒரு பிரச்சனைக்கு மருத்துவர் பரிந்துரைத்த மருந்தை, அடுத்தமுறை அந்த பிரச்சனையை சந்திக்கும் போது, மருத்துவரிடம் செல்லாமல், அவர் முன்பே பரிந்துரைத்ததை வாங்கி உட்கொள்வோம். ஆனால் இது முற்றிலும் தவறான செயல் மற்றும் ஆபத்தானதும் கூட.
இந்த சிக்கலைத் தவிர்க்க, கடந்த ஞாயிற்றுக்கிழமை சுகாதார அமைச்சகம் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில் மருந்து மாத்திரைகளின் பின் குறிப்பிடப்பட்டுள்ள ஒருசில விவரத்திற்கு கவனத்தை செலுத்துவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தியது. மேலும் குறிப்பிட்ட மருந்துகளுக்கு மருத்துவ சீட்டு வழங்கப்பட்டால் மட்டுமே மருந்துகளை மருந்தகங்களில் வழங்க வேண்டும் என்றும் அமைச்சகம் தெரிவித்துள்ளது.
குறிப்பாக ஆன்டிபயாடிக் மருந்துகள் பாக்டீரியா தொற்றுக்களை தடுக்கலாம். ஆனால் இந்த மாதிரியான மருந்துகளின் மீது தான் சிவப்பு நிற கோடு இருக்கும். அப்படியென்றால் இந்த மருந்துகளை மருத்துவரின் பரிந்துரை இல்லாமல் உட்கொள்ளக்கூடாது என சுகாதார அமைச்சகம் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளது.
ஆகவே எப்போதும் மருந்து மாத்திரைகளின் காலாவதி தேதியை கவனிக்கும் போது, அதில் சிவப்பு நிற கோடு உள்ளதா என்பதையும் கவனியுங்கள். சொந்தமாகவோ அல்லது மருந்து கடையில் உள்ளவரின் ஆலோசனையின் பேரிலோ எந்த மருந்தையும் உட்கொள்ளாமல் இருப்பது நல்லது. குறிப்பாக சிவப்பு கோடு கொண்ட மருந்தை உட்கொள்ளும் முன் மருத்துவ நிபுணரிடம் ஆலோசனை பெறுவது அவசியம்.



Click it and Unblock the Notifications