Latest Updates
-
4 பிரெட், 1 கப் தயிர் இருந்தா 10 நிமிஷத்துல இந்த மாதிரி வடை சுடுங்க... மொறுமொறுனு டேஸ்ட் பிரமாதமா இருக்கும்... -
இந்த 4 ராசி ஆண்கள் ரொம்ப பொஸசிவான கணவர்களாக இருப்பார்களாம்...இவங்க மனைவிகள்தான் பாவம்..உங்க ராசி இதுல இருக்கா? -
LPG Gas: தலைவிரித்தாடும் சிலிண்டர் தட்டுப்பாடு... சிலிண்டர் சீக்கிரம் தீராம இருக்க இப்படி சமையல் பண்ணுங்க...! -
கோதுமை ரவா தோசையும்.. புதினா சட்னியும்..- 10 நிமிடத்தில் எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 11 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு மனஉளைச்சலான நாளாக இருக்குமாம்...! -
குரு-புதன் உருவாக்கும் சக்தி வாய்ந்த ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது... -
தமிழ்நாட்டில் உள்ள சர்க்கரை நோயை குணப்படுத்தும் 1,300 ஆண்டுகள் பழமையான இந்த கோயில் பற்றி தெரியுமா? -
1 கப் ரவை இருந்தா.. ஈவ்னிங் கண்டிப்பா இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. செமயா இருக்கும்.. -
1 வருடம் கழித்து மீனம் செல்லும் சூரியன்: மார்ச் 15 முதல் இந்த 4 ராசிக்காரங்க எச்சரிக்கையா இருக்கணும்.. -
கல்யாண வீட்டு தஞ்சை வத்தக்குழம்பு - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. டேஸ்ட் அள்ளும்..
மாத்திரை அட்டைகளில் இந்த சிவப்பு நிற கோட்டை கவனிச்சுருக்கீங்களா? இது ஏன் இருக்கு-ன்னு தெரியுமா?
Red Line On Packets Of Medicine In Tamil: இன்று நிறைய பேர் தினமும் ஏராளமான மாத்திரைகளை போடுகிறோம். அதில் பலர் மருத்துவர் பரிந்துரைக்கும் மாத்திரைகளை போடுவார்கள். இன்னும் சிலர் மருத்துவரிடம் ஆலோசிக்காமலேயே மாத்திரைகளை வாங்கி போடுவார்கள். பொதுவாக மாத்திரைகளை வாங்கும் போது, முதலில் அந்த மருந்து மாத்திரையின் உற்பத்தி தேதி மற்றும் காலாவதி தேதிகளை கவனித்து வாங்குவோம்.
ஆனால் அப்படி வாங்கும் ஒருசில மாத்திரை அட்டையின் பின் சிவப்பு நிற கோட்டை கவனித்திருக்கமாட்டோம். அப்படியே கவனித்திருந்தாலும், அது ஒரு டிசைன் என்று விட்டுவிடுவோம். ஆனால் மாத்திரை அட்டையின் பின் உள்ள சிவப்பு நிற கோடு அந்த மருந்து பற்றிய முக்கியமான செய்தியை தெரிவிக்கிறது என்று தெரியுமா?

அது என்னவெனில் இந்த மாதிரியான மாத்திரைகளை மருத்துவரின் வழிகாட்டுதலின்றி எடுக்கக்கூடாது என்பதாகும். எப்போதுமே எந்த ஒரு மருந்தையும் மருத்துவரின் அறிவுறுத்தலின்றி எடுத்தால், சில சமயங்களில் அது உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்திவிடும் என்பதை அனைவரும் அறிவோம். இருப்பினும், சிலர் ஒருமுறை ஒரு பிரச்சனைக்கு மருத்துவர் பரிந்துரைத்த மருந்தை, அடுத்தமுறை அந்த பிரச்சனையை சந்திக்கும் போது, மருத்துவரிடம் செல்லாமல், அவர் முன்பே பரிந்துரைத்ததை வாங்கி உட்கொள்வோம். ஆனால் இது முற்றிலும் தவறான செயல் மற்றும் ஆபத்தானதும் கூட.
இந்த சிக்கலைத் தவிர்க்க, கடந்த ஞாயிற்றுக்கிழமை சுகாதார அமைச்சகம் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில் மருந்து மாத்திரைகளின் பின் குறிப்பிடப்பட்டுள்ள ஒருசில விவரத்திற்கு கவனத்தை செலுத்துவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தியது. மேலும் குறிப்பிட்ட மருந்துகளுக்கு மருத்துவ சீட்டு வழங்கப்பட்டால் மட்டுமே மருந்துகளை மருந்தகங்களில் வழங்க வேண்டும் என்றும் அமைச்சகம் தெரிவித்துள்ளது.
குறிப்பாக ஆன்டிபயாடிக் மருந்துகள் பாக்டீரியா தொற்றுக்களை தடுக்கலாம். ஆனால் இந்த மாதிரியான மருந்துகளின் மீது தான் சிவப்பு நிற கோடு இருக்கும். அப்படியென்றால் இந்த மருந்துகளை மருத்துவரின் பரிந்துரை இல்லாமல் உட்கொள்ளக்கூடாது என சுகாதார அமைச்சகம் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளது.
ஆகவே எப்போதும் மருந்து மாத்திரைகளின் காலாவதி தேதியை கவனிக்கும் போது, அதில் சிவப்பு நிற கோடு உள்ளதா என்பதையும் கவனியுங்கள். சொந்தமாகவோ அல்லது மருந்து கடையில் உள்ளவரின் ஆலோசனையின் பேரிலோ எந்த மருந்தையும் உட்கொள்ளாமல் இருப்பது நல்லது. குறிப்பாக சிவப்பு கோடு கொண்ட மருந்தை உட்கொள்ளும் முன் மருத்துவ நிபுணரிடம் ஆலோசனை பெறுவது அவசியம்.



Click it and Unblock the Notifications











