இந்தியாவின் மிகப்பெரிய விமான நிலையம் எது? அது எந்த மாநிலத்தில் இருக்கு தெரியுமா?

கடந்த சில நாட்களாக தமிழ்நாட்டில் மிகவும் பரபரப்பான செய்தியாக இருந்து வருவது பரந்தூர் விமான நிலைய திட்டம் கைவிடப்பட்டதுதான். இதற்கு ஆதரவாகவும், எதிர்மறையாகவும் பல்வேறு கருத்துக்கள் மக்களிடையே பகிரப்பட்டு வருகின்றன. ஒரு விமான நிலையம் என்பது சாதாரண விஷயமல்ல, அதற்குப் பின்னால் மிகப்பெரிய வர்த்தகம் உள்ளது.

Which Is the Largest Airport in India

இந்தியர்களின் பயணத்தில் விமான நிலையங்கள் ஒரு தவிர்க்க முடியாத அங்கமாகிவிட்டன. ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு விரைவாகவும் வசதியாகவும் பயணிக்க விமானப் பயணம் இன்றியமையாததாக உள்ளது. உலகின் மூன்றாவது மிகப்பெரிய உள்நாட்டு விமானப் போக்குவரத்துத் துறையைக் கொண்டுள்ள இந்தியா, ஒவ்வொரு ஆண்டும் 37 கோடிக்கும் அதிகமான விமானப் பயணிகளைக் கையாண்டு வருகிறது, மேலும் ஒவ்வொரு ஆண்டும் 15 சதவீத வலுவான வளர்ச்சியைக் குறிக்கிறது. தற்போது இந்தியாவில் 160 விமான நிலையங்கள் உள்ளன.

இந்தியா தனது வளர்ந்து வரும் பொருளாதாரத்துக்கு வலுசேர்க்கும் வகையில், தனது உள்கட்டமைப்பை மிக வேகமாக மேம்படுத்தி வருகிறது. நவீன நெடுஞ்சாலைகள், ரயில்வே மற்றும் உலகத்தரம் வாய்ந்த விமான நிலையங்களை உருவாக்குவதன் மூலம், நாட்டின் பொருளாதார வளர்ச்சி ஊக்குவிக்கப்படுகிறது. இந்தியாவில் பல உள்நாட்டு மற்றும் சர்வதேச விமான நிலையங்கள் இருந்தாலும் இந்தியாவின் மிகப்பெரிய விமான நிலையம் எதுவென்று உங்களுக்குத் தெரியுமா?

இந்தியாவின் மிகப்பெரிய விமான நிலையம் எங்கு உள்ளது?

இந்தியாவின் விமானப் போக்குவரத்து அமைப்பானது உலகின் மிகப்பெரிய விமான அமைப்புகளில் ஒன்றாகும். இந்தியாவின் மிகப்பெரிய விமான நிலையம் டெல்லி, மும்பை, கொல்கத்தா அல்லது சென்னை போன்ற முக்கிய நகரங்களில் இல்லை என்பது நம்ப முடியாததாக இருக்கலாம் உண்மையில், இந்தியாவின் மிகப்பெரிய விமான நிலையம் ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச விமான நிலையமாகும். ஹைதராபாத்தின் ஷம்ஷாபாத்தில் அமைந்துள்ள இதுவே பரப்பளவில் இந்தியாவின் மிகப்பெரிய விமான நிலையமாகத் திகழ்கிறது.

ராஜீவ் காந்தி சர்வதேச விமான நிலையம்

ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச விமான நிலையம் 5,500 ஏக்கருக்கும் அதிகமான பரப்பளவைக் கொண்டுள்ளது. இங்கு ஆசியாவிலேயே மிக நீளமான (அதாவது 4,260 மீட்டர்) ஓடுபாதை உள்ளது. இது Airbus A380 போன்ற மிகப் பெரிய ரக விமானங்களைக் கையாளும் அளவுக்கு அகலமானது. இந்த விமான நிலையம் ஆண்டுக்கு 34 மில்லியன் பயணிகளைக் கையாளும் திறன் கொண்டது. 2022-2023 ஆம் ஆண்டில், 21 மில்லியன் பயணிகள் இந்த விமான நிலையத்தின் வழியாகப் பயணம் செய்தது மிகப்பெரிய சாதனையாகக் கருதப்படுகிறது.

ராஜீவ் காந்தி விமான நிலையத்தின் சிறப்புகள்

2008 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த விமான நிலையம் e-boarding வசதியை முதன் முதலில் அறிமுகப்படுத்தியது. இதில் 83 விமான நிறுத்துமிடங்கள், 10 ஏரோபிரிட்ஜ்கள், 46 இமிக்ரேஷன் கவுண்டர்கள் மற்றும் 96 செக்-இன் கவுண்டர்கள் உள்ளன. இந்த விமான நிலையத்தில் இலவச வைஃபை, வரி விலக்குடன் கூடிய கடைகள், குழந்தைகள் பராமரிப்பு அறைகள், அவசர மருத்துவ சேவைகள், மருந்தகம் மற்றும் பயணப் பெட்டிகளை வைக்கும் வசதி ஆகியவை உள்ளன.

உலகளாவிய டாப் 10 விமான நிலையங்களில் 8-வது இடத்தைப் பிடித்துள்ள இந்த விமான நிலையம், எதிர்காலத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் தொடர்ந்து விரிவடைந்து வருகிறது. ஆண்டுதோறும் 20 மில்லியன் பயணிகளிலிருந்து 45 மில்லியன் பயணிகளாகத் திறனை அதிகரிப்பதற்காக புதிய டெர்மினல் மற்றும் ஓடுபாதை கட்டப்பட்டு வருகின்றன.

இந்திய தலைநகரான டெல்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையம் 5,106 ஏக்கர் பரப்பளவுடன் இரண்டாவது மிகப்பெரிய விமான நிலையமாக உள்ளது. பெங்களூரில் உள்ள கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையம் 4,008 ஏக்கர் பரப்பளவுடன் இந்திய அளவில் மூன்றாவது பெரிய விமான நிலையமாக உள்ளது.

Story first published: Tuesday, September 1, 2026, 22:47 [IST]
Desktop Bottom Promotion