Latest Updates
-
சனி-சந்திர சேர்க்கை உருவாக்கும் விஷ யோகம்: நாளை முதல் இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்! -
சனிபகவானின் நட்சத்திர மாற்றத்தால் இந்த 3 ராசிக்காரர்களை துரதிர்ஷ்டம் விடாம துரத்தப்போகுதாம் - ஜாக்கிரதை -
2 குடைமிளகாயும், 2 வெங்காயமும் இருந்தா.. 10 நிமிஷத்துல இந்த கிரேவியை செய்யுங்க.. சப்பாத்திக்கு அள்ளும்.. -
தேங்காய் சட்னியை ஒருதடவை கேரளா ஸ்டைலில் இந்த மாதிரி அரைச்சு பாருங்க - டேஸ்ட் அட்டகாசமா இருக்கும் -
ஜூன் 8-10 கனமழை எச்சரிக்கை! உங்கள் திருமணத்தை மழையிலிருந்து காப்பாற்ற இந்த 5 டிப்ஸ் போதும்! -
பழங்களின் ராணி என்று அழைக்கப்படும் அந்த பழம் எது தெரியுமா? நீங்க இந்த பழத்தை சாப்பிட்டு இருக்கீங்களா? -
இந்த படத்துல உங்க கண்ணுக்கு முதல்ல என்ன தெரிஞ்சதுன்னு சொல்லுங்க.. நீங்க எப்படிப்பட்டவங்கன்னு சொல்றோம்.. -
ஜூன் 8, 9 திருமணமா? மழையால் உங்கள் கனவுத் திருமணம் பாழாகாமல் இருக்க, இந்த மாற்றங்களை உடனே செய்யுங்கள்! -
சுக்கிரன் கடக ராசிக்கு செல்வதால் செல்வத்தையும், புகழையும் குவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
ஃபேஸ் வாஷ் Vs ஃபேஸ் ஸ்க்ரப் - இவற்றில் சிறந்தது எது?
காதல் வாழ்க்கையை அழிப்பதே இந்த 10 விதமான மூடநம்பிக்கைகள் தானாம்.. தெரியுமா?
Love Superstitions In Tamil: மூட நம்பிக்கைகள் நம்பிச் சுற்றி பல இடங்களில் இருக்கிறது. மனிதனும் சில மூடநம்பிக்கைகளை நம்பி அதன்படி தான் செயல்படுகிறான். அந்த வகையில் பார்க்கும் போது சில மூட நம்பிக்கைகள் காதல் வாழ்க்கையிலும் தலைக்காட்டத்தான் செய்கின்றன. இந்த மூட நம்பிக்கைகள் உங்கள் காதல் வாழ்க்கையை அழித்து விடும்.
காதல் என்பது உணர்ச்சி ரீதியான விஷயமாக பார்க்கப்பட்டாலும், சில பைத்தியக்காரத்தனமான மூடநம்பிக்கைகளும் காதலர்களுக்கிடையே இருக்கத்தான் செய்கிறது. அப்படி உலகெங்கிலும் உள்ள பைத்தியக்காரத்தனமான காதல் மூட நம்பிக்கைகளை பற்றி தான் இக்கட்டுரையில் நாம் காணப் போகிறோம்.

1. தாடி வைப்பது
பெரும்பாலும் ஆண்கள் காதல் தோல்வி என்றால் தாடி வைப்பார்கள். ஆனால் உலகில் உள்ள சில இடங்களில் தாடி வைப்பது என்பது துரதிர்ஷ்டமான ஒன்றாக பார்க்கப்படுகிறது. இப்படி ஆண்கள் தாடி வைப்பது அவர்களது காதலை அழிக்க கூடும் என பல பகுதிகளில் நம்புகின்றனர். மேலும் அந்தஸ்தைப் பொருத்தும் இது பார்க்கப்படுகிறது.
2. இரட்டை எண் பூங்கொத்துகள்
ரஷ்யா உட்பட பெரும்பாலான பகுதிகளில் பாசத்தின் சின்னமாக மலர்கள் பார்க்கப்படுகிறது. எனவே ஒருவருக்கொருவர் பூங்கொத்துகளை வழங்குவதை வாடிக்கையாக கொண்டுள்ளனர். இருப்பினும் இந்த பூங்கொத்தை வழங்கும் போது அதிலிருக்கும் பூக்களின் எண்ணிக்கை ஒற்றை படை இலக்குகளில் இருக்க வேண்டும்.
ஒற்றைப்படை எண்ணிக்கையிலான பூக்களை மட்டுமே பரிசாக வழங்க வேண்டும். சமமான அளவில் பூங்கொத்துகளை கொடுக்கக் கூடாது. இது உங்கள் காதல் வாழ்க்கையை பாதிக்கக் கூடும் என அவர்கள் நம்புகின்றனர். எனவே உண்மையில் இரட்டை எண்களில் பூங்கொத்துகளை கொடுப்பதை அவமதிப்பதாக எண்ணுகின்றனர். அவர்களைப் பொருத்த வரை இரட்டை எண் என்பது இறுதிச்சடங்குகள் மற்றும் துக்க காலத்துடன் தொடர்புடையது.
3. நம்பர் 8
எப்படி 13 ஆம் நம்பர் என்பது பேய்களின் நம்பராக பார்க்கப்படுகிறதோ அதே மாதிரி நம்பர் 8 என்பது புதிய ஜோடிகளுக்கு ஆகாத நம்பராக பார்க்கப்படுகிறது. இந்தியாவின் சில பகுதிகளில் நம்பர் 8 என்பது புதிய ஜோடிக்கு ஒரு பயங்கரமான சகுனமாகக் கருதப்படுகிறது. எனவே திருமண தேதியை எட்டாவது எண்ணில் அவர்கள் வைப்பதில்லை. எட்டு என்பது சனியின் பிரதிநிதித்துவமாக பார்க்கப்படுகிறது. கெட்ட அதிர்ஷ்டம் அல்லது மோசமான அதிர்ஷ்டமாக பார்க்கப்படுகிறது.
4. பெயரை கண்டுபிடித்தல்
இந்திய பாரம்பரிய திருமண நிகழ்வுகளில் மருதாணி அல்லது மெஹந்தி போடும் விழாக்கள் நடைபெறுகிறது. இந்த விழாக்களில் மணமகளின் கைகளில் மெஹந்தி போடப்பட்டு இருக்கும். அதில் மணமகனின் பெயர் எழுதப்பட்டிருக்கும். மணமகன் மணமகளின் கைகளில் உள்ள மெஹந்தியில் தன் பெயரை கண்டுபிடிக்க வேண்டும். மணமகன் பெயரை கண்டறியும் வரை திருமணக் கொண்டாட்டங்களை தொடங்க குடும்பத்தினர் அனுமதிக்க மாட்டார்கள். இதில் மணமகன் தோல்வியுற்றார் என்றால் மணமகள் திருமண வாழ்க்கையில் ஆதிக்கம் செலுத்துவார். இன்றும் இந்த மாதிரியான பாரம்பரிய நிகழ்வு திருமண விழாவில் நடைபெறுகிறது.
5. பணம் இல்லாமல் போதல்
உறவுச் சிக்கல்களில் பணமும் ஒரு முக்கியமான அங்கம் வகிக்கிறது. பணப் பற்றாக்குறை உறவில் அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. எனவே ஸ்வீடனில் ஒரு மூடநம்பிக்கை நிலவி வருகிறது. தங்கள் மகளுக்கு பணப் பற்றாக்குறை இருக்க கூடாது என்பதற்காக திருமணத்தின் போது தங்கம் மற்றும் வெள்ளி நாணயங்களை வழங்குவார்கள். மணமகள் தந்தை கொடுத்த நாணயங்களை வலது காலணியில் ஒரு தங்கத்தையும், இடது காலணியில் ஒரு வெள்ளியையும் வைக்க வேண்டும் என்பது மரபு.
6. துண்டை பகிர்தல்
உலகின் சில பகுதிகளில் குறிப்பாக ரஷ்ய போன்ற நாடுகளில் ஒருத்தர் துண்டை மற்றொருவர் பயன்படுத்துவது மோதலை உண்டாக்கும் என நம்புகின்றனர். எனவே ஒருவருக்கொருவர் துண்டை அவர்கள் மாற்றிக் கொள்வதில்லை. இது மோசமான சண்டைக்கு ஒரு சகுனமாக இருக்கலாம்.
7. கடிகாரம் பரிசளிக்க கூடாது
பொதுவாக பரிசுப் பொருட்கள் என்றால் லேப்டாப், ஸ்மார்ட் போன்கள் மற்றும் கடிகாரங்களை பரிசளிப்போம். ஆனால் ஆசியாவின் சில பகுதிகளில் குறிப்பாக சீனாவில் கடிகாரம் மரணத்தை நினைவூட்டக்கூடியதாக பார்க்கப்படுகிறது. கடிகாரத்தை பரிசாக கொடுப்பது அவரை இறுதிப்பயணத்திற்கு அனுப்பப் கூடியதாக பார்க்கப்படுகிறது. எனவே இளம் காதலர்கள் கடிகாரத்தை பரிசளிக்க கூடாது. மேலும் நேரத்தை குறிக்கும் ஒரு பரிசுப் பொருள் முதியோர்களை புண்படுத்தக் கூடியதாகவும் பார்க்கப்படுகிறது.



Click it and Unblock the Notifications