Latest Updates
-
வாடகைக்கு மனைவி கொடுக்கும் வினோத நாடு? இதற்கு எவ்வளவு கட்டணம் வாங்குறாங்க தெரியுமா? -
இட்லிக்கு இந்த தண்ணி சட்னியை செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 07 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம் -
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்..
திருப்பதியில் ஏன் லட்டு பிரசாதமாக வழங்கப்படுகிறது? திருப்பதி லட்டிற்குள் ஒளிந்திருக்கும் வரலாறு என்ன தெரியுமா?
திருமலை ஸ்ரீ வெங்கடேஸ்வரா கோவில் உலக புகழ் பெற்ற கோவிலாகும். திருப்பதி லட்டு அல்லது ஸ்ரீவாரி லட்டு என்பது இந்தியாவின் ஆந்திரப் பிரதேசத்தின் சித்தூர் மாவட்டத்தில் உள்ள திருப்பதியில் உள்ள திருமலை வெங்கடேஸ்வரா கோயிலில் உள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரருக்கு நைவேத்தியமாக வழங்கப்படும் இனிப்பாகும்.
திருப்பதி லட்டு உலகின் மிகவும் பிரபலமான கோவில் பிரசாதமாக இருக்கிறது. கோயிலில் தரிசனம் செய்த பிறகு பக்தர்களுக்கு லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது பல நூற்றாண்டுகளாக வழக்கமாக இருந்து வருகிறது.

மணம் கமழும் பூக்கள், ஆபரணங்கள் மட்டுமின்றி சுவையான உணவுகளும் கடவுளை திருப்திப்படுத்தும். ருசியான உணவை விரும்பும் ஸ்ரீ வெங்கடேஸ்வர பகவான், அதையே பிரசாதமாகத் தம் பக்தர்களுடன் பகிர்ந்து கொள்கிறார். திருப்பதி லட்டுவும், அதன் சுவையும் உலகம் முழுக்க பிரபலமானது, இங்கு கிடைக்கும் லட்டு போல வேறெங்கும் கிடைக்காது.
எப்போதிருந்து லட்டு பிரசாதமாக வழங்கப்படுகிறது?
திருப்பதி வெங்கடேஸ்வர பெருமாள் கோவிலில் லட்டு கிட்டத்தட்ட 300 ஆண்டுகளாக பிரசாதமாக வழங்கப்பட்டு வருகிறது. 300 ஆண்டுகளுக்கு முன்பு லட்டு விநியோகம் செய்யத் தொடங்கியதில் இருந்தே லட்டுவின் தனித்துவமான சுவை, அதில் சேர்க்கப்படும் பொருட்கள் மற்றும் தரத்தில் சமரசம் செய்யாததுதான் அதன் புகழுக்கு காரணமாக இருக்கிறது.
திருப்பதி லட்டின் வரலாறு
திருப்பது லட்டு 2015 ஆம் ஆண்டு வைர விழாவைக் கொண்டாடியது. 1940 ஆம் ஆண்டு மெட்ராஸ் அரசாங்கத்தின் கீழ் லட்டின் தற்போதைய வடிவம் அறிமுகப்படுத்தப்பட்டது. 1803 ஆம் ஆண்டு முதல் வெங்கடேசப் பெருமானின் பிரசாதம் தளர்வான வடிவங்களில் இருந்தது. ஆனால் கல்வெட்டுகள், ஸ்ரீவாரி கோயிலில் லட்டு பிரசாதம் இருப்பதைக் குறிப்பிட்டு 1480 இல் 'மனோஹரம்' என்று அழைக்கப்படுகிறது.
பல்லவர்களின் கொடை
பல்லவர்களின் காலத்தில் வெங்கடேச பெருமாளுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது, பின்னர் இரண்டாம் தேவராயர் மூன்று கிராமங்களை கோவிலுக்கு மானியமாகவும் மற்றும் தினசரி பிரசாத செலவுக்கு ருபாய் 200 வழங்கப்பட்டது. மேலும் இரண்டாம் தேவராயரின் மற்றொரு அதிகாரியான அமாத்ய சேகர மல்லண்ணா, வேகேஸ்வரப் பெருமானுக்கு நைவேத்தியம் மற்றும் நித்யதீபம் ஏற்பாடுகளைச் செய்தார். இறைவனுக்கு உணவு பிரசாதம் வழங்கும் நேர அட்டவணையை அறிமுகப்படுத்தினார்.
திருமலை கோவில் விஜயநகர ஆட்சியாளர்களின் கீழ் பெரிய ஆதரவைப் பெற்றது. கல்வெட்டில் இந்த பெயர் அவசாரம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது சமஸ்கிருதத்தில் அவாஸ் என்றால் உணவு என்று பொருள். 1554, 1579 மற்றும் 1616 ஆம் ஆண்டுகளின் முந்தைய மூன்று கல்வெட்டுகளிலும் இந்த வார்த்தை குறிப்பிடப்பட்டுள்ளது.
எப்போது லட்டு அறிமுகப்படுத்தப்பட்டது ?
'லட்டு சாம்ராஜ்ஜியத்தை' உருவாக்கியவர் கல்யாணம் ஐயங்கார். லட்டு தயாரிக்க மிராசிதாரி முறையை அவர்தான் அறிமுகப்படுத்தினார். சமையலறையில் லட்டு தயார் செய்பவர்கள் கேமர் மிராசிதர்கள் என்று அழைக்கப்பட்டனர். 2001 ஆம் ஆண்டு வரை மிராசிதர்கள் லட்டுகளைத் தயாரித்து புண்ணியத்தை அனுபவித்தனர். ஒவ்வொரு 51 லட்டுகளிலும் 11 மிராசி பிராமண குடும்பங்களுக்கு வழங்கப்பட்டது, பின்னர் ஆந்திர அரசாங்கம் 2001 இல் மிராசிதாரி முறையை ஒழித்தது.
சமையலறை ரகசியம்
கடவுளுக்கு நைவேத்தியம் செய்யும் சமையலறை பொடு என அழைக்கப்படுகிறது. இதில் விறகு மட்டும் கொண்டு பிரசாதம் தயாரிக்கப்பட்டது. 1984 முதல், ஒவ்வொரு நாளும் தேவைப்படும் லட்டுகளின் எண்ணிக்கை அதிகரித்ததால், எல்பிஜி பயன்பாடு தொடங்கியது.
நாளொன்றுக்கு தேவைப்படும் லட்டுகளின் எண்ணிக்கை ஒரு லட்சம் வரை அதிகரித்தாலும், சமீபத்திய சமையல் தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தியதன் மூலம் 150 சமையல்காரர்களைக் கொண்டே இது முடிக்கப்பட்டது. ஆனால் இந்த லட்டுகள் பக்தர்களின் தேவையில் பாதிக்கும் குறைவாக இருந்தது. மேலும் 70,000 லட்டுகள் தயாரிக்க மற்றொரு சமையலறை சேர்க்கப்பட்டது.
லட்டுகளின் வகைகள்
ஆஸ்தானம் லட்டு
இது சிறப்பு விழாக்களில் போது தயாரிக்கப்படுகிறது. இந்தியக் குடியரசுத் தலைவர், பிரதமர், குடியரசுத் தலைவர்கள் மற்றும் பிற நாடுகளைச் சேர்ந்த பிரதமர்கள் போன்ற சிறப்பு விருந்தினர்களுக்கு மட்டுமே இவை விநியோகிக்கப்படும். இந்த லட்டின் எடை 750 கிராம் வரை இருக்கும். இந்த லட்டுகளை தயாரிப்பதற்கு அதிக அளவு முந்திரி, பாதாம், நெய் மற்றும் குங்குமப்பூக்கள் பயன்படுத்தப்பட்டன.
கல்யாணோத்ஸவம் லட்டு
கல்யாணோத்ஸவம் மற்றும் ஆர்ஜித சேவா கிரிஹஸ்தங்களில் கலந்து கொண்டவர்களுக்கு மட்டுமே இந்த லட்டு வழங்கப்படும். சிறிய லட்டுகளுடன் ஒப்பிடும்போது இந்த லட்டு கூடுதல் சுவையுடையதாக இருக்கும். கல்யாணோத்ஸவம் லட்டு செய்ய விரும்புபவர்கள் ஒவ்வொரு லட்டுக்கும் ரூபாய் 100 செலுத்த வேண்டும்.
ப்ரோக்தம் லட்டு
இது திருமலை கோயிலில் சாதாரண யாத்ரீகர்களுக்கு விநியோகிக்கப்படும் சிறிய லட்டு. இந்த லட்டுவின் எடை 175 கிராம் இருக்கும். இந்த லட்டுவின் தயாரிப்பு விலையை விட குறைவான விலையில் பக்தர்களுக்கு வழங்கப்படுகிறது.



Click it and Unblock the Notifications

