Latest Updates
-
சப்பாத்திக்கு ஏற்ற காளான் பன்னீர் கடாய் மசாலா - சிம்பிளா எப்படி செய்யணும்? -
ஆடி மாதம் இந்த 3 ராசிகளுக்கு ஆபத்துகளும், நஷ்டமும் நிறைந்த மாதமாக இருக்கப்போகுதாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
இந்த 5 ராசிக்காரர்களுக்கு எதிரிகள் அதிகமா இருப்பாங்களாம்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உடுப்பி ஸ்டைல் முள்ளங்கி ஸ்டைல் சட்னி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - டேஸ்ட்டா ஆரோக்கியமா இருக்கும் -
குதிகால் வெடிப்பு அதிகமாக உள்ளதா? அதை போக்க இந்த வழிகளை ட்ரை பண்ணுங்க... -
இந்த 3 நபர்கள் ஒருவர் வாழ்க்கையில் இருந்தால் அவர்கள் கடவுளால் ஆசீர்வதிக்கப்பட்டவர்களாம் - சாணக்கிய தந்திரம் -
சுக்கிரன் மீது விழும் ராகுவின் பார்வையால் ஆடி மாதத்தில் பணத்தை அள்ளப்போகும் 5 ராசிக்காரர்கள்! -
ஜூலை கடைசியில் நடக்கும் சனி-புதன் பெயர்ச்சியால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் - உங்க ராசி என்ன? -
ஆடி வெள்ளி ஸ்பெஷல் செட்டிநாடு பால் கொழுக்கட்டை - ஈஸியா எப்படி செய்யணும்? -
பாபா வங்காவின் கணிப்பு படி 2026 முதல் 2030 வரை உலகில் நிகழப்போகும் ஆபத்தான மாற்றங்கள் என்னென்ன தெரியுமா?
புதன்-செவ்வாய் உருவாக்கும் தசாங்க யோகத்தால் பணமழையில் நனையப்போகும் 4 ராசிகள் இவங்கதான்
நவகிரகங்களில் புதன் அறிவு, தகவல் தொடர்பு, வணிகம் மற்றும் பகுப்பாய்வுத் திறனின் அதிபதியாக அறியப்படுகிறார். அதே சமயம் செவ்வாய் கிரகம் ஆற்றல், தைரியம் மற்றும் மன உறுதியின் அதிபதியாக கருதப்படுகிறார். இந்த இரண்டு கிரகங்களும் ஜூலை 16 அன்று தசாங்க யோகத்தை உருவாக்கியுள்ளது. இந்த சக்திவாய்ந்த கிரகங்களின் சேர்க்கை படைப்பாற்றல், புதுமை மற்றும் புதிய வாய்ப்புகளை உருவாக்கும் என்று நம்பப்படுகிறது.

இந்தக் காலகட்டத்தில், புதன் மிதுன ராசியில் வக்ர நிலையில் உள்ளது, அதே சமயம் செவ்வாய் ரிஷப ராசியில் சஞ்சரிக்கிறது. இந்த சேர்க்கை சில ராசிகளுக்கு தொழில் வளர்ச்சி, வணிக முடிவுகள் மற்றும் கல்வியில் சாதகமான முடிவுகளை வழங்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. அவர்கள் எந்தெந்த ராசிக்காரர்கள் என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
ரிஷபம்
ரிஷப ராசியில் செவ்வாய் அமைந்திருப்பது அவர்களின் தன்னம்பிக்கையையும், முடிவெடுக்கும் திறனையும் அதிகரிக்கும் என்று நம்பப்படுகிறது. இந்த யோகத்தால் அவர்கள் வாழ்க்கையில் இருந்த பணப்பிரச்சினைகள் முடிவுக்கு வரும். இதுவரை கிடப்பில் போட்டிருந்த வேலைகளை முடிக்க சரியான வாய்ப்புகள் கிடைக்கும். செவ்வாயின் ஆசியால் அவர்கள் தங்கள் வீட்டிற்கு புதிய ஆடம்பரமான பொருட்களை வாங்க முடியும். அவர்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சியும் செழிப்பும் அதிகரிக்கும்.
திருமணமாகாதவர்கள் இப்போது அவர்களுக்கு பொருத்தமான துணையைக் கண்டறிய முடியும். கடின உழைப்பிற்கான பலன்கள் தேடிவரும். நீண்ட நாட்களாக ஆசைப்பட்ட வாகனத்தை வாங்க வாய்ப்பு கிடைக்கும். மாணவர்களுக்கு தேர்வு முடிவுகள் சாதகமாக இருக்கும்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்கள் இந்த யோகத்தால் சிறப்பான பலன்களை அடைய முடியும். இந்த யோகம் வணிகர்களுக்கு மிகவும் சாதகமாக இருக்கும், மேலும் பல்வேறு ஒப்பந்தங்களிலிருந்து பெரும் லாபத்தை ஈட்ட முடியும். இந்த காலகட்டத்தில் புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்க வாய்ப்புகள் உள்ளன.
குடும்ப வாழ்க்கையைப் பொறுத்தவரை, வீடு மற்றும் குடும்பத்தில் அமைதியான சூழ்நிலை இருக்கும். மேலும், நிதி நிலைமை மிகவும் நிலையானதாக இருக்கும். சிம்ம ராசிக்காரர்கள் தங்கள் கூட்டாளர்களுடன் தரமான நேரத்தை செலவிட முடியும், மேலும் சரியாக தொடர்பு கொள்வது மூலம் கடந்த கால பிரச்சினைகளை சரிசெய்ய வாய்ப்புகள் கிடைக்கும்.
மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு இந்த யோகம் எதிர்பாராத நன்மைகளை அளிக்கப்போகிறது. இந்த காலத்தில் அவர்களின் முயற்சிகள் அனைத்தும் அவர்களுக்கு வெற்றியைத் தரும். குறிப்பாக அவர்கள் நிதிரீதியாக சிறப்பான பலன்களை அடைவார்கள். அவர்களுக்கு புதிய வருமானத்திற்கான வாய்ப்புகள் திறக்கும்.
நீண்ட நாட்களாக முயற்சி செய்து தடைபட்டு வந்த காரியத்தில் வெற்றி கிடைக்கும். சமூகத்தில் அவர்களின் நற்பெயர் அதிகரிக்கும். மேலும் அவர்கள் தங்கள் வாழ்க்கையில் பெரிய உயரங்களை அடைய முடியும். வேலையில் இருப்பவர்கள் அவர்களின் மேலதிகாரிகளிடம் நற்பெயரை வாங்கலாம். புதிய வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு இந்த யோகம் மகத்தான நன்மைகளை வழங்கப்போகிறது. வணிகர்கள் லாபகரமான ஒப்பந்தங்களைச் செய்யலாம் அல்லது ஏற்கனவே உள்ள முயற்சிகளில் அபரிமிதமான வளர்ச்சியைக் காணலாம். வேலையில் இருப்பவர்கள் அலுவலகத்தில் அங்கீகாரம், பதவி உயர்வுகள் அல்லது சிறந்த வாய்ப்புகளை உறுதியளிக்கும் புதிய வேலை வாய்ப்புகளை எதிர்பார்க்கலாம்.
நீண்ட கால முதலீடுகளைச் செய்வதற்கு இது ஒரு சிறந்த நேரம், ஏனெனில் அவை எதிர்காலத்தில் கணிசமான வருமானத்தை அளிக்கும். குடும்பம் மற்றும் சமூக வட்டாரத்தில் நல்லிணக்கம் நிலவும், இது நேர்மறை ஆற்றல் நிறைந்த மற்றும் வெற்றிக்கான வாய்ப்புகள் நிறைந்த காலமாக இருக்கும்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications
