Latest Updates
-
இன்றைய ராசிபலன் 30 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு சவால்கள் துரத்தும் நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (30 August - 05 September 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களின் பண பிரச்சனை முடிவுக்கு வரும்! -
மூட்டு வலி அதிகமா இருக்கா? அப்ப இந்த உளுந்து கஞ்சியை தினமும் காபி, டீ-க்கு பதிலா குடிங்க.. -
செப்டம்பர் மாத சுக்கிர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்காரங்க தொழிலில் கொடிகட்டிப் பறக்கப்போறாங்க.. -
உங்ககிட்ட இந்த 5 காலை பழக்கங்கள் இருந்தா உடனே கைவிடுங்க.. அது உடம்பில் கெட்ட கொழுப்பை அதிகரிக்கும்! -
டக்குன்னு சமையலை முடிக்கணுமா? அப்ப தயிர் இருந்தா, 10 நிமிஷத்துல இப்படி குழம்பு செய்யுங்க.. -
12 ஆண்டுகள் கழித்து சிம்ம ராசிக்கு செல்லும் குருபகவான்: அக்டோபர் முதல் இந்த 3 ராசிகளின் கஷ்டங்கள் தீர போகுது! -
இன்றைய ராசிபலன் 29 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ரொம்ப மோசமான நாளாக இருக்குமாம் -
பூரிக்கு ஒருவாட்டி இந்த பக்குவத்துல உருளைக்கிழங்கு மசாலா செய்யுங்க.. டேஸ்ட் தாறுமாறா இருக்கும்! -
செப்டம்பர் 01-ல் சனி-குருவால் உருவாகும் நவபஞ்ச ராஜயோகம்: தொழிலில் அபார வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிகள்!
இந்த 3 நபர்கள் ஒருவர் வாழ்க்கையில் இருந்தால் அவர்கள் கடவுளால் ஆசீர்வதிக்கப்பட்டவர்களாம் - சாணக்கிய தந்திரம்
Chanakya Niti: சாணக்கியர் இந்தியாவை ஆண்ட முக்கிய வம்சங்களில் ஒன்றான மௌரிய வம்சத்தின் அரசியல் குருவாக இருந்தார். அவர் ஒரு சிறந்த அரசியல்வாதி, சிறந்த பொருளாதார நிபுணர் மற்றும் சிறந்த இராஜதந்திரி என புகழ்பெற்ற நபர். வாழ்க்கை, வணிகம், சமூக வாழ்க்கை, ஒழுக்கம், பொருளாதாரம் போன்ற பல விஷயங்களைப் பற்றி சாணக்கியர் தனது சாணக்கிய நீதியில் பல விஷயங்களைக் குறிப்பிட்டுள்ளார்.

ஆச்சார்ய சாணக்கியர் தனது சாணக்கிய நீதியில் வாழ்க்கையின் முன்னேற்றத்திற்கான பல கருத்துக்களை முன்வைத்துள்ளார். வாழ்க்கையில் மகிழ்ச்சியும், துன்பமும் மாறி மாறி வரக்கூடியது. பொதுவாக மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொள்வது அதை இரட்டிப்பாக்குகிறது, அதேவேளையில், துயரத்தைப் பகிர்ந்துகொள்வது அதை பாதியாகக் குறைக்கிறது. மகிழ்ச்சியான வாழ்விற்குத் தேவையான பல அறிவுரைகளையும், கோட்பாடுகளையும் சாணக்கியர் வழங்கியுள்ளார்.
இக்கட்டான சூழல்களை எப்படிக் கையாள்வது மற்றும் அதிலிருந்து எப்படி முன்னேறிச் செல்வது என்பது குறித்த தனது கருத்துக்களையும் அவர் பகிர்ந்துள்ளார். சாணக்கியரின் கூற்றுப்படி, சூழ்நிலை எதுவாக இருந்தாலும் நமக்கு நம்பிக்கை அளித்து, நம்முடன் உறுதுணையாக நிற்கும் சிலர் உள்ளனர். அவர்களை நாம் ஒருபோதும் நம்மை விட்டு விலக்கி வைக்கக் கூடாது. அப்படிப்பட்டவர்கள் நம் வாழ்க்கையில் இருப்பது கடவுளின் ஆசீர்வாதம். நம் வாழ்வில் அந்த மூவரும் ஏன் இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தவர்களாகக் கருதப்படுகிறார்கள்? அவர்கள் யார் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
புத்திசாலி மனைவி
புத்திசாலித்தனமும், உணர்வுப்பூர்வமான புரிதலும் கொண்ட மனைவி ஒருவருக்கு கிடைப்பது என்பது பெரும் பாக்கியம். இக்கட்டான சூழல்களில், அத்தகைய மனைவிகள் தங்கள் கணவருக்கு உறுதுணையாக இருந்து அவர்களுக்கு துணையாக நிற்கிறார்கள். அதுமட்டுமின்றி, தங்கள் கணவர் எதிர்கொள்ளும் ஒவ்வொரு கடினமான தருணத்தையும் உறுதியுடன் எதிர்கொள்ளவும், அத்தகைய சூழல்களை எதிர்த்துப் போராடுவதற்கான தைரியத்தை அளிக்கவும் அவர்கள் உதவியாக இருப்பார்கள். நெருக்கடியான காலங்களில், அவர்கள் குடும்பத்தின் பாதுகாப்பு கவசமாக திகழ்வார்கள். உணர்வுப்பூர்வமான புரிதலும், புத்திக்கூர்மையும் கொண்ட மனைவி அமைவது ஒரு ஆணின் அதிர்ஷ்டம் என்று சாணக்கியர் கூறுகிறார்.
பொறுப்பான மகன்
குழந்தைகள் எப்போதும் தங்கள் பெற்றோருக்குத் துணையாக நிற்க வேண்டும். தங்கள் குழந்தைகள் எப்போதும் நற்பண்புகளுடன் திகழ வேண்டும் என்பதே அனைத்து பெற்றோர்களின் விருப்பமாகும். ஒரு மகன் எப்போதும் சமூகத்தில் தனக்கும் தன் குடும்பத்திற்கும் பெருமை சேர்க்கும் வகையில் நடந்துகொள்ள வேண்டும். குழந்தைகளுக்கு ஆரம்பத்திலிருந்தே சரியான வழிகாட்டுதல் வழங்கப்பட்டால், அவர்கள் பெற்றோர்களின் முதுமைக்காலத்தில் அவர்களுக்கு பெரும் பலமாகத் திகழ்வார்கள். தங்கள் குழந்தைகளிடம் எவ்விதமான தீய பழக்கவழக்கங்களும் ஏற்படாமல் பார்த்துக்கொள்வது குழந்தைகளுக்கு மட்டுமின்றி அவர்களின் பெற்றோருக்கும் நல்லதாகும். சாணக்கியரின் கூற்றுப்படி, அத்தகைய மகனைக் கொண்ட பெற்றோர் ஒருபோதும் துயரப்பட வேண்டியிருக்காது. இக்கட்டான சூழல்களில் அத்தகைய மகன் ஒருபோதும் தங்கள் பெற்றோர்களை நிர்கதியாக விட்டுவிடமாட்டார்கள் என்று சாணக்கியர் கூறுகிறார்.
உண்மையான நண்பர்கள்
ஒருவர் தங்கள் வாழ்க்கையில் உருவாக்கிக்கொள்ளும் நட்பும் உறவுகளுமே அவரது வாழ்க்கையையும், சமூகத்தில் அவர்களின் நிலையையும் தீர்மானிக்கின்றன. நல்ல நண்பர்கள் கிடைத்தால், ஒருவர் தங்கள் வாழ்க்கையில் பெரும் முன்னேற்றமடைந்து மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ்வார். ஏனெனில், அத்தகைய நண்பர்கள் உங்களை தவறான பாதையில் செல்ல அனுமதிக்க மாட்டார்கள். அவர்கள் சுயநலமின்றி உங்கள் நலனையே விரும்புவார்கள். அப்படிப்பட்ட நண்பர்களின் நட்பை ஒருபோதும் கைவிடாதீர்கள். நல்ல நண்பர்களே ஆபத்தான காலங்களில் உங்களுக்குத் துணையாக நிற்பார்கள் என்று சாணக்கியர் வலியுறுத்தியுள்ளார் . நாம் ஒருபோதும் அத்தகைய நண்பர்களின் நட்பைக் கைவிடக்கூடாது. ஏனெனில், அவர்கள் நம்மை முன்னேற்றப் பாதையில் அழைத்துச் செல்வார்கள் என்று சாணக்கியர் நம்பினார்.



Click it and Unblock the Notifications
