Latest Updates
-
உடுப்பி ஸ்டைலில் சாம்பார் சாப்பிட்ருக்கீங்களா? இந்த பக்குவத்தில் செஞ்சு பாருங்க - அட்டகாசமா இருக்கும் -
இந்த தேதிகளில் பிறந்தவர்கள் பணம் சம்பாதிக்க கஷ்டப்படுவாங்களாம்.. உங்க பிறந்த தேதி இதுல இருக்கா? -
பூண்டும், கறிவேப்பிலையும் இருந்தா.. இப்படி தொக்கு செய்யுங்க.. 3 மாதம் வரை வெச்சு சாப்பிடலாம்.. -
சுக்கிரன் சனிபகவான் ஆளும் நட்சத்திரத்திற்கு செல்வதால் இந்த 3 ராசிகளுக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுதாம் -
எந்த ஆரோக்கிய பிரச்சனைக்கு எந்தப் பழம் சிறந்தது? விளக்கும் டாக்டர்.சிவகுமார்! -
சாணக்கிய நீதி படி இந்த 6 நபர்கள் உங்களுக்கு எதிரியானால் உங்களை யாராலும் காப்பாற்ற முடியாதாம் - ஜாக்கிரதை -
ஒரே நாளில் நடக்கும் சூரிய-சுக்கிர பெயர்ச்சி: இந்த 3 ராசிக்கு பண மழை கொட்டப்போகுது..! -
1 கப் தேங்காயும், 1 கைப்பிடி புதினாவும் இருந்தா.. இப்படி சட்னி செய்யுங்க.. இட்லி, தோசைக்கு அள்ளும்.. -
இன்றைய ராசிபலன் 04 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு மனஅழுத்தம் நிறைந்த நாளாக இருக்குமாம் -
100 ஆண்டுகள் கழித்து நிகழும் அபூர்வ கிரக பெயர்ச்சி: ஜூன் 11-ல் இந்த 3 ராசிகளின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்!
குடியரசு தின அணிவகுப்பில் வரலாறு படைக்கப்போகும் இந்த பெண் அதிகாரி யார் தெரியுமா?
Republic Day 2026: இந்தியா தனது 77-வது குடியரசு தினத்திற்கு தயாராகி வருகிறது. குடியரசு தினத்தின் சிறப்பே அதன் கம்பீரமான அணிவகுப்புதான். குடியரசு தின அணிவகுப்பு தயாராகிவரும் நிலையில் ஒரு இளம் பெண் அதிகாரி மாத்தி அனைவரின் கவனமும் திரும்பியுள்ளது.
ஜம்மு காஷ்மீரைச் சேர்ந்த 26 வயதான உதவி கமாண்டன்ட் சிம்ரன் பாலா, 2026 ஆம் ஆண்டு ஜனவரி 26 அன்று புது டெல்லியில் உள்ள கர்தவ்யா பாதையில் நடைபெறும் பிரம்மாண்ட அணிவகுப்பில், முற்றிலும் ஆண்களைக் கொண்ட மத்திய ரிசர்வ் போலீஸ் படை பிரிவுக்குத் தலைமை தாங்கும் முதல் பெண் என்ற பெருமையைப் பெறவுள்ளார். இந்த சாதனை, இந்தியாவின் பாதுகாப்புப் படைகளில் மாறிவரும் நெறிமுறைகளை எடுத்துக்காட்டுகிறது. பாலின வேறுபாடு இன்றி ஒருவரின் தகுதி மற்றும் தலைமைப் பண்பு ஆகியவை வாய்ப்புகளைத் தீர்மானிப்பதில் முக்கியப் பங்கு வகிக்கின்றன என்பதை இது நிரூபிக்கிறது.

யார் இந்த சிமரன் பாலா?
சிம்ரன் பாலா, ஜம்மு காஷ்மீரின் ரஜௌரி மாவட்டத்தில் உள்ள ஒரு எல்லை நகரமான நௌஷேராவைச் சேர்ந்தவர். அவர் தனது மாவட்டத்திலிருந்து மத்திய ரிசர்வ் காவல் படையில் (CRPF) அதிகாரியான முதல் பெண் ஆவார். சிம்ரன் 2023-ஆம் ஆண்டு நடைபெற்ற யுபிஎஸ்சி மத்திய ஆயுதக் காவல் படைகள் (CAPF) தேர்வில் தனது முதல் முயற்சியிலேயே தேர்ச்சி பெற்று, அகில இந்திய அளவில் 82-வது இடத்தைப் பிடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த ஆண்டு ஜம்மு காஷ்மீரிலிருந்து தகுதி பெற்ற ஒரே பெண்ணும் இவர்தான்.
அவர் பொலிட்டிகள் சயின்ஸில் பட்டம் பெற்றுள்ளார். குருகிராமில் உள்ள சிஆர்பிஎஃப் அகாடமியில் பயிற்சி பெற்றபோது, பயிற்சியில் சிறந்த அதிகாரி விருதைப் பெற்றார். அவரது முதல் பணி நியமனம் சத்தீஸ்கரில் உள்ள பஸ்தாரியா பட்டாலியனில் இருந்தது, அங்கு அவர் நக்சல் எதிர்ப்பு நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டார்.
சிம்ரன் பாலா ஆண் படைப்பிரிவுக்கு தலைமை தாங்கப்போகிறார்
குடியரசு தின அணிவகுப்பில் சிம்ரன் பாலாவின் பங்கு வரலாற்று சிறப்புமிக்கது. ஜனவரி 26 ஆம் தேதி 140 க்கும் மேற்பட்ட ஆண் CRPF பணியாளர்களைக் கொண்ட ஒரு படைப்பிரிவை அவர் வழிநடத்துவார். இதற்கு முன்பு பெண் அதிகாரிகள் குழுப் பிரிவுகளுக்கு தலைமை தாங்கியிருந்தாலும், தேசிய நிகழ்வில் ஒரு பெண் முழு ஆண் படைப்பிரிவை வழிநடத்துவது இந்திய வரலாற்றில் இதுவே முதல் முறை.
ஒத்திகைகளின் போது அவரது வலுவான செயல்திறன்களைத் தொடர்ந்து, மூத்த அதிகாரிகள் அவரது நம்பிக்கை, துல்லியம் மற்றும் கட்டளைத் திறன்களின் அடிப்படையில் இந்த நியமனத்தை வழங்கியுள்ளனர். அவரது தலைமைத்துவம் CRPF இன் தகுதி மற்றும் திறனில் வளர்ந்து வரும் கவனத்தை பிரதிபலிக்கிறது.
CRPF மற்றும் குடியரசு தினம்
CRPF 3.25 லட்சத்திற்கும் மேற்பட்ட வீரர்களைக் கொண்ட இந்தியாவின் மிகப்பெரிய துணை ராணுவப் படையாகும். நாடு முழுவதும் உள்நாட்டுப் பாதுகாப்பு, பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் கிளர்ச்சி எதிர்ப்பு நடவடிக்கைகளில் CRPF முக்கியப் பங்கு வகிக்கிறது. குடியரசு தின அணிவகுப்பில் அதன் பங்கேற்பு, தேசிய பாதுகாப்பு மற்றும் விழா மரபுகளில் அதன் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டுகிறது.
புது டெல்லியில் உள்ள கர்தவ்யா பாதையில் நடைபெறும் வருடாந்திர அணிவகுப்பு, இந்திய இராணுவத்தின் வலிமை, கலாச்சாரப் பன்முகத்தன்மை மற்றும் தேசியப் பெருமையை வெளிப்படுத்துகிறது. இந்த அணிவகுப்பு மைதானத்தில் ஆயிரக்கணக்கான பார்வையாளர்களையும், தொலைக்காட்சி மற்றும் இணையத்தில் மில்லியன் கணக்கான பார்வையாளர்களையும் ஈர்க்கிறது.
எல்லை முதல் தேசிய அளவில் கவனம் பெற்றது வரை
ஒரு சிறிய எல்லைப்புற நகரத்திலிருந்து தேசிய நிகழ்வில் அணிவகுப்புக் குழுவிற்குத் தலைமை தாங்குவது வரை சிம்ரன் பாலாவின் பயணம் அனைவர்க்கும் உத்வேகத்தை அளிப்பதாக உள்ளது. எல்லைப்பகுதியில் வளர்ந்த அவர், பாதுகாப்புப் படைகளின் செயல்பாடுகளைக் கண்டு வளர்ந்தார், இது அவரது லட்சியங்களை வடிவமைக்க உதவியிருக்கலாம்.
பல தசாப்தங்களாக ஆண்களின் ஆதிக்கம் நிறைந்த துறைகளிலும்கூட அர்ப்பணிப்பும் விடாமுயற்சியும் எப்படி வாய்ப்புகளைத் திறந்துவிடும் என்பதற்கு அவரது சாதனைகள் இப்போது ஒரு உதாரணமாகத் திகழ்கின்றன.



Click it and Unblock the Notifications
