Latest Updates
-
சனி-சந்திர சேர்க்கை உருவாக்கும் விஷ யோகம்: நாளை முதல் இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்! -
சனிபகவானின் நட்சத்திர மாற்றத்தால் இந்த 3 ராசிக்காரர்களை துரதிர்ஷ்டம் விடாம துரத்தப்போகுதாம் - ஜாக்கிரதை -
2 குடைமிளகாயும், 2 வெங்காயமும் இருந்தா.. 10 நிமிஷத்துல இந்த கிரேவியை செய்யுங்க.. சப்பாத்திக்கு அள்ளும்.. -
தேங்காய் சட்னியை ஒருதடவை கேரளா ஸ்டைலில் இந்த மாதிரி அரைச்சு பாருங்க - டேஸ்ட் அட்டகாசமா இருக்கும் -
ஜூன் 8-10 கனமழை எச்சரிக்கை! உங்கள் திருமணத்தை மழையிலிருந்து காப்பாற்ற இந்த 5 டிப்ஸ் போதும்! -
பழங்களின் ராணி என்று அழைக்கப்படும் அந்த பழம் எது தெரியுமா? நீங்க இந்த பழத்தை சாப்பிட்டு இருக்கீங்களா? -
இந்த படத்துல உங்க கண்ணுக்கு முதல்ல என்ன தெரிஞ்சதுன்னு சொல்லுங்க.. நீங்க எப்படிப்பட்டவங்கன்னு சொல்றோம்.. -
ஜூன் 8, 9 திருமணமா? மழையால் உங்கள் கனவுத் திருமணம் பாழாகாமல் இருக்க, இந்த மாற்றங்களை உடனே செய்யுங்கள்! -
சுக்கிரன் கடக ராசிக்கு செல்வதால் செல்வத்தையும், புகழையும் குவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
ஃபேஸ் வாஷ் Vs ஃபேஸ் ஸ்க்ரப் - இவற்றில் சிறந்தது எது?
சனி பகவானை இப்படிதான் வணங்க வேண்டுமாம்..!
சனி பகவான் ஒருவரின் செயல்களின் அடிப்படையில் நீதி வழங்குவார் என்று நம்பப்படுகிறது. தடைகள், துன்பங்கள் மற்றும் துன்பங்களில் இருந்து காக்க சனி பகவானை பக்தர்கள் வழிபடுகின்றனர். அவரை வழிபட சனி ஜெயந்தி உகந்த நாளாக கருதப்படுகிறது. அத்தகைய சனி ஜெயந்தி தமிழ் மாதமான வைகாசி அமாவாசை அன்று கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு சனி ஜெயந்தி ஜூன் 6ஆம் தேதியான இன்று வியாழன் என கணிக்கப்பட்டுள்ளது..
ஜோதிடத்தில் சனியின் தாக்கம் அதிகம். சனி ஜெயந்தி சனியை சாந்தப்படுத்தவும், ஜாதகத்தில் சனியின் எதிர்மறை விளைவுகளை குறைக்கவும் ஒரு சக்திவாய்ந்த நேரம் என்று நம்பப்படுகிறது. சனி ஜெயந்தி அன்று என்ன செய்தால் என்னென்ன பலன்கள் கிடைக்கும், சனி பகவான் அருள் பெற செய்ய வேண்டிய பரிகாரங்கள் என்ன என்பதை தெரிந்து கொள்வோம்.

சனி ஜெயந்தி 2024 தேதி மற்றும் நல்ல நேரம்
இந்து நாட்காட்டியின்படி, வைகாசி மாதம் அமாவாசை திதி ஜூன் 6, 2024 அன்று காலை 10:40 மணிக்குத் தொடங்கி ஜூன் 7ஆம் தேதி புதன் கிழமை அன்று காலை 08:52 மணிக்கு முடிவடைகிறது.
சனி பகவான வணங்கும்போது செய்ய வேண்டியதும் செய்யக்கூடாததும்
1. கோவிலுக்குச் சென்று சனி பகவானை வழிபடும் போது, சனி பகவானை நேராக நின்று கண்களைப் பார்த்து வணங்கக் கூடாது. எப்பொழுதும் சனி பகவானை கண்களை மூடியோ அல்லது பாதத்தையோ பார்த்துதான் வணங்கி வர வேண்டும்.. நம்பிக்கைகளின்படி, சனி பகவானின் கண்களைப் பார்த்து அவரை வணங்கினால், சனி பகவானின் பார்வை நேரடியாக உங்கள் மீது விழும் என்று நம்பப்படுகிறது.
2. சனி பகவானை வழிபடும் போது, அணியும் ஆடைகளின் நிறத்தில் கவனம் செலுத்த வேண்டும். அதாவது சனி பகவானை வணங்கும் போது சிவப்பு நிற ஆடைகளை அணிவதை தவிர்க்க வேண்டும். உண்மையில் சனி பகவானை வணங்கும்போது நீலம் மற்றும் கருப்பு நிற ஆடைகளை அணிவது நல்லது. ஏனெனில் இந்த நிறங்கள் சனி பகவானுக்கு விருப்பமான நிறங்கள்.
3. சனி பகவானை வழிபடும் போது திசையிலும் கவனம் செலுத்த வேண்டும். பொதுவாக மக்கள் கிழக்கு நோக்கி வழிபடுவார்கள். ஆனால் சனி மேற்கு திசைக்கு அதிபதி. எனவே, நீங்கள் சனி பகவானை வணங்குவதாக இருந்தால், மேற்கு நோக்கி வணங்குங்கள்.
4. சனி தோஷத்தைப் போக்க சனி ஜெயந்தி அன்று கங்கையில் நீராட வேண்டும். அதுமட்டுமின்றி, இந்த நாளில் ஏழைகளுக்கு தானம் அளிப்பதன் மூலம் சனி பகவான் மகிழ்ச்சியடைகிறார்.
5. முடிந்தவரை ஏழைகளுக்கு எள்ளன்னம், கருப்பு வஸ்திரங்களை தட்சணையுடன் தானம் தரலாம். திருநள்ளாற்று தர்பாரண்யேஸ்வரரையும், அம்பாளையும், சனி பகவானையும் வழிபடுவது சனி தோஷம் தீர்க்கும்.
6. சனி ஜெயந்தியில் காக்கைக்கு தினந்தோறும் அன்னம் இடுவதும், உளுந்து தானியத்தை தானம் செய்வதும், கோவில்களில் நவக்கிரகங்களை 9 முறை வலம் வந்து வணங்குவதும், நீலக் கல் அணிந்த மோதிரத்தை அணிந்து கொள்வதும், இன்று அதிகாலை வேளைகளில் சுந்தர காண்டம் பாராயணம் செய்வதும் ஏழரைச் சனியின் தோஷம் குறைக்கும்.
7. சனி ஸ்தோத்திரம்: நீலாஞ்ஜன ஸமாபாஸம் ரவிபுத்ரம் யமாக்ரஜம்! ச்சாயா மார்த்தாண்ட ஸம்பூதம் தம் நமாமி சனைச்சரம்!!
8. சனி காயத்ரி மந்திரம்: காகத்வஜாய வித்மஹே கட்க ஹஸ்தாய தீமஹி| தந்நோ மந்த: ப்ரசோதயாத்



Click it and Unblock the Notifications