Latest Updates
-
மூங்கில் அரிசி கிச்சடி - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
இன்றைய ராசிபலன் 09 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு வெற்றிகள் குவியும் நாளாக இருக்குமாம்...! -
கும்ப ராசியில் உதயமாகும் புதன்: மார்ச் 14 முதல் இந்த 4 ராசிக்கு தொழிலில் நல்ல வளர்ச்சி ஏற்படும்... -
எவ்வளவு வயசானாலும் இளமையா காட்சியளிக்கணுமா? அப்ப இந்த ஃபேஸ் பேக்கை அடிக்கடி போடுங்க.. -
காலிஃப்ளவரும், பட்டாணியும் இருந்தா.. இந்த மாதிரி கிரேவி செய்யுங்க.. சப்பாத்தி வேற லெவல்-ல இருக்கும்.. -
குரு பகவான் வக்ர நிவர்த்தி அடைவதால் மார்ச் 11 முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது... -
ஆட்டு ஈரலை இப்படி வறுவல் செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட போட்டி போட்டு காலி பண்ணுவாங்க... -
பெண்களே! தொப்பை குறையணுமா? அப்ப இந்த ஃபிட்னஸ் கோச் சொல்ற 5 உடற்பயிற்சியை வீட்லயே செய்யுங்க.. -
சுக்கிர பெயர்ச்சியால் இந்த 5 ராசிக்கு சுக்கிர திசை ஆரம்பிக்குது.. இனி கையில் பணம் குவியப்போகுது.. -
சிக்கன வாங்குனா இந்த 4 பொருட்களை சேர்த்து கேரளா ஸ்டைல் சிக்கன் 65 செய்யுங்க... டேஸ்ட் பட்டாசா இருக்கும்...!
சனி பகவானை இப்படிதான் வணங்க வேண்டுமாம்..!
சனி பகவான் ஒருவரின் செயல்களின் அடிப்படையில் நீதி வழங்குவார் என்று நம்பப்படுகிறது. தடைகள், துன்பங்கள் மற்றும் துன்பங்களில் இருந்து காக்க சனி பகவானை பக்தர்கள் வழிபடுகின்றனர். அவரை வழிபட சனி ஜெயந்தி உகந்த நாளாக கருதப்படுகிறது. அத்தகைய சனி ஜெயந்தி தமிழ் மாதமான வைகாசி அமாவாசை அன்று கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு சனி ஜெயந்தி ஜூன் 6ஆம் தேதியான இன்று வியாழன் என கணிக்கப்பட்டுள்ளது..
ஜோதிடத்தில் சனியின் தாக்கம் அதிகம். சனி ஜெயந்தி சனியை சாந்தப்படுத்தவும், ஜாதகத்தில் சனியின் எதிர்மறை விளைவுகளை குறைக்கவும் ஒரு சக்திவாய்ந்த நேரம் என்று நம்பப்படுகிறது. சனி ஜெயந்தி அன்று என்ன செய்தால் என்னென்ன பலன்கள் கிடைக்கும், சனி பகவான் அருள் பெற செய்ய வேண்டிய பரிகாரங்கள் என்ன என்பதை தெரிந்து கொள்வோம்.

சனி ஜெயந்தி 2024 தேதி மற்றும் நல்ல நேரம்
இந்து நாட்காட்டியின்படி, வைகாசி மாதம் அமாவாசை திதி ஜூன் 6, 2024 அன்று காலை 10:40 மணிக்குத் தொடங்கி ஜூன் 7ஆம் தேதி புதன் கிழமை அன்று காலை 08:52 மணிக்கு முடிவடைகிறது.
சனி பகவான வணங்கும்போது செய்ய வேண்டியதும் செய்யக்கூடாததும்
1. கோவிலுக்குச் சென்று சனி பகவானை வழிபடும் போது, சனி பகவானை நேராக நின்று கண்களைப் பார்த்து வணங்கக் கூடாது. எப்பொழுதும் சனி பகவானை கண்களை மூடியோ அல்லது பாதத்தையோ பார்த்துதான் வணங்கி வர வேண்டும்.. நம்பிக்கைகளின்படி, சனி பகவானின் கண்களைப் பார்த்து அவரை வணங்கினால், சனி பகவானின் பார்வை நேரடியாக உங்கள் மீது விழும் என்று நம்பப்படுகிறது.
2. சனி பகவானை வழிபடும் போது, அணியும் ஆடைகளின் நிறத்தில் கவனம் செலுத்த வேண்டும். அதாவது சனி பகவானை வணங்கும் போது சிவப்பு நிற ஆடைகளை அணிவதை தவிர்க்க வேண்டும். உண்மையில் சனி பகவானை வணங்கும்போது நீலம் மற்றும் கருப்பு நிற ஆடைகளை அணிவது நல்லது. ஏனெனில் இந்த நிறங்கள் சனி பகவானுக்கு விருப்பமான நிறங்கள்.
3. சனி பகவானை வழிபடும் போது திசையிலும் கவனம் செலுத்த வேண்டும். பொதுவாக மக்கள் கிழக்கு நோக்கி வழிபடுவார்கள். ஆனால் சனி மேற்கு திசைக்கு அதிபதி. எனவே, நீங்கள் சனி பகவானை வணங்குவதாக இருந்தால், மேற்கு நோக்கி வணங்குங்கள்.
4. சனி தோஷத்தைப் போக்க சனி ஜெயந்தி அன்று கங்கையில் நீராட வேண்டும். அதுமட்டுமின்றி, இந்த நாளில் ஏழைகளுக்கு தானம் அளிப்பதன் மூலம் சனி பகவான் மகிழ்ச்சியடைகிறார்.
5. முடிந்தவரை ஏழைகளுக்கு எள்ளன்னம், கருப்பு வஸ்திரங்களை தட்சணையுடன் தானம் தரலாம். திருநள்ளாற்று தர்பாரண்யேஸ்வரரையும், அம்பாளையும், சனி பகவானையும் வழிபடுவது சனி தோஷம் தீர்க்கும்.
6. சனி ஜெயந்தியில் காக்கைக்கு தினந்தோறும் அன்னம் இடுவதும், உளுந்து தானியத்தை தானம் செய்வதும், கோவில்களில் நவக்கிரகங்களை 9 முறை வலம் வந்து வணங்குவதும், நீலக் கல் அணிந்த மோதிரத்தை அணிந்து கொள்வதும், இன்று அதிகாலை வேளைகளில் சுந்தர காண்டம் பாராயணம் செய்வதும் ஏழரைச் சனியின் தோஷம் குறைக்கும்.
7. சனி ஸ்தோத்திரம்: நீலாஞ்ஜன ஸமாபாஸம் ரவிபுத்ரம் யமாக்ரஜம்! ச்சாயா மார்த்தாண்ட ஸம்பூதம் தம் நமாமி சனைச்சரம்!!
8. சனி காயத்ரி மந்திரம்: காகத்வஜாய வித்மஹே கட்க ஹஸ்தாய தீமஹி| தந்நோ மந்த: ப்ரசோதயாத்



Click it and Unblock the Notifications











