Latest Updates
-
ஏப்ரல் மாத இறுதியில் நடக்கும் புதன் பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரங்க ஜாக்கிரதையா இருக்கணும்.. -
உங்கள் கால் விரலின் நீளம் எவ்வளவு இருக்குனு சொல்லுங்க? உங்களை பற்றிய ரகசியத்தை நாங்க சொல்றோம் -
Vastu Tips: வாஸ்துப்படி, ஆந்தை சிலையை வீட்டின் இந்த இடத்துல வையுங்க.. வீட்டில் பண வரவு அதிகரிக்கும்.. -
தித்திக்கும் கேரளாவின் மாம்பழ பாயாசம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, அட்டகாசமாக இருக்கும் -
திருமண வாழ்க்கையில் சிக்கலா? AI சாட்பாட்களிடம் ஆலோசனை கேட்கும் இந்திய தம்பதிகள் - இது ஆபத்தா? -
3 முட்டை, 2 வெங்காயம், 1/2 மூடி தேங்காய் இருந்தா.. சப்பாத்திக்கு இந்த சைடு டிஷ் பண்ணுங்க.. தாறுமாறா இருக்கும். -
டேட்டிங் ஆப் பயன்படுத்துறீங்களா? டெல்லி-NCR-ல் உங்களை குறிவைக்கும் 'ஹனி ட்ராப்' கும்பல் - உஷார்! -
வாஸ்து படி இந்த தவறுகள் உங்கள் வீட்டில் இருந்தால் ராகுவின் சாபம் உங்களை பாடாய்படுத்துமாம் - ஜாக்கிரதை -
உங்க கழுத்து கருப்பா இருக்கா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க... -
பட்டாணி மசாலா சாதம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, பிரியாணி மாதிரியே இருக்கும்
வறுமை நீங்கி தனயோகம் பெறணுமா? இதை மட்டும் செய்யுங்கள்...!
ஜோதிடத்தில் பல பரிகாரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன, அவை தோஷங்களைக் குறைக்க கிரகங்களின் நிலையை வலுப்படுத்தப் பயன்படுகின்றன. குறிப்பாக ரோஜாப் பூ வீட்டை நறுமணம் மிக்கதாக்குவது மட்டுமின்றி, ஜோதிடப் பரிகாரங்களுடன் தொடர்புடைய முறைகளில் பயன்படுத்தினால் சிறப்பான பலன்களைத் தரும்.
ரோஜா பூ
இந்து மதம் இயற்கைக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கிறது. நீர், பூக்கள், இலைகள், விலங்குகள் மற்றும் பறவைகள் இதனாலேயே வழிபடப்படுகின்றன. ஜோதிட சாஸ்திரத்திலும் இவற்றின் முக்கியத்துவம் குறிப்பிடப்பட்டுள்ளது. ஜோதிடத்தின்படி சில பூக்கள் சில தெய்வங்களுக்கு அர்ப்பணிக்கப்படுகின்றன. இறைவனின் ஆசீர்வாதத்துடன், பல பிரச்சனைகளை இந்த மலர்களால் தீர்க்க முடியும். இந்த பூக்கள் நிதி பிரச்சனைகள் முதல் உடல்நல பிரச்சனைகள் வரை அனைத்தையும் தீர்க்கும் என்பது நம்பிகை.

இதுவரை, இந்த மலர்கள் அவற்றின் அழகுக்காக மட்டுமே அறியப்பட்டன. ஜோதிட சாஸ்திரத்தின்படி ரோஜா பூவுக்கு அதிக முக்கியத்துவம் உண்டு. முக்கியமாக நிதி ஆதாயம் மற்றும் வெற்றியை அடைய ரோஜா மிகவும் பலனளிக்கிறது. ரோஜாக்களின் இந்த நடைமுறைகள் விருப்பங்களை வழங்குவதாகவும் நம்பப்படுகிறது. இந்த முயற்சி செய்வதன் மூலம் நீங்கள் நிதி நெருக்கடியில் இருந்து விடுபடலாம். ஆனால் இந்த ரோஜா பூவை கொண்டு அனைத்து பிரச்சனைகளையும் எப்படி தீர்க்கலாம்? அது என்னென்ன பலன்களை தரும் என்று இந்த பதிவில் தெரிந்துக் கொள்ளலாம் வாங்க...
சிவப்புத் துணி பரிகாரம்
செவ்வாய்க் கிழமைகளில் சிவப்புத் துணியில் சிவப்பு சந்தனம், சிவப்பு ரோஜா, கற்பூரம் ஆகியவற்றைக் கட்ட வேண்டும். இந்த கட்டிய துணியை வீட்டில் உள்ள பூஜை அறையில் ஒரு வாரம் வைக்கவும். அதன் பிறகு விநாயகரை வழிபட வேண்டும். ஒரு வாரம் கழித்து அதை எடுத்து வீட்டில் லாக்கரில் வைக்கவும். இந்த ரோஜா பரிகாரம் செய்வதால் பணத்துக்கு தட்டுப்பாடு வராது என்பது நம்பிக்கை.
ரோஜா பூவின் மணம்
ரோஜா பூவின் மணம் மன அமைதியைத் தருவதாக நம்பப்படுகிறது. உங்கள் வீட்டில் யாராவது நோய்வாய்ப்பட்டிருந்தாலோ அல்லது உங்களுக்கு ஏதேனும் உடல்நலப் பிரச்சனைகள் இருந்தாலோ அவர்களின் அறையிலோ அல்லது உங்கள் அறையில் உள்ள தலையணையின் அருகிலோ 5 ரோஜாக்களை வைத்தால் உடல்நலக் கோளாறுகள் குணமாகும். இதனால் உடல் ஆரோக்கியமும் விரைவில் மேம்படும்.
ஜோதிடத்தில் ரோஜா மலரின் முக்கியத்துவம்
ஜோதிடத்தில் இந்த ரோஜா மலர் செல்வம் பெற மிகவும் பயனுள்ளதாக கருதப்படுகிறது. ரோஜா மலரில் கற்பூரத்தை வைத்து மாலையிட்டு வழிபடவும். இப்படி செய்தால் கடன் பிரச்சனை தீரும். இதுதவிர, தேவையற்ற செலவுகளால் அவதிப்பட்டு வந்தால், அதிலிருந்து விடுபட, தினமும் ஒரு சிவப்பு ரோஜாப்பூவை வீட்டு மண்டபத்தில் வைத்து வந்தால், பல பொருளாதார பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம்.
நீங்கள் செய்ய நினைக்கும் எந்த ஒரு வேலையும் மீண்டும் மீண்டும் தடைகளால் சிக்கிக் கொண்டால், இதற்காக மூன்று ரோஜாக்களை ஐந்து பௌர்ணமிகளுக்கு மூன்று மணி நேரம் தண்ணீரில் மூழ்கடிக்க வேண்டும். இதை செய்தால் உங்கள் பிரச்சனைகள் அனைத்தும் தீரும். கடன் நிவாரணம் பெற வெள்ளிக்கிழமையன்று ரோஜாப் பூக்களை வெள்ளைத் துணியில் கட்டி விடுங்கள். இப்போது இந்த ரோஜாக்களில் சிலவற்றை தண்ணீரில் மிதக்க விட வேண்டும்.. இது உங்கள் பிரச்சனையை தீர்க்கும்.
11 செவ்வாய் கிழமைகளில் அனுமனுக்கு 11 மலர்களை அர்ப்பணம் செய்வது நல்ல பலன்களைத் தரும். மேலும் இந்த ஹனுமான் உங்கள் அனைத்து விருப்பங்களையும் மகிழ்ச்சியுடன் நிறைவேற்றுவார். இதனுடன் ஐந்து ரோஜாக்கள், அரிசி மற்றும் வெல்லம் ஆகியவற்றை ஒரு வெள்ளை வேட்டியில் கட்டி, அதை திங்கட்கிழமை அன்று விஷ்ணு லட்சுமி கோவிலுக்கு காணிக்கையாக செலுத்துங்கள். மேலும் காயத்ரி மந்திரத்தை 21 முறை சொல்ல வேண்டும். இப்படி செய்தால் வீட்டிற்கு பணம் வரும் என்பது ஐதீகம்.



Click it and Unblock the Notifications