Latest Updates
-
இன்றைய ராசிபலன் 09 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு வெற்றிகள் குவியும் நாளாக இருக்குமாம்...! -
கும்ப ராசியில் உதயமாகும் புதன்: மார்ச் 14 முதல் இந்த 4 ராசிக்கு தொழிலில் நல்ல வளர்ச்சி ஏற்படும்... -
எவ்வளவு வயசானாலும் இளமையா காட்சியளிக்கணுமா? அப்ப இந்த ஃபேஸ் பேக்கை அடிக்கடி போடுங்க.. -
காலிஃப்ளவரும், பட்டாணியும் இருந்தா.. இந்த மாதிரி கிரேவி செய்யுங்க.. சப்பாத்தி வேற லெவல்-ல இருக்கும்.. -
குரு பகவான் வக்ர நிவர்த்தி அடைவதால் மார்ச் 11 முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது... -
ஆட்டு ஈரலை இப்படி வறுவல் செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட போட்டி போட்டு காலி பண்ணுவாங்க... -
பெண்களே! தொப்பை குறையணுமா? அப்ப இந்த ஃபிட்னஸ் கோச் சொல்ற 5 உடற்பயிற்சியை வீட்லயே செய்யுங்க.. -
சுக்கிர பெயர்ச்சியால் இந்த 5 ராசிக்கு சுக்கிர திசை ஆரம்பிக்குது.. இனி கையில் பணம் குவியப்போகுது.. -
சிக்கன வாங்குனா இந்த 4 பொருட்களை சேர்த்து கேரளா ஸ்டைல் சிக்கன் 65 செய்யுங்க... டேஸ்ட் பட்டாசா இருக்கும்...! -
இந்த வாரம் மட்டன் வாங்குனா.. இந்த சுக்கா கிரேவி செய்யுங்க.. எல்லாத்துக்குமே செமயா இருக்கும்..
இந்த ராசிக்காரர்கள் தங்கள் முன்னாள் காதலரை மோசமாக பழிவாங்க துடிப்பார்களாம்… உஷாரா இருந்துக்கோங்க…!
ஒவ்வொரு நபரும் பிரிந்து செல்வதைக் கையாள்வதில் வித்தியாசமான வழியைக் கொண்டுள்ளனர்.
இவ்வுலகில் பிறந்த அனைவரும் காதலித்துக்கொண்டிருக்கிறார்கள். பொதுவாக காதல் என்பது ஆண், பெண் உறவுகளில் சுருங்கிவிட்டது. பலருக்கு அவர்களுடைய காதல் வெற்றி பெற்றிருக்கும். இன்னும் பலருக்கு அவர்களுடைய காதல் தோற்றுபோய் இருக்கலாம். இந்த காதல் தோல்விக்கு இருதரப்பிலிருந்து யாரேனும் ஒருவர் காரணமாக இருக்கலாம். அல்லது பெரும்பாலும், மதம், சாதி, பொருளாதாரம் போன்றவை காரணமாக இருக்கும். காதல் பிரிவு என்றால் வலி நிறைந்ததுதான். இந்த காரணங்களை தவிர்த்து வேறு காரணமாக பிரியும்போதும், உண்மையாக காதலித்தவர்கள் மிகுந்த மன உளைச்சலைதான் சந்திக்க வேண்டியிருக்கும்.

ஒவ்வொரு நபரும் பிரிந்து செல்வதைக் கையாள்வதில் வித்தியாசமான வழியைக் கொண்டுள்ளனர். சிலர் விரைவாக அந்த உறவில் இருந்து வெளியேறிவிடலாம். மற்றவர்கள் தங்கள் உணர்வுகளைச் செயல்படுத்த நேரம் எடுக்கலாம். சிலர் தங்கள் ஆரம்பகால கோப உணர்வை நீண்ட காலமாகப் பிடித்துக் கொள்ளலாம். மேலும் அவர்கள் தங்கள் முன்னாள் காதலருக்கு மனந்திரும்புதல் அல்லது பிரிந்ததற்கு வருந்துவதை உணர்ந்தவுடன் மட்டுமே அமைதியாக இருக்கக்கூடும். தங்களின் பிரிவுக்கு காரணமாக இருக்கும் தங்களின் முன்னாள் காதலர்களை பழிவாங்க சிலர் நினைப்பார்கள். அப்படி, பழிவாங்க விரும்பும் ராசிக்காரர்களை பற்றி இங்கே தெரிந்துகொள்ளுங்கள்.

விருச்சிகம்
விருச்சிக ராசி நேயர்கள் மிகவும் உணர்ச்சிவசப்பட்ட காதலர்கள். காதலில் இருக்கும்போது ஒரு விருச்சிக ராசிக்காரர் செய்ய மிகவும் கடினமான ஒரு விஷயம், பிரிந்து செல்வதை ஏற்றுக்கொள்வது. அவர்களின் ஆரம்ப எதிர்வினை விரைவில் ஆத்திரமாகவும் விரக்தியாகவும் மாறும், பெரும்பாலும் அவர்கள் பழிவாங்கத் திட்டமிடுவார்கள். அவர்கள் நீண்ட காலமாக ஒரு கோபத்தை வைத்திருக்க முடியும். கிட்டத்தட்ட பல ஆண்டுகள் வரை இது நீடிக்கலாம். மீண்டும் அன்பைக் கண்டுபிடித்து ஒரு புதிய உறவைத் தொடங்கிய பிறகும் நியாயமும் கோபமும் அவர்களின் இதயத்தில் அப்படியே இருக்கும்.

மகரம்
மகர ராசிக்காரர்கள் எல்லாவற்றையும் பகுப்பாய்வு செய்யும் போக்கைக் கொண்டுள்ளனர். இது அவர்களின் தொழில்முறை அல்லது தனிப்பட்ட வாழ்க்கையில் இருக்கலாம். அவர்கள் புதிர்களை விரும்புகிறார்கள், ஏனென்றால் அவர்கள் பதில்களைத் தேடுபவர்கள். ஒரு இடைவெளிக்குப் பிறகு, பெரும்பாலான மகர ராசிக்காரர்கள் சுய பகுப்பாய்வின் பயணத்தைத் தொடங்குகின்றனர். என்ன தவறு எங்கு நடந்துள்ளது என்பதைக் கண்டுபிடிக்க முயற்சி செய்கின்றன. மேலும் பெரும்பாலும் தங்களைத் தாங்களே குற்றம் சாட்டுகின்றன. ஆனால் பிளவுக்கு தங்கள் துணைக்கும் சமமான பொறுப்பு உள்ளது என்பதை அவர்கள் உணரும்போது, அது அவர்களுக்கு மிகுந்த கோபத்தையும் விரக்தியையும் தருகிறது. மேலும், தங்கள் பிரிந்த லவ்வர் மேல் உள்ள கோபத்தைத் தணிக்க மகர ராசிக்காரருக்கு நீண்ட கால்ம் எடுக்கும்.

மேஷம்
மேஷ ராசி நேயர்கள் அளவுகடந்த அன்பை கொடுப்பார்கள். அதே நேரத்தில் அவர்கள் நெருப்பு போன்றவர்கள். ஏனெனில் அவர்கள் ஒரு பொல்லாத மனநிலையைக் கொண்டுள்ளனர், எனவே அவர்கள் தங்கள் முன்னாள் லவ்வர் மீது கோபத்தில் இருந்தால், பழிவாங்க துடிப்பார். மேஷ ராசி நேயர்களின் பழிவாங்கலின் நல்ல விஷயம் என்னவென்றால், அது அவர்களின் முன்னாள் நபர்களுக்கு உடல் ரீதியாக தீங்கு விளைவிக்காது, ஆனால் அதன் சேதத்தை அவர்கள் உளவியல் ரீதியாக கொடுப்பார்கள்.

துலாம்
துலாம் ராசிக்காரர்கள் விரும்புவதை விட யாரும் தங்கள் வாழ்க்கையில் சமநிலையையும் நல்லிணக்கத்தையும் விரும்புவதில்லை. ஒரு முறிவு ஒரு நபரின் வாழ்க்கையில் சமநிலையை சீர்குலைக்கிறது, மேலும் இந்த இராசி அடையாளத்தின் மக்கள் ஒரு காதலனால் தூக்கி எறியப்படும்போது அவர்கள் மிகவும் வருத்தப்படுவதற்கு இதுவே காரணம். தங்கள் கோபத்தை எப்படிப் பிடித்துக் கொள்வது மற்றும் ஒரு மனக்கசப்பை வளர்ப்பது என்று துலாம் ராசி நேயர்களுக்கு நன்கு தெரியும். அவர்கள் மனதினுள்ளே பல கோபங்களை தங்கள் முன்னாள் காதலர் மீது தேக்கி வைத்திருப்பார்கள். தங்கள் வாழ்க்கையில் எல்லாம் நன்றாக இருக்கிறது என்பதையும் துலார் நேயர்கள் காட்டுகிறார்கள்.

கன்னி
கன்னி ராசி நேயர்கள் லவ்வர் உட்பட தங்கள் அருகில் இருக்கும் அன்பானவர்களை மகிழ்ச்சியாக வைத்திருக்க எந்த அளவிற்கும் செல்வார்கள். கன்னி ராசி நேயருடன் ஒரு உறவில் இருக்கும்போது, அவன் அல்லது அவள் மிகவும் அன்பான மற்றும் அக்கறையுள்ள கூட்டாளியாக இருக்க முடியும். ஆனால் ஒரு கன்னியின் அன்பான தன்மை இரட்டை முனைகள் கொண்ட வாள் போன்றது. ஏனென்றால் அவை பிரிந்து செல்லும் போது, அவை மிகவும் நச்சுத்தன்மையுடையவை. ஏனென்றால் அவர்கள் காதலர்களுடன் மிகவும் உணர்ச்சிவசமாக பழகுகிறார்கள். அவர்களுக்கு காதல் பிரிவுக்கு பிறகு எல்லா உணர்ச்சிகளையும் திரும்பப் பெறுவது கிட்டத்தட்ட சாத்தியமற்றது. இதில், அவர்கள் படும் துன்பத்தை தங்கள் முன்னாள் காதலரும் பெற வேண்டும் கன்னி ராசி நேயர்கள் விரும்புவார்கள்.

ரிஷபம்
ரிஷப ராசி நேயர்கள் தங்கள் முதல் பார்வையிலே காதலிக்கும் ஒருவர் அல்ல. எப்போதும் சிந்திக்கக்கூடிய மற்றும் நடைமுறைக்குரிய விஷயங்களை யோசிக்கும் ரிஷப ராசி நேயர்கள், தனது நேரத்தையும் ஆற்றலையும் உணர்ச்சிகளையும் வேறொரு நபரிடம் முதலீடு செய்வதற்கு சிறிது நேரம் எடுக்கும். இவ்வாறு அவர் யோசித்து செய்யும்போது, அவர் அதை நீண்டகால நோக்கத்துடன் செய்வார். இல்லையென்றால் வாழ்நாள் உறவாக நினைப்பார். எனவே, பிரிந்து செல்வது அத்தகைய நபருக்கு எளிதான சூழ்நிலை அல்ல. ஒரு ரிஷப ராசிக்காரர் தனது இதயத் துடிப்பைக் கடக்க நேரம் எடுக்கும். அந்த நேரத்தில் முன்னாள் காதலனின் வாழ்க்கையில் என்ன நடக்கிறது என்பதை அறிந்து கொள்ள அவர் எல்லாவற்றையும் செய்வார். அந்தக் கட்டத்தில் அவர்கள் ஏறக்குறைய வெறித்தனமான காதலர்களைப் போலவே நடந்துகொள்கிறார்கள். மேலும் அவர் உருவாக்கும் வெறுப்பு நேரத்துடன் தீவிரமாக வளரும்.

கும்பம்
கும்ப ராசி நேயர்கள் காதலுக்கு பெயர் போனவர்கள். அவர்கள் காதலில் இருக்கும்போது, அவர்களின் அன்பை பார்த்து வியந்து கொண்டே இருக்கலாம். ஆனால், அவர்கள் மோசமான காதல் முறிவுக்கு ஆளாகும்போது, பழிவாங்குவது ஒரு திட்டவட்டமான விருப்பமாக இருக்கும். அவர்கள் உணர்ச்சிபூர்வமாக காதலில் இணைந்திருக்கும்போது, அவை இல்லையென்பதை அவர்கள் எளிதில் ஏற்றுக்கொள்ள முடியாது. ஆதாலால், தங்கள் முன்னாள் காதலரை பலி தீர்க்க தக்க நேரம் எதிர்பார்த்து காத்திருப்பார்கள்.



Click it and Unblock the Notifications











