Latest Updates
-
தேங்காய் தோசையும்.. தேங்காய் சட்னியும்.. - இந்த காம்போவை எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 13 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க சொந்த காசுல சூனியம் வைச்சுக்கப் போறாங்களாம்...! -
செவ்வாய்-சந்திர சேர்க்கையால் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம்: மார்ச் 16 முதல் இந்த 3 ராசிக்கு பண மழை கொட்டும்.. -
18 மாதங்களுக்கு பின் உருவாகும் மங்களாதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிகளின் நீண்டகால ஆசைகள் நிறைவேறப்போகுதாம்...! -
1500 கிலோ தங்கத்தால் கட்டப்பட்ட தங்க கோயில் தமிழ்நாட்டில் எங்கு உள்ளது தெரியுமா? நீங்க இங்க போயிருக்கீங்களா? -
வெயிலால் உங்க முகம் கருமையாகாமல் இருக்கணுமா? அப்ப இந்த ஃபேஸ் பேக்கை அடிக்கடி போடுங்க... -
1 முறுக்கு பாக்கெட் இருந்தா இந்த மாதிரி காரைக்குடி ஸ்டைலில் குழம்பு வையுங்க... வித்தியாசமா சூப்பரா இருக்கும்.. -
வெயில் காலத்தில் மாலை வேளையில் இத செஞ்சு சாப்பிடுங்க.. உடம்பு குளுகுளு-ன்னு இருக்கும்.. -
அழகான பெண்கள் இந்த 4 ராசி ஆண்களை தேடிப்போய் காதலிப்பார்களாம்... உங்க ராசி இதுல இருக்கா? -
மார்ச் இறுதியில் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: இந்த 3 ராசிக்கு கூரைய பிச்சுக்கிட்டு பணம் கொட்டப்போகுது...
இந்தியாவின் துரோகிகள்... இவர்களின் துரோகத்தால்தான் சிப்பாய் கலகம் தோல்வியடைந்தது...!
நம்முடைய முதல் சுதந்திர போர் என்பது சிப்பாய் கலகம்தான் என்று அழைக்கப்படுகிறது. 1857-ல் ஏற்பட்ட இந்த கிளர்ச்சிதான் 1947-ல் இந்தியா சுதந்திரம் அடைய காரணமாக அமைந்தது.
இந்திய சுதந்திர போர் என்பது நீண்ட நெடிய வரலாற்றைக் கொண்டதாகும். நமது சுதந்திர போர் என்பது பல்வேறு படிநிலைகளாக கிட்டதட்ட 90 ஆண்டுகள் நடைபெற்றது. நம்முடைய முதல் சுதந்திர போர் என்பது சிப்பாய் கலகம்தான் என்று அழைக்கப்படுகிறது. 1857-ல் ஏற்பட்ட இந்த கிளர்ச்சிதான் 1947-ல் இந்தியா சுதந்திரம் அடைய காரணமாக அமைந்தது.

இந்தியாவின் சுதந்திர போரில் இந்துக்களும், முஸ்லிம்களும் இணைந்து போராட இந்த சம்பவம்தான் ஆரம்பப்புள்ளியாக இருந்தது. இரண்டாம் பகதூர் ஷா ஜாபர் மன்னராக அறிவிக்கப்பட்டது இதற்கு ஒரு சிறந்த உதாரணமாகும். மிகப்பெரிய கிளர்ச்சியாக உருவெடுத்த இது தோல்வியடையக் காரணம் சில துரோகங்கள்தான். இந்த பதிவில் சிப்பாய் கலகம் ஏன் தோல்வியை தழுவியது என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

சிப்பாய் கலகம்
சிப்பாய் கலகம் மிகப்பெரிய கிளர்ச்சியாக மாறியது. இது பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனிக்கு எதிராக இந்தியா வெற்றி பெறும் வாய்ப்பை ஏற்படுத்தியது. ஆனால் அங்கு நிகழ்த்தப்பட்ட சில துரோகங்களால் இந்த மாபெரும் புரட்சி தோல்வியில் முடிந்தது. இந்த துரோகிகள் மட்டும் இல்லையென்றால் 1857 ஆம் ஆண்டே நாம் சுதந்திரம் பெற்றிருக்கலாம். இருப்பினும் சிப்பாய் கலகம் வரலாற்றில் முக்கியமான இடத்தைப் பிடித்தது.

மிர் ஜாஃபர்
பிரிட்டிஷ் செல்வாக்கின் கீழ் வங்காளத்தின் முதல் நவாப் மிர் ஜாபர் ஆவார். பிறப்பால் ஒரு அரபு, அவர் நவாபின் இராணுவத்தில் அதிகாரத்திற்கு உயர்ந்தார் மற்றும் பிளாஸி போரில் (1756) சிராஜ்-உத்-துல்லாவை நவாபாக மாற்றுவதற்காக ஆங்கிலேயர்களுடன் இணைந்து சதி செய்தார். சதி மற்றும் மோசடி மூலம் நவாப் அலிவார்டி கானின் நம்பிக்கைக்குரியவராக அவர் வெற்றிக்கு வழி வகுத்தார். பின்னர் அவர் தனது சாம்ராஜ்யத்தை தூக்கியெறிந்து ஆட்சியாளராவதற்கு சதி செய்தார், ஆனால் அது நடக்கவில்லை.

மிர் ஜாஃபரின் சதி
பிரிட்டிஷ் படையெடுப்பின் போது, அப்போது சிம்மாசனத்தை ஆட்சி செய்து கொண்டிருந்த நவாபின் பேரன் சிராஜுக்கு எதிராக மிர் ரகசியமாக சதி செய்து கொண்டிருந்தார். சரியான நேரம் வந்ததும் சிராஜைக் காட்டிக் கொடுக்கவும், நவாப் கொல்லப்பட்ட வங்காள இராணுவத்தை அழிக்கவும் பிரிட்டிஷ் படையுடன் கைகோர்த்தார்.

அரியணை ஏறுதல்
சிராஜ் வீழ்த்தப்பட்ட பிறகு மிர் ஜாஃபர் அரியணையை கைப்பற்றினார். இந்தியாவுக்கு எதிராக கிழக்கிந்திய கம்பெனிக்கு தொடர்ந்து ஆதரவளித்தார். 1857 கலகத்திற்கு எதிராக போராட தனது முழு இராணுவத்தையும் அவர் கட்டாயப்படுத்தினார்.

ஜமீன்தார்கள்
பல ஜமீன்தார்களுக்கு கிழக்கிந்திய கம்பெனி பணத்தையும், செல்வத்தையும் கொடுத்து அவர்களின் சக்தியை அதிகரித்து தனக்கு உதவி செய்வதற்காக பராமரித்து வந்தனர். இவர்கள் சரியான சமயத்தில் ஆங்கிலேயர்களுக்கு உதவினர்.

ஜமீன்தார்களின் துரோகம்
1857 கிளர்ச்சியின் போது, ஜமீன்தார்கள் பிரிட்டிஷ் இராணுவத்தை ஆதரித்து, இந்திய சுதந்திர போராட்ட வீரர்களுக்கு துரோகம் இழைத்தனர், கிழக்கிந்திய கம்பெனியை இழந்தால், அவர்களின் செல்வம் மற்றும் சொத்துக்கள் அனைத்தும் ஆபத்தில் சிக்கிக்கொள்ளும் என்று அவர்கள் அஞ்சினர்.

ஜெயாஜிராவ் சிந்தியா
1857 ஆம் ஆண்டில், இந்திய சுதந்திரப் போராளிகள் தங்கள் இதயம், ஆத்மா மற்றும் இரத்தத்துடன் சண்டையிட்டுக் கொண்டிருந்தபோது சில இந்தியர்கள் அந்த போராட்டக்காரர்களுக்கு எதிராக சதி செய்யத் தொடங்கினர். அவர்களில் ஒருவர் சிந்தியா குடும்பம்.

சிந்தியாவின் துரோகம்
ஜான்சியைச் சேர்ந்த ராணி லக்ஷ்மிபாய் காயமடைந்து பிரிட்டிஷ் இராணுவத்திற்கு எதிராக உதவி கேட்டபோது, அவர் மறுத்துவிட்டு நடுநிலை வகிப்பதாக கூறிவிட்டார். மேலும், இந்திய தரப்பு பலவீனமடைவதைக் கண்ட அவர், தத்யா டோப், ராணி லட்சுமிபாய் மற்றும் ராவ் சாஹிப் தலைமையிலான கிளர்ச்சிப் படையை எதிர்த்துப் போராட தனது படைகளை மொரருக்கு அழைத்துச் சென்றார்.

ஜெய்சந்த்
ராஜபுத்திரர்கள் தங்கள் தாய்நாட்டிற்கு விசுவாசமாக இருந்தார்கள். ஆனால், ராஜபுத்திரர்களின் நற்பெயரை இருட்டடிப்பு செய்த ஒரு பெயர் உள்ளது. பிருத்விராஜும், சம்யுக்தாவும் திருமணம் செய்து கொண்ட பிறகு ஜெய்சந்த் கோபமடைந்தார். முதன்முதலில் இந்தியா மீது படையெடுக்கவும், பிருத்விராஜ் சவுகானுடன் போரிட்டு அவரைக் கொல்லவும் முகமது கோரியை அழைத்தது இவர்தான். இவர்களின் துரோகங்களால்தான் சிப்பாய் கலகம் தோல்வியில் முடிந்தது.



Click it and Unblock the Notifications











