Latest Updates
-
இந்த வாரம் மட்டன் வாங்குனா.. இந்த சுக்கா கிரேவி செய்யுங்க.. எல்லாத்துக்குமே செமயா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 08 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க வாழ்க்கையில் சில அற்புதங்கள் நடக்குமாம்...! -
வார ராசிபலன் (01 March 2026-07 March 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிகளுக்கு மனஅழுத்தம் நிறைந்த வாரமாக இருக்கும்! -
மட்டன் வாங்குனா இந்த மாதிரி நெல்லூர் ஸ்டைலில் குழம்பு வைச்சு பாருங்க... தோசை, சாதத்துக்கு சூப்பரா இருக்கும்... -
திரிகிரக யோகம் கும்ப ராசியில் உருவாவதால் இந்த 3 ராசிக்காரர்களை தோல்வியும், துரதிர்ஷ்டமும் துரத்தப்போகுதாம்...! -
1 கப் கோதுமை ரவா இருந்தா இந்த மாதிரி அடை செஞ்சு பாருங்க... சூப்பரான காலை உணவா இருக்கும்... ட்ரை பண்ணுங்க...! -
இந்தியாவின் முதல் பெண்களுக்கான பள்ளி எப்போது திறக்கப்பட்டது? எந்த ஊரில் திறக்கப்பட்டது தெரியுமா? -
உருளைக்கிழங்கை ஒருதடவை இந்த மாதிரி கொங்குநாடு ஸ்டைலில் குருமா வைச்சு பாருங்க...டக்கரான சைடிஷா இருக்கும்...! -
அமெரிக்க-ஈரான் போரால் துபாயில் சரசரவென குறையும் தங்கம் விலை...இந்தியாவிலும் தங்கம் விலை குறையுமா? உண்மை என்ன? -
இந்த 4 ராசிக்காரங்க உயிரை கொடுத்தாவது குடும்பத்தை பாதுகாக்கும் ரியல் ஹீரோவாக இருப்பார்களாம்...உங்க ராசி என்ன?
இராமராலேயே சீதையின் நகையை அடையாளம் காண முடியாத போது இலட்சுமணன் எப்படி நகையை கண்டறிந்தார் தெரியுமா?
இராமரால் சீதையின் நகைகளை அடையாளம் காண முடியாத போது இலட்சுமணன் அவரின் நகைகளை அடையாளம் கண்டு கூறினார், அதற்கு இலட்சுமணன் கூறிய காரணம் சீதையின் மீது அவர் வைத்திருந்த அன்பு மற்றும் பக்தியை விளக்குவதாக இரு
இந்தியாவின் இருபெரும் இதிகாசங்களில் ஒன்றான இராமாயணம் பல அதிசயங்களும், வாழ்வியல் நெறிகளும் நிறைந்ததாகும். நமக்கு தெரியாத அல்லது நம்மால் புரிந்து கொள்ள முடியாத பல ஆச்சரியங்கள் இராமாயணத்தில் நிறைந்துள்ளது. இராமாயணத்தில் நமக்கு தெரியாத பல கிளைக்கதைகள் உள்ளது. அதில் ஒன்றுதான் இராமரால் சீதையின் நகையை அடையாளம் காண முடியாமல் போன கதையாகும்.

இராவணன் சீதையை கடத்திச் சென்ற போது இராமர் தன்னைத் தேடி வருவதற்காக தனது நகைகளை அடையாளமாக எரிந்து சென்றார். இராமரால் சீதையின் நகைகளை அடையாளம் காண முடியாத போது இலட்சுமணன் அவரின் நகைகளை அடையாளம் கண்டு கூறினார், அதற்கு இலட்சுமணன் கூறிய காரணம் சீதையின் மீது அவர் வைத்திருந்த அன்பு மற்றும் பக்தியை விளக்குவதாக இருந்தது. இந்த பதிவில் இந்த சுவாரஸ்யமான சம்பவம் பற்றி விரிவாக பார்க்கலாம்.

சீதையின் கடத்தல்
இந்த சம்பவம் சீதையை இராவணன் இலங்கைக்கு கடத்திச் சென்றதற்கு பின்னால் நடந்ததாகும். சீதையை இராவணன் கடத்திச் சென்ற போது ஜடாயு அவரை சீதையை மீட்பதற்காக இராவணனுடன் போர் புரிந்தார். ஆனால் சர்வ வல்லமையும் நிறைந்த இராவணன் ஜடாயுவை வீழ்த்திவிட்டான். அப்போது சீதை இராமரும், இலட்சுமணனும் தன்னை தேடி வர உதவியாக இருக்க வேண்டுமென தன்னுடைய நகைகளை புஷ்பக விமானத்தில் இருந்து தூக்கி எறிந்தார்.

சுக்ரீவனுடனான சந்திப்பு
இராமர் மற்றும் இலட்சுமணன் யார் என்று தெரிந்த கொண்ட பிறகு அனுமன் அவர்கள் இருவருக்கும் உதவுவதற்காக சுக்ரீவனிடம் அழைத்துச் சென்றார். அப்போது அவருடன் சில வானரங்கள் இருந்தனர்.

சீதையின் நகைகள்
இராமருக்கு நேர்ந்த சோகத்தை கேள்விப்பட்ட சுக்ரீவனும், வானரங்களும் மிகுந்த வருத்தமுற்றனர். உடனே சுக்ரீவன் காட்டில் இருந்து சேகரிக்கப்பட்ட நகைகளை கொண்டுவர கூறினார். அந்த நகைகள் அனைத்தும் வானத்தில் இருந்து விழுந்ததாக அவர்கள் கூறினார்கள்.

இராமர் நகைகளை ஆராய்ந்தார்
காட்டில் இருந்து கிடைத்த நகைகள் சீதையின் நகைகளா என்பதை அறிய அவை இராமரின் பார்வைக்கு வைக்கப்பட்டது. அவை சீதையின் நகைகளாக இருந்தால் இராவணன் எந்த திசையில் சென்றார் என்பதை வானரங்களால் கண்டறிய இயலும். எனவே அதனைக் கொண்டு எப்படி அவரை நெருங்கலாம் என்று திட்டமிடலாம் என்று கூறினார்.

இராமரின் சந்தேகம்
நகைகளை பார்த்த பின், அவை சீதைக்கு சொந்தமானதா இல்லையா என்பதை இராமரால் கண்டுபிடிக்க முடியவில்லை. அவருக்கு அவை சீதையின் நகைகள் போல தோன்றினாலும் அவரால் அதனை உறுதியாக கூறமுடியவில்லை. எனவே அவர் சீதையின் நகைகளை கண்டறிய இலட்சுமணனின் உதவியை நாடினார்.

இலட்சுமணனின் ஆராய்ச்சி
இலட்சுமணர் நகைகளை ஆராய்ந்தார். ஆனால் இலட்சுமணராலும் அந்த நகைகளை அடையாளம் காண முடியவில்லை, ஆனால் ஒரு நகையைத் தவிர. அது ஒரு கொலுசு ஆகும். அந்த நகை சீதையோடதுதான் என்பதை உறுதியாகக் கூறினார்.

இராமரின் ஆர்வம்
இலட்சுமணனின் உறுதியான பதிலைக் கண்டு அனைவரும் ஆச்சரியமடைந்தனர். மற்ற நகைகள் இருக்கும் போது கொலுசை மட்டும் இலட்சுமணன் எப்படி அடையாளம் கண்டுபிடித்தார் என்று தெரிந்து கொள்ள இராமர் முதற்கொண்டு அனைவரும் விரும்பினர். எனவே அதனை இராமர் இலட்சுமணனிடம் வினவினார்.

இலட்சுமணனின் பதில்
இராமரின் கேள்விக்கு தான் எப்பொழுதும் சீதையின் பின்னால்தான் பயணித்ததாக இலட்சுமணன் பதில் அளித்தார். தன்னுடைய பார்வை எப்பொழுதும் சீதை மீது இல்லாமல் அவரின் பாதத்தின் மீதே இருந்ததாக கூறினார். அனைத்து பயணங்களிலும் சீதையின் பாதத்தை பார்த்ததால் அவரின் பாதத்தில் இருந்த கொலுசை தன்னால் அடையாளம் காண முடிந்ததாக இலட்சுமணன் கூறினார்.

இலட்சுமணரின் சிறப்புகள்
இலட்சுமணர் அவரின் உறுதிக்காகவும், அன்னையின் மீது வைத்திருந்த பக்திக்காகவும் புகழ்பெற்றவர். அவர் தன் சகோதரன் மீதும், சகதோரரின் மனைவி மீதும் அளவற்ற அன்பும், மரியாதையும் வைத்திருந்தார். சீதையிடம் இலட்சுமணன் கண்ணியமான உறவை பேணி வந்தார், அதனாலதான் அவர் எப்பொழுதும் சீதையின் முகத்தை பார்க்காமல் பாதங்களை பார்த்து வந்தார். அதுதான் அந்த தருணத்தில் அவர்களுக்கு உதவியாக இருந்தது.



Click it and Unblock the Notifications











