Latest Updates
-
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
மரணமிலா வாழ்க்கையை வாழ்வதற்கு ஒரு வழி கிடைத்துவிட்டது..ஆனா இதுக்கு எவ்வளவு செல்வாகும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க! -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: மார்ச் 15 முதல் இந்த 5 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்.. -
முருங்கைக்கீரையை இந்த மாதிரி கேரளா ஸ்டைலில் தோரன் செஞ்சு சாப்பிடுங்க..சுவையாவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்..!
அனுமன் சாகாவரம் பெற்றதற்கு பின்னால் இருக்கும் ரகசியங்கள் என்னென்ன தெரியுமா?
தைரியம், வலிமை மற்றும் இறையன்பின் கடவுளாக இருக்கும் அனுமன் சாகாவரம் பெற்றவராக இருந்ததாக இந்து புராணங்கள் கூறுகிறது. அனுமனின் இந்த சாகாவரத்திற்கு பின்னால் பல காரணங்கள் உள்ளது.
இந்தியாவின் மிகப்பெரிய இதிகாசங்களில் ஒன்று இராமாயணம் ஆகும். இராவணனை அழிக்க இராமருக்கு பேருதவியாக இருந்தது அனுமன்தான். இராமாயணத்தில் மட்டுமின்றி இந்து மதத்திலேயே அனுமன் மிகவும் முக்கியமான கடவுளாக விளங்குகிறார். உலகம் முழுவதும் இருக்கும் இந்து மக்கள் கொண்டாடும் கடவுளாக அனுமன் இருக்கிறார்.

தைரியம், வலிமை மற்றும் இறையன்பின் கடவுளாக இருக்கும் அனுமன் சாகாவரம் பெற்றவராக இருந்ததாக இந்து புராணங்கள் கூறுகிறது. அனுமனின் இந்த சாகாவரத்திற்கு பின்னால் பல காரணங்கள் உள்ளது. அனுமன் சிரஞ்சீவியாக இன்றும் வாழ்ந்து கொண்டிருப்பதாகக் கூட சில நம்பிக்கைகள் உள்ளது. இந்த பதிவில் அனுமனின் அமரத்துவத்துக்கு பின்னால் இருக்கும் ரகசியங்கள் என்னென்ன என்று பார்க்கலாம்.

அனுமனின் குழந்தைப்பருவம்
தன்னுடைய குழந்தைப்பருவத்தில் அனுமன் மிகவும் குறும்புக்காரராகவும், அமைதியற்றவராகவும் இருந்தார். இது அவரின் பெற்றோரை மிகவும் கவலைகொள்ள செய்தது. ஒருமுறை அனுமன் சூரியனை பழுத்த சிவப்பு பழம் என்று நினைத்து நோக்கி பறந்தார். அனுமன் சூரியனுக்கு அருகில் சென்று அதனை விழுங்க முயன்றார் இது பிரபஞ்சத்தில் இருளையும், அழிவையும் ஏற்படுத்தும் என்று அனைவரும் அஞ்சினர்.

இந்திரன்
தேவர்களின் அதிபதியான இந்திரன் சூரியதேவர் மற்றும் பிற கடவுள்களின் வேண்டுதல்களைக் கேட்டார். அதன்பின் ஆஞ்சநேயரை தடுத்து நிறுத்த வேண்டும் என்றும், அவருக்கு தக்க பாடம் புகட்ட வேண்டுமென்றும் முடிவெடுத்தார். இதனால் தனது வஜ்ராயுதத்தின் மூலம் பாலகனான ஆஞ்சநேயரை தாக்கினார், அனுமன் உடனே வானத்தில் இருந்து விழுந்தார்.

ஆஞ்சநேயர் பெயர் காரணம்
இளம் ஆஞ்சநேயர் பூமியில் விழுந்ததால், அவரது தாடையின் இடது புறம் சிதைந்தது. ஆஞ்சநேயர் என்பதன் பொருள் உடைந்த கன்னத்துடன் இருப்பவர் என்பதாகும். அனுமனின் தெய்வத்தந்தையான வாயுபகவான் தன்னுடைய மகன் வஜ்ராயுதத்தால் தாக்கப்பட்டது கண்டு கோபமுற்றார். இதனால் அனைத்து கடவுள்களுக்கும் பாடம் புகட்ட வேண்டுமென்று நினைத்தார்.

வாயுபகவானின் செயல்
வாயுபகவான் மூன்று உலகத்திலும் காற்றை நிறுத்தினார். ற்ற கடவுள்கள் உட்பட பிரபஞ்சத்தில் உள்ள அனைத்து உயிரினங்களும் காற்று இல்லாததால், மூச்சுத் திணறலால் பாதிக்கப்பட்டனர். அனைவரும் சேர்ந்து வாயுபகவானை சமாதானப்படுத்த முயன்றனர். ஆனால் அவர்களால் அதனை சாதிக்க முடியவில்லை. அதனால் அனைவரும் என்ன செய்வதென்று தெரியாமல் திணறினர்.

பிரம்மாவின் வரம்
வாயுபகவானை சமாதானப்படுத்த பிரம்மா அவருக்கு ஒரு வரம் கொடுக்க முன்வந்தார். அதன்படி எந்த கடவுளின் அஸ்திரமும் அனுமனை தாக்காது என்று கூறினார். இந்திரனும் தனது செயலுக்கு மன்னிப்பு கேட்டதுடன் அவரின் மரணத்தை அவரே தேர்வு செய்துகொள்ளும் வரத்தை கொடுத்தார்.அதன்மூலம் அனுமன் நினைத்தால் மட்டுமே மரணம் அவரை நெருங்க முடியும். இதனை அனுமனும், வாயுபகவானும் ஏற்றுக்கொண்டனர்.

இராமரின் வரம்
மற்றொரு புராணக்கதையின் படி பல ஆண்டுகள் அயோத்தியில் ஆட்சி புரிந்த இராமர் தன்னுடைய குருதேவரின் அறிவுரைப்படி தன்னுடைய பூமிவாழ்வை சராயு நதிக்கரையில் மூழ்கி முடித்துக்கொள்ள முடிவெடுத்தார். அதற்குமுன் அனுமனுக்கு சாகாவரத்தை வழங்கினார். உலகத்தின் முடிவு வரும் வரை அனுமன் நீண்ட ஆயுளோடும், மகிழ்ச்சியாகவும் அனுமன் வாழ வேண்டுமென்று இராமர் விரும்பினார். இராமரின் விருப்பத்தை நிறைவேற்ற அனுமனும் அந்த வரத்தை ஏற்றுக்கொண்டார். இந்த உலகம் அழியும்வரை இராமரின் பெயரைக் கூறி தவத்தில் ஈடுபடுவேன் என்று அனுமன் உறுதியேற்றார்.



Click it and Unblock the Notifications











