Latest Updates
-
சனி வக்ர பெயர்ச்சி: ஏழரை சனி நடக்கும் 3 ராசிக்காரர்களுக்கு எப்படி இருக்கும் தெரியுமா? -
முள்ளங்கியை இந்த ஸ்டைலில் சாம்பார் செய்யுங்க, பிடிக்காதவங்களும் கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
இதய நோய் வரக்கூடாதா? அப்ப நைட் 8 மணிக்கு மேல் இந்த 6 பழக்கங்களை வெச்சுக்காதீங்க.. -
சனி-சூரியனால் உருவாகும் நவபஞ்ச திருஷ்டி யோகம்: இந்த 4 ராசிக்கு கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும்! -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்துல குறையும்.. -
இன்றைய ராசிபலன் 25 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு மனஅழுத்தம் நிறைந்த நாளாக இருக்குமாம் -
ஆகஸ்ட் மாதத்தில் உதயமாகும் குரு பகவான்: இந்த 4 ராசிக்கு கூரைய பிச்சுக்கிட்டு பணம் கொட்டப்போகுது.. -
குருபகவான் அஸ்தமன நிலையில் இருப்பதால் கோடிகளை குவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
ஆந்திரா ஸ்டைல் புளி சாதம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா அருமையா இருக்கும் -
இந்த 3 சின்னங்களில் ஒன்று உங்கள் கையில் இருந்தாலும் நீங்க மிகப்பெரிய துரதிர்ஷ்டசாலியாம் - ஜாக்கிரதை
வரலக்ஷ்மி விரதத்தின் போது பெண்கள் என்னென்ன உணவுகளை சாப்பிடுவது அவர்களுக்கு நல்லது தெரியுமா?
தென்னிந்தியாவில் வரமஹாலக்ஷ்மி பூஜை மிக முக்கியமான மற்றும் பிரபலமான கொண்டாட்டங்களில் ஒன்றாகும். இந்த பூஜை குறிப்பாக லட்சுமி தேவிக்கு அர்ப்பணிக்கப்பட்டு திருமணமான பெண்களால் செய்யப்படுகிறது.
தென்னிந்தியாவில் வரமஹாலக்ஷ்மி பூஜை மிக முக்கியமான மற்றும் பிரபலமான கொண்டாட்டங்களில் ஒன்றாகும். இந்த பூஜை குறிப்பாக லட்சுமி தேவிக்கு அர்ப்பணிக்கப்பட்டு திருமணமான பெண்களால் செய்யப்படுகிறது. இந்த ஆண்டு, ஆகஸ்ட் 05 வெள்ளிக்கிழமை அன்று இந்த சிறப்பான நாள் கொண்டாடப்பட இருக்கிறது.

குடும்பத்தின் அமைதி, நல்வாழ்வு மற்றும் மகிழ்ச்சிக்காகவும், கணவர்களின் ஆரோக்கியம் மற்றும் நீண்ட ஆயுளுக்காகவும் இந்த பூஜை செய்யப்படுவதாக நம்பப்படுகிறது. வரமஹாலக்ஷ்மி பூஜையின் நாளில் திருமணமான பெண்கள் பூஜை முடியும் வரை விரதத்தை அல்லது விரதத்தை கடைப்பிடிப்பார்கள். இது ஆவணி மாதத்தின் பௌர்ணமிக்கு முந்தைய வெள்ளிக்கிழமை அனுசரிக்கப்படுகிறது.

பூஜை விதிமுறைகள்
திருமணமான பெண்கள் அதிகாலையில் எழுந்து பிரம்ம முகூர்த்த நேரத்தில் பூஜைக்கான வேலையை செய்யத் தொடங்குவார்கள். காலையியே குளித்துவிட்டு அரைநாள் வரை விரதமிருக்க வேண்டும், இந்த இடைப்பட்ட நேரத்தில் பூஜை அறை, வீடு முழுவதையும் சுத்தம் செய்வது, கோலம் போடுவது மற்றும் பூஜைக்கு பிரசாதங்கள் தயாரிப்பது போன்ற பல வேலைகளையும் அவர்கள் செய்ய வேண்டும். இதற்கு நிறைய சகிப்புத்தன்மை மற்றும் ஆற்றல் தேவைப்படுகிறது. இந்த நேரத்தில் அவர்கள் சாப்பிடக்கூடிய பொருட்கள் என்னென்ன என்று மேற்கொண்டு பார்க்கலாம்.

வாழைப்பழம்
வாழைப்பழம் வலிமையை வளர்க்க மிகவும் உதவியாக இருக்கும் ஒரு பழம். பொட்டாசியம் நிறைந்த, வாழைப்பழத்தில் இயற்கை குளுக்கோஸ் உள்ளது, இது ஆற்றல் அளவை அதிகரிக்க உதவுகிறது. இதை நேரடியாகவோ அல்லது சாறு வடிவிலோ எடுத்துக் கொள்ளலாம். ஒரு வாழைப்பழம் வைத்திருப்பது வேலை சுமையை சுமக்கும் ஆற்றலை உருவாக்க உதவுவது மட்டுமல்லாமல் உங்களுக்கு நிறைவான உணர்வை வழங்கும்.

பால்
நீங்கள் விரதமிருக்கும்போது வைட்டமின்கள், கால்சியம், மெக்னீசியம் ஆகியவை நிறைந்த பாலை எடுத்துக் கொள்ளலாம். இது தூய்மையானதாகக் கருதப்படுகிறது மற்றும் கடவுள்கள் மற்றும் தெய்வங்களுக்கு அபிஷேகம் செய்யப் பயன்படுகிறது. ஒரு கப் பாலைக்குடிப்பது, விரதத்தைத் தொடரவும், பூஜை வேலைகளை முடிக்கவும் ஆற்றலை வழங்கும்.

பழச்சாறு
பழச்சாறுகள் நீங்கள் விரதம் இருக்கும்போது உங்களுக்கு ஆற்றலை வழங்கும் ஊட்டச்சத்துக்களின் சிறந்த ஆதாரங்களில் ஒன்றாகும். பப்பாளி, தர்பூசணி, ஆரஞ்சு, மாதுளை மற்றும் பல பழங்கள் கொண்ட பழங்களை நீங்கள் தயார் செய்யலாம். இது உற்சாகத்தை மட்டுமல்ல, ஆரோக்கியத்தையும் தருகிறது.

நட்ஸ்
நட்ஸ்களில் குறிப்பாக, பாதாம் மற்றும் திராட்சை நீங்கள் வேகமாக ஆற்றலை பெற உதவுகிறது. சுமார் 3-4 பாதாம் பருப்புகளையும் 4-5 திராட்சைகளையும் இரவே தண்ணீரில் ஊறவைத்து காலையில் சாப்பிடவும். நீங்கள் விரதம் இருக்கும்போது பூஜையின் நாளில் வேலையைத் தொடர நிறைய ஆற்றலை வழங்க இது உதவுகிறது.



Click it and Unblock the Notifications