Just In
- 5 hrs ago 18 ஆண்டுகளுக்கு பின் உருவாகியுள்ள அங்காரக யோகம்: ஜூன் வரை இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்...
- 6 hrs ago Garlic Peels: பூண்டின் தோலில் இவ்வளவு நன்மைகளா? என்னென்ன-ன்னு தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க..
- 7 hrs ago Hair Care: பளபளப்பான மற்றும் வலிமையான முடி வேணுமா? கற்பூரத்தை இப்படி யூஸ் பண்ணுங்க... சர சரனு வளரும்...!
- 7 hrs ago 3 முள்ளங்கியும், 1 தக்காளியும் இருந்தா.. இப்படி சட்னி செய்யுங்க.. இட்லி, தோசைக்கு செமயா இருக்கும்..
Don't Miss
- News அரசு புறம்போக்கு நிலம் என கைவிரித்த அதிகாரிகள்.. பட்டா வழங்க மறுப்பு.. ஹைகோர்ட் அதிரடி உத்தரவு
- Sports IPL 2024: ஏமாந்து போன ப்ரித்வி ஷா.. அது அவுட்டே இல்லை.. கொந்தளித்த டெல்லி ரசிகர்கள்.. என்ன நடந்தது?
- Technology சீனாவிற்கு செக் வச்ச கேப்புல.. ரஷ்யாவிற்கும் ஒரு ஆப்பு பார்சல் பண்ண இந்தியா.. சாதித்தது DRDO புதிய ஏவுகணை!
- Automobiles பஜாஜ் நிறுவனத்தை உலகமே திரும்பி பாக்க போகுது! இப்படி ஒரு டூவீலரை இதுக்கு முன்னாடி யாருமே கொண்டு வந்தது இல்ல!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Movies வருஷத்துக்கு ஒரு படமாவது பண்ணுங்க.. விஜய்யை சந்தித்து அதிரடியாக கோரிக்கை வைத்த பிரபலம்!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
சத்ரபதி சிவாஜி பற்றி மறைக்கப்பட்ட இந்த உண்மைகள் உங்களுக்குத் தெரியுமா?
சிறந்த ஆட்சியாளராகவும், மொகலாயர்களுக்கு எதிராக போராடி இந்து மக்களை பாதுகாத்து தனக்கென வரலாற்றில் ஒரு தனியிடத்தை பிடித்துள்ளார் மராட்டிய சிங்கம் சிவாஜி.
இந்தியாவின் வரலாற்றில் மிகவும் புகழ்பெற்ற ஒரு அரசர்களில் ஒருவர் சத்ரபதி சிவாஜி அவர்கள். சிறந்த ஆட்சியாளராகவும், மொகலாயர்களுக்கு எதிராக போராடி இந்து மக்களை பாதுகாத்து தனக்கென வரலாற்றில் ஒரு தனியிடத்தை பிடித்துள்ளார் மராட்டிய சிங்கம் சிவாஜி.
சத்ரபதி சிவாஜி மகாராஜா என்று அழைக்கப்படும் இவருக்கு பல எண்ணற்ற துணிச்சலான கதைகள் உள்ளது. வெல்ல முடியாத இந்த ஆட்சியாளரைப் பற்றி பல சுவராஸ்யமான தகவல்கள் வரலாற்றில் மறைக்கப்பட்டுள்ளது. இந்த பதிவில் சத்ரபதி சிவாஜி பற்றிய சில சுவாரஸ்யமான தகவல்களை பார்க்கலாம்.
பெயரின் தோற்றம்
பொதுவாக அனைவராலும் நம்பப்படுவதைப் போல சிவாஜி என்ற பெயர் சிவபெருமானின் பெயரில் இருந்து அவருக்கு வைக்கப்படவில்லை. சிவாய் என்ற பிராந்திய தெய்வத்தின் நினைவாகவே இவருக்கு சிவாஜி என்று பெயர் சூட்டப்பட்டது.
மதசார்பற்ற ஆட்சியாளர்
முஸ்லீம் படையெடுப்பாளர்கள் தங்களின் மதத்தை பரப்பிக் கொண்டிருந்த காலக்கட்டத்தில் சிவாஜி அவர்கள் மதசார்பற்ற ஆட்சியாளராக இருந்தார். தனது இராஜ்ஜியத்தை சேர்ந்த மக்கள் அவர்கள் விரும்பும் மதத்தை பின்பற்றும் சுதந்திரத்தை அவர்களுக்கு கொடுத்திருந்தார்.
மரியாதைக்குரிய இந்து மதமாற்றம்
சிவாஜி மற்ற மதங்களிலிருந்து இந்து மதத்திற்கு மாற விரும்புவோருக்கு உதவினார். சொல்லப்போனால் அவர் இந்துவாக மதம் மாறிய ஒருவருக்கே தனது மகளை திருமணம் செய்து வைத்தார்.
MOST READ:2020-ல் இந்த ராசிக்காரங்கதான் சிறந்த ஜோடியாக இருக்கப் போறாங்களாம் தெரியுமா?
முஸ்லீம்களை ஏற்றுக்கொண்டார்
சிவாஜி இந்து மதத்தை காப்பாற்ற முஸ்லிம் படையெடுப்பாளர்களுடன் மட்டுமே போராடினார். இருப்பினும், அவர் ஒருபோதும் முஸ்லிம்களை வெறுக்கவில்லை.அவருக்கு நிறைய முஸ்லிம் நண்பர்கள் இருந்தனர். அவரது இராணுவப்படையில் கூட பல முஸ்லிம்கள் இருந்தனர்.
ஒளரங்கசீப்பிற்கு உதவி
ஒருமுறை சிவாஜி ஒளரங்கசீப்பிற்கு பிஜாப்பூரைக் கைப்பற்ற உதவினார். இருப்பினும் அவரது இரண்டு அதிகாரிகள் அகமதுநகருக்கு அருகிலுள்ள மொகல் பிரதேசத்தை ஆக்கிரமித்ததிலிருந்து இந்த அணி பின்வாங்கியது.
போரில் நிபுணர்
சிவாஜி ஒரு ஆட்சியாளராக தனது வாழ்க்கையைத் தொடங்கியபோது, அவரது தந்தை அவருக்காக 2,000 வீரர்களை மட்டுமே விட்டுச்சென்றார். இறுதியில், சிவாஜி தனது இராணுவத்தை 10,000 வீரர்களின் அளவுக்கு உயர்த்த கடுமையாக உழைத்தார். ஒரு நல்ல இராணுவத்தின் முக்கியத்துவத்தை அவர் எப்போதுமே அறிந்திருந்தார், மேலும் அவர் அற்புதமான போர் நுட்பங்களையும், உத்திகளையும் கொண்டிருந்தார். அவர் தனது இராணுவத்தில் பல வலுவான அறிவாளிகளைக் கொண்டிருந்தார், அது கொரில்லா போர் என்று அழைக்கப்படும் ஒரு மேம்பட்ட போர்க்கலையை உருவாக்க உதவியது.
MOST READ:இந்தியாவின் துரோகிகள்... இவர்களின் துரோகத்தால்தான் சிப்பாய் கலகம் தோல்வியடைந்தது...!
வலுவான கப்பற்படை
சிவாஜி ஒரு புத்திசாலி போராளி. வெளிநாட்டு படையெடுப்பாளர்களாக உருவாகும் நாட்டைப் பாதுகாக்க ஒரு சக்திவாய்ந்த கடற்படைக் கப்பலின் முக்கியத்துவத்தை அவர் புரிந்து கொண்டார். இந்த யோசனை அவரின் முன்னோர்களுக்கு தோன்றவில்லை.
தந்திரமான போர்
அப்சல் கான் மிகவும் வலிமையான நபர் மற்றும் ஒரு மூத்த ஜெனரல் ஆவார், அவர் சிவாஜியை விட மிகவும் வலிமையான மற்றும் நன்கு கட்டமைக்கப்பட்ட உடலமைப்பைக் கொண்டிருந்தார். அவருடன் ஒரு சண்டைக்கு அழைக்கப்பட்ட சிவாஜி தந்திரமாக தனது விரல்களில் புலி நகங்களை அணிந்து அப்சல் கானைக் கொன்றார்.
பெண்களுக்கு மரியாதை
சிவாஜி பெண்களை பெரிதும் மதித்தார், அவர் கைப்பற்றிய பிரதேசங்களிலிருந்து பெண்களை ஒருபோதும் கைதிகளாக பிடிக்கவில்லை. தனது பிரதேசத்தில் பெண்களுக்கு தீங்கு விளைவிக்க யாரையும் அவர் ஒருபோதும் அனுமதிக்கவில்லை. பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு கடுமையான மற்றும் பயங்கரமான தண்டனைகளை கொடுக்கப்பட்டது.
MOST READ:இந்த அறிகுறிங்க இருந்தால் உங்க காதலி உங்களை கழட்டிவிட போறாங்களாம்... உஷாரா இருங்க...!
நியாயமான அரசர்
சிவாஜி தனது இராணுவத்தின் படையினருக்கு ஒருபோதும் தனிப்பட்ட ஆயுதங்கள் வழங்கப்படுவதில்லை என்பதை உறுதிசெய்தார், இதனால் அவர்களுக்கு பொதுவான மக்களுக்கு தீங்கு விளைவிக்கும் வாய்ப்புகள் குறைவு. எதிரி பிரதேசங்களிலிருந்து கொள்ளையடிக்கப்பட்டவை அனைத்தும் முறையாகக் கணக்கிடப்பட்டு மராட்டிய கருவூலத்தில் ஒப்படைக்கப்பட வேண்டும் என்று அவர் கடுமையான அறிவுறுத்தல்களை வழங்கியிருந்தார். மத இடங்கள் மற்றும் வீடுகளில் எந்தவிதமான சோதனைகளையும் அவர் ஒருபோதும் அனுமதிக்கவில்லை.