Latest Updates
-
செவ்வாய் மேஷ ராசிக்கு செல்வதால் கோடீஸ்வர யோகத்தை பெறப்போகும் 4 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
இந்தியாவின் தேசிய காய் என்று அழைக்கப்படும் காய்கறி எது? அதற்கான காரணம் என்ன தெரியுமா? -
ஏப்ரல் இறுதியில் குரு-புதன் சேர்க்கையால் உருவாகும் அரிய ராஜயோகம்: இந்த 3 ராசிகளின் வருமானம் உயரும்! -
வெயில் காலத்தில் திருமணமா? இந்த 5 விஷயங்களைச் செய்யாவிட்டால் விசேஷமே வீணாகிவிடும்! -
மட்டன் சுவையை மிஞ்சும் சோயா உருளைக்கிழங்கு குருமா ரெசிபி - செஞ்சு பாருங்க, செமையா இருக்கும் -
பொருளாதாரச் சுரண்டல் இனி குடும்ப வன்முறை! மனைவியிடம் கையேந்த வைக்கும் கணவர்களுக்கு நீதிமன்றம் கொடுத்த செக்! -
செவ்வாயின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டகாத்து வீசும்! உங்க ராசியும் இதுல இருக்கா? -
ஏசி ஓடினாலும் கரண்ட் பில் கம்மியா வரணுமா? ஏசியை இந்த மாதிரி யூஸ் பண்ணுங்க -
வீட்டிலேயே மாம்பழ ஐஸ்க்ரீம்மை ஈஸியாக செய்வது எப்படி-ன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணுங்க.. -
40 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் இந்த உணவுகளில் ஒன்றை தினமும் சாப்பிடணுமாம் - அதான் நல்லது
2023-ல் நடக்கும் சனிப்பெயர்ச்சியால் இந்த 4 ராசிக்காரங்க சனியின் பிடியில் இருந்து விடுபட போறாங்க..
கடந்த இரண்டரை ஆண்டுகளாக பிரச்சனைகளை சந்தித்து வந்தவர்களுக்கு 2023-ல் நடக்கும் சனிப் பெயர்ச்சியில் இருந்து விடுதலை கிடைக்கப் போகிறது.
ஜோதிட சாஸ்திரத்தின் படி, சனி மிகவும் மெதுவாக நகரக்கூடிய கிரகமாகும். மேலும் சனி என்றாலே பலரும் பயப்படுவதுண்டு. ஏனெனில் சனியின் கோபம் வாழ்க்கையையே மோசமாக்கிவிடும். பொதுவாக சனி ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்லும் போது, அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலும் இருக்கும். அந்த வகையில் சனி பகவான் 2023 ஆம் ஆண்டில் ராசியை மாற்றப்போகிறார். அதுவும் ஆண்டின் தொடக்கமான ஜனவரி 17 ஆம் தேதி மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு செல்கிறார். 30 ஆண்டுகளுக்கு பின் சனி தனது சொந்த ராசியான கும்ப ராசிக்கு செல்கிறார்.

சனி பகவான் கும்ப ராசிக்கு செல்வதால், சனியின் கோபம் சற்று குறைவதாக எதிர்பார்க்கப்படுகிறது. கும்ப ராசிக்கு செல்லும் சனியால் பல ராசிக்காரர்களின் வாழ்வில் நல்ல மாற்றம் ஏற்படப் போகிறது. அதுவும் கடந்த இரண்டரை ஆண்டுகளாக பிரச்சனைகளை சந்தித்து வந்தவர்களுக்கு 2023-ல் நடக்கும் சனிப் பெயர்ச்சியில் இருந்து விடுதலை கிடைக்கப் போகிறது. இப்போது 2023-ல் நடக்கும் சனிப் பெயர்ச்சியால் எந்த ராசிக்காரர்கள் சனியின் பிடியில் இருந்து விடுதலை பெற்று நற்பலனைப் பெறப் போகிறார்கள் என்பதைக் காண்போம்.

ரிஷபம்
2023-ல் நடக்கும் சனிப்பெயர்ச்சியால் ரிஷப ராசிக்காரர்கள் நற்பலனைப் பெறுவார்கள். ஏனெனில் சனி மகர ராசியில் இருக்கும் போது ரிஷப ராசிக்காரர்களுக்கு பல பிரச்சனைகளைத் தந்தார். இந்நிலையில் சனி பகவான் கும்ப ராசிக்கு செல்லும் போது, சனியின் தோஷங்கள் அனைத்தும் நீங்கி நல்ல பலன்களைப் பெறுவார்கள். குறிப்பாக வேலையில் மற்றும் பயணங்களால் நல்ல ஆதாயம் உண்டாகும். போட்டியில் வெற்றி பெறுவார்கள். அதோடு நிதி நிலையில் முன்னேற்றம் ஏற்படும். வருமானம் அதிகரிக்கும். இதுவரை வாழ்வில் சந்தித்த பிரச்சனைகளில் இருந்து விடுபடுவார்கள்.

மிதுனம்
சனி பகவான் மகர ராசியில் இருக்கும் போது மிதுன ராசிக்காரர்களுக்கு அஷ்டம சனி தொடங்கியது. ஆனால் 2023-ல் சனி பகவான் கும்பம் செல்லும் போது, அஷ்டம சனியில் இருந்து மிதுன ராசிக்காரர்கள் விடுபட்டு, வாழ்வில் நன்மைகளைப் பெறப் போகிறார்கள். குறிப்பாக வேலையை மாற்ற நினைப்பவர்களுக்கு நல்ல வேலை வாய்ப்புகள் கிடைக்கும். பணியிடத்தில் உங்களின் கடின உழைப்பு பாராட்டப்படும். உங்களின் செல்வாக்கு அதிகரிக்கும். பணப் பிரச்சனைகளில் இருந்து விடுபடுவீர்கள். குடும்ப வாழ்க்கையில் உள்ள பிரச்சனைகளும் நீங்கும். மன அழுத்தத்தில் இருந்து விடுபடுவீர்கள்.

துலாம்
2020 ஆம் ஆண்டு முதல் மகர ராசியில் பயணித்து வந்தால். இதனால் துலாம் ராசிக்காரர்களுக்கு அர்த்தாஷ்டம சனி தொடங்கியது. ஆனால் 2023-ல் நடக்கும் சனிப் பெயர்ச்சியில் இருந்து துலாம் ராசிக்காரர்களுக்கு அர்த்தாஷ்டம சனி முடிந்து, கடந்த இரண்டரை ஆண்டுகளாக மேற்கொண்ட முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். குடும்ப வாழ்க்கையில் சாதகமான மாற்றங்கள் ஏற்படும். பிரிந்து இருந்தவர்கள் இந்த ஆண்டில் நெருங்கி வருவார்கள். வேலை மற்றும் வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். பல வழிகளில் இருந்து வருமானம் கிடைக்கும்.

தனுசு
2023-ல் கும்ப ராசிக்கு செல்லும் சனி பகவானால் தனுசு ராசிக்காரர்கள் ஏழரை சனியில் இருந்து முழுமையாக விடுபடுகிறார்கள். இனிமேல் இந்த ராசிக்காரர்களின் வாழ்வில் ஓரளவு ஸ்திரத்தன்மை இருக்கும். மன அழுத்தத்தில் இருந்து விடுதலை கிடைக்கும். உங்கள் நிதி வலுவாக இருக்கும். கடந்த காலத்தில் செய்த கடின உழைப்புக்கு நல்ல பலன் கிடைக்கும். வேலையில் உங்கள் செல்வாக்கும் நிலையும் அதிகரிக்கும். புதிய வேலை வாய்ப்பும் கிடைக்கலாம். குடும்ப வாழ்க்கையும் சிறப்பாக இருக்கும். பெற்றோர் மற்றும் மூதாதையர் சொத்துக்களால் ஆதாயம் உண்டாகும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications