Latest Updates
-
ராகு-கேதுவால் உருவாகியுள்ள கால சர்ப்ப யோகம்: இந்த 3 ராசிக்கு மார்ச் 26 வரை வெற்றியும், பணமும் குவியப்போகுது... -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
மரணமிலா வாழ்க்கையை வாழ்வதற்கு ஒரு வழி கிடைத்துவிட்டது..ஆனா இதுக்கு எவ்வளவு செல்வாகும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க! -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: மார்ச் 15 முதல் இந்த 5 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்..
2023-ல் நடக்கும் சனிப்பெயர்ச்சியால் இந்த 4 ராசிக்காரங்க சனியின் பிடியில் இருந்து விடுபட போறாங்க..
கடந்த இரண்டரை ஆண்டுகளாக பிரச்சனைகளை சந்தித்து வந்தவர்களுக்கு 2023-ல் நடக்கும் சனிப் பெயர்ச்சியில் இருந்து விடுதலை கிடைக்கப் போகிறது.
ஜோதிட சாஸ்திரத்தின் படி, சனி மிகவும் மெதுவாக நகரக்கூடிய கிரகமாகும். மேலும் சனி என்றாலே பலரும் பயப்படுவதுண்டு. ஏனெனில் சனியின் கோபம் வாழ்க்கையையே மோசமாக்கிவிடும். பொதுவாக சனி ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்லும் போது, அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலும் இருக்கும். அந்த வகையில் சனி பகவான் 2023 ஆம் ஆண்டில் ராசியை மாற்றப்போகிறார். அதுவும் ஆண்டின் தொடக்கமான ஜனவரி 17 ஆம் தேதி மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு செல்கிறார். 30 ஆண்டுகளுக்கு பின் சனி தனது சொந்த ராசியான கும்ப ராசிக்கு செல்கிறார்.

சனி பகவான் கும்ப ராசிக்கு செல்வதால், சனியின் கோபம் சற்று குறைவதாக எதிர்பார்க்கப்படுகிறது. கும்ப ராசிக்கு செல்லும் சனியால் பல ராசிக்காரர்களின் வாழ்வில் நல்ல மாற்றம் ஏற்படப் போகிறது. அதுவும் கடந்த இரண்டரை ஆண்டுகளாக பிரச்சனைகளை சந்தித்து வந்தவர்களுக்கு 2023-ல் நடக்கும் சனிப் பெயர்ச்சியில் இருந்து விடுதலை கிடைக்கப் போகிறது. இப்போது 2023-ல் நடக்கும் சனிப் பெயர்ச்சியால் எந்த ராசிக்காரர்கள் சனியின் பிடியில் இருந்து விடுதலை பெற்று நற்பலனைப் பெறப் போகிறார்கள் என்பதைக் காண்போம்.

ரிஷபம்
2023-ல் நடக்கும் சனிப்பெயர்ச்சியால் ரிஷப ராசிக்காரர்கள் நற்பலனைப் பெறுவார்கள். ஏனெனில் சனி மகர ராசியில் இருக்கும் போது ரிஷப ராசிக்காரர்களுக்கு பல பிரச்சனைகளைத் தந்தார். இந்நிலையில் சனி பகவான் கும்ப ராசிக்கு செல்லும் போது, சனியின் தோஷங்கள் அனைத்தும் நீங்கி நல்ல பலன்களைப் பெறுவார்கள். குறிப்பாக வேலையில் மற்றும் பயணங்களால் நல்ல ஆதாயம் உண்டாகும். போட்டியில் வெற்றி பெறுவார்கள். அதோடு நிதி நிலையில் முன்னேற்றம் ஏற்படும். வருமானம் அதிகரிக்கும். இதுவரை வாழ்வில் சந்தித்த பிரச்சனைகளில் இருந்து விடுபடுவார்கள்.

மிதுனம்
சனி பகவான் மகர ராசியில் இருக்கும் போது மிதுன ராசிக்காரர்களுக்கு அஷ்டம சனி தொடங்கியது. ஆனால் 2023-ல் சனி பகவான் கும்பம் செல்லும் போது, அஷ்டம சனியில் இருந்து மிதுன ராசிக்காரர்கள் விடுபட்டு, வாழ்வில் நன்மைகளைப் பெறப் போகிறார்கள். குறிப்பாக வேலையை மாற்ற நினைப்பவர்களுக்கு நல்ல வேலை வாய்ப்புகள் கிடைக்கும். பணியிடத்தில் உங்களின் கடின உழைப்பு பாராட்டப்படும். உங்களின் செல்வாக்கு அதிகரிக்கும். பணப் பிரச்சனைகளில் இருந்து விடுபடுவீர்கள். குடும்ப வாழ்க்கையில் உள்ள பிரச்சனைகளும் நீங்கும். மன அழுத்தத்தில் இருந்து விடுபடுவீர்கள்.

துலாம்
2020 ஆம் ஆண்டு முதல் மகர ராசியில் பயணித்து வந்தால். இதனால் துலாம் ராசிக்காரர்களுக்கு அர்த்தாஷ்டம சனி தொடங்கியது. ஆனால் 2023-ல் நடக்கும் சனிப் பெயர்ச்சியில் இருந்து துலாம் ராசிக்காரர்களுக்கு அர்த்தாஷ்டம சனி முடிந்து, கடந்த இரண்டரை ஆண்டுகளாக மேற்கொண்ட முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். குடும்ப வாழ்க்கையில் சாதகமான மாற்றங்கள் ஏற்படும். பிரிந்து இருந்தவர்கள் இந்த ஆண்டில் நெருங்கி வருவார்கள். வேலை மற்றும் வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். பல வழிகளில் இருந்து வருமானம் கிடைக்கும்.

தனுசு
2023-ல் கும்ப ராசிக்கு செல்லும் சனி பகவானால் தனுசு ராசிக்காரர்கள் ஏழரை சனியில் இருந்து முழுமையாக விடுபடுகிறார்கள். இனிமேல் இந்த ராசிக்காரர்களின் வாழ்வில் ஓரளவு ஸ்திரத்தன்மை இருக்கும். மன அழுத்தத்தில் இருந்து விடுதலை கிடைக்கும். உங்கள் நிதி வலுவாக இருக்கும். கடந்த காலத்தில் செய்த கடின உழைப்புக்கு நல்ல பலன் கிடைக்கும். வேலையில் உங்கள் செல்வாக்கும் நிலையும் அதிகரிக்கும். புதிய வேலை வாய்ப்பும் கிடைக்கலாம். குடும்ப வாழ்க்கையும் சிறப்பாக இருக்கும். பெற்றோர் மற்றும் மூதாதையர் சொத்துக்களால் ஆதாயம் உண்டாகும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications











