Latest Updates
-
சுக்கிரன் மிதுன ராசிக்கு செல்வதால் கோடிகளை குவிக்கும் அதிர்ஷ்டம் பெறப்போகும் 4 ராசிகள் இவங்கதான் -
தேங்காயோட இந்த பொருளை சேர்த்து ஒரு தடவை சட்னி அரைச்சு பாருங்க - டேஸ்ட் வேற லெவலில் இருக்கும் -
இந்த 3 தேதிகளில் பிறந்தவர்கள் வசீகரமான தலைவர்களாக இருப்பார்களாம் - உங்க பிறந்த தேதி என்ன? -
திருமண மேடையில் திடீர் திருப்பம்! மணமகனை விட்டுவிட்டு காதலனைத் தேடி ஓடிய மணப்பெண் - என்ன நடந்தது? -
Agni Natchathiram 2026: அக்னி நட்சத்திரத்திற்கும், தமிழ்க் கடவுள் முருகனுக்கும் உள்ள தொடர்பு என்ன தெரியுமா? -
4 முட்டை இருந்தா இந்த மாதிரி முட்டை பட்டர் மசாலா செஞ்சு பாருங்க - தோசை, சப்பாத்திக்கு செமையா இருக்கும் -
வெயில் கொடுமையா? இந்த 5 செடிகள் இருந்தா வீடு ஏசி இல்லாமலே ஜில்லுனு இருக்கும்! -
Tamil Nadu Election Results 2026: தமிழ்நாட்டின் தலையெழுத்தை மாற்றிய 5 தேர்தல் முடிவுகள் என்னென்ன தெரியுமா? -
மதுரை ஸ்டைல் சிக்கன் கொத்துக்கறி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, வேற லெவலில் இருக்கும் -
வீட்டில் மணி பிளாண்ட் இருக்கா? இந்த திசையில் வைத்தால் கோடை வெயில் பறந்து போகும்!
சாணக்கிய நீதி படி உங்களின் இந்த ரகசியங்களை வெளியே கூறினால் உங்க வாழ்க்கை அவ்வளவுதானாம் தெரியுமா?
சாணக்கிய நீதி படி உங்களின் இந்த ரகசியங்களை வெளியே கூறினால் உங்க வாழ்க்கை அவ்வளவுதானாம் தெரியுமா?
இந்தியாவை செதுக்கியதில் சாணக்கியரின் பங்கு என்பது மிகவும் முக்கியமானது. ஆசிரியர், தத்துவ மேதை, பொருளாதார அறிஞர், ராஜகுரு, எழுத்தாளர் என பல முகங்களை கொண்டவராக சாணக்கியர் இருந்தார். அனைத்திற்கும் மேலாக தான் ஏற்ற அனைத்து துறையிலும் நிபுணராக விளங்கியதுடன் தலைமைத்துவத்துடன் இருந்தார்.

பாரம்பரியமாக கௌடில்யர், விஷ்ணு குப்தா என அடையாளம் காணப்படுகிறார். இவரின் சாணக்கிய நீதியும், அர்த்தசாஸ்திரமும் இந்த அரசியல் வரலாற்றின் முக்கியமான நூல்களாகும். அவரது எண்ணங்களும், சிந்தனைகளும் அனைத்து மக்களின் வாழ்க்கையிலும் நன்மையை பயக்கக்கூடியது. உலகின் அனைத்து விஷயங்களின் மீதும் இவருக்கென தனிப்பார்வை இருந்தது.

மகிழ்ச்சிக்கான ரகசியங்கள்
புத்திக்கூர்மை வாய்ந்த சாணக்கியர் அவர் வாழ்க்கையில் நிறைய விஷயங்களைப் பற்றி எழுதியுள்ளார். நீங்கள் மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ விரும்பினால் யாருடனும் விவாதிக்கக்கூடாத சில விஷயங்கள் உள்ளது என்று சாணக்கியர் கூறியுள்ளார். அவை என்னென்ன என்று மேற்கொண்டு பார்க்கலாம்.

பண இழப்பு
மற்றவர்களிடம் கலந்துரையாட வேண்டாம் என்று சாணக்கியர் கூறும் முதல் விஷயம் நிதி நெருக்கடி. நீங்கள் நிதி இழப்பை சந்திக்கிறீர்கள் என்றால் அதனை உங்களுக்குள்ளேயே வைத்திருங்கள். உங்களின் பண இழப்பையும், வறுமையையும் ஒருபோதும் மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்ளக்கூடாது.

ஏன் சொல்லக்கூடாது?
இதற்குக் காரணம், உங்கள் பணப் பிரச்சினையைப் பற்றி மக்கள் தெரிந்து கொள்ளும்போது, அவர்கள் ஒருபோதும் உங்களுக்கு உதவ மாட்டார்கள், அவர்கள் ஆதரவைக் காட்டினாலும் அது போலியானதாகவே இருக்கும். சாணக்கியரை பொறுத்தவரை சமூகத்தில் உள்ள ஏழைகள் மதிக்கப்படுவதில்லை. எனவே, ஒருவர் தனது வறுமையை தனக்குத்தானே வைத்துக் கொள்ள வேண்டும்.

தனிப்பட்ட பிரச்சினைகள்
சாணக்கியரின் கூற்றுப்படி எப்போதும் ஒரு ரகசியமாக வைக்க வேண்டிய இரண்டாவது விஷயம் உங்களின் தனிப்பட்ட பிரச்சினைகள். சாணக்கியர் கூறுகிறார், தங்கள் தனிப்பட்ட பிரச்சினைகளை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளும் நபர்கள் எப்போதும் கேலி செய்யப்படுவார்கள், அவமதிக்கப்படுவார்கள். உங்களுக்கு பின்னால் அவர்கள் சிரிப்பார்கள்.

மனைவியின் நடத்தை
நீங்கள் ரகசியமாக வைத்துக்கொள்ள மூன்றாவது விஷயம் உங்கள் மனைவியின் தன்மையைப் பற்றியது. இதனை ரகசியமாக வைத்திருப்பவர்கள் வாழ்க்கையில் புத்திசாலிகளாக அறியப்படுவார்கள். மற்றவர்களுக்கு முன்னால் தங்கள் மனைவியை பற்றி தேவையில்லாமல் பேசுகிறவர்கள் அவர்கள் விரும்பாத சில விஷயங்களையும் தவறுதலாக கூறிவிட வாய்ப்புள்ளது. இது அவர்கள் உறவுக்குள் மோசமான பாதிப்பை ஏற்படுத்தும்.

ஏழைகளால் அவமதிக்கப்படுவது
எப்போதும் ஒரு ரகசியமாக இருக்க வேண்டிய நான்காவது விஷயம், கீழ் நிலையில் இருப்பவர்கள் அல்லது சமூகத்தின் புறக்கணிக்கப்பட்டவர்களால் அவமதிக்கப்பட்டதை ஆகும். இதுபோன்ற ஒரு சம்பவத்தை நீங்கள் பகிர்ந்து கொண்டால், மக்கள் உங்களை கேலி செய்யலாம் என்று சாணக்கியர் நினைத்தார். இது இறுதியில் உங்கள் பெருமைக்கும் ஈகோவிற்கும் தீங்கு விளைவிக்கும். இதனால் உங்கள் தன்னம்பிக்கையை இழக்க நேரிடும்.



Click it and Unblock the Notifications