Just In
- 59 min ago
2022 ஜூலை மாசம் எந்த ராசிக்கு சூப்பராகவும், எந்த ராசிக்கு மோசமாகவும் இருக்கப் போகுது தெரியுமா?
- 2 hrs ago
உங்க இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்க...இந்த இலைகளை ரெகுலரா சாப்பிட்டு வந்தா போதுமாம்!
- 2 hrs ago
கடுமையான கரோனரி நோய்க்குறி என்றால் என்ன? அதன் அறிகுறிகள் என்ன?
- 3 hrs ago
இந்த பழங்களை ஒன்றாக சாப்பிடுவது விஷத்திற்கு சமமாம்... இது உங்க உயிருக்கே ஆபத்தாகும்... ஜாக்கிரதை!
Don't Miss
- News
"மிருதன்".. அழிந்த உடனே மீண்டும் பிறந்த "ஸோம்பி" நட்சத்திரம்.. அதற்கு பின் நடந்த பெரிய ட்விஸ்ட்!
- Finance
நம்ம ஊரு முறுக்குக்கு வந்த சோதனையை பார்த்தீங்களா..?
- Automobiles
விலை தெரிவதற்கு முன்பே இவ்ளோ புக்கிங்கா? அதுவும் ஒரே நாளில்! பலரும் தவம் கிடக்கும் மாருதி கார் நாளை லான்ச்!
- Technology
Samsung Galaxy M32 விலை குறைப்பு.. லக்கு தானா வந்தா வேண்டா சொல்ல கூடாது! புது ரேட் இதான்..
- Movies
இது பிக் பாஸ் புரமோ இல்லை.. விக்ரம் ஓடிடியில் எப்போ ரிலீஸ் தெரியுமா? கமல் வெளியிட்ட மாஸ் அறிவிப்பு!
- Sports
"இந்தியாவுக்கு வெற்றி இல்லை" முன்னாள் வீரர்கள் வித்தியாசமான கருத்து.. அதிர்ஷ்டத்தால் மாறியதா ஆட்டம்
- Travel
இந்தியாவின் மார்பில் சிட்டிக்குள் ஒரு சுற்றுலா – கிஷன்கரில் கட்டாயம் பார்க்க வேண்டிய இடங்கள்!
- Education
ரூ.2.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் பணியாற்ற ஆசையா?
சனிக்கிழமையில் சனி பகவானுக்கு தீபத்தில் ஒரு கிராம்பு போட்டு ஏற்றினால், வாழ்வில் உள்ள பிரச்சனைகள் நீங்குமாம்!
நீதியின் கடவுளான சனி பகவானுக்கு உரிய நாள் தான் சனிக்கிழமை. சனி பகவான் சூரியன் மற்றும் சாயாவின் மகன் ஆவார். இவர் சூரியனைப் போன்றே, கடவுள் மற்றும் கிரகம் ஆகிய இரண்டு அந்தஸ்தையும் கொண்டவர். சனி பகவான் மிகவும் கொடூரமானவராக கருதப்படுகிறார். ஆனால் இவர் ஒருவரின் செயல்களுக்கு ஏற்பவே பலன்களை அளிப்பார். இவர் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்ல 2 1/2 ஆண்டுகள் ஆகும். சனியின் வக்ர பார்வை அசுபமாக கருதப்படுகிறது. சனியின் வக்ர பார்வை ஒருவர் மீது விழுந்தால், அவர் வாழ்க்கையில் பலவிதமான பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.
ஜோதிடத்தில் சனியினால் சந்திக்கும் பிரச்சனைகளைத் தவிர்க்க சில பரிகாரங்கள் உள்ளன. இந்த பரிகாரங்களை சனிக்கிழமைகளில் செய்வதன் மூலம் வாழ்வில் உள்ள தடைகள் நீங்கி வெற்றி கிடைக்க ஆரம்பிக்கும் மற்றும் தூங்கிக் கொண்டிருக்கும் அதிர்ஷ்டமும் பிரகாசிக்கும். அந்த பரிகாரங்கள் என்னவென்பதை இப்போது காண்போம்.

விளக்கில் கிராம்பு
சனிக்கிழமையன்று சனி பகவானை வழிபடும் போது கடுகு எண்ணெய் தீபம் ஏற்றுவது நல்லது. அதுவும் இந்த தீபத்தை ஏற்றும் போது, அதில் கிராம்பு சேர்ப்பது இன்னமும் நல்லது. இப்படி செய்வதன் மூலம் சனி பகவானின் அருள் கிடைக்கும். மேலும் இந்த பரிகாரத்தை செய்தால் நிதி நன்மைகளும் கிடைக்கும். குறிப்பாக இந்த செயலை வாரந்தோறும் தவறாமல் செய்து வந்தால், வீட்டில் பண பற்றாக்குறை ஏற்படாது.

எள்ளு விளக்கு
சனிக்கிழமை அன்று சனி பகவானை வணங்குவதற்கு கோவிலுக்கு சென்றால் கடுகு எண்ணெய் விளக்கு ஏற்றுங்கள். அப்படி ஏற்றும் போது மறக்காமல் அந்த விளக்கில் கருப்பு எள்ளு மூட்டையை வைக்க வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

கடுகு எண்ணெய் விளக்கு
சனிக்கிழமை சனி பகவானுக்கு மட்டுமின்றி, அனுமனுக்கும் உகந்த நாளாகும். அதோடு அனுமன் சனி பகவானின் நண்பன். எனவே சனிக்கிழமைகளில் அனுமன் கோவிலுக்கு சென்று கடுகு எண்ணெய் தீபம் ஏற்றி, அனுமன் சாலிசாவை சொல்லி வழிபட வேண்டும்.

பைரவருக்கு கடுகு எண்ணெய் தீபம்
உங்கள் வாழ்க்கையில் உள்ள அனைத்துவிதமான பிரச்சனைகளும் விலகுவதற்கு சனிக்கிழமைகளில் பைரவர் முன்பு கடுகு எண்ணெய் தீபம் ஏற்றுங்கள். இப்படி செய்வதன் மூலம் பைரவர் மகிழ்ச்சி அடைந்து, நன்மைகளை வழங்குவார்.

ஆற்றில் விளக்கேற்றவும்
சனிக்கிழமைகளில் ஆறு அல்லது நதிகளில் கடுகு எண்ணெய் விளக்கேற்றுங்கள். இதனால் வீட்டின் வறுமை நீங்கி, செல்வம் பெருக ஆரம்பிக்கும். அதுவும் இந்த பரிகாரத்தை சனிக்கிழமைகளில் செய்து வந்தால் நற்பலன்கள் கிடைக்கும்.

மண்விளக்கு ஏற்றவும்
சனிக்கிழமைகளில் நவகிரகங்களை வழிபடும் போது மண் தீபம் ஏற்று வழிபட்டால், சனி மற்றும் செவ்வாயின் அருள் கிடைக்கும். ஆனால் இந்த விளக்கை ஒருமுறை ஏற்றினால், மீண்டும் பயன்படுத்தக்கூடாது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.