நவகிரக வழிபாட்டின் போது இந்த பாடல்களை பாடினால் ஒன்பது கோள்களின் பலனும் உங்களுக்கு கிடைக்குமாம்...!

நவகிரக ஸ்தோத்திரம் என்பது நவகிரக வழிபாடு என்றழைக்கப்படுகிறது. இந்து மதக் கோட்பாடுகளின்படி நவகிரகங்கள் அல்லது வான கிரகங்களைப் புகழ்வதற்காக வியாச முனிவரால் இயற்றப்பட்டது.

நவகிரக ஸ்தோத்திரம் என்பது நவகிரக வழிபாடு என்றழைக்கப்படுகிறது. இந்து மதக் கோட்பாடுகளின்படி நவகிரகங்கள் அல்லது வான கிரகங்களைப் புகழ்வதற்காக வியாச முனிவரால் இயற்றப்பட்டது. இந்த தெய்வீக துதியின் முக்கிய பகுதியில் சூரியன், சந்திரன், குஜா, புதன், பிருஹஸ்பதி, சுக்ரா, சனி, ராகு மற்றும் கேது ஆகிய 9 ஸ்தானங்கள் உள்ளன. ஸ்தோத்திரத்தின் வரிகள் எளிமையான முறையில் இன்னும் சிறந்த அர்த்தத்துடன் இயற்றப்பட்டுள்ளன. நவக்கிரகங்களின் தோற்றம், பரம்பரை மற்றும் அவர்களின் தெய்வீக பண்புகளை சரணம் விளக்குகிறது. இந்துக்களின் வழிபாட்டுக்குரியதாயமைந்த ஒன்பது கிரகங்கள் நவக்கிரங்கள் எனப்படும்.

Navagraha Stotram in Tamil: Know Lyrics, Meaning, and Benefits of Chanting

கிரகம் எனும் சமஸ்கிருத சொல் ஆளுகைப்படுத்தல் எனும் பொருளுடையது. நவக்கிரகம் ஒன்பது ஆளுகைக்காரர்கள் எனப் பொருள்படும். புவியிலுள்ள உயிர்க் கூறுகளை ஆளுகைக்குட்படுத்துகின்ற அண்டவெளிக்கூறுகளாக இவை கருதப்படுகின்றன. நவக்கிரங்களை தமிழில் ஒன்பது கோள்கள் என்று அழைக்கின்றன. இந்த நவகிரக ஸ்தோத்திரத்தை ஜபிப்பதும், அதனால் ஏற்படும் பலன்களை பெறுவதையும் இக்கட்டுரையில் காணலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஜோதிடத்தில் நவகிரங்கள்

ஜோதிடத்தில் நவகிரங்கள்

இந்திய ஜோதிட நூலின்படி கோள்கள் ஒன்பது ஆகும். இவை சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, சனி, இராகு, கேது என்பனவாகும். தற்கால அறிவியல் அடிப்படையில் இவைகளில் சில மட்டுமே உண்மையான கோள்கள். சூரியன் ஒரு விண்மீன் (நட்சத்திரம்). சந்திரன் பூமியின் துணைக்கோள். இராகு, கேது இரண்டும் விண் பொருட்களே அல்ல. இவை நிழற் கோள்கள் எனப்படுகின்றன அதாவது இல்லாத கிரகங்களாக கருதப்படுகின்றன.

கிரகங்களின் இயக்கம்

கிரகங்களின் இயக்கம்

கோள்கள் மனிதர் மீதும், உலகில் நடைபெறுகின்ற நிகழ்வுகள் மீதும் செல்வாக்குச் செலுத்துகின்றன என்ற நம்பிக்கையே ஜோதிடத்தின் அடிப்படையாகும். புவி அண்டத்தின் மையத்தில் இருக்க, சூரியன் உட்பட்ட எல்லாக் கோள்களும் அதனைச் சுற்றி வருகின்றன என்ற பழங்கால நம்பிக்கைக்கு ஏற்பவே ஜோதிடத்தில் கோள்களின் இயக்கங்கள் கணிக்கப்படுகின்றன.

நவக்கிரக வழிபாடு

நவக்கிரக வழிபாடு

நவகிரகங்களை வழிபடுதல் மிகத் தொன்மையான வழிபாடாக இருந்துள்ளது. வரலாற்று ஆய்வின்படி புத்தர் காலத்திலும் இந்த வழிபாடு இருந்துள்ளது. இருப்பினும் நவக்கிரகங்களை தனித்தே அக்காலத்தில் வழிபட்டு வந்திருக்கிறார்கள் என்றும் கூறப்படுகிறது.

வழிபாட்டு பாடல் 1

வழிபாட்டு பாடல் 1

செம்பருத்திப் பூவைப் போன்ற சிவந்த நிறத்தை உடையவனே, காஷ்யப பரம்பரையில் பிறந்தவனே, ஒளிமிக்கவனே. இருளை நீக்குபவரே, பாவங்களை அழிப்பவரே, திவாகர பகவான் (சூரிய கடவுளின் மற்றொரு பெயர்), நாங்கள் உன்னை வணங்குகிறோம்.

வழிபாட்டு பாடல் 2

வழிபாட்டு பாடல் 2

தயிர் அல்லது சங்கு அல்லது பனி போன்ற வெண்மையான நிறத்தில் பிரகாசிப்பவர், பாற்கடலில் பிறந்தவர்.

சிவபெருமானின் கிரீடத்தில் ஆபரணமாக காட்சியளிக்கும் சந்திரா (சந்திரன்) மீது முயல் சின்னம் கொண்டவனே உன்னை வணங்குகிறேன்.

வழிபாட்டு பாடல் 3

வழிபாட்டு பாடல் 3

பூமியில் பிறந்தவரே, இடி மின்னலின் பிரகாசத்தைப் போல ஒளிரும் தன்மையுடைவரே. தெய்வீக சக்திகளைக் கொண்டவனே. தேவர்கள் மற்றும் ருஷிகளின் குரு, தங்கத்தைப் போல ஜொலிப்பவர். மூன்று லோகங்களுக்கும் புத்திசாலியான பகவானே உன்னை வணங்குகிறேன்.

வழிபாட்டு பாடல் 4

வழிபாட்டு பாடல் 4

பனி, மல்லிகை மற்றும் தாமரையின் தண்டு போன்ற பண்புகளுடன் ஒப்பிடப்பட்டவர். சிறந்த அல்லது உயர்ந்த குரு. அனைத்து சாஸ்திரங்களிலும் வல்லுனரே. ஓ பார்கவா/சுக்ரா (சுக்ராச்சாரியாரின் மற்றொரு பெயர்) நான் உங்கள் முன் சாஷ்டாங்கமாக வணங்குகிறேன்.

வழிபாட்டு பாடல் 5

வழிபாட்டு பாடல் 5

பாதி உடலை உடையவர், வீரம் நிரம்பியவர் (ஆதிக்கத்தைக் குறிக்கும்), சூரியனையும் சந்திரனையும் தடுத்து எதிர்ப்பவர். சிம்ஹிகாவின் (ஹிரண்ய கஷிபரின் சகோதரி) மகனாகப் பிறந்தவர். ராகு பகவானே, உமக்கு நான் பணிந்து வணங்குகிறேன்.

வழிபாட்டு பாடல் 6

வழிபாட்டு பாடல் 6

பலாஷா மலர்களின் நிறத்தில் ஜொலிக்கிறது உன் மேனி. இது நட்சத்திரங்களுக்கும் கிரகங்களுக்கும் தலையாக செயல்படுகிறது. சீற்றம் கொண்டவர், ஆவேசமான அம்சங்கள் நிறைந்தவர். பயமுறுத்தும் கேது பகவானே நான் உங்கள் முன் சாஷ்டாங்கமாக வணங்குகிறேன்.

இறுதி குறிப்பு

இறுதி குறிப்பு

வியாசரால் எழுதப்பட்ட இந்த வழிபாட்டு பாடலை பாடுவதன் மூலம் இறையருள் கிடைக்கும். பகல் அல்லது இரவில் ஏற்படும் தடைகள் அல்லது பிரச்சனைகளில் இருந்து வெற்றி பெறுவார்கள். மேலும் இந்த ஸ்தோத்திரத்தை ஜபிப்பவர்களுக்கு ஆண்களோ, பெண்களோ அல்லது அரசர்களோ கெட்ட கனவுகளின் பாதிப்பில் இருந்து காப்பாற்றப்படுவார்கள். அவர்கள் இணையற்ற செல்வம், நல்ல ஆரோக்கியத்தை இறைவன் வழங்குவார்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Story first published: Monday, April 25, 2022, 18:10 [IST]
Desktop Bottom Promotion