Latest Updates
-
5 பச்சை மிளகாயும், 1/4 கப் தேங்காயும் இருந்தா.. இட்லி, தோசைக்கு இப்படி சட்னி செய்யுங்க.. செமயா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 24 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க குடும்பத்தில் பிரச்சினைகள் அதிகரிக்கும் -
சுக்கிரன் ரிஷப ராசிக்கு சென்றதால் தோல்வியையும், துரதிர்ஷ்டத்தையும் அனுபவிக்கப்போகும் 4 ராசிகள் -
ஏப்ரல் மாத இறுதியில் நடக்கும் புதன் பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரங்க ஜாக்கிரதையா இருக்கணும்.. -
உங்கள் கால் விரலின் நீளம் எவ்வளவு இருக்குனு சொல்லுங்க? உங்களை பற்றிய ரகசியத்தை நாங்க சொல்றோம் -
Vastu Tips: வாஸ்துப்படி, ஆந்தை சிலையை வீட்டின் இந்த இடத்துல வையுங்க.. வீட்டில் பண வரவு அதிகரிக்கும்.. -
தித்திக்கும் கேரளாவின் மாம்பழ பாயாசம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, அட்டகாசமாக இருக்கும் -
திருமண வாழ்க்கையில் சிக்கலா? AI சாட்பாட்களிடம் ஆலோசனை கேட்கும் இந்திய தம்பதிகள் - இது ஆபத்தா? -
3 முட்டை, 2 வெங்காயம், 1/2 மூடி தேங்காய் இருந்தா.. சப்பாத்திக்கு இந்த சைடு டிஷ் பண்ணுங்க.. தாறுமாறா இருக்கும். -
டேட்டிங் ஆப் பயன்படுத்துறீங்களா? டெல்லி-NCR-ல் உங்களை குறிவைக்கும் 'ஹனி ட்ராப்' கும்பல் - உஷார்!
மகாசிவராத்திரி அன்று இந்த விஷயங்களை தெரியாமகூட பண்ணிராதீங்க... இல்லனா சிவபெருமானின் கோபத்திற்கு ஆளாவீர்கள்!
இந்து மதத்தின் முக்கிய தெய்வமான சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்ட மகாசிவராத்திரி, தென்னிந்திய நாட்காட்டியின்படி ஒவ்வொரு ஆண்டும் மாசி மாதத்திலும், வட இந்திய நாட்காட்டியின்படி பால்குன மாதத்திலும் கொண்டாடப்படுகிறது
இந்து மதத்தின் முக்கிய தெய்வமான சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்ட மகாசிவராத்திரி, தென்னிந்திய நாட்காட்டியின்படி ஒவ்வொரு ஆண்டும் மாசி மாதத்திலும், வட இந்திய நாட்காட்டியின்படி பால்குன மாதத்திலும் கொண்டாடப்படுகிறது. மகாசிவராத்திரி ஒவ்வொரு மாதமும் மற்றும் வருடத்திற்கு 12 முறை வரும் சிவராத்திரி கொண்டாட்டத்திலிருந்து வேறுபட்டது. சிவபுராணத்தின் படி, மகாசிவராத்திரி அல்லது சிவபெருமானின் இரவு என்பது சிவபெருமான் தனது தாண்டவ நிருத்யத்தை நிகழ்த்தும் இரவைக் குறிக்கிறது. மற்றொரு புராணக்கதை சிவன் மற்றும் பார்வதி திருமணம் செய்த இரவை நினைவுபடுத்தும் நாள் என்று கூறுகிறது. இந்த ஆண்டு மகாசிவராத்திரி பிப்ரவரி 18, 2023 அன்று (சனிக்கிழமை) அனுசரிக்கப்படுகிறது.

மகாசிவராத்திரி இந்தியா முழுவதும் கொண்டாடப்படும் ஒரு விழாவாகும். இந்த நாளில் நாடு முழுவதும் உள்ள பக்தர்கள் சிவன் கோயில்களுக்குச் சென்று, அர்ச்சனை செய்து, சிவலிங்கத்திற்கு பால், வில்வ இலை, சந்தனம், நெய், சர்க்கரை மற்றும் பிற பொருட்களை வழங்குகின்றனர். சிவபக்தர்கள் அன்றைய தினம் முழு விரதத்தைக் கடைப்பிடித்து மறுநாள் காலை விரதத்தைக் கடைப்பிடிப்பார்கள். மற்ற பண்டிகைகளைப் போல் அல்லாமல், மஹாசிவராத்திரி பூஜை இரவில் நடத்தப்படுகிறது. விரதத்தை கடைபிடிக்கும் போது சில விஷயங்களை கடைபிடிக்க வேண்டும், சில விஷயங்களை தவிர்க்க வேண்டும்.

சங்கல்பம்
மகாசிவராத்திரி விரதத்திற்கான சங்கல்பம் விரதத்திற்கு ஒரு நாள் முன்னதாக காலையில் குளித்துவிட்டு சிவபூஜை செய்யும் போது எடுக்கப்படுகிறது. சங்கல்பம் என்பது உள்ளங்கையில் சிறிது அரிசி மற்றும் தண்ணீரை வைப்பதன் மூலம் செய்ய வேண்டும்.

ஆடை நிறம்
பிரம்ம முகூர்த்தம் அல்லது சூரிய உதயத்தை சுற்றி விரதம் இருக்கும் நாளில் அதிகாலையில் எழுந்திருங்கள். விரத நாளில் குளித்துவிட்டு சுத்தமான ஆடைகளை அணிய வேண்டும், வெள்ளை ஆடையாக இருப்பது கூடுதல் சிறப்பு.

மந்திரம்
மகாசிவராத்திரி விரதத்தைக் கடைப்பிடிப்பவர்கள் ஒரு நாளைக்கு பல முறை 'ஓம் நம சிவாய' என்று ஜபிக்க அறிவுறுத்தப்படுகிறார்கள். சிவராத்திரி பூஜை இரவில் நடத்தப்படுவதால், சிவபூஜை செய்வதற்கு முன் பக்தர்கள் மாலையில் இரண்டாவது முறை குளிக்க வேண்டும். பக்தர்கள் நீராடிவிட்டு மறுநாள் நோன்பு திறப்பது வழக்கம்.

மருத்துவ ஆலோசனை
சில உடல்நலக் குறைபாடுகளால் பாதிக்கப்பட்டவர்கள் அல்லது தொடர்ச்சியாக மருந்து உட்கொள்பவர்கள் விரதத்தைத் தொடங்குவதற்கு முன் தங்கள் மருத்துவரை அணுக வேண்டும். சிவபெருமானுக்கான பிரசாதங்களில் பால், வில்வ இலை, சந்தனக் கலவை, தயிர், தேன், நெய், சர்க்கரை ஆகியவை அடங்கும்.

விரதத்தை எப்படி முடிக்க வேண்டும்?
த்ரிக்பஞ்சாங்கின்படி, விரதத்தின் அதிகபட்ச பலனைப் பெற, பக்தர்கள் சூரிய உதயத்திற்கும் சதுர்த்தசி திதி முடிவதற்கும் இடைப்பட்ட நேரத்தில் 0விரதத்தை முடிக்க வேண்டும்.

செய்யக்கூடாதவை என்ன?
- அரிசி, கோதுமை அல்லது பருப்புகளால் செய்யப்பட்ட உணவுகளை ஒருவர் உட்கொள்ளக்கூடாது, ஏனெனில் இந்த உணவுப் பொருட்கள் நோன்பின் போது அனுமதிக்கப்படாது.
- அசைவ உணவுகள், பூண்டு, வெங்காயம் இவைகள் தாம்சிக் இயல்புடையவை என்பதால் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும்.
- சிவலிங்கத்திற்கு தேங்காய் நீரை வழங்கக் கூடாது.



Click it and Unblock the Notifications