Latest Updates
-
குரு-சூரியனால் உருவாகியுள்ள சிவ ராஜயோகம்: இந்த 4 ராசிகளின் கஷ்டம் தீர்ந்து செல்வம் பெருகும்! -
சுக்கிரன் உத்திர நட்சத்திரத்திற்கு செல்வதால் கோடிகளை குவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
காளான் பட்டாணி மசாலா ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - தோசை, சப்பாத்திக்கு அட்டகாசமா இருக்கும் -
மழைக்காலத்திலும் அழகா இருக்கணுமா? அப்ப இந்த ஃபேஸ் பேக்கை போடுங்க... -
இந்த 3 ராசிக்காரர்களால் கோபத்தை கட்டுப்படுத்தவே முடியாதாம் - இவங்க கோபம் பேரழிவை ஏற்படுத்துமாம் -
கஃபே ஸ்டைல் பன் மஸ்கா - ஈவ்னிங் டைம்-ல பிள்ளைங்களுக்கு செஞ்சு குடுங்க, விரும்பி சாப்பிடுவாங்க.. -
ஐயங்கார் ஸ்டைல் நார்த்தங்காய் சாதம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா அருமையா இருக்கும் -
ஜூலை 27-ல் வக்ரமடையும் சனி பகவான்: டிசம்பர் வரை இந்த 4 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்.. -
இந்த 4 குணங்கள் இருப்பவர்கள் அதிபுத்திசாலியாகவும், மேதைகளாகவும் இருப்பார்களாம் - சாணக்கிய தந்திரம் -
மணமணக்கும் பன்னீர் பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க.!
மகாசிவராத்திரி அன்று இந்த விஷயங்களை தெரியாமகூட பண்ணிராதீங்க... இல்லனா சிவபெருமானின் கோபத்திற்கு ஆளாவீர்கள்!
இந்து மதத்தின் முக்கிய தெய்வமான சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்ட மகாசிவராத்திரி, தென்னிந்திய நாட்காட்டியின்படி ஒவ்வொரு ஆண்டும் மாசி மாதத்திலும், வட இந்திய நாட்காட்டியின்படி பால்குன மாதத்திலும் கொண்டாடப்படுகிறது
இந்து மதத்தின் முக்கிய தெய்வமான சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்ட மகாசிவராத்திரி, தென்னிந்திய நாட்காட்டியின்படி ஒவ்வொரு ஆண்டும் மாசி மாதத்திலும், வட இந்திய நாட்காட்டியின்படி பால்குன மாதத்திலும் கொண்டாடப்படுகிறது. மகாசிவராத்திரி ஒவ்வொரு மாதமும் மற்றும் வருடத்திற்கு 12 முறை வரும் சிவராத்திரி கொண்டாட்டத்திலிருந்து வேறுபட்டது. சிவபுராணத்தின் படி, மகாசிவராத்திரி அல்லது சிவபெருமானின் இரவு என்பது சிவபெருமான் தனது தாண்டவ நிருத்யத்தை நிகழ்த்தும் இரவைக் குறிக்கிறது. மற்றொரு புராணக்கதை சிவன் மற்றும் பார்வதி திருமணம் செய்த இரவை நினைவுபடுத்தும் நாள் என்று கூறுகிறது. இந்த ஆண்டு மகாசிவராத்திரி பிப்ரவரி 18, 2023 அன்று (சனிக்கிழமை) அனுசரிக்கப்படுகிறது.

மகாசிவராத்திரி இந்தியா முழுவதும் கொண்டாடப்படும் ஒரு விழாவாகும். இந்த நாளில் நாடு முழுவதும் உள்ள பக்தர்கள் சிவன் கோயில்களுக்குச் சென்று, அர்ச்சனை செய்து, சிவலிங்கத்திற்கு பால், வில்வ இலை, சந்தனம், நெய், சர்க்கரை மற்றும் பிற பொருட்களை வழங்குகின்றனர். சிவபக்தர்கள் அன்றைய தினம் முழு விரதத்தைக் கடைப்பிடித்து மறுநாள் காலை விரதத்தைக் கடைப்பிடிப்பார்கள். மற்ற பண்டிகைகளைப் போல் அல்லாமல், மஹாசிவராத்திரி பூஜை இரவில் நடத்தப்படுகிறது. விரதத்தை கடைபிடிக்கும் போது சில விஷயங்களை கடைபிடிக்க வேண்டும், சில விஷயங்களை தவிர்க்க வேண்டும்.

சங்கல்பம்
மகாசிவராத்திரி விரதத்திற்கான சங்கல்பம் விரதத்திற்கு ஒரு நாள் முன்னதாக காலையில் குளித்துவிட்டு சிவபூஜை செய்யும் போது எடுக்கப்படுகிறது. சங்கல்பம் என்பது உள்ளங்கையில் சிறிது அரிசி மற்றும் தண்ணீரை வைப்பதன் மூலம் செய்ய வேண்டும்.

ஆடை நிறம்
பிரம்ம முகூர்த்தம் அல்லது சூரிய உதயத்தை சுற்றி விரதம் இருக்கும் நாளில் அதிகாலையில் எழுந்திருங்கள். விரத நாளில் குளித்துவிட்டு சுத்தமான ஆடைகளை அணிய வேண்டும், வெள்ளை ஆடையாக இருப்பது கூடுதல் சிறப்பு.

மந்திரம்
மகாசிவராத்திரி விரதத்தைக் கடைப்பிடிப்பவர்கள் ஒரு நாளைக்கு பல முறை 'ஓம் நம சிவாய' என்று ஜபிக்க அறிவுறுத்தப்படுகிறார்கள். சிவராத்திரி பூஜை இரவில் நடத்தப்படுவதால், சிவபூஜை செய்வதற்கு முன் பக்தர்கள் மாலையில் இரண்டாவது முறை குளிக்க வேண்டும். பக்தர்கள் நீராடிவிட்டு மறுநாள் நோன்பு திறப்பது வழக்கம்.

மருத்துவ ஆலோசனை
சில உடல்நலக் குறைபாடுகளால் பாதிக்கப்பட்டவர்கள் அல்லது தொடர்ச்சியாக மருந்து உட்கொள்பவர்கள் விரதத்தைத் தொடங்குவதற்கு முன் தங்கள் மருத்துவரை அணுக வேண்டும். சிவபெருமானுக்கான பிரசாதங்களில் பால், வில்வ இலை, சந்தனக் கலவை, தயிர், தேன், நெய், சர்க்கரை ஆகியவை அடங்கும்.

விரதத்தை எப்படி முடிக்க வேண்டும்?
த்ரிக்பஞ்சாங்கின்படி, விரதத்தின் அதிகபட்ச பலனைப் பெற, பக்தர்கள் சூரிய உதயத்திற்கும் சதுர்த்தசி திதி முடிவதற்கும் இடைப்பட்ட நேரத்தில் 0விரதத்தை முடிக்க வேண்டும்.

செய்யக்கூடாதவை என்ன?
- அரிசி, கோதுமை அல்லது பருப்புகளால் செய்யப்பட்ட உணவுகளை ஒருவர் உட்கொள்ளக்கூடாது, ஏனெனில் இந்த உணவுப் பொருட்கள் நோன்பின் போது அனுமதிக்கப்படாது.
- அசைவ உணவுகள், பூண்டு, வெங்காயம் இவைகள் தாம்சிக் இயல்புடையவை என்பதால் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும்.
- சிவலிங்கத்திற்கு தேங்காய் நீரை வழங்கக் கூடாது.



Click it and Unblock the Notifications