Latest Updates
-
வெயில் கொடுமை! திருமணத்தை மாற்ற முடியாமல் தவிக்கிறீர்களா? இந்த 5 டிப்ஸ் உங்கள் விழாவை காப்பாற்றும்! -
1/4 கப் தனியா இருந்தா இந்த வித்தியாசமான சட்னியை அரைங்க - இட்லி, தோசைக்கு அட்டகாசமாக இருக்கும் -
வட இந்தியத் திருமணங்கள்: சுட்டெரிக்கும் வெயிலில் சிக்கித் தவிக்கும் கொண்டாட்டங்கள் - இதோ சில அதிரடி மாற்றங்கள்! -
இந்த 5 உணவுகள் உங்கள் உடலில் துர்நாற்றத்தை ஏற்படுத்தி சங்கடமாக உணர வைக்குமாம் - பார்த்து சாப்பிடுங்க -
வாஸ்து செடிகள்: கோடை வெயிலில் வீட்டை குளிர்ச்சியாக வைத்து அதிர்ஷ்டத்தை அள்ளுவது எப்படி? -
சிக்கன் பிரியாணியை விட சூப்பரா இருக்கும் ஆம்பூர் ஸ்டைல் சோயா பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க -
சனிபகவானின் வக்ர பெயர்ச்சியால் 138 நாட்களுக்கு ஜெயிக்கிற குதிரையா மாறப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
சீதா நவமி: உங்கள் வீட்டில் இந்த மாற்றங்களைச் செய்தா பணமழை கொட்டுமா? அதிர்ஷ்டம் தரும் வாஸ்து ரகசியம்! -
கோடையில் இந்த கஞ்சியை தினமும் 1 கப் குடிங்க.. உடல் எடையும் குறையும், உடல் சூடும் தணியும்.. -
இன்றைய ராசிபலன் 25 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ராஜயோகம் கூடிவரப்போகுதாம்
மகா சிவராத்திரி 2022: எந்த ராசிக்காரர்கள் எந்த வடிவ சிவனை வழிபடுவது நல்லது தெரியுமா?
சிவ பெருமானின் தீவிர பக்தராக இருந்தால், உங்கள் ராசிக்கு எந்த வடிவிலான சிவபெருமானை நீங்கள் வணங்க வேண்டும் என்பதைத் தெரிந்து மகா சிவராத்திரி அன்று அந்த சிவனை வணங்கினால், சிவனின் முழு அருளையும் பெறலாம்.
இந்து மதத்தில் மகாதேவ் என்று அழைக்கப்படுபவம் சிவபெருமான். இவர் மூம்மூர்த்திகளுள் ஒருவராவார். சிவபெருமானின் பக்தர்கள் அவர் மீது மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளார்கள். எனவே அவர்கள் மகா சிவராத்திரி பண்டிகையை மிகவும் பக்தியுடனும் அர்ப்பணிப்புடனும் கொண்டாடுகிறார்கள். மேலும் சிவராத்திரியானது சிவன் பார்வதி தேவியை மணந்த இரவு என்று கருதப்படுகிறது. மேலும் இந்நாள் ஹலஹால் என்ற கொடிய விஷத்தை சிவன் குடித்த நாளாகும்.

இந்த வருடம் மகா சிவராத்திரி மார்ச் 01, 2022 அன்று வருகிறது. மகா சிவராத்திரி அன்று சிவனின் பக்தர்கள் விரதத்தைக் கடைப்பிடிப்பார்கள் மற்றும் சிவபெருமானை சந்தோஷப்படுத்த இரவு முழுவதும் உறங்காமல் அவரை வழிபடுவார்கள். நீங்கள் சிவ பெருமானின் தீவிர பக்தராக இருந்தால், உங்கள் ராசிக்கு எந்த வடிவிலான சிவபெருமானை நீங்கள் வணங்க வேண்டும் என்பதைத் தெரிந்து மகா சிவராத்திரி அன்று அந்த சிவனை வணங்கினால், சிவனின் முழு அருளையும் பெறலாம்.
இப்போது மகா சிவராத்திரி அன்று எந்த ராசிக்காரர்கள் எந்த சிவனை வழிபடுவது நல்லது என்று காண்போம்.

மேஷம்
ஒளியின் வடிவத்தில் தோன்றிய சிவனின் மாய வடிவமான 12 ஜோதிர்லிங்கங்கள் உள்ளன என்பது நமக்குத் தெரியும். அதில் முதன்மையானவர் தான் சோம்நாத் ஜோதிர்லிங்கா. மேஷ ராசிக்காரர்கள், சோம்நாத் சென்று ஜோதிர்லிங்கத்தை வணங்குவது மிகவும் நல்லது.
12 ஜோதிர்லிங்கங்களும் ஒவ்வொரு ராசிக்குரியதாக நம்பப்படுகிறது. எனவே அதில் சோம்நாத் ஜோதிர்லிங்கம் மேஷ ராசியைக் குறிக்கிறது. உங்களால் சோம்நாத் சென்று சிவனை தரிசனம் செய்ய முடியாவிட்டால், அவரை மனதில் நினைத்து 'ஹ்ரிம் ஓம் நமஹ சிவாய ஹ்ரிம்' என்ற மந்திரத்தைக் கூறி வழிபடுங்கள்.

ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்கள் மல்லிகார்ஜுனா ஜோதிர்லிங்கத்தை வழிபட வேண்டும். மல்லிகார்ஜுனா ரிஷபத்தைக் குறிக்கிறது. ஒருவேளை உங்களால் மல்லிகார்ஜுனா ஜோதிர்லிங்கத்தை தரிசிக்க செல்ல முடியாவிட்டால், மகா சிவராத்திரி அன்று அருகில் உள்ள சிவாலயத்திற்கு சென்று, மல்லிகார்ஜுனா ஜோதிர்லிங்கத்தை மனதில் நினைத்து, 'ஓம் நமசிவாய' என்ற மந்திரத்தை கூறிக் கொண்டே வழிபடுங்கள்.

மிதுனம்
மத்திய பிரதேசத்தின் உஜ்ஜைனில் அமைந்துள்ள மகாகலேஸ்வர ஜோதிர்லிங்கம் மிதுன ராசியை ஆட்சி செய்கிறது என்று புராணக்கதைகள் நம்புகின்றன. எனவே, இந்த ராசியில் பிறந்தவர்கள், மகாகலேஷ்வர் ஜோதிர்லிங்கத்தைப் பார்வையிட்டு, சிவபெருமானை அவரது மாய வடிவத்தில் வணங்கலாம். ஆனால் உங்களால் இந்த ஜோதிர்லிங்கத்தை தரிசிக்க முடியாவிட்டால், அருகிலுள்ள எந்த சிவலிங்கத்தையும் மகாகலேஷ்வராக நினைவுகூர்ந்து வணங்கலாம். மேலும், நீங்கள் 'ஓம் நமோ பகவத் ருத்ரே' என்று உச்சரிக்கவும். இந்த மந்திரம் உங்களுக்கான சிவபெருமானைப் பிரியப்படுத்த உதவும்.

கடகம்
ஓம்காரேஷ்வர ஜோதிர்லிங்கம் கடக ராசியை ஆளுவதாகக் கூறப்படுகிறது. எனவே, இந்த ராசியைச் சேர்ந்தவர்கள் ஓம்காரேஷ்வரா ஜோதிர்லிங்கத்தை வணங்கலாம். நீங்கள் அருகிலுள்ள எந்த சிவலிங்கத்தையும் வணங்கலாம் மற்றும் சிவலிங்கத்திற்கு ஒரு பஞ்சாமிருத அபிஷேகமும் செய்யலாம். மேலும், சிவலிங்கத்திற்கு பேல் இலைகளை வழங்கி, 'ஓம் ஹாம் ஜூம் சா' என்று கோஷமிடுங்கள். இந்த வழியில், நீங்கள் சிவபெருமானிடமிருந்து செல்வம், ஆரோக்கியம் மற்றும் மன அமைதி வடிவத்தில் ஆசீர்வாதங்களைப் பெற முடியும். இந்த மந்திரத்தை உச்சரிக்கும் மாணவர்கள் இந்த மந்திரத்தின் மூலம் பயனடையலாம்.

சிம்மம்
சிம்ம ராசிக்காரர்கள் வைத்தியநாத் ஜோதிர்லிங்கத்தை வணங்க வேண்டும், ஏனெனில் அவர்களின் ராசி இந்த ஜோதிர்லிங்கத்தால் ஆளப்படுகிறது. வழக்கமாக நீங்கள் வைத்தியநாத்தை பார்வையிட முடியாது. கங்கை நதியிலிருந்து நீர் மற்றும் வெள்ளை கானர் பூவைப் பயன்படுத்தி அருகிலுள்ள எந்த சிவலிங்கத்தையும் வணங்குங்கள். மேலும், வைத்தியநாத் சிவலிங்கத்திற்கு பாங் மற்றும் தாதுராவை வழங்குங்கள். அதோடு சிவலிங்கத்தை வணங்கும் போது, சிவபெருமானிடமிருந்து முழு ஆசீர்வாதத்தையும் பெற மகா மிருத்யுஞ்சய் மந்திரத்தை உச்சரியுங்கள்.

கன்னி
மகாராஷ்டிராவில் பீமா ஆற்றின் கரையில் அமைந்துள்ள பீமாஷங்கர ஜோதிர்லிங்கம் கன்னி ராசியை ஆட்சி செய்கிறது. எனவே நீங்கள் இந்த ராசி என்றால், பீமாசங்கர சிவனைப் பார்வையிட்டு அவருடைய ஆசீர்வாதங்களைப் பெறலாம். பால் மற்றும் நெய்யால் அபிஷேகம் செய்து சிவலிங்கத்தை வணங்கலாம். மேலும், சிவபெருமானைப் பிரியப்படுத்த மஞ்சள் கானர் பூ மற்றும் ஷமி இலைகளை வழங்குங்கள். நீங்கள் வணங்கும் போது, 'ஓம் பகவத் ருத்ரே' என்று சொல்லுங்கள்.

துலாம்
இந்தியாவின் தமிழ்நாட்டில் அமைந்துள்ள ராமேஸ்வரம் ஜோதிர்லிங்கம் துலாம் ராசியை ஆளுவதாக கூறப்படுகிறது. எனவே துலாம் ராசியில் பிறந்தவர்கள் சிவபெருமானைப் பிரியப்படுத்த ராமேஸ்வரம் ஜோதிர்லிங்கத்தை வணங்க வேண்டும். இந்த ஜோதிர்லிங்கத்தைப் பார்க்க முடியாதவர்கள் எந்தவொரு சிவலிங்கத்திற்கும் பால் மற்றும் தேன் அபிஷேகம் செய்து வணங்கலாம். மேலும் 'ஓம் நமசிவாய' என்று கோஷமிட்டு சிவலிங்கத்திற்கு ஆக் பூவை வழங்குங்கள். அவ்வாறு செய்வது திருமண ஆனந்தத்தைத் தரும் மற்றும் உங்கள் பணியிலிருந்த தடைகளை நீக்கும்.

விருச்சிகம்
விருச்சிக ராசியில் பிறந்தவர்கள் குஜராத்தில் அமைந்துள்ள நாகேஸ்வர ஜோதிர்லிங்கத்தை வணங்க வேண்டும். மகா சிவராத்தரி நாளில் நாகேஸ்வரரை வழிபடுவது வாழ்க்கையில் ஏற்படும் விபத்துக்கள் மற்றும் தவறான நிகழ்வுகளிலிருந்து உங்களை காப்பாற்றும். முடியாவிட்டால், அருகிலுள்ள சிவலிங்கத்தையும் வணங்கலாம். அவ்வாறான நிலையில், பால், நெல் கசடு, சாமந்தி பூ, ஷமி மற்றும் பேல் இலைகளை சிவலிங்கத்திற்கு வழங்குங்கள். மேலும் சிவபெருமானைப் பிரியப்படுத்த 'ஹ்ரிம் ஓம் சிவாய ஹ்ரிம்' என்று சொல்லுங்கள்.

தனுசு
வாரணாசியில் இருக்கும் காசி விஸ்வநாத ஜோதிர்லிங்கம் தனுசு ராசியை ஆளுகிறது. இங்கு செல்ல முடியாதவர்கள், குங்குமப்பூ கலந்த கங்கை நீரைப் பயன்படுத்தி வேறு எந்த சிவலிங்கத்திற்கும் அபிஷேகம் செய்து வணங்கலாம். இது தவிர, 'ஓம் தத்புருஷய் வித்மஹே மகாதேவாய திமாஹி | தந்நோ ருத்ரா பிரச்சோதயத் ' என்று கூறி வழிபடுவதன் மூலம், நீங்கள் சிவபெருமானிடமிருந்து செல்வம், ஆரோக்கியம் மற்றும் மன அமைதி வடிவத்தில் ஆசீர்வாதங்களைப் பெற முடியும்.

மகரம்
மகர ராசியில் பிறந்திருந்தால், மகாராஷ்டிராவின் நாசிக் நகரில் அமைந்துள்ள த்ரயம்பகேஸ்வர ஜோதிர்லிங்கத்தை வணங்க வேண்டும். மகா சிவராத்திரியில், நீங்கள் அருகிலுள்ள எந்த சிவலிங்கத்தையும் வணங்கலாம் மற்றும் வெல்லம் கலந்த கங்கை நீரால் அபிஷேகம் செய்யலாம். சிவபெருமானைப் பிரியப்படுத்த 'ஓம் நம சிவாய' என்று கூறிக் கொண்டே நீல நிற பூக்கள் மற்றும் தாதுராவை சிவபெருமானுக்கு வழங்குங்கள்.

கும்பம்
உத்திரகண்டில் அமைந்துள்ள கேதார்நாத் ஜோதிர்லிங்கத்தை கும்ப ராசிக்காரர்கள் வணங்கலாம். ஆனால் மகா சிவராத்திரி அன்று கேதார்நாத் செல்ல முடியாவிட்டால், அருகிலுள்ள எந்த சிவலிங்கத்தையும் வணங்கலாம் மற்றும் சிவலிங்கத்திற்கு பஞ்சாமிருத அபிஷேகம் செய்யலாம். மேலும், சிவபெருமானிடமிருந்து ஆசீர்வாதம் பெற 'ஓம் நமசிவாய' என்று சொல்லிக் கொண்டே சிவலிங்கத்திற்கு தாமரை மலர்களை வழங்குங்கள்.

மீனம்
அவுரங்காபாத்தில் (மகாராஷ்டிரா) அமைந்துள்ள கிருஷ்ணேஷ்வர் ஜோதிர்லிங்கம் மீன ராசியை ஆளுகிறது என்று கூறப்படுகிறது. எனவே, நீங்கள் இந்த ராசியில் பிறந்திருந்தால், இந்த வடிவ ஜோதிர்லிங்கத்தைப் பார்வையிடலாம். இது தவிர, நீங்கள் அருகிலுள்ள எந்த சிவலிங்கத்தையும் வணங்கலாம் மற்றும் சிவலிங்கத்திற்கு குங்குமப்பூ கலந்த பாலால் அபிஷேகம் செய்யலாம். மேலும், மஞ்சள் கானர் பூக்கள் மற்றும் பேல் இலைகளை சிவலிங்கத்திற்கு வழங்குங்கள். உங்கள் வாழ்க்கையின் பிரச்சினைகளை சமாளிக்க 'ஓம் தத்புருஷயே வித்மஹே மகாதேவாய் திமாஹி| தந்நோ ருத்ரா பிரச்சோதயத்' மந்திரம் கூறுங்கள்.



Click it and Unblock the Notifications