Latest Updates
-
செவ்வாய் மேஷ ராசிக்கு செல்வதால் கோடீஸ்வர யோகத்தை பெறப்போகும் 4 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
இந்தியாவின் தேசிய காய் என்று அழைக்கப்படும் காய்கறி எது? அதற்கான காரணம் என்ன தெரியுமா? -
ஏப்ரல் இறுதியில் குரு-புதன் சேர்க்கையால் உருவாகும் அரிய ராஜயோகம்: இந்த 3 ராசிகளின் வருமானம் உயரும்! -
வெயில் காலத்தில் திருமணமா? இந்த 5 விஷயங்களைச் செய்யாவிட்டால் விசேஷமே வீணாகிவிடும்! -
மட்டன் சுவையை மிஞ்சும் சோயா உருளைக்கிழங்கு குருமா ரெசிபி - செஞ்சு பாருங்க, செமையா இருக்கும் -
பொருளாதாரச் சுரண்டல் இனி குடும்ப வன்முறை! மனைவியிடம் கையேந்த வைக்கும் கணவர்களுக்கு நீதிமன்றம் கொடுத்த செக்! -
செவ்வாயின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டகாத்து வீசும்! உங்க ராசியும் இதுல இருக்கா? -
ஏசி ஓடினாலும் கரண்ட் பில் கம்மியா வரணுமா? ஏசியை இந்த மாதிரி யூஸ் பண்ணுங்க -
வீட்டிலேயே மாம்பழ ஐஸ்க்ரீம்மை ஈஸியாக செய்வது எப்படி-ன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணுங்க.. -
40 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் இந்த உணவுகளில் ஒன்றை தினமும் சாப்பிடணுமாம் - அதான் நல்லது
சந்திர கிரகணம் பற்றி கூறப்படும் கட்டுக்கதைகள்... எத்தனை வருஷமா நமக்கு விபூதி அடிச்சிருக்காங்க பாருங்க!
சந்திர கிரகணம் இந்துக்களின் நாட்காட்டியிலும், பாரம்பரியத்திலும் முக்கியமான இடத்தைக் கொண்டுள்ளது. இந்த வருடம் 21 ஆம் நூற்றாண்டின் மிக நீண்ட சந்திர கிரகணம் நவம்பர் மாதம் 19 ஆம் தேதி வருகிறது.
சந்திர கிரகணம் இந்துக்களின் நாட்காட்டியிலும், பாரம்பரியத்திலும் முக்கியமான இடத்தைக் கொண்டுள்ளது. இந்த வருடம் 21 ஆம் நூற்றாண்டின் மிக நீண்ட சந்திர கிரகணம் நவம்பர் மாதம் 19 ஆம் தேதி வருகிறது. ஒவ்வொரு முறை சந்திர கிரகணம் வரும்போதும் அதனுடன் பல கட்டுக்கதைகளும் கைகோர்த்து வருகிறது.

சந்திர கிரகணத்தின் போது கர்ப்பிணி பெண்கள் என்ன செய்ய வேண்டும், திருமணம் ஆகாதவர்கள் என்ன செய்ய வேண்டும், என்னவெல்லாம் செய்யக்கூடாது என்ன பெரிய பட்டியலே கூறப்படுகிறது. அப்படி காலம் காலமாக சந்திர கிரகணத்தை மையமாக வைத்து கூறப்படும் கட்டுக்கதைகள் என்னென்ன என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

வெறும் கண்ணால் சந்திர கிரகணத்தை பார்க்கக்கூடாது
சந்திர கிரகணத்தை நிர்வாணக் கண்களால் பார்ப்பது கண் ஆரோக்கியத்தையும் பார்வையையும் பாதிக்கும் என்று புராணம் கூறுகிறது.இது ஓரளவிற்கு உண்மைதான், இந்த நேரத்தில் கதிர்களின் தாக்கம் வலுவாக இருக்கலாம் ஆனால் அது நிச்சயமாக ஒருவரை குருடாக்க முடியாது. மேலும், கண்ணாடிகள், லென்ஸ்கள் போன்ற பல்வேறு தொழில்நுட்பங்கள் உள்ளன, இதன் உதவியுடன் அழகான கிரகணத்தை ஒருவர் தாராளமாக பார்க்கலாம்.

சந்திர கிரகணத்தின் போது கர்ப்பிணி பெண்கள் வெளியே வரக்கூடாது
சந்திர கிரகணத்தின் போது கர்ப்பிணி பெண்கள் வேலை எதுவும் செய்யக்கூடாது, குறிப்பாக வெளியே வரக்கூடாது என்று பல காலமாக கூறப்பட்டு வருகிறது. பொதுவாக கர்ப்பிணி பெண்கள் கர்ப்ப காலத்தில் கடிமான வேலைகள் எதையும் செய்யக்கூடாது என்று கூறுவது உண்மைதான். ஆனால் சந்திர கிரகணம் அன்று செய்யக்கூடாது என்று கூறுவதற்கு பின் எந்த காரணமும் இல்லை. மேலும் கர்ப்பிணி பெண்கள் வெளியே சென்றால் அது குழந்தையின் ஆரோக்கியத்தை பாதிக்கலாம் மற்றும் கருச்சிதைவை ஏற்படுத்தும் என்று நம்பப்படுகிறது. இது முழுக்க முழுக்க கட்டுக்கதையாகும் இதற்கு எந்த அறிவியல் நிரூபணமும் இல்லை.

சந்திர கிரகணத்தின் போது சாப்பிடக்கூடாது
கிரகணத்தின் போது எந்த ஒரு உணவுப் பொருளையும் சாப்பிடக்கூடாது என்று நமது தாத்தா பாட்டி மற்றும் பெற்றோர்கள் அறிவுறுத்துகிறார்கள். அந்த நேரத்தில் சாப்பிடுவதும் குடிப்பதும் அஜீரணத்தை ஏற்படுத்தும் என்று நம்பப்படுகிறது. இருப்பினும், இந்த கட்டுக்கதைக்கு அறிவியல் சான்று இல்லை. உண்மையில், பல வீடுகளில், மக்கள் உணவை எறிந்துவிட்டு, கிரகணத்திற்குப் பிறகு மீண்டும் சமைக்கிறார்கள்.

சந்திர கிரகணம் முடிந்தவுடன் குளிப்பது
கிரகணத்திற்குப் பிறகு குளிப்பதும், தலைமுடியைக் கழுவுவதும் தங்கள் உடலில் இருந்து எதிர்மறை ஆற்றலின் தாக்கத்தைக் கழுவிவிடும் என்று பலர் நம்புகிறார்கள். இதனால், குளிப்பதும், வீட்டை கழுவுவதும் வழக்கம். எனினும், அதில் எதுவுமே உண்மை இல்லை. எதிர்மறை ஆற்றலின் தாக்கத்தை குளிப்பதால் நீக்கிவிட முடியாது. எனவே இது வெறும் கட்டுக்கதை.

சந்திர கிரகணத்தின் போது ஒரு காயம் ஆற அதிக நேரம் எடுக்கும்
கிரகணத்தின் போது உங்கள் உடலில் காயம் ஏற்பட்டால் அது வாழ்நாள் முழுவதும் நீடிக்கும் என்றும் உண்மையில் இரத்தப்போக்கு நீண்ட காலத்திற்கு நீடிக்கும் என்றும் சிலர் கட்டுக்கதைளை கூறிவருகிறார்கள். இருப்பினும், அறிவியலின் படி இது உண்மையல்ல. சந்திர கிரகணுக்கும் உங்களுக்கு இரத்தம் வருவதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. எனவே இது வெறும் கட்டுக்கதை.

சூரியனும், சந்திரனும் சகோதரர்கள்
சந்திர கிரகணம் பற்றிய மூட நம்பிக்கைகள் இந்தியாவில் மட்டுமில்லை. தென் அமெரிக்காவின் சுரினாமைச் சேர்ந்த கலினா மக்கள், சூரியனும் சந்திரனும் சகோதரர்கள் என்று நம்பினர். மேலும் ஒரு கிரகணம் ஏற்பட்டால், அவர்களில் ஒருவருக்கொருவர் சண்டையிடுகிறார்கள் என்று அவர்கள் நினைக்கிறார்கள்.



Click it and Unblock the Notifications