கிருஷ்ண ஜெயந்தி அன்று கிருஷ்ணருக்கு இந்த பொருட்களை வைத்து வழிபடுவது அதிர்ஷ்டத்தை அள்ளித்தருமாம்...!

கிருஷ்ண ஜெயந்தி இந்தியாவில் கொண்டாடப்படும் முக்கியமான பண்டிகைகளில் ஒன்றாகும். இது விஷ்ணுவின் எட்டாவது அவதாரமான கிருஷ்ணரின் பிறப்பைக் கொண்டாடும் வருடாந்திர இந்து பண்டிகையாகும்.

கிருஷ்ண ஜெயந்தி இந்தியாவில் கொண்டாடப்படும் முக்கியமான பண்டிகைகளில் ஒன்றாகும். இது விஷ்ணுவின் எட்டாவது அவதாரமான கிருஷ்ணரின் பிறப்பைக் கொண்டாடும் வருடாந்திர இந்து பண்டிகையாகும். இந்த நாளில் பக்தர்கள் கிருஷ்ணர் சிலைக்கு பால் ஊற்றுவார்கள். ஜென்மாஷ்டமி கிருஷ்ண ஜெயந்தி என்றும் கோகுலாஷ்டமி என்றும் அழைக்கப்படுகிறது.

Krishna Janmashtami 2022: Special Things To Offer During Krishna Janmashtami Puja in Tamil

பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் பக்தர்கள் தங்கள் பகவான் பிறந்த நாளை மிகுந்த ஆடம்பரத்துடனும், நிகழ்ச்சிகளுடனும் இந்தியாவில் கொண்டாடுகிறார்கள். அவர்களில் பலர் விரதம் கடைப்பிடித்து, கோவில்களிலும், வீடுகளிலும் பூஜை செய்கின்றனர். இந்த தருணத்தில் ஸ்ரீ கிருஷ்ணருக்கு பிடித்தமான சில விஷயங்களைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும். அவரது அருளை பெற பக்தர்கள் இவற்றைக் காணிக்கையாகச் செலுத்துவது நல்லது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மயிலிறகு

மயிலிறகு

கிருஷ்ணர் தனது கிரீடத்தில் மயில் தோகை அணிந்துள்ளார். இந்து பாரம்பரியத்தின் படி, கிருஷ்ணருக்கு மயில் இறகுகள் மிகவும் பிடிக்கும் என்று நம்பப்படுகிறது. நீங்கள் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் அனைத்து படங்களிலும், அவரின் தலையில் ஒரு மயிலிறகு இருப்பதைக் காணலாம். கிருஷ்ணர் ஏன் மயில் தோகையைத் தேர்ந்தெடுத்தார் என்பதை பல்வேறு கதைகள் விளக்குகின்றன. கதை எதுவாக இருந்தாலும், கிருஷ்ணருக்கு மயிலிறகு மிகவும் பிடித்தமான விஷயம் என்பதில் சந்தேகமில்லை.

வெண்ணெய்

வெண்ணெய்

புராணங்களில், கிருஷ்ணர் சிறுவயதிலிருந்தே வெண்ணெயை நேசித்ததாகக் கூறப்படுகிறது. கதைகளின்படி, அவர் தனது பக்கத்து வீடுகளில் வெண்ணெய் மற்றும் கற்கண்டை திருடி சாப்பிடுவார். இதனாலேயே கிருஷ்ண ஜெயந்தி அன்று பகவான் கிருஷ்ணருக்கு பட்டர்-கற்கண்டு அர்ச்சனை செய்யப்படுகிறது. பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் பொதுவாக 'வெண்ணெய் திருடன்' என்று குறிப்பிடப்படுகிறார். இன்றுவரை, கிருஷ்ணரை மகிழ்விக்க செய்யப்படும் எந்த பூஜையும் வெண்ணெய் வழங்கப்படாவிட்டால் முழுமையடையாததாக கருதப்படுகிறது.

மோதகம்

மோதகம்

மோதகம் என்றும் அழைக்கப்படும் லட்டு ஒரு இனிப்பு உணவு. பகவான் கிருஷ்ணர் லட்டு மீது காதல் கொண்டதாக கூறப்படுகிறது. இதன் விளைவாக, அவர் லட்டு கோபால் என்றும் அழைக்கப்படுகிறார். கிருஷ்ண ஜெயந்தி அன்று அவரின் பிரசாதங்களில் மோதகம் கண்டிப்பாக இருக்க வேண்டும்.

பசு

பசு

புராண நம்பிக்கைகளின்படி, பகவான் கிருஷ்ணர் தனது குழந்தைப் பருவத்தின் பெரும்பகுதியை பசுக்களுக்கு சேவை செய்வதில் கழித்தார். அவர்களுக்கு உணவளிக்க காட்டுக்குள் அழைத்துச் சென்று மாலையில் வீடு திரும்புவார். இறைவனின் சிறுவயது லீலைகள் பல அவரது குடும்பத்தினரால் வளர்க்கப்பட்ட கால்நடைகளின் முன்னிலையில் நடந்தன. இதனால்தான் லட்டு கோபாலுக்கு வழங்கப்படும் பிரசாதங்கள் பசுவின் நெய்யில் செய்யப்படுகிறது.

புல்லாங்குழல்

புல்லாங்குழல்

பகவான் கிருஷ்ணர் தனது வாழ்க்கையில் மற்ற மனிதர்கள் அல்லது பொருட்களை விட ராதை மற்றும் அவரது புல்லாங்குழலை மட்டுமே அதிகம் நேசித்தார் என்று நம்பப்படுகிறது. அவரது புல்லாங்குழல் திறமையே ராதையின் காதலை ஈர்த்தது. இதனாலேயே கிருஷ்ணர் புல்லாங்குழலை எப்போதும் தன்னுடன் வைத்திருப்பார். புல்லாங்குழல் பகவான் கிருஷ்ணரின் வானக்கருவியாகப் போற்றப்படுகிறது, மேலும் இது கிருஷ்ணரின் ராச லீலா நடனத்துடன் அடிக்கடி தொடர்புடையது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Story first published: Wednesday, August 17, 2022, 16:15 [IST]
Desktop Bottom Promotion