Latest Updates
-
இந்த 5 ராசி பெண்கள் காதலில் துரோகம் செய்பவர்களாக இருப்பார்களாம் - உங்க காதலி ராசி இதுல இருக்கா? -
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரங்க வாயை திறந்தாலே பிரச்சனையை சந்திப்பாங்க.. உஷார்! -
சாணக்கிய நீதி படி இந்த 5 குணங்கள் உள்ளவர்கள் சமூகத்தில் எல்லோராலும் மதிக்கப்படுவார்களாம் - உங்ககிட்ட இருக்கா? -
வெள்ளரிக்காய் தோசையும், கருப்பு உளுந்து சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணிப் பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 08 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு கேட்ட வரங்கள் கிடைக்கப்போகுதாம் -
வக்ரமாகும் சனிபகவான்: ஜூலை முதல் 138 நாட்களுக்கு இந்த 4 ராசிக்கு தொழில் வளரும், வருமானம் அதிகரிக்கும்! -
வெயில் காலத்தில் ஏன் அடிக்கடி சண்டை வருது? தம்பதிகளே, இந்த ஒரு விஷயத்தை கவனிங்க! -
திருமண சீசன்ல வெயில், மழையால் கவலையா? பட்ஜெட் வீணாகாம இருக்க இந்த 5 டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க! -
வயசானாலும் இளமையா தெரியணுமா? அப்ப இந்த நேச்சுரல் ஃபேஸ் பேக்குகளை போடுங்க.. -
1 கப் உளுந்து இருந்தா, ஈவ்னிங் டைம்-ல இப்படி செஞ்சு குடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட..
கிருஷ்ண ஜெயந்தி அன்று கிருஷ்ணருக்கு இந்த பொருட்களை வைத்து வழிபடுவது அதிர்ஷ்டத்தை அள்ளித்தருமாம்...!
கிருஷ்ண ஜெயந்தி இந்தியாவில் கொண்டாடப்படும் முக்கியமான பண்டிகைகளில் ஒன்றாகும். இது விஷ்ணுவின் எட்டாவது அவதாரமான கிருஷ்ணரின் பிறப்பைக் கொண்டாடும் வருடாந்திர இந்து பண்டிகையாகும்.
கிருஷ்ண ஜெயந்தி இந்தியாவில் கொண்டாடப்படும் முக்கியமான பண்டிகைகளில் ஒன்றாகும். இது விஷ்ணுவின் எட்டாவது அவதாரமான கிருஷ்ணரின் பிறப்பைக் கொண்டாடும் வருடாந்திர இந்து பண்டிகையாகும். இந்த நாளில் பக்தர்கள் கிருஷ்ணர் சிலைக்கு பால் ஊற்றுவார்கள். ஜென்மாஷ்டமி கிருஷ்ண ஜெயந்தி என்றும் கோகுலாஷ்டமி என்றும் அழைக்கப்படுகிறது.

பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் பக்தர்கள் தங்கள் பகவான் பிறந்த நாளை மிகுந்த ஆடம்பரத்துடனும், நிகழ்ச்சிகளுடனும் இந்தியாவில் கொண்டாடுகிறார்கள். அவர்களில் பலர் விரதம் கடைப்பிடித்து, கோவில்களிலும், வீடுகளிலும் பூஜை செய்கின்றனர். இந்த தருணத்தில் ஸ்ரீ கிருஷ்ணருக்கு பிடித்தமான சில விஷயங்களைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும். அவரது அருளை பெற பக்தர்கள் இவற்றைக் காணிக்கையாகச் செலுத்துவது நல்லது.

மயிலிறகு
கிருஷ்ணர் தனது கிரீடத்தில் மயில் தோகை அணிந்துள்ளார். இந்து பாரம்பரியத்தின் படி, கிருஷ்ணருக்கு மயில் இறகுகள் மிகவும் பிடிக்கும் என்று நம்பப்படுகிறது. நீங்கள் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் அனைத்து படங்களிலும், அவரின் தலையில் ஒரு மயிலிறகு இருப்பதைக் காணலாம். கிருஷ்ணர் ஏன் மயில் தோகையைத் தேர்ந்தெடுத்தார் என்பதை பல்வேறு கதைகள் விளக்குகின்றன. கதை எதுவாக இருந்தாலும், கிருஷ்ணருக்கு மயிலிறகு மிகவும் பிடித்தமான விஷயம் என்பதில் சந்தேகமில்லை.

வெண்ணெய்
புராணங்களில், கிருஷ்ணர் சிறுவயதிலிருந்தே வெண்ணெயை நேசித்ததாகக் கூறப்படுகிறது. கதைகளின்படி, அவர் தனது பக்கத்து வீடுகளில் வெண்ணெய் மற்றும் கற்கண்டை திருடி சாப்பிடுவார். இதனாலேயே கிருஷ்ண ஜெயந்தி அன்று பகவான் கிருஷ்ணருக்கு பட்டர்-கற்கண்டு அர்ச்சனை செய்யப்படுகிறது. பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் பொதுவாக 'வெண்ணெய் திருடன்' என்று குறிப்பிடப்படுகிறார். இன்றுவரை, கிருஷ்ணரை மகிழ்விக்க செய்யப்படும் எந்த பூஜையும் வெண்ணெய் வழங்கப்படாவிட்டால் முழுமையடையாததாக கருதப்படுகிறது.

மோதகம்
மோதகம் என்றும் அழைக்கப்படும் லட்டு ஒரு இனிப்பு உணவு. பகவான் கிருஷ்ணர் லட்டு மீது காதல் கொண்டதாக கூறப்படுகிறது. இதன் விளைவாக, அவர் லட்டு கோபால் என்றும் அழைக்கப்படுகிறார். கிருஷ்ண ஜெயந்தி அன்று அவரின் பிரசாதங்களில் மோதகம் கண்டிப்பாக இருக்க வேண்டும்.

பசு
புராண நம்பிக்கைகளின்படி, பகவான் கிருஷ்ணர் தனது குழந்தைப் பருவத்தின் பெரும்பகுதியை பசுக்களுக்கு சேவை செய்வதில் கழித்தார். அவர்களுக்கு உணவளிக்க காட்டுக்குள் அழைத்துச் சென்று மாலையில் வீடு திரும்புவார். இறைவனின் சிறுவயது லீலைகள் பல அவரது குடும்பத்தினரால் வளர்க்கப்பட்ட கால்நடைகளின் முன்னிலையில் நடந்தன. இதனால்தான் லட்டு கோபாலுக்கு வழங்கப்படும் பிரசாதங்கள் பசுவின் நெய்யில் செய்யப்படுகிறது.

புல்லாங்குழல்
பகவான் கிருஷ்ணர் தனது வாழ்க்கையில் மற்ற மனிதர்கள் அல்லது பொருட்களை விட ராதை மற்றும் அவரது புல்லாங்குழலை மட்டுமே அதிகம் நேசித்தார் என்று நம்பப்படுகிறது. அவரது புல்லாங்குழல் திறமையே ராதையின் காதலை ஈர்த்தது. இதனாலேயே கிருஷ்ணர் புல்லாங்குழலை எப்போதும் தன்னுடன் வைத்திருப்பார். புல்லாங்குழல் பகவான் கிருஷ்ணரின் வானக்கருவியாகப் போற்றப்படுகிறது, மேலும் இது கிருஷ்ணரின் ராச லீலா நடனத்துடன் அடிக்கடி தொடர்புடையது.



Click it and Unblock the Notifications