Latest Updates
-
இன்றைய ராசிபலன் 09 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு வெற்றிகள் குவியும் நாளாக இருக்குமாம்...! -
கும்ப ராசியில் உதயமாகும் புதன்: மார்ச் 14 முதல் இந்த 4 ராசிக்கு தொழிலில் நல்ல வளர்ச்சி ஏற்படும்... -
எவ்வளவு வயசானாலும் இளமையா காட்சியளிக்கணுமா? அப்ப இந்த ஃபேஸ் பேக்கை அடிக்கடி போடுங்க.. -
காலிஃப்ளவரும், பட்டாணியும் இருந்தா.. இந்த மாதிரி கிரேவி செய்யுங்க.. சப்பாத்தி வேற லெவல்-ல இருக்கும்.. -
குரு பகவான் வக்ர நிவர்த்தி அடைவதால் மார்ச் 11 முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது... -
ஆட்டு ஈரலை இப்படி வறுவல் செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட போட்டி போட்டு காலி பண்ணுவாங்க... -
பெண்களே! தொப்பை குறையணுமா? அப்ப இந்த ஃபிட்னஸ் கோச் சொல்ற 5 உடற்பயிற்சியை வீட்லயே செய்யுங்க.. -
சுக்கிர பெயர்ச்சியால் இந்த 5 ராசிக்கு சுக்கிர திசை ஆரம்பிக்குது.. இனி கையில் பணம் குவியப்போகுது.. -
சிக்கன வாங்குனா இந்த 4 பொருட்களை சேர்த்து கேரளா ஸ்டைல் சிக்கன் 65 செய்யுங்க... டேஸ்ட் பட்டாசா இருக்கும்...! -
இந்த வாரம் மட்டன் வாங்குனா.. இந்த சுக்கா கிரேவி செய்யுங்க.. எல்லாத்துக்குமே செமயா இருக்கும்..
கள்ளகாதலில் ஈடுபடும் பெண்ணின் விரலை வெட்டி கள்ளகாதலன் சாப்பிடனுமாம்..கள்ளகாதலுக்கான பயங்கர தண்டனைகள்
இன்று தினமும் நாம் செய்திகளில் கட்டாயம் பார்க்கும் ஒரு விஷயமாக கள்ளக்காதல் மாறிவிட்டது. முந்தைய காலக்கட்டத்தில் அரிதாக காணப்பட்ட இந்த கள்ளக்காதல் பிரச்சினை இப்போது அன்றாடம் சந்திக்கும் ஒரு பிரச்சினையா
இன்று தினமும் நாம் செய்திகளில் கட்டாயம் பார்க்கும் ஒரு விஷயமாக கள்ளக்காதல் மாறிவிட்டது. முந்தைய காலக்கட்டத்தில் அரிதாக காணப்பட்ட இந்த கள்ளக்காதல் பிரச்சினை இப்போது அன்றாடம் சந்திக்கும் ஒரு பிரச்சினையாக மாறிவிட்டது. கடந்த காலத்தைப் போல அல்லாமல் இப்போது இந்த பிரச்சினை அதிகரித்திருக்க காரணம் ஆண், பெண் புரிதல் குறைந்ததும், தவறான வாழ்க்கை முறையும்தான்.

நமது நாட்டு நீதிமன்றமே வயது வந்த ஒரு ஆணும், பெண்ணும் திருமணம் தாண்டிய உறவில் சம்மதத்துடன் ஈடுபவது தவறில்லை என்று கூறிவிட்டது. ஆனால் பல நாடுகளில் கள்ளக்காதல் இன்றும் சட்டப்படி குற்றத்திற்குரிய தண்டனையாகத்தான் இருக்கிறது. இந்த தண்டனைகள் மிதமானது தொடங்கி கடுமையான தண்டனைகள் வரை அந்தந்த நாடுகளின் சட்டங்களுக்கு ஏற்ப மாறுபடுகிறது. இந்த பதிவில் கள்ளக்காதலுக்கு பல்வேறு நாடுகளில் வழங்கப்படும் தண்டனைகள் என்னென்ன என்று பார்க்கலாம்.

மாலி
மாலியில் பல்வேறு பழங்குடியினர் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். அவர்களின் சட்டங்கள் ஒவ்வொரு இனத்திற்கும் மாறுபடுகிறது. உதாரணத்திற்கு டோகன் பழங்குடியினரில் திருமணம் தாண்டிய உறவில் ஈடுபடுவது ஏற்றுக்கொள்ளப்பட்டதுதான். ஆனால் கணவரின் உறவினர்களுடன் உறவில் ஈடுபடக்கூடாது.

ஸ்விட்சர்லாந்து
ஸ்விட்சர்லாந்து உலகின் மகிழ்ச்சியான மக்கள் வாழும் நாடுகளில் ஒன்றாக ஸ்விட்சர்லாந்து இருக்கிறது. ஸ்விட்சர்லாந்தில் திருமணம் மீறிய உறவில் ஈடுபடுவது பெரிய குற்றமாக கருதப்படுவதில்லை. ஆனால் அவர்கள் அடுத்த திருமணத்தை மூன்று ஆண்டுகளுக்கு பதிவு செய்ய முடியாது.

துருக்கி
துருக்கி கடுமையான சட்டங்கள் இருக்கும் ஒரு நாடாக இருக்கிறது. 1996 முதல் இங்கு பெண்கள் மட்டுமல்ல ஆண்களும் கள்ளக்காதலுக்காக தண்டிக்கப்படுகிறார்கள். ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும் கள்ளக்காதலில் ஈடுபட்டது நிரூபிக்கப்பட்டால் அவர்களுக்கு ஐந்து ஆண்டுகளுக்கு மிகாமல் சிறைத்தண்டனை வழங்கபடுகிறது.

ஈரான்
ஈரான் பெண்களுக்கெதிரான கடுமையான சட்டங்களுக்கு புகழ்பெற்றது. அதன்படி துரோகம் செய்த ஒரு பெண்ணை அங்கு கணவரால் கொல்ல முடியும். மேலும் இது அவரது கணவரால் மட்டுமல்ல, அவரது ஆண் உறவினர்களாலும் செய்யப்படலாம்.

இந்தோனேஷியா
இந்தோனேஷியாவில் கள்ளக்காதல் கடுமையான குற்றமாகும், ஆனால் இங்கு மரண தண்டனை வழங்கப்படுவதில்லை. இங்கு கள்ளக்காதல் நிரூபிக்கப்பட்டால் அவர்களுக்கு 15 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கப்படும்.

பப்புவா
பப்புவா நியூ கினியாவில் விசுவாசமற்ற ஆண்கள் மற்றும் பெண்கள் மீது மிகக் கடுமையான பொருளாதாரத் தடைகள் உள்ளன. தன் மனைவியின் கள்ளக்காதலனை கணவர் தலையைக் கூட வெட்டலாம், ஆனால் பெண்கள் கொல்லப்படுவதில்லை, அதற்குப் பதிலாக அவர்களின் விரல்கள் வெட்டப்படுகிறது. வெட்டப்பட்ட அந்த விரலை அந்த பெண்ணின் காதலன் சாப்பிட வேண்டும்.

சீனா
சீனாவில் பெண்கள் மற்றும் ஆண்கள் இருவரும் துரோகம் செய்ததற்காக தண்டிக்கப்படுகிறார்கள். அங்கிருக்கும் சட்டங்களின்படி கள்ளக்காதல் செய்பவர்களுக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை மற்றும் சொத்தில் பாதி பறிமுதல் செய்யப்படுகிறது.

வியட்நாம்
வியட்நாமில் 2013-ல் ஒரு திருமண சட்டம் இயற்றப்பட்டது. அதன்படி கணவருக்கு துரோகம் செய்த மனைவி 1 முதல் 3 மில்லியன் டாலர் வரை அபராதம் செலுத்த வேண்டும்.

ஆப்பிரிக்கா
சில ஆப்பிரிக்க பழங்குடியினரில் கள்ளக்காதலுக்கு கடுமையான தண்டனை வழங்கப்படுகிறது. அதன்படி கள்ளக்காதலில் ஈடுபடும் பெண்களின் கருப்பை அவர்க்ளின் கணவரால் வெளியேற்றப்பட வேண்டும்.



Click it and Unblock the Notifications











