Just In
- 5 min ago குழந்தையின்மைக்கு இந்த பிரச்சனைகள் எல்லாம் காரணமாக இருக்கலாம்.. கவனியுங்கள்..!
- 1 hr ago புதன் மீன ராசிக்கு நேராக செல்வதால் இந்த 5 ராசிக்காரர்களின் வாழக்கையில் அதிர்ஷ்டம் கொட்டப்போகுதாம்...!
- 1 hr ago உங்கள் தலைமுடி வலுவாக வளரனுமா? அப்போ இதை சாப்பிடுங்கள்..!
- 1 hr ago ஜாகிங் போகும் போது இந்த தவறுகளை தெரியாம கூட பண்ணிராதீங்க... இல்லனா உங்க எலும்புகள் அவ்வளவுதான்...!
Don't Miss
- Sports தோனி பேட்டிங் ஆட வருவதை தாமதப்படுத்திய வீரருக்கு விருது கொடுத்த ஜான்டி ரோட்ஸ்.. என்ன நடந்தது?
- Movies Trisha: 20 ஆண்டுகள் கழித்து மீண்டும் அதே கொண்டாட்டம்.. வீடியோ வெளியிட்ட திரிஷா!
- Finance TikTok: கங்கணம் கட்டுக்கொண்டு சுத்தும் அமெரிக்கா.. 70 லட்சம் நிறுவனங்களுக்கு ஆப்பு..!!
- Automobiles ஓலா டவுசரை கழட்ட திட்டம் போடும் பஜாஜ்! இவ்வளவு கம்மி விலைக்கு சேத்தக் இவி வரப்போகுதா?
- News அண்ணாமலையா? தமிழகத்தில் இந்த பாஜக வேட்பாளர் வென்றால் ரொம்ப மகிழ்ச்சி.. சு.சாமி வைத்த ட்விஸ்ட்
- Technology கடையை இழுத்து மூடும் OnePlus.. இனி தமிழ்நாட்டில் ஒன்பிளஸ் போன் வாங்க முடியாதா? உண்மை என்ன?
- Education தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியில் பணிபுரிய அற்புதமான வாய்ப்பு..!
- Travel தமிழ்நாட்டுக்குள்ள வெயில் கொளுத்துது – ஆனா இந்தியாவின் இந்த இடங்களில பனிச்சரிவு – என்ன வினோதம் இது?
காந்தி ஜெயந்தி அன்று மகாத்மா காந்தி கூறிய 'இந்த' விஷயங்கள உங்களுக்கு பிடிச்சவங்களுக்கு அனுப்புங்க..!
காந்தி ஜெயந்தி என்பது இந்தியாவின் தேசத் தந்தையான மகாத்மா காந்தியின் பிறந்தநாளான அக்டோபர் 2ஆம் தேதியை குறிக்கும் நாளாகும். இது இந்தியாவில் ஒரு தேசிய விடுமுறை நாளாகும்.
காந்தி ஜெயந்தி என்பது இந்தியாவின் தேசத் தந்தையான மகாத்மா காந்தியின் பிறந்தநாளான அக்டோபர் 2ஆம் தேதியை குறிக்கும் நாளாகும். இது இந்தியாவில் ஒரு தேசிய விடுமுறை நாளாகும். இந்திய சுந்திர போராட்டத்தை முன்னின்று அகிம்சை வழியில் விடுதலையை பெற்றுக்கொடுத்த மகாத்மா காந்தியை இந்தியாவின் தேச தந்தை என்று அழைக்கிறோம். ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் ஜூன் 15, 2007இல் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தின் படி இந்நாள் 'அனைத்துலக வன்முறையற்ற நாளாக அனைத்து நாடுகளிலும் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
மகாத்மா காந்தி இந்தியாவின் குஜராத் மாநிலத்திலுள்ள போர்பந்தர் என்னும் ஊரில் 1869ஆம் ஆண்டு பிறந்தார். இவர் முழுப்பெயர் மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி. அகிம்சையையும், அமைதியையும் வலியுறுத்தியவர். இந்தியாவில் தயாரிக்கப்பட்ட சுதேசிப் பொருட்களின் மீது அதிகப் பற்று கொண்டவராக காந்தியடிகள் திகழ்ந்தார். இக்கட்டுரையில், காந்தியின் பொன்மொழிகள் மற்றும் தத்துவங்கள் பற்றி காணலாம். இதை உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு காந்தி ஜெயந்தி அன்ரு அனுப்புங்கள்.
வாழ்த்து
மகாத்மா காந்தி ஜெயந்தி வாழ்த்துக்கள்!
பொன்மொழி 1
என் வாழ்க்கையே எனது அறிவுரை! - மகாத்மா காந்தி
பொன்மொழி 2
ஒருவனிடம் துக்கமும் தூக்கமும் எப்போது குறையுமோ, அப்போதே அவன் மேதையாகிறான்! - மகாத்மா காந்தி
பொன்மொழி 3
எங்கே அன்பு இருக்கிறதோ அங்கே வாழ்வு உயித்திருக்கிறது! - மகாத்மா காந்தி
பொன்மொழி 4
மற்றவர்களை கெட்டவர்கள் என்று சொல்வதன்மூலம், நாம் நல்லவர்களாகிவிட முடியாது! - மகாத்மா காந்தி
பொன்மொழி 5
குறிக்கோளை அடையும் முயற்சியில்தான் மகிமை இருக்கிறது அந்த குறிக்கோளை அடைவதில் இல்லை.
பொறுமையும் விடாமுயற்சியும் இருந்தால் சிரமங்கள் எனும் மலையை வென்றுவிடலாம். - மகாத்மா காந்தி
பொன்மொழி 6
எது முழுமையானதாகவும் உண்மையானதாகவும் இல்லாமலிருக்கிறதோ, அதை எந்த பெயர் சொல்லி அழைப்பதிலும் பயனில்லை! - மகாத்மா காந்தி
பொன்மொழி 7
அமைதியை அடைவதற்கென எந்தப் பாதையும் கிடையாது. அமைதியேதான் பாதை! - மகாத்மா காந்தி
பொன்மொழி 8
எல்லாவற்றுக்கும் அறம்தான் அடிப்படை. அந்த அறத்திற்கே உண்மைதான் அடிப்படை! - மகாத்மா காந்தி
பொன்மொழி 9
பிறர் எப்படி இருக்க வேண்டும் என்று நீ விரும்புகிறாயோ முதலில் அதுபோல நீ மாறு! - மகாத்மா காந்தி
பொன்மொழி 10
முதலில் உங்களை உதாசீனப்படுத்துவார்கள், பின்னர் உங்களைப் பார்த்து நகைப்பார்கள், பின்னர் உங்களோடு சண்டையிடுவார்கள். பின்னர் நீங்கள் வெற்றி பெறுவீர்கள்.- மகாத்மா காந்தி
பொன்மொழி 11
பிறரை தாழ்த்துபவன், தானும் தாழ்ந்து போவான் என்பது இயற்கையின் தர்மம்! - மகாத்மா காந்தி
பொன்மொழி 12
அகிம்சை என்பது இதயத்தின் ஒரு பண்பு. அதற்கு மூளையுடன் தொடர்பு கிடையாது! - மகாத்மா காந்தி