Latest Updates
-
World Kidney Day 2026: சிறுநீரகங்கள் ஆரோக்கியமா இருக்கணுமா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 5 உணவுகளை சாப்பிடுங்க.. -
ராகு-கேதுவால் உருவாகியுள்ள கால சர்ப்ப யோகம்: இந்த 3 ராசிக்கு மார்ச் 26 வரை வெற்றியும், பணமும் குவியப்போகுது... -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
மரணமிலா வாழ்க்கையை வாழ்வதற்கு ஒரு வழி கிடைத்துவிட்டது..ஆனா இதுக்கு எவ்வளவு செல்வாகும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க!
காந்தி ஜெயந்தி அன்று மகாத்மா காந்தி கூறிய 'இந்த' விஷயங்கள உங்களுக்கு பிடிச்சவங்களுக்கு அனுப்புங்க..!
காந்தி ஜெயந்தி என்பது இந்தியாவின் தேசத் தந்தையான மகாத்மா காந்தியின் பிறந்தநாளான அக்டோபர் 2ஆம் தேதியை குறிக்கும் நாளாகும். இது இந்தியாவில் ஒரு தேசிய விடுமுறை நாளாகும்.
காந்தி ஜெயந்தி என்பது இந்தியாவின் தேசத் தந்தையான மகாத்மா காந்தியின் பிறந்தநாளான அக்டோபர் 2ஆம் தேதியை குறிக்கும் நாளாகும். இது இந்தியாவில் ஒரு தேசிய விடுமுறை நாளாகும். இந்திய சுந்திர போராட்டத்தை முன்னின்று அகிம்சை வழியில் விடுதலையை பெற்றுக்கொடுத்த மகாத்மா காந்தியை இந்தியாவின் தேச தந்தை என்று அழைக்கிறோம். ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் ஜூன் 15, 2007இல் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தின் படி இந்நாள் 'அனைத்துலக வன்முறையற்ற நாளாக அனைத்து நாடுகளிலும் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

மகாத்மா காந்தி இந்தியாவின் குஜராத் மாநிலத்திலுள்ள போர்பந்தர் என்னும் ஊரில் 1869ஆம் ஆண்டு பிறந்தார். இவர் முழுப்பெயர் மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி. அகிம்சையையும், அமைதியையும் வலியுறுத்தியவர். இந்தியாவில் தயாரிக்கப்பட்ட சுதேசிப் பொருட்களின் மீது அதிகப் பற்று கொண்டவராக காந்தியடிகள் திகழ்ந்தார். இக்கட்டுரையில், காந்தியின் பொன்மொழிகள் மற்றும் தத்துவங்கள் பற்றி காணலாம். இதை உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு காந்தி ஜெயந்தி அன்ரு அனுப்புங்கள்.

வாழ்த்து
மகாத்மா காந்தி ஜெயந்தி வாழ்த்துக்கள்!

பொன்மொழி 1
என் வாழ்க்கையே எனது அறிவுரை! - மகாத்மா காந்தி

பொன்மொழி 2
ஒருவனிடம் துக்கமும் தூக்கமும் எப்போது குறையுமோ, அப்போதே அவன் மேதையாகிறான்! - மகாத்மா காந்தி

பொன்மொழி 3
எங்கே அன்பு இருக்கிறதோ அங்கே வாழ்வு உயித்திருக்கிறது! - மகாத்மா காந்தி

பொன்மொழி 4
மற்றவர்களை கெட்டவர்கள் என்று சொல்வதன்மூலம், நாம் நல்லவர்களாகிவிட முடியாது! - மகாத்மா காந்தி

பொன்மொழி 5
குறிக்கோளை அடையும் முயற்சியில்தான் மகிமை இருக்கிறது அந்த குறிக்கோளை அடைவதில் இல்லை.
பொறுமையும் விடாமுயற்சியும் இருந்தால் சிரமங்கள் எனும் மலையை வென்றுவிடலாம். - மகாத்மா காந்தி

பொன்மொழி 6
எது முழுமையானதாகவும் உண்மையானதாகவும் இல்லாமலிருக்கிறதோ, அதை எந்த பெயர் சொல்லி அழைப்பதிலும் பயனில்லை! - மகாத்மா காந்தி

பொன்மொழி 7
அமைதியை அடைவதற்கென எந்தப் பாதையும் கிடையாது. அமைதியேதான் பாதை! - மகாத்மா காந்தி

பொன்மொழி 8
எல்லாவற்றுக்கும் அறம்தான் அடிப்படை. அந்த அறத்திற்கே உண்மைதான் அடிப்படை! - மகாத்மா காந்தி

பொன்மொழி 9
பிறர் எப்படி இருக்க வேண்டும் என்று நீ விரும்புகிறாயோ முதலில் அதுபோல நீ மாறு! - மகாத்மா காந்தி

பொன்மொழி 10
முதலில் உங்களை உதாசீனப்படுத்துவார்கள், பின்னர் உங்களைப் பார்த்து நகைப்பார்கள், பின்னர் உங்களோடு சண்டையிடுவார்கள். பின்னர் நீங்கள் வெற்றி பெறுவீர்கள்.- மகாத்மா காந்தி

பொன்மொழி 11
பிறரை தாழ்த்துபவன், தானும் தாழ்ந்து போவான் என்பது இயற்கையின் தர்மம்! - மகாத்மா காந்தி

பொன்மொழி 12
அகிம்சை என்பது இதயத்தின் ஒரு பண்பு. அதற்கு மூளையுடன் தொடர்பு கிடையாது! - மகாத்மா காந்தி



Click it and Unblock the Notifications











