Just In
- 22 min ago உங்க கல்லீரல் டேமேஜ் ஆகாம மது அருந்தணுமா? இப்படி மது அருந்துங்க... உங்க கல்லீரலுக்கு எந்த ஆபத்தும் வராது...!
- 1 hr ago கல்லீரலின் மூலைமுடுக்குகளில் உள்ள அழுக்குகளை வெளியேற்ற சாப்பிட வேண்டிய உணவுகள்!
- 2 hrs ago ஏசி அறையில் தூங்குவதால் உங்க உடலில் என்னென்ன பிரச்சினைகள் வரலாம் தெரியுமா? ஏசி ரூம்ல இப்படி தூங்காதீங்க...!
- 3 hrs ago அடுத்தமுறை சிக்கன் கிரேவியை இந்த ஸ்டைலில் செய்யுங்க.. சும்மா வேற லெவல்-ல இருக்கும்...
Don't Miss
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Movies மீண்டும் இணைந்து நடிக்கும் சூர்யா - ஜோதிகா?.. இயக்குநர் யார் தெரியுமா?.. ஆச்சரிய தகவல்
- News எம்பிக்களின் மாத சம்பளம் எவ்வளவு தெரியுமா? வீடு முதல் ரயில் பயணம் வரை இலவசம்.. அசரவைக்கும் சலுகைகள்!
- Sports ஒரு பந்துக்கு 12 ரன் அடிக்க பார்க்காதே.. எவ்வளவு முறை சொல்றது? இளம் வீரருக்கு சூர்யகுமார் அட்வைஸ்
- Technology வெறும் ரூ.10,000 விலை.. சூப்பர் பாஸ்ட் 5G மொபைல்.. அசராமல் அடிக்கும் Realme.. எப்போது விற்பனை?
- Finance வெளி ஊர்ல இருக்கீங்களா? நீங்களும் ஓட்டு போடலாம்.. எப்படின்னு பாருங்க!
- Automobiles ஒன்றல்ல, ரெண்டல்ல மொத்தம் 13 ஸ்கூட்டர்களை மாற்று திறனாளி இளைஞர்களுக்கு பரிசளித்த நடிகர் ராகவா லாரன்ஸ்..
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
சரஸ்வதி தேவியின் கடாட்சம் பெறப்போகும் ராசிக்காரர்கள் யார் யார்?... தெரிஞ்சிக்கங்க...
உங்களுடைய ஆற்றலை உணர்ந்து கொண்டு செயல்பட்டால் எல்லா நாளும் நல்ல நாளாகவே இருக்கும். அதுதவிர 12 ராசிகளுக்கும் இன்று எப்படி இருக்கப் போகிறது என்று பார்ப்போம்.
ஜோதிடம் என்பது இந்து மதத்தில் மிக முக்கிய இடத்தைப் பெற்றிருக்கிறது. 12 கோள்களின் நகர்வையும் தங்களுடைய எதிர்காலத்தைச் சொல்பவை என மக்கள் நம்புகின்றனர். அதிலும் சிலருக்கு தினசரி காலையில் ராசிபலனைப் பார்த்தபின் தான் அன்றைய நாளையே தொடங்குவார்கள். ஜோதிடம் என்பது இந்து மதத்தில் மிக முக்கிய இடத்தைப் பெற்றிருக்கிறது.
நம்மில் பெரும்பாலானோருக்கும் நாளைத் துவங்கும்போது, இன்றைக்கு முழுக்க என்ன நடக்கப்போகிறது என்பதை முன்கூட்டியே உணர்ந்து செயல்பட வேண்டும் என்பதற்காக அன்றைய நாளின் ராசிபலனை பார்த்துவிட்டு தான் அடுத்த காரியத்திலேயே இறங்குவார்கள். சிலரோ இதெல்லாம் எங்க நடக்கப்போகுது? எல்லாம் பொய் என்று சொல்வார்கள். ஆனால் சிலரோ ராசிபலன்களை முழு மனதாக நம்பி, அன்றைய தின பணிகளை தொடங்குவார்கள். அப்படி இன்றைக்கு எந்த ராசிக்காரர்களுக்கு எப்படியிருக்கும் என்பதை பார்க்கலாம்.
மேஷம்
தாய்வழி உறவினர்கள் குறிப்பாக, தாய்மாமன் வழியில் ஆதாயம் உண்டாகும். இயந்திரங்கள் சம்பந்தப்பட்ட வேலை செய்பவர்கள் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும். நினைத்த காரியத்தை முடிக்க முடியாமல் இழுத்தடிக்க வேண்டியிருக்கும். தேவையில்லாத அலைச்சல்கள் உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் அடுத்தவர்களின் வேலையையும் சேர்த்துப் பார்க்க நேரிடும். இன்றைக்கு உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக 2 ம் அதிர்ஷ்ட திசையாக தெற்கும் அதிர்ஷ்ட நிறமாக காவியும் இருக்கும்.
MOST READ: நெக்ரோடைசிங் ஃபாஸ்சிடிஸ்னு ஒரு நோயா?... இது யாருக்கெல்லாம் வரும்னு தெரியுமா?
ரிஷபம்
பொதுக்கூட்டங்கள் மற்றும் பொதுவெளிகளில் உங்களுடைய பேச்சு இன்று பாராட்டுக்கள் வந்து குவியும். இதுவரை இருந்து வந்த எல்லா பிரச்னைகளுக்கும் குழப்பங்கள் நீங்கி, தெளிவான முடிவை எடுப்பீர்கள். துன்பங்கள் நீங்கி, நிம்மதி உண்டாகும். புதுவித தொழிற்பயிற்சிகளில் ஈடுபட்டு, சோதனை மேற்கொள்வீர்கள். மாணவர்களுக்கும் இன்று சாதகமான சூழலே காணப்படும். இன்றைக்கு அதிர்ஷ்டம் தரும் திசையாக மேற்கும் அதிர்ஷ்ட எண்ணாக 4ம் அதிர்ஷ்டம் தரும் நிறமாக நீல நிறமும் இருக்கும்.
மிதுனம்
பயணங்களின் மூலம் நினைத்த காரியத்தை வெற்றியுடன் முடிப்பீர்கள். சிந்தனையின் போக்கினில் மாற்றம் உண்டாகும். உடல் சோர்வின் காரணமாக எடுத்த காரியத்தை நிறைவேற்ற கால தாமதமாகும். நினைவாற்றலில் மந்தத்தன்மை ஏற்படும். சுப செய்திகளால் சுப விரயங்கள் ஏற்படும். பெற்றோர்கள் பற்றிய கவலைகள் அதிகரிக்கும். இன்றைக்கு உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக 9ம் அதிர்ஷ்ட நிறமாக ஊதாநிறமும் அதிர்ஷ்ட திசையாக மேற்கும் இருக்கும்.
கடகம்
தொழிலில் உங்களுடைய முழு திறமையும் வெளிப்படும். உங்களுடைய ஆற்றலால் உடன் பணிபுரிபவர்கள் மற்றும் உயர் அதிகாரிகளிடம் உங்களின் மதிப்பு உயரும். வீடு, மனை சம்பந்தப்பட்ட விவகாரங்களில் சின்ன சின்ன தடைகளும் தாமதங்களும் உண்டாகலாம். பொருள் சேர்க்கை போதுமான அளவில் இருக்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும். உறவினர்களுடனும் நண்பர்களுடனும் சிறிது கவனத்துடன் செயல்பட வேண்டும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக 2 ம் அதிர்ஷ்ட திசையாக வடக்கும் அதிர்ஷ்ட நிறமாக பிங்க் நிறமும் இருக்கும்.
சிம்மம்
இசை சம்பந்தப்பட்ட துறைகளில் பணிபுரிபவர்களின் திறமைக்கு அங்கீகாரம் கிடைக்கும். நண்பர்களுடைய ஆதரவினால் இதுவரை தடையாக இருந்துவந்த செயல்கள் நிறைவு பெறும். மக்கள் தொடர்பு துறையில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் உண்டாகும். பெற்றோர்களின் உடல் நலத்தில் கவனம் செலுத்த வேண்டும். எதிர்காலத்துக்கான இலக்கை நிர்ணயிக்க முயற்சி செய்வீர்கள். இன்றைக்கு உங்களுக்கு அதிர்ஷ்ட திசையாக கிழக்கும் அதிர்ஷ்ட எண்ணாக 7 ம் அதிர்ஷ்ட நிறமாக இளஞ்சிவப்பும் இருக்கும்.
கன்னி
உங்களுடைய வாக்குத் திறமையால் லாபம் அடைவீர்கள். பொருளாதார முன்னேற்றத்திற்கான முயற்சிகளை மேற்கொள்வீர்கள். புதிய நண்பர்களின் ஆதரவால் நன்மைகள் உண்டாகும். கணவன் மனைவிக்கு இடையே நெருக்கமும் அன்பும் அதிகரிக்கும். சிறந்த பேச்சுத் திறமையால் அனுகூலம் உண்டாகும். உங்களுடைய அதிர்ஷ்ட திசையாக தெற்கும், அதிர்ஷ்ட எண்ணாக 8 ம் அதிர்ஷ்ட நிறமாக அடர் சிவப்பும் இருக்கும்.
MOST READ: மகாலட்சுமி அருள் எந்த ராசிக்கு இருக்குனு தெரிஞ்சிக்கணுமா?... இத படிங்களேன்...
துலாம்
புதிதாக ஏதேனும் தொழிலில் முதலீடு செய்வதாக இருந்தால் கவனமாக இருக்க வேண்டும். கால்நடைகளிடம் கவனமுடன் செயல்பட வேண்டும். சொந்தங்களின் அருமையை உணர்ந்து கொள்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும். உடன் பிறந்தவர்களிடம் தேவையில்லாமல் வாக்குவாதத்தில் ஈடுபடாதீர்கள். பணியில் உண்டாகும் தேவையில்லாத அலைச்சல்களால் வீணான விரயச் செலவுகள் உண்டாகும். இன்றைக்கு உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக 1 ம் அதிர்ஷ்ட திசையாக வடக்கும் அதிர்ஷ்ட நிறமாக ஆரஞ்சும் இருக்கும்.
விருச்சிகம்
பொது காரியங்களில் ஈடுபடுபவர்களுக்கு சாதகமான சூழல் உண்டாகும். வேளாண்மை தொழிலில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். மனதில் தேங்கியிருந்த கவலைகளை தூக்கி எறிந்துவிட்டு மகிழ்ச்சியாக பயணிப்பீர்கள். தள்ளிப்போய்க் கொண்டிருந்த திருமண முயற்சிகள் கைகூடும். வரன்கள் வந்துசேரும். வாகனச் சேர்க்கை ஏற்படும். திறமையின் காரணமாக புதிய பொறுப்புகள் உண்டாகும். உங்களுடைய அதிர்ஷ்டமான எண்ணாக 5 ம் அதிர்ஷ்ட திசையாக கிழக்கும் அதிர்ஷ்ட நிறமாக மஞ்சளும் இருக்கும்.
தனுசு
இன்றைக்கு எந்த காரியத்தை எடுத்தாலும் கொஞ்சம் இழுபறியாகவே போகும். ஆனாலும் இதற்கு முன் நீங்கள் பார்த்த வேலையின் வெற்றியால் உயர் அதிகாரிகளால் பாராட்டப்படுவீர்கள். நண்பர்கள் மற்றும் தொழில் பங்குதாரர்களின் உதவியால் புதிய வாய்ப்புகள் உண்டாகும். தண்ணீர் சம்பந்தப்பட்ட வேலை செய்பவர்கள் கொஞ்சம் கவனத்துடன் செயல்பட வேண்டும். கடன் தொல்லைகள் உண்டாகும். சரியான நேரத்தில் கடனைத் திருப்பித் தர முடியாததால் பிறரின் மன வருத்தத்துக்கு ஆளாக நேரிடும். இன்றைக்கு உங்களுக்கு அதிர்ஷ்ட எண்ணாக 1 ம் அதிர்ஷ்ட திசையாக கிழக்கும் அதிர்ஷ்ட நிறமாக மஞ்சளும் இருக்கும்.
மகரம்
பெரியோர்களின் ஆசியுடன் இன்றைய நாளை தொடங்குவீர்கள். தொழிலில் வெற்றியை உண்டாக்கும் பல புதிய வாய்ப்புகள் வரும்.அரசாங்க வேலையில் இருப்பவர்களுக்கு மிகவும் சாதகமான சூழல் உண்டாகும். ஆன்மீகத்தில் ஈடுபாடு அதிகரிக்கும். தந்தை வழியில் இருக்கும் சொத்துக்களால் இதுவரை இருந்து வந்த பிரச்னைகள் நீங்கி, உங்களுக்கு வரவேண்டிய சொத்துக்கள் கைக்கு வந்து சேரும். இன்று உங்களுடைய அதிர்ஷ்டத்துக்கு உரிய எண்ணாக 8 ம் அதிர்ஷ்ட திசையாக தெற்கும் அதிர்ஷ்ட நிறமாக காவியும் இருக்கும்.
கும்பம்
பொது காரியங்களில் ஈடுபடும் நல்ல எண்ணங்கள் மேலோங்கி நிற்கும். அதுபோன்று பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும்போது, கொஞ்சம் அமைதியைக் கடைபிடிப்பது நல்லது. எதிர்காலம் குறித்து புதிய முடிவுகள் எடுக்க நேரிட்டால், பெரியவர்களின் ஆலோசனையைப் பெற்றுக் கொள்ள வேண்டியது அவசியம். வாகனங்களில் பயணம் செய்யும்போது, கவனமாக இருக்க வேண்டும். சந்திராஷ்டமம் உங்களுக்குத் தொடர்வதால் செய்கிற வேலைகளில் கொஞ்சம் நிதானமாக இருங்கள். இன்றைக்கு உங்களுக்கு அதிர்ஷ்டம் தரும் திசை மேற்கு, அதிர்ஷ்ட எண் 9, அதிர்ஷ்ட நிறம் பச்சை.
MOST READ: சித்தர்கள் சாப்பிட்டு பல ஆண்டுகாலம் உயிர்வாழ்ந்த வாழை இலை துவையல்... எப்படி செய்வது?...
மீனம்
உறவினர்களிடம் தேவையில்லாமல் வாயைக் கொடுத்து மாட்டிக்கொள்ளாதீர்கள். இன்றைக்கு எதிர்பாராமல் திடீர் செலவுகள் வந்து உங்களுக்கு நெருக்கடியைத் தரும். குடும்ப உறுப்பினர்களின் மீதான அக்கறையால் அவர்களைப் பற்றியே நினைத்துக் கொண்டிருப்பீர்கள். அதனால் தேவையில்லாத மனச்சோர்வு உண்டாகும். நண்பர்கள், உறவினர்கள், உடன் பணிபுரிபவர்கள் என எவரிடமும் வீண் விவாதங்களில் ஈடுபடாதீர்கள். இன்றைக்கு உங்களுக்கு அதிர்ஷ்ட எண்ணாக 6 ம் அதிர்ஷ்ட திசையாக வடக்கும் அதிர்ஷ்ட நிறமாக வெள்ளையும் இருக்கும்.