Just In
- 2 hrs ago Today Rasi Palan 19 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் நிலுவையிலுள்ள பணிகளை முடிக்க முயற்சிப்பது நல்லது...
- 7 hrs ago 12 ஆண்டுகளுக்கு பின் மேஷத்தில் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு பண மழை பொழியும்..
- 7 hrs ago 40 வருடங்கள் கழித்து கருவுற்றால் இந்த விஷயங்களை தெரிந்து கொள்ளுங்கள்!
- 8 hrs ago தழும்புகள் உங்க சருமத்தை அசிங்கமா காட்டுகிறதா? இந்த எளிய வீட்டு வைத்தியங்களை யூஸ் பண்ணுங்க..சீக்கிரம் மறையும்!
Don't Miss
- Technology யாரு சாமி நீ.. UPI.. யூடியூப்.. சிங்கிள் சார்ஜில் 6 நாட்கள் பேட்டரி.. புதிய 4ஜி போன் அறிமுகம்.. எந்த மாடல்?
- Sports தம்பி! உனக்கு இது தான் கடைசி வாய்ப்பு.. ரூ.14 கோடி வீரருக்கு நெருக்கடி.. காத்திருக்கும் ஆல்ரவுண்டர்
- Automobiles உலகம் முழுவதும் ராயல் என்ஃபீல்டு பைக்கை வாடகைக்கு எடுக்கலாம்! எப்படி தெரியுமா?
- News கிளாம்பாக்கத்தில் அலைமோதிய கூட்டம்.. நள்ளிரவில் திடீரென போராட்டத்தில் குதித்த பயணிகள்
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Movies Actress Sujitha: குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பாண்டியன் ஸ்டோர்ஸ் நாயகி.. சூப்பர்ல!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
உடலுறுப்புகளை இரக்கமின்றி வெட்டி லட்சகணக்கான மக்களை கொன்ற வரலாற்றின் கொடூர மகாராணிகள்!
மேற்கத்திய வரலாற்றாசிரியர்கள் அவரை "நவீன மெசலினா", அல்லது "பெண் கலிகுலா" என்று கூறுகிறார்கள்.கிறித்தவத்தை கைவிட மறுத்த அனைவருக்கும் எதிராக ஒரு மிருகத்தனமான சித்திரவதையை அவள் செய்தாள்.
கொடூரமான மிருகத்தனமான அரசர் என்றாலே நம் நினைவிற்கு முதலில் வருவது ஆண்கள்தான். ஏனெனில் மிருகத்தனமான குணம் என்பது ஆண்களோடு தொடர்புடையது என்று நாம் அனைவரும் நினைக்கிறோம். கொடுமையும் கொடூரமும் ஆண்களின் தனிச் சிறப்பு அல்ல. பெண்களும் இரக்கமற்றவளாகவும், காட்டுமிராண்டித்தனமாகவும், காட்டுமிராண்டியாகவும் இருந்திருக்கிறார்கள். மிருத்தனத்திற்கும், பாலினத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை என்று கடந்த காலத்தில் இருந்த சில பெண் அரசிகள் நிரூபித்திருக்கிறார்கள். பெண்கள் என்றாலே மென்மையானவர்களாகவும், சாந்தமானவர்களாகவும் இருக்க விரும்புபவர்கள் என்று கூறப்படுகிறது.
ஆனால் இதற்கு விதிவிலக்காக சில பெண் அரசிகள் ஆட்சியின் போதும் தங்கள் பதவிக்காகவும் லட்சகணக்கான மக்களையும், கணவன் மற்றும் மகன் என உறவினர்களையும் மிக கொடூரமான முறையில் கொன்று குவித்துள்ளனர். அவர்கள் யாரென்றும் எப்படி கொடூரமாக நடந்து கொண்டார்கள் என்றும் இக்கட்டுரையில் பார்க்கலாம்.
காஷ்மீர் ராணி தித்தா
'காஷ்மீரின் கத்தரின்' என்றும் 'சூனியக்கார ராணி' என்றும் அறியப்படும் ராணி தித்தா, 980 முதல் 1003 வரை காஷ்மீரின் ஆட்சியாளராக இருந்தார். இந்த பெண் 10 ஆம் நூற்றாண்டில் காஷ்மீரின் பெரும்பகுதியை ஆண்டார். அவர் தனது கணவர் சேமகுப்தாவின் ஆட்சியின் போது நிர்வாக அதிகாரத்தைக் கைப்பற்றினார். பின்னர் அவரது மகன் மற்றும் பேரன்களுக்கு ராணி ரீஜண்டாக இருந்தார். ஆனால் அவர் ஒரு ஆலோசகராக இருப்பதில் திருப்தி அடையவில்லை. அதனால், தித்தா தனது மூன்று பேரக்குழந்தைகளை இடைக்கால சித்திரவதை மற்றும் மாந்திரீக முறைகளைப் பயன்படுத்தி சூனியம் செய்து தனது அதிகாரத்தில் வைத்திருந்தார். 23 நீண்ட ஆண்டுகள் மன்னராக ஆட்சி செய்தார். தன் குடும்பத்தினர் உட்பட தனக்கு எதிராகத் திரும்பியவர்களை தூக்கிலிட்டாள். ராணி தித்தா இரக்கமற்றவளாக இருந்தபோதிலும், அவர் இன்று காஷ்மீரின் மிகச்சிறந்த நபர்களில் ஒருவராக நினைவுகூரப்படுகிறார். அவரது பெயர் அவரது கணவருடன் சேர்ந்து அந்தக் கால நாணயங்களில் அச்சிடப்பட்டது.
மடகாஸ்கரின் ராணி ரணவலோனா
19 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ராணி ரணவலோனாவை 'பைத்தியக்கார ராணி' மற்றும் 'பித்து பிடித்த ராணி' என்றே அழைப்பார்கள். அதற்கு பல காரணங்கள் இருந்தன. தனக்குப் பிறகு அதிகாரத்தில் அமர்வதற்காக தனது கணவருக்கு விஷம் கொடுத்து அவள் கொன்றதாக கூறப்படுகிறது. அதன்பின்னர், மடகாஸ்கரில் 33 ஆண்டுகள் கொடூரமான முறையில் ஆட்சி செய்தார். மேற்கத்திய வரலாற்றாசிரியர்கள் அவரை "நவீன மெசலினா", அல்லது "பெண் கலிகுலா" என்று கூறுகிறார்கள்.கிறித்தவத்தை கைவிட மறுத்த அனைவருக்கும் எதிராக ஒரு மிருகத்தனமான சித்திரவதையை அவள் செய்தாள்.
உடலுறுப்புகளை துண்டித்து கொலை செய்தாள்
மக்களின் உடல் உறுப்புகள் துண்டிக்கப்படுவதும், எரிக்கப்படுவதும் அல்லது குன்றிலிருந்து தூக்கி எறியப்படுவதுமாக மிகக்கொடூரமான முறையில் கொலை செய்தாள். இந்த வழியில் அவள் தீவின் மக்கள்தொகையில் பாதி மக்களை கொன்று குவித்தால் என்று கூறப்படுகிறது. மடகாஸ்கரை ஐரோப்பிய காலனித்துவத்திலிருந்து விடுவிப்பதே அவளது நோக்கமாக இருந்தது. ராணி ரணவலோனா வெளிநாட்டினரை தீவிலிருந்து வெளியேற்றினார் மற்றும் அவர் கையெழுத்திட்ட அனைத்து சர்வதேச ஒப்பந்தங்களையும் முறித்தார். இறுதியில், 1861இல் அவர் இறந்தார்.
பைசான்டியத்தின் ஐரீன்
கான்ஸ்டான்டிநோபிள் ரோமானியப் பேரரசின் தலைநகராக இருந்தது. எட்டாம் நூற்றாண்டில், வாழ்ந்த ஐரீன் பேரரசர் லியோ IV ஐ மணந்தார். லியோ IV ஐ இறந்தபோது ஐரீன் தனது 10 வயது மகன் கான்ஸ்டன்டைன் VI சார்பாக ஆட்சியை ஏற்றுக்கொண்டார். அவரது ஆட்சிக்காலம் 11 ஆண்டுகள் நீடித்தபோது, அவர் மட்டுமே திறமையான ஆட்சியாளராக இருந்தார். 790இல், தன் அதிகாரத்தைப் பயன்படுத்தி, தன் மகன் வயது முதிர்ந்தவனாக இருந்தாலும், அரசில் தனக்கு எப்போதும் முன்னுரிமை இருக்கும் என்று ஆணையிட்டாள். இது சதித்திட்டங்களுக்கு வழிவகுத்தது. ஐரீன் குற்றவாளிகளை தண்டித்தார், அவரது மகனை சிறையில் அடைத்தார் மற்றும் அவருக்கு விசுவாசமாக இருக்க இராணுவத்தை கட்டாயப்படுத்தினார்.
மகனையே கொலை செய்தாள்
கான்ஸ்டன்டைன் தனது தாயிடம் இருந்து அதிகாரத்தைத் திரும்பப் பெற முடிவு செய்தபோது, அவர் பேரரசியாக உறுதிப்படுத்தப்பட்டார். இருப்பினும், சில ஆண்டுகளுக்குப் பிறகு, ஐரீனின் உத்தரவின் பேரில் சிறையில் அடைக்கப்பட்டு கண்மூடித்தனமாக தனது மகனுக்கு எதிராக அவளே ஒரு சதித்திட்டத்தை தீட்டினாள். கான்ஸ்டன்டைனின் மரணத்திற்குப் பிறகு, பைசண்டைன் பேரரசின் வரலாற்றில் தனது சிம்மாசனத்தை தனது சொந்த பெயரில் ஆக்கிரமித்த முதல் பேரரசியாக ஐரீன் இருந்தார்.
பிரான்சின் இசபெல்லா, இங்கிலாந்து ராணி
"ஃபிரான்ஸின் ஓநாய்" என்று ஆங்கிலேயர்களால் அறியப்பட்ட இசபெல்லா, ஓரினச்சேர்க்கையாளரான கிங் எட்வர்ட் II ஐ மணந்தார். இங்கிலாந்தின் ராணி இரண்டாம் எட்வர்ட் மன்னரின் மனைவியாகவும், 1327 முதல் 1330 வரை இங்கிலாந்தின் ரீஜண்டாகவும் இருந்தார். பல வருட ஏமாற்றங்கள், அவமானங்கள் மற்றும் எதிர்காலத்தை தோற்றுவித்த எட்வர்ட் III க்கு பிறகு, இசபெல்லா பிரான்சுக்குத் திரும்ப வேண்டியிருந்தது. அங்கிருந்து அவர் தனது சகோதரரான பிரான்சின் மன்னர் சார்லஸ் IV இன் பாதுகாப்பின் கீழ் செயல்படத் தொடங்கினார். லார்ட் ரோஜர் மார்டிமர் உட்பட தனது கணவரின் எதிரிகள் அனைவரையும் ஒன்றிணைத்தார். அவர்கள் கூலிப்படையைக் கூட்டி, செப்டம்பர் 22, 1326 அன்று ஃபிளாண்டர்ஸை விட்டு இங்கிலாந்துக்குப் புறப்பட்டனர்.
பிரெஞ்சு ஓநாய்
ஆங்கில வரலாற்றில் மிகவும் மோசமான பெண்களில் ஒருவரான பிரான்சின் இசபெல்லா இங்கிலாந்தின் மீதான படையெடுப்பிற்கு தலைமை தாங்கினார். மேலும், அவர் 1327 இல் இரண்டாம் எட்வர்ட் மன்னரின் பதவி விலகலில் முக்கிய பங்கு வகித்தார். எட்வர்ட் III, அவரது மகன், ரீஜென்சியின் சூழ்ச்சிகளால் இசபெல்லா சோர்வடைந்தார். மோர்டிமர் மீது தேசத்துரோகம் என்று குற்றம் சாட்டினார் மற்றும் அவரது தாயை வீட்டுக் காவலில் வைக்க உத்தரவிட்டார், இது கிட்டத்தட்ட 30 ஆண்டுகள் நீடித்தது. இறுதியில் இசபெல்லா தனது 63 வயதில் மரணமடைந்தார். வதந்திகளின்படி, "பிரெஞ்சு ஓநாய்" மூலம் படுகொலை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
மெரோவிங்கியன் பேரரசின் ராணி ஃப்ரெடகுண்டா
இந்த ராணி தனது வாழ்க்கையில் தொடர்ச்சியான கொலைகளை செய்துவந்துள்ளார். ராணி ஃப்ரெடகுண்டா 6 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். சில்பெரிக் I இன் மூன்றாவது மனைவி மற்றும் அவரது மரணம் வரை ராணி புருனெகில்டாவுக்கு எதிராக போராடினார். 561 ஆம் ஆண்டில், கிங் க்ளோடேர் I இறந்தார். ஃபிராங்கிஷ் ராஜ்யத்தை முழுமையான குழப்பத்தில் விட்டுவிட்டார். மேலும் அவரது 4 மகன்களான சில்பெரிக், சிகிபெர்டோ, கோண்ட்ரான் மற்றும் கரிபெர்டோ இடையே ராஜ்ஜியம் பிரிக்கும் போர் நடந்தது. இது உள்நாட்டுப் போர்கள் மற்றும் பயங்கரமான படுகொலைகளின் காலத்தை குறிக்கிறது. சிகிபெர்டோ விசிகோத் மன்னர்களின் மகளான புருனெகில்டாவை மணந்தார். மேலும் சில்பெரிக் தனது தங்கையான கால்ஸ்விண்டாவை மணந்தார். ஏற்கனவே சில்பெரிகோவின் துணைவியாக இருந்த ஃப்ரெடகுண்டா, அவளை கழுத்தை நெரித்து கொன்றார், இதனால் கடுமையான தாக்குதல் தொடங்கியது.
உறவினர்களை கொலை செய்தாள்
சிகிபெர்டோவை குத்துவதற்கு ஃப்ரெடகுண்டா இரண்டு அடிமைகளை அனுப்பினார். புருனெகில்டா சில்பெரிகோவின் கைகளில் சிக்கினார், அவர் சிறையில் அடைக்கப்பட்டார், ஆனால் அவர் சில்பெரிகோவின் மகனான மெரோவியோவை மயக்கினார், பின்னர் அவர் திருமணம் செய்துகொண்டார். இது மிகவும் சிக்கலான வரலாறு ஆகும். சில வரிகளில் சுருக்கமாகக் கூறுவது மிகவும் கடினம். உண்மை என்னவென்றால், ஃப்ரெடெகுண்டே, தனது மகன் க்ளோடேர் II க்கு சிம்மாசனத்தின் வரிசையை உறுதி செய்வதற்காக, தனது கணவரின் மற்ற குழந்தைகள் மற்றும் உறவினர்கள் அனைவரையும் கொன்று, கிளர்ச்சிகளை அடக்கி, மெரோவிங்கியர்களின் நல்ல செயல்பாட்டை ஒருங்கிணைத்தார். அதன்பின்னர், க்ளோடேர் II ராஜாவாக இருந்தார். தங்கள் லட்சியங்களுக்குத் தடையாக நிற்கத் துணிந்த அனைவரையும் தூக்கிலிட்ட, காட்டிக் கொடுத்து, கொலை செய்த கொடூரமான ராணிகள் வரலாற்றில் இருந்துள்ளனர்.