Just In
- 1 hr ago 18 ஆண்டுகளுக்கு பின் நிகழும் ராகு சூரிய சுக்கிர சேர்க்கை: மார்ச் 31 முதல் இந்த 3 ராசிக்கு பண மழை கொட்டும்..
- 3 hrs ago இட்லி, தோசைக்கு ஒருமுறை இப்படி தக்காளியை குருமாவை செஞ்சு பாருங்க.. அடிக்கடி செய்வீங்க..
- 11 hrs ago கும்ப ராசியில் உதயமாகும் சனி: இன்று முதல் இந்த 3 ராசிக்கு தொழிலில் முன்னேற்றம் ஏற்படப்போகுது..
- 13 hrs ago உங்களுக்கு கொலஸ்ட்ரால் இருக்கா? மறந்தும் இந்த சப்ளிமென்டுகளை எடுக்காதீங்க.. அப்புறம் கஷ்டப்படுவீங்க..
Don't Miss
- Education கல்வித்தரத்தில் சமரசம் செய்துகொள்ள எம்ஓபி வைஷ்ணவ் மகளிர் கல்லூரி
- Movies Shaitaan Box office: ஜோதிகாவின் ஷைத்தான்.. மொத்த வசூல் எவ்வளவு தெரியுமா?
- Technology ஆதார் அப்டேட் செய்ய போறீங்களா? தெரியாம கூட இந்த தவறை செய்யாதீர்கள்.. கணக்கு வைக்கும் UIDAI ஆணையம்..
- News எல்.முருகனுக்கு டெல்லி டாஸ்க்! கச்சிதமாக செஞ்சு முடிச்சிட்டாரே! எடப்பாடி இதை எதிர்பார்த்து மாட்டாரு
- Finance கடனில் மூழ்கியுள்ள பியூச்சர் குரூப் கிஷோர் பியானி.. மும்பையில் மால் வாங்க போகிறாராம்..!!
- Sports சர்ஃபராஸ் கான், ஜுரேலுக்கு அடித்த ஜாக்பாட்.. ஆனால் ரிஷப் பண்ட்டுக்கு.. பிசிசிஐ வைத்த ட்விஸ்ட்
- Automobiles கேரளாவில் தவெக தலைவர் விஜய்யை பார்க்க இவ்வளவு கூட்டமா? கேரளாவுல நின்னா வெற்றி கன்ஃபார்ம்!
- Travel தமிழ்நாட்டின் அரண்மனை கிராமம் இது தான் – தமிழர்கள் ஒவ்வொருவரும் கட்டாயம் பார்க்க வேண்டியம் இடம்!
இந்த ராசிக்காரங்க ஆபத்தான அதிபுத்திசாலியா இருப்பாங்களாம்... உஷாரா இருந்துக்கோங்க...!
ஒரு விஷயத்தை கற்றுக்கொள்வது புத்திசாலித்தனமல்ல, கற்றுக்கொண்டதை சரியான சமயத்தில் உபயோகிப்பதே உண்மையான புத்திசாலித்தனம்.
இந்த உலகத்தில் முட்டாள்கள், புத்திசாலிகள், அதிபுத்திசாலிகள் என அனைத்து விதமான மனிதர்களும் இருக்கத்தான் செய்கின்றனர். அனைவருக்குமே ஒரே அளவிலான மூளைதான் உள்ளது, ஆனால் அதனை ஒவ்வொருவரும் எப்படி பயன்படுத்துகின்றனர் என்பதை பொறுத்துதான் ஒருவரின் மூளையின் செயல்திறன் நிர்ணயிக்கப்படுகிறது. வல்லவனுக்கு வல்லவன் உலகில் இருப்பார்கள் என்று கூற நாம் பார்க்கும் ஒவ்வொருவரும் ஒருவரை விட ஒருவர் புத்திசாலியாக இருக்கிறார்கள்.
சிலர் பிறக்கும்போது அதிகளவு புத்திக்கூர்மையுடன் பிறப்பார்கள், சிலர் தங்களின் சொந்த முயற்சியின் மூலம் தங்களின் அறிவாற்றலை வளர்த்துக் கொள்கிறார்கள். ஒரு விஷயத்தை கற்றுக்கொள்வது புத்திசாலித்தனமல்ல, கற்றுக்கொண்டதை சரியான சமயத்தில் உபயோகிப்பதே உண்மையான புத்திசாலித்தனம். நம்முடைய புத்திக்கூர்மையை நிர்ணயிப்பதில் நமது பிறந்த ராசி முக்கியப்பங்கு வகிக்கிறது. இந்த பதிவில் எந்தெந்த ராசிக்காரர்கள் ஆபத்தான அதிபுத்திசாலிகளாக இருப்பார்கள் என்று பார்க்கலாம்.
கன்னி
கன்னி ராசிக்காரர்கள் தங்களுக்கு எவ்வளவு விஷயங்கள் தெரிந்திருந்தாலும் மேலும் புதிய விஷயங்களை கற்றுக்கொண்டே இருப்பார்கள். அவர்களின் கற்றுக்கொள்ளும் ஆர்வமும், கவனமும் மற்றவர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தும். இவர்கள் விழிப்புடன் இருப்பதுடன் கற்றுக்கொள்வதை பகுப்பாய்வு செய்தும் பார்ப்பார்கள். உங்களை வெல்லவோ அல்லது முறியடிக்கவோ அவர்கள் முடிவு செய்துவிட்டால் அதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் முன்கூட்டியே செய்துவிடுவார்கள். ஜோதிட சாஸ்திரத்தின் படி இவர்கள் புத்திசாலி ராசிகளில் ஒருவராக அறியப்படுகிறார்கள். எனவே இவர்களை ஒருபோதும் குறைத்து மதிப்பிடாதீர்கள். ஒருவரை வெல்ல நினைத்தால் இவர்கள் நிச்சயம் அதனை செய்தே தீருவார்கள்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்கள் அவர்களின் நுண்ணறிவிற்கு புகழ் பெற்றவர்களாக இருப்பார்கள். மற்றவர்கள் கவனிக்க தவறுவதை இவர்கள் சரியாக கவனிப்பார்கள். சூழ்நிலைகள் பதற்றமடையும்போதும் இவர்கள் உணர்ச்சிவசப்படாமல் அமைதியாக இருப்பார்கள். எந்தவொரு விஷயத்தையும் தனிப்பட்ட முறையில் இவர்கள் எடுத்துக்கொள்ள மாட்டார்கள், இலக்குகளை அடைவதில் மட்டும் கவனம் செலுத்துவார்கள். கும்ப ராசிக்காரர்கள் கணிக்க முடியாதவர்கள், எனவே அவர்கள் அடுத்து என்ன செய்யப்போகிறார்கள் என்பதை கணிக்க இயலாது.
மகரம்
மகர ராசிக்காரர்களடம் பல சிறந்த குணங்கள் இருக்கும். ஞானம், பொறுமை மற்றும் கடினமாக உழைக்கும் திறன் என பல குணங்கள் இவர்களிடம் இருக்கும். அதனால்தான் அவர்கள் எவ்வளவு புத்திசாலிகள் என்பதை மறந்துவிடுவது எளிது. ஒரு மகர ராசிக்காரரை நீங்கள் விரும்பினால் நீங்கள் பெரிய விளையாட்டை விளையாட வேண்டியிருக்கும், குறிப்பாக வேலையில் அவர்களை வெல்ல விரும்பினால் நீங்கள் கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். இவர்கள் உடனடியான வெற்றியை விட உறுதியான வெற்றியையே விரும்புவார்கள்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களின் புத்திக்கூர்மையை தெரிந்து கொள்ள வேண்டுமென்றால் அவர்களுடன் உரையாடினால் மட்டுமே முடியும். இவர்கள் நேர்மையானவர்களாகவும், எது சரி, எது தவறு என்று சரியாக கணிக்கக்கூடியவர்களாகவும் இருப்பார்கள். இவர்களிடம் எப்பொழுதும் ஒரு நேர்மறையான நம்பிக்கை இருக்கும். அவர்களின் நம்பிக்கைக்கு அச்சுறுத்தல் ஏற்படும் போது இவர்கள் தங்களின் உண்மையான பலத்தை வெளிப்படுத்த நேரிடும். நட்பான, வசீகரமான இவர்கள் புத்திசாலிகளாகவும் இருப்பது நமக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தலாம். உங்களை மிஞ்ச அவர்கள் விரும்பினால் அதற்கு அதீத முயற்சி எடுக்க வேண்டுமென்ற அவசியமே இவர்களுக்கு இல்லை.
மிதுனம்
தனுசு ராசிக்காரர்களைப் போலவே மிதுன ராசிக்காரர்களும் சிறந்த தொடர்பாளராகவும், புத்திசாலியாகவும் இருப்பார்கள். கூர்மையான செயல்திறன் கொண்ட இவர்கள் மற்றவர்களை மிஞ்சுவதற்கு அதிக முயற்சி எடுக்க வேண்டுமென்ற அவசியமே இல்லை. சரியான கேள்விகளை சரியான இடத்தில் கேட்கும் ஆற்றல் கொண்ட இவர்கள் தங்களின் கேள்விகளின் மூலமே எதிராளிகளை வாயடைத்து போக செய்துவிடுவார்கள். நீங்கள் இவர்களுடன் உரையாடல் நடத்தினால் சில நிமிடங்களிலேயே உங்களுக்குள் இருக்கும் சிறந்த குணத்தை கண்டறிந்து விடுவார்கள். இவர்களிடம் ரகசியங்களை ஒளித்து வைக்க முடியாது.
MOST READ:ஜல்லிக்கட்டில் மொத்தம் எத்தனை வகைகள் உள்ளது தெரியுமா? ஜல்லிக்கட்டின் தெரியாத வரலாறு...!
ரிஷபம்
புத்திசாலி ரிஷப ராசிக்காரர்கள் ஒருபோதும் தங்களின் முயற்சியை விட்டுக்கொடுக்க மாட்டார்கள். நினைத்ததை அடையும் வரை எதையாவது செய்து கொண்டே இருப்பார்கள். எந்தவொரு விஷயத்தையும் அவசரப்பட்டு இவர்கள் செய்யமாட்டார்கள். இவர்கள் ஒரு அடி எடுத்து வைத்தால் அதற்கு பின்னால் பெரிய ஆய்வும், அதன் விளைவுகள் எப்படி இருக்கும் என்பதையும் கணித்து வைத்திருப்பார்கள். உங்களை தயார்படுத்திக் கொள்ளாமல் ஒருபோதும் ரிஷப ராசிக்காரருடன் போட்டியில் இறங்க வேண்டாம்.