Just In
- 46 min ago கோடையில் இரவு தூங்கும் முன் இதை முகத்தில் தடவுங்கள்.. உங்கள் சருமம் அழகாகவும் பளப்பளப்பாகவும் இருக்கும்..!
- 2 hrs ago கேரளாவின் அடையாளங்களில் ஒன்றான இந்த குட்டி மாட்டின் பால்தான் உலகிலேயே சத்தான பாலாம் தெரியுமா?
- 3 hrs ago கத்திரிக்காயை இந்த மாதிரி ஒருமுறை பொரியல் செய்யுங்க.. பிடிக்காதவங்களும் கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க...
- 3 hrs ago ஹிட்லரின் நாஜி முகாமில் நடத்தப்பட்ட திகிலூட்டும் சோதனைகள் என்னென்ன தெரியுமா? முக்கியமா இரட்டை குழந்தைகள் மீது!
Don't Miss
- News இலங்கையில் ரூ7,500 கோடி மதிப்பிலான 802 கிலோ எடை ரத்தினக் கல்- உலகிலேயே மிகப் பெரியது!
- Technology ஆளுக்கு 1 ஆர்டர்.. ரூ.10,999 போதும்.. 50எம்பி கேமரா.. புதிய Realme 5ஜி போன்கள் அறிமுகம்.. எந்த மாடல்?
- Automobiles நம்ம இந்திய நிறுவனத்தின் தயாரிப்பா இதுனு எல்லாரும் வாயடைச்சு போயிட்டாங்க! எஃப்77 மேக்2 இ-பைக் அறிமுகம்!
- Finance சிங்கப்பூர் அடுத்து ஐரோப்பா கொடுத்த ஷாக்.. அச்சுறுத்தும் எத்திலீன் ஆக்சைடு கெமிக்கல்..!!
- Movies அஜித் பிறந்தநாளுக்கு அல்லு அர்ஜுனின் தாறுமாறான ட்ரீட்.. புஷ்பா 2 ஃபர்ஸ்ட் சிங்கிள் அப்டேட் இதோ!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
- Sports இன்னும் 6 போட்டி.. 3ல் அடிவாங்கினால் சோலி முடிஞ்ச்.. பிளே ஆஃப் செல்ல சிஎஸ்கே என்ன செய்ய வேண்டும்?
- Education இலவச கட்டணத்துடன் தனியார் சுயநிதி பள்ளிகளில் சேர வேண்டுமா...ஆன்-லைனில் அப்ளை பண்ணுங்க....!!
இந்து மத பூஜைகளில் ஏன் சங்கு ஊதப்படுகிறது தெரியுமா? அதனால் கிடைக்கும் அற்புத பலன்கள் என்ன தெரியுமா?
இந்து மதத்தில் பல கடவுள்கள் கையில் சங்கு வைத்திருப்பார்கள். ஆனால் சங்கு பொதுவாக காக்கும் கடவுளான திருமாலின் அடையாளமாக கூறப்படுகிறது.
இந்தியா பல விசித்திரமான பழக்கவழக்கங்களையும், சடங்குகளையும் கொண்டது. குறிப்பாக இந்து மதத்தில் கடவுள் வழிபாட்டில் பல வித்தியாசமான சடங்குகள் உள்ளது. அதில் முக்கியமான ஒன்றுதான் பூஜையின் போது சங்கு ஒலிப்பது. கோவிலாக இருந்தாலும், வீட்டு பூஜையாக இருந்தாலும் சங்கு ஒலிப்பது என்பது முக்கியமான ஒன்றாகும்.
இந்து மதத்தில் பல கடவுள்கள் கையில் சங்கு வைத்திருப்பார்கள். ஆனால் சங்கு பொதுவாக காக்கும் கடவுளான திருமாலின் அடையாளமாக கூறப்படுகிறது. இந்த பதிவில் ஏன் அனைத்து பூஜைகளுக்கு முன்னரும் சங்கு ஒலிக்கப்படுகிறது என்பதை பார்க்கலாம்.
புராதன நம்பிக்கை
புராதனகால நம்பிக்கைகளின் படி தேவர்களும், அசுரர்களும் பாற்கடலை அமிர்தத்திற்காக கடைந்த போது கடலில் இருந்து வெளியே வந்ததுதான் சங்கு ஆகும். இதனால் இந்து மத வழிபட்டு முறைகளில் இதற்கு அதிக முக்கியத்துவம் அழிக்கப்படுகிறது. பல கடவுள்கள் கையில் வைத்திருப்பதால் இது புனிதத்தின் அடையாளமாக கருதப்படுகிறது.
ஆயுர்வேதம்
ஆன்மீகம் தவிர்த்து அறிவியல்ரீதியாகவும் சங்கிலிருந்து வெளிப்படும் ஒலிக்கு அதிக முக்கியத்துவம் இருக்கிறது. சங்கு சரியாக ஒலிக்கப்படும் போது அது சுற்றுப்புறத்தில் இருக்கும் நிறைய மனிதர்களுக்கு தீங்கு விளைவிக்கும் நுண்ணுயிர்களை அழிக்கிறது.
வீட்டை சுத்தம் செய்யும் பழைய முறை
வீட்டை பாக்டீரியா மற்றும் வைரஸ்களிடம் இருந்து பாதுகாக்க எப்படி சாணத்தை கரைத்து வீட்டில் பூசுவார்களோ அதேபோல சங்கு ஊதுவதும் வீட்டை சுத்தம் செய்யும் ஒரு முறையாகும். இது வீட்டில் உள்ளவர்களை பல நோய்த்தொற்றுகளில் இருந்து பாதுகாக்கும் முறையாகும்.
MOST READ:மொச்சைக்கொட்டை சாப்பிடுவது உங்களை எத்தனை ஆபத்தான நோய்களில் இருந்து பாதுகாக்கும் தெரியுமா?
பூஜைக்கு முன்
முன்னரே குறிப்பிட்டது போல இந்து மதத்தில் சங்குக்கு என்று ஒரு முக்கியத்துவம் உள்ளது, பூஜைகளில் இது பயன்படுத்தப்பட காரணங்களும் உள்ளது. வராக புராணத்தில் குறிப்பிட்டுள்ளபடி சங்கு ஊதாமல் எந்த கோவிலின் கதவும் திறக்கப்படாது.
சக்திவாய்ந்த அதிர்வுகள்
சங்கை ஊதும்போது அதிலிருந்து சக்திவாய்ந்த அதிர்வுகள் வெளிப்படும் என்பது நாம் அறிந்ததுதான். பூஜையின் போது இதிலிருந்து வரும் சக்திவாய்ந்த அதிர்வுகள் நம்மை சுற்றியிருக்கும் எதிர்மறை ஆற்றல்களை விரட்டும் என்று கூறப்படுகிறது. மேலும் இது ஆற்றலை ஒரு இடத்தில் குவிக்கும் மையப்புள்ளியாகவும் இருக்கிறது.
சாதாரண மனிதர்களுக்கு
சாதாரண மக்களுக்கு புரியும்படி கூற வேண்டுமென்றால் பூஜையின் போது மணி அடிப்பது எப்படி கவனத்தை ஈர்த்து காஸ்மிக் ஆற்றலை உருவாக்குகிறதோ சங்கு ஒலிப்பது அதனை விட சக்திவாய்ந்த ஒன்றாகும்.
MOST READ:விநாயகர் சந்திரனுக்கு கொடுத்த சாபம் என்ன அதனால் ஏற்பட்ட மோசமான விளைவுகள் என்ன தெரியுமா?
மற்ற பயன்கள்
பூஜைகளுக்கு மட்டுமன்றி சங்கு பல பலன்களை வழங்கக்கூடியதாக இருக்கிறது. வாஸ்துவை பொறுத்தவரையில் இது மிகவும் பயனுள்ள ஒன்றாகும். வீட்டின் சரியான திசையில் சங்கை வைப்பது உங்கள் வீட்டிற்கு லக்ஷ்மி தேவியின் அருளை பெற்றுத்தரும். சங்கில் குளிப்பது, தண்ணீர் குடிப்பது என ஒவ்வொன்றும் உங்களுக்கு ஒரு பலனை வழங்கக்கூடியது.