Just In
- 1 hr ago இட்லி, தோசைக்கு ஒருமுறை இப்படி தக்காளியை குருமாவை செஞ்சு பாருங்க.. அடிக்கடி செய்வீங்க..
- 9 hrs ago கும்ப ராசியில் உதயமாகும் சனி: இன்று முதல் இந்த 3 ராசிக்கு தொழிலில் முன்னேற்றம் ஏற்படப்போகுது..
- 11 hrs ago உங்களுக்கு கொலஸ்ட்ரால் இருக்கா? மறந்தும் இந்த சப்ளிமென்டுகளை எடுக்காதீங்க.. அப்புறம் கஷ்டப்படுவீங்க..
- 13 hrs ago உங்க மூக்கு மேல கருப்பா சொரசொரன்னு இருக்கா? அப்ப தினமும் நைட் டைம்-ல இந்த ஃபேஸ் பேக்கை போடுங்க...
Don't Miss
- Finance ரூ.10 லட்சத்திற்கு கீழ் கிடைக்கும் செகண்ட்ஹேண்ட் கார் கார்கள்? உங்களின் சாய்ஸ் எது?
- News மக்களவை தேர்தலில் பாமகவுக்கு 10 தொகுதிகள்! ஒப்பந்தத்தில் ஒரு மெகா ட்விஸ்ட்டை பார்த்தீர்களா?
- Movies ஜெயமோகன் அப்படி பேசியிருக்கக்கூடாது.. மஞ்சும்மல் பாய்ஸுக்காக களமிறங்கிய பாக்யராஜ்
- Sports "ரோஹித் எனக்கு கீழ் ஆடுவது".. எல்லை மீறிவிட்டார் ஹர்திக் பாண்டியா.. ரசிகர்கள் கொந்தளிப்பு
- Technology வாரித்தூக்குது ஆர்டர்.. ரூ.11,999 பட்ஜெட்ல 6000mAh பேட்டரி.. 50MP கேமரா.. AMOLED டிஸ்பிளே.. எந்த மாடல்?
- Automobiles கொஞ்ச நேரத்துல உயிர் போய்ட்டு வந்துச்சு!! தப்பிக்க, பைக்கில் இதையெல்லாம் டிரை செய்து பாருங்க!
- Travel தமிழ்நாட்டின் அரண்மனை கிராமம் இது தான் – தமிழர்கள் ஒவ்வொருவரும் கட்டாயம் பார்க்க வேண்டியம் இடம்!
- Education தரமான கல்வியைத் தர உறுதி பூண்டுள்ள பிஎம் ஸ்ரீ பள்ளி திட்டம்...!!
இந்த குழந்தைகளுக்கு இவங்க ரெண்டுபேரும் தான் அப்பா அம்மாவாம்... ரெண்டுபேரும் பால் கொடுக்கலாமா?
தன்னுடைய தோழிக்கு பிரசவமாகி, அந்த குழந்தைக்கு பாலூட்டும் மற்றொரு பெண்ணைப் பற்றிய சுவாரஸ்ய கதையைப் பற்றி தான் இந்த கட்டுரையில் பார்க்கப் போகிறோம்.
கருத்தரித்தல், குழந்தைப் பேறு இவை பெரும் சவாலான விஷயம். ஒருபாலின பெற்றோர் என்றால் குழந்தைப் பேறு எவ்வளவு சிக்கலானது என்பது சொல்லி தெரியவேண்டியதில்லை.
ஒரு பாலின இணையில் கருத்தரித்து பெற்றெடுக்காத தாயும், பால் சுரப்பதற்கான தூண்டுதல் சிகிச்சை மூலம் குழந்தைக்கு பாலூட்டும் செய்தியும் புகைப்படங்களும் வைரலாக பரவி வருகின்றன.
இரண்டாண்டு போராட்டம்
ஜாக்லின் மற்றும் கெல்லிஃபெய்ஃபர் இருவரும் ஒருபாலின தம்பதியர். இருவரும் 2016 ஜனவரி முதல் குழந்தைப் பேற்றுக்காக முயற்சி செய்து வந்தனர். இரண்டாண்டு காலத்திற்கு மேலாக கணக்கற்ற சிகிச்சைகளுக்கு ஏறத்தாழ 21,000 டாலர் செலவு செய்துள்ளனர். தம்பதியரின் சினைப்பையிலிருந்து 58 கருமுட்டைகள் எடுக்கப்பட்டு 20 கருவூட்டல் முயற்சிகள் செய்யப்பட்டன. அவர்களுள் கெல்லி ஃபெய்ஃபர், மே மாதம் ஜாக்சன், எல்லா என்ற இரட்டைக் குழந்தைகளை பெற்றெடுத்தார்.
பெயர் தெரியாத தந்தை
ஒரு கருத்தரித்தல் மூலம் பிறந்ததினால் குழந்தைகள் இரட்டையர்தாம். பெயர் அறியப்படாத கொடையாளர் ஒருவர் அளித்த விந்தணுவிலிருந்து பிறந்ததினால், அவர்தாம் இக்குழந்தைகளின் தந்தை. ஆனால், கருமுட்டை வெவ்வேறு பெண்களிடமிருந்து எடுக்கப்பட்டபடியினால், இரட்டையரின் உயிரியல் ரீதியான தாய் வேறுவேறானவர்கள். கருவூட்டப்பட்ட இந்த சினைமுட்டைகள் கெல்லியின் கருப்பையினுள் வைக்கப்பட்டன.
ஏற்கனவே தாய்மையடைந்தவர்
தம்பதியரில் மருத்துவ காரணங்களால் ஜாக்லினுக்கு கருத்தரிக்க இயலவில்லை. தான் முன்பு கொண்டிருந்த உறவின் மூலம் கெல்லி மூன்று குழந்தைகளை பெற்றெடுத்துள்ளார். ஆகவே, இப்போதும் கெல்லியே கருத்தரிக்கும் பொறுப்பை ஏற்றுக்கொண்டுள்ளார். குழந்தைகளை பிரசவித்தமையால் அவரால் பாலூட்ட முடிகிறது.
பிரசவிக்காமல் பாலூட்டும் தாய்
குழந்தையை பிரசவிக்காத பெண்களும் ஹார்மோன் சிகிச்சை அல்லது உடலில் பால் சுரக்கும் வரைக்கும் தூண்டுதல் சிகிச்சை பெறுவதன் மூலம் தாய்ப் பாலூட்ட இயலும் என்று ஆய்வுகள் கூறுகின்றன. அதன்படி ஜாக்லின், தாய்ப்பால் தூண்டுதல் சிகிச்சை பெற்று இரட்டையர்கள் ஜாக்சன் மற்றும் எல்லாவுக்கு பாலூட்டி வருகிறார்.
கெல்லியும் ஜாக்லினும் இரட்டை குழந்தைகளுக்கு ஆசையாய் பாலூட்டும் படங்களே வைரலாய் பரவி வருகின்றன.