Just In
- 54 min ago இந்த ராசிக்காரர்கள் திருப்பதிக்கு அடிக்கடி போகக்கூடாது.. ஏன் தெரியுமா?
- 2 hrs ago தோசை மாவு இல்லையா? வேர்க்கடலையை வெச்சு இப்படி தோசை சுடுங்க.. வேற லெவல் டேஸ்ட்ல இருக்கும்..
- 5 hrs ago Today Rasi Palan 25 April 2024: இன்று இந்த ராசிக்காரர்களுக்கு புதிய நபர்களுடன் பழகும் போது கவனம் தேவை...
- 10 hrs ago 18 ஆண்டுகளுக்கு பின் உருவாகியுள்ள அங்காரக யோகம்: ஜூன் வரை இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்...
Don't Miss
- Finance ஆதார் அட்டை தொலைஞ்சி போயிடுச்சா.. கவலை வேண்டாம், இதை மட்டும் பாலோ பண்ணுங்க..!
- News கட்சியையே உடைக்கும் அளவிற்கு கோபம்.. வேலையை தொடங்கிய முக்கிய புள்ளி.. ஆட்டம் காணும் "அந்த" கட்சி?
- Movies கீர்த்தி சுரேஷ் என்ன இப்படி மாறிட்டாரு.. பாலிவுட் நடிகரை கட்டிப் பிடித்து தீயாக பரவும் வீடியோ!
- Technology மினிமம் பேலன்ஸ் விதிகள்.. மே.1 முதல் அமல்.. உங்க அக்கவுண்ட்டில் ரூ.5000 வேண்டும்.. எந்த வங்கிக்கு எவ்வளவு?
- Sports தோனி கிடையாது! இந்த 28 வயது வீரர் தான் மிகவும் அபாயகரமான வீரர்.. மேத்தீவ் ஹைடன் கருத்து
- Automobiles அன்-ரிசர்வ் இரயில் பெட்டியை எல்லாம் அகற்ற வேண்டிய நேரம் வரும்!! பிரதமர் உறுதியா கூறியிருக்காரு!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
எடையை குறைக்க 382 நாட்கள் சாப்பிடாமலே இருந்த மனிதர்... அப்புறம் என்னாச்சு தெரியுமா?
நாட்கள் சாப்பிடாமல் எடையைக் குறைப்பதாகக் கூறிக் கொண்டு இருந்திருக்கிறார். அவரைப் பற்றி தான் இந்த கட்டுரையில் பார்க்கப் போகிறோம். அது பற்றிய தொகுப்பு தான் இந்த கட்டுரை.
எடை குறைப்பை மேற்கொள்வதில் முக்கிய பங்கு வகிப்பது விரதம் இருப்பது அல்லது நமக்கு பிடித்தமான உணவு வகைகளைத் தவிர்ப்பது போன்ற வழிகளாகும். நமக்கு பிடித்த உணவுகளை முற்றிலும் தவிர்ப்பது என்பது கடினமான வழியாக இருந்தாலும், குறைவாக சாப்பிடுவது என்பது ஒரு எளிய வழிமுறையாகும்.
ஆனால் இதனையும் ஒரு குறிப்பிட்ட குறைந்த கால கட்டத்திற்கு மட்டுமே செயல்படுத்த முடியும். ஆனால் உணவை முற்றிலும் ஒதுக்கிவிட்டு எதுவுமே சாப்பிடாமல் வாழ்வது என்பதை கற்பனை செய்து பார்க்க முடியுமா?
382 நாள் விரதம்
ஆம். ஒரு மனிதர் தனது வாழ்நாளில் தொடர்ந்து 382 நாட்கள் சாப்பிடாமல் வாழ்ந்திருக்கிறார். 382 நாட்களுக்கு எதையும் சாப்பிடாத மனிதனைப் பற்றி விஞ்ஞான ஆதாரங்களை வழங்கும் பழைய மருத்துவ இதழில் விளக்கப்பட்டுள்ளதால் இந்த வழக்கு உண்மையானது. தனது கதையை பகிர்ந்து கொள்வதற்காகவே அந்த நபர் உயிர் பிழைத்திருந்தார்.
MOST
READ:
தினம்
10
பீர்
குடிச்சதால
இந்த
டாக்டருக்கு
என்ன
ஆச்சுனு
பாருங்க...
எடையைக் குறைக்க
1973 ஆம் ஆண்டு முதுகலை மருத்துவ இதழின் பதிப்பில் வெளியிடப்பட்ட வழக்கு விவரங்கள் "மிகவும் பருமனான ஒரு மனிதனின் நம்பமுடியாத கதையை வெளிப்படுத்தின. ஸ்காட்லாந்தில் ஒரு நபர் தன்னுடைய எடையைக் குறைப்பதற்காக மொத்தம் 382 நாட்கள் சாப்பிடுவதை நிறுத்தி இருந்தார்.
விநோத செயல்
இந்த நபரின் இந்த வினோத செய்கையால் அவருடைய உடல் ஆரோக்கியத்தில் எந்த ஒரு பாதிப்பு இல்லாமல் நல்ல உடல் ஆரோக்கியத்துடன் இருந்ததோடு மட்டும் இல்லாமல், அவருடைய எடை 456 பவுண்டில் இருந்து 180 பவுண்டாக குறைந்திருந்தது. டன்டீ ஸ்கூல் ஆஃப் மெடிசின் மருத்துவர்கள், வழக்கத்திற்கு மாறாக நீண்ட விரதத்தை அனுபவித்த ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகும், மனிதனின் எடை 196 பவுண்டுகள் நிலையானதாக இருப்பதை வெளிப்படுத்தினர்.
MOST
READ:
காத்ரீனா
கைய்ஃப்
எப்பவும்
சிக்குனு
இருக்கற
சீக்ரட்
என்ன
தெரியுமா?
அவங்களே
சொன்னது...
கின்னஸ் சாதனை
நீண்ட நாட்கள் சாப்பிடாமல் இருந்ததற்கான கின்னஸ் சாதனையில் இவருடைய பெயர் 1971ம் ஆண்டு இடம்பிடித்தது. இந்த நபர் 382 நாட்களில் எந்த வித திட உணவும் எடுத்துக் கொள்ளாத நிலையில் அவருடைய உடலில் படிந்திருந்த அளவுக்கு அதிகமான கொழுப்பில் இருந்த ஆற்றலால் அவர் உயிர் பிழைத்திருந்தார். இது தவிர, அவர் உடலின் உயிரியல் செயல்பாடுகளுக்காக பொட்டாசியம், சோடியம் மற்றும் ஈஸ்ட் மாத்திரைகளை உட்கொண்டு வந்தார்.
குடல் அசைவுகள்
அவரது குடல் அசைவுகள் மிகவும் அரிதாக இருப்பதை மருத்துவர்கள் வெளிப்படுத்தினார், அவர் ஒவ்வொரு 37 முதல் 48 நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே மலம் கழித்து வந்தார். அவர் தனது உடல்நலத்தை கட்டுக்குள் வைத்திருந்தார்.
சிறுநீர் பரிசோதனை
மேலும் அவரது இரத்தம் மற்றும் சிறுநீரை பரிசோதிக்க அடிக்கடி மருத்துவமனைக்கு செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார். மருத்துவ அறிக்கைகளுக்கு ஏற்ப, மருத்துவர்கள் அவருடைய குறைபாடுகளை சரி செய்யும் நோக்கில் புதிய மாத்திரைகளை அவருக்கு அறிமுகம் செய்து வந்தனர்.
திட உணவு
சிகாகோ ட்ரிப்யூன் அறிக்கையில் ஒரு அறிக்கையின் படி, மிக நீண்ட நாட்கள் சாப்பிடாமல் இருந்த அவர், தனது உணவுக் கட்டுப்பாட்டை முடித்து கொண்ட பிறகு சரியான முழுமையான திட உணவைச் சாப்பிட்ட நேரம், அவர் உணவின் சுவையை மறந்து விட்டதாகத் தெரிய வந்தது. இதனைக் கேட்கவே விநோதமாக இருக்கிறதா? உங்கள் கருத்துகளை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.