Latest Updates
-
இந்த 4 எழுத்துக்களில் பெயர் தொடங்குபவர்கள் ராஜவாழ்க்கை வாழ பிறந்தவர்களாம் - உங்க பெயரின் முதல் எழுத்து என்ன? -
கர்நாடகா ஸ்டைல் கசப்பே இல்லாத பாவக்காய் புளிக்குழம்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க -
வீட்டில் இந்த செடிகள் இருந்தா போதும்… காற்று சுத்தமாகும், பணமும் அதிர்ஷ்டமும் தானாக வரும்! -
பணத்தின் வரலாறு: பணம் கண்டுபிடிப்பதற்கு முன் எதை வைத்து மக்கள் பொருட்களை வாங்கினார்கள் தெரியுமா? -
சம்பளம் வந்ததும் மணி பிளாண்ட் வாங்குறீங்களா? பணத்தை அள்ளிக் கொடுக்கும் அந்த ரகசிய திசை இதுதான்! -
May 2026 Monthly Horoscope: மே மாதத்தில் வெற்றிப்படிக்கட்டில் வேகமாக ஏறப்போகும் 4 ராசிகள் இவங்கதான் -
மசாலா பன் தோசையும், உளுந்து சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க... -
இன்றைய ராசிபலன் 30 ஏப்ரல் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு கேட்டது கிடைக்கும் நாளாக இருக்குமாம் -
புதன் மேஷ ராசிக்கு செல்வதால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 4 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
1/4 கப் வேர்க்கடலை இருந்தா தேங்காய் சேர்க்காத இந்த சட்னியை அரைங்க - இட்லி, தோசைக்கு சூப்பரா இருக்கும்
இது என்னன்னு தெரியுதா? உத்து பாருங்க தெரியும்... இந்த மர்மத்த கண்டுபிடிச்சா நீங்க வேற லெவல்...
இந்தியாவில் உள்ள புகழ்பெற்ற மர்மமான இடங்கள் பற்றி தான் இந்த தொகுப்பில் பார்க்கப் போகிறோம். நமது இந்தியாவை பொருத்த வரை வேறு எங்கிலும் காணாத அளவுக்கு கலாச்சாரங்களும் பண்பாடும் நிறைந்த நாடாகும். இங்கே சி
நமது இந்தியாவை பொருத்த வரை வேறு எங்கிலும் காணாத அளவுக்கு கலாச்சாரங்களும் பண்பாடும் நிறைந்த நாடாகும். இங்கே சில மர்மமான சுற்றுலாத் தலங்களும் இருக்கத்தான் செய்கிறது.

அந்த மர்மமான இடங்களுக்கு பின்னால் மர்மமான செய்திகளும் பொதிந்து கிடக்கின்றனர் என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள். அந்த மாதிரியான இடங்களைப் பற்றிய சுவாரஸ்யமான தகவல் பாதை தான் இது.

ராமேஸ்வரம்
இந்து மதத்தின் புனிதத்தை பறைசாற்றும் விதமாக அமைந்தது தான் இந்த ராமேஸ்வரம். இது தமிழ்நாட்டில் அமையப்பெற்ற மாபெரும் புனிதத் தலமாகும். இந்த இடம் இதிகாச காவியமான ராமாயணத்தை பறைசாற்றும் விதமாக அமைந்துள்ளது இதன் சிறப்பு.
தேவி சீதா தேவியை மீட்க ராமர் கடலின் நடுவே கற்களால் பாலம் அமைத்து சென்றது இன்றளவும் உள்ளது. நடுக்கடல் நடுவே அந்தக் காலத்திலேயே இப்படியும் பாலம் அமைக்க முடியுமா என்பதை நினைக்கும் போது ஆச்சர்யமாகவும் மர்மமான ஒன்றாகவும் உள்ளது.

மேற்கு வங்காளம்
மேற்கு வங்காளத்தில் உள்ள சதுப்பு நிலங்கள் இருளில் பயமுறுத்தும் தோற்றத்துடன் காணப்படுகிறது. இங்கே மீனவர்கள் செல்லக் கூட பயப்படுகின்றனர். இங்கே இயற்கைக்கு மாறாக வெவ்வேறு வண்ணங்களில் ஒளிகள் தெரிகின்றன என்றும் அதை பார்க்கும் போது ஒரு பேய்த் தீவு மாதிரி தெரிகின்றது என்றும் இங்கு சென்றவர்கள் கூறுகின்றனர். இந்த வெளிச்சத்தால் குழப்பமடைந்து பாதை மாறி தங்கள் உயிரையை இழந்துள்ளனர் நிறைய மீனவர்கள்.

பிருந்தாவனம்
மைசூரில் உள்ள பிருந்தாவனம் தோட்டம் கடவுள் கிருஷ்ணனின் இடமாக கருதப்படுகிறது. இங்கே தான் கடவுள் கிருஷ்ணன் கிட்டத்தட்ட 16,000 பெண்களை திருமணம் செய்து கொண்டு உள்ளார்.
இந்த தோட்டத்தின் சிறப்பு என்னவென்றால் இங்குள்ள மரங்கள் அனைத்தும் கோபியர்களின் உருவம் என்று கூறி கிறார்கள். இரவு நேரத்திற்கு பிறகு இந்த தோட்டத்திற்குள் மனிதர்களோ விலங்குகளோ யாரும் நுழைய முடியாது. அதையும் மீறி அங்கே போனால் அவர்களுக்கு பைத்தியம் பிடிக்கும் என்கிறார்கள் இங்குள்ள மனிதர்கள்.

இடுக்கி வனப்பகுதி
இந்தியாவில் உள்ள சிவப்பு அபாய எச்சரிக்கை பகுதிகளில் இந்த இடுக்கி வசனமும் ஒன்று. 2001 ஆம் ஆண்டில் ஜூலை 25 ஆம் தேதி மர்மமான முறையில் சிவப்பு நிறத்தில் இங்கே மழை பொழிந்துள்ளது. இதனால் அங்குள்ள கட்டிடங்கள், ஆடைகள் எல்லாமே சிவப்பு நிறத்தில் இரத்தமாக காட்சியளிக்கின்றனர்.
கொஞ்சம் நேரம் கழித்து பார்த்தால் மழைநீரில் உள்ள சிவப்பு துகள்கள் மட்டும் அடியில் தங்கி தெளிந்த நீராக மாறி விடுகிறது. இது குறித்து ஆராய்ந்த போது அந்தப் பகுதியில் உள்ள பூஞ்சைகளின் வித்துக்கள் காற்றில் பரப்பட்டு இந்த மாதிரியான மழை நிகழ்வு ஏற்பட்டுள்ளது என்பது கண்டறியப்பட்டுள்ளது.



Click it and Unblock the Notifications