Latest Updates
-
இன்றைய ராசிபலன் 06 மே 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ராஜயோகம் தேடிவருமாம் -
ராகு-சந்திர சேர்க்கையால் உருவாகும் கிரகண யோகம்: மே 10 முதல் இந்த 3 ராசிக்காரங்க உஷாரா இருக்கணும்.. -
வெயிலால் எரியும் சருமத்தை கூலாக்கணுமா? அப்ப இந்த ஃபேஸ் பேக்கை தினமும் நைட் போடுங்க.. -
இன்ஸ்டாகிராம் 'போலி லவ் குரு' கும்பல் வேட்டை: தம்பதிகளுக்கு போலீஸ் விடுத்த அதிரடி எச்சரிக்கை! -
Mothers Day 2026: வேலைக்கு செல்லும் அம்மாக்களுக்கான சில ஆரோக்கிய டிப்ஸ்! -
இன்ஸ்டாகிராம் ஜோதிடர் பெயரில் பகீர் மோசடி! ஆன்மீக வலை விரித்து பெண்களை மிரட்டிய கொடூரம்! -
மொறுமொறுப்பான.. சோயா பாப்கார்ன் - எப்படி செய்றதுன்னு பாத்து செய்யுங்க.. குழந்தைங்க விரும்பி சாப்பிடுவாங்க.. -
குரு-சுக்கிர சேர்க்கையால் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: மே 14 முதல் இந்த 3 ராசிகளுக்கு பண வரவு அதிகரிக்கும்! -
கொளுத்தும் கோடையில் கற்றாழை வெச்சு.. இப்படி ஒருவாட்டி குழம்பு செய்யுங்க.. மீன் குழம்பு மாதிரி இருக்கும்.. -
மே 8 கிரகப்பிரவேசம்: உங்கள் புதிய வீட்டில் செல்வம் கொழிக்க இந்த வாஸ்து மாற்றங்களைச் செய்யுங்க!
மயிலிறகை உங்கள் வீட்டில் வைப்பதால் உங்கள் வீட்டில் ஏற்படும் அற்புதங்கள் என்னென்ன தெரியுமா?
அதிர்ஷ்டமான பொருள்கள் எனும்போது அதில் முக்கிய இடம் வகிப்பது மயில் இறகுதான். இந்து மதத்தில் மயிலிறகுக்கென தனி முக்கியத்துவம் உள்ளது.
இந்து மதத்தில் ஒவ்வொரு பொருளுக்கும் ஓர் அர்த்தமும், மகிமையும் உள்ளது. பல கடவுள்கள் மிருகங்களையும், பறவைகளையும் தங்களின் வாகனமாக கொண்டுள்ளனர். அவற்றில் பெரும்பாலானவை ஆபத்தான மிருகங்களாக இருக்கும். ஆனால் சில வாகனங்கள் அழகானதாகவும், அதிஷ்டமானதாகவும் இருக்கும்.

அதிர்ஷ்டமான பொருள்கள் எனும்போது அதில் முக்கிய இடம் வகிப்பது மயில் இறகுதான். இந்து மதத்தில் மயிலிறகுக்கென தனி முக்கியத்துவம் உள்ளது. ஏனெனில் அது பல கடவுள்களின் வாகனமாகவும், அடையாளமாகவும் இருக்கிறது. அதனால் அதனை வீட்டில் வைப்பது உங்களுக்கு பல நன்மைகளை ஏற்படுத்தும். இந்த பதிவில் மயிலிறகின் முக்கியத்துவம் மற்றும் அதனால் ஏற்படும் நன்மைகள் என்னவென்பதை பார்க்கலாம்.

பாதுகாப்பு
மயில் பாதுகாப்பு மற்றும் கவசத்தின் அடையாளமாக கருதப்படுகிறது. இது நம்மை மனக்குழப்பங்களில் இருந்து பாதுகாக்கும் என்று கூறப்படுகிறது. இந்து புராணங்களின் படி உங்கள் வீட்டில் மயிலிறகு வைப்பது உங்கள் இல்லத்தை எதிர்மறை சக்திகளில் இருந்து பாதுகாக்கும் என்று கூறப்படுகிறது.

கடவுள்கள்
மயிலிறகுகள் இந்தியாவில் மதிக்கப்படும் அளவிற்கு வேறு எந்த நாட்டிலும் மதிக்கப்படுவதில்லை. தமிழ்க்கடவுள் முருகன், தேவர்களின் அதிபதி இந்திரன் ஆகியோர் மயிலை வாகனமாக பயன்படுத்துகின்றனர். கிருஷ்ணா பரமாத்மா தனது கிரீடத்தில் எப்பொழுதும் மயிலிறகை வைத்திருப்பார். இது அவரின் அடையாளமாகவே கருதப்படுகிறது.

அலங்காரம்
அனைத்து விஷேசங்களிலும் அலங்கார பொருட்களில் மயிலிறகு பயன்படுத்தப்படுகிறது. அதன் முக்கிய நோக்கம் பாதுகாப்புதான். ஒட்டுமொத்த ஆசியாவிலும் மயிலிறகு அதிர்ஷ்டம் மற்றும் பாதுகாப்பிற்காக மயிலிறகு பயன்டுத்தப்படுகிறது. ஆனால் 20ஆம் நூற்றாண்டுகளின் தொடக்கத்தில் மேற்கு நாடுகளில் மயிலிறகு துரதிர்ஷ்டத்தின் அடையாளமாக கருதப்பட்டது.

கிரேக்க புராணம்
கிரேக்க புராணத்தில் மயிலிறகு ஹெரா என்னும் கடவுளுடன் தொடர்புடையது. ஹெரா ஆர்கஸ் என்னும் நூறு கண்களை உடைய கடவுளிடம் இருந்து மயிலை உருவாக்கியதாக கிரேக்க புராணங்கள் கூறுகிறது. இது சொர்க்கத்தின் வாசலாகவும், நட்சத்திரத்தின் கண்களாகவும் கருதப்படுகிறது.

இந்து புராணம்
இந்து புராணங்களின் படி மயிலிறகிற்கும், செல்வத்தின் கடவுளான லக்ஷ்மி தேவிக்கும் தொடர்புள்ளது. இது அதிர்ஷ்டம், செல்வம், இரக்கம் மற்றும் பொறுமையின் அடையாளமாக உருவாக்கப்படுத்தப்படுகிறது. இந்த அனைத்து குணங்களும் வேண்டும் என்பவர்கள் பூஜையறையில் இதனை வைத்து வழிபடலாம்.

புத்த மதம்
உலகின் மிகவும் முக்கியமான மதங்களில் ஒன்று புத்த மதமாகும். புத்த மதத்தில் மயிலிறகிற்கு வெளிப்படைத்தன்மை என்று பொருள். ஏனெனில் அவை தங்கள் வாலை காட்டும்போது அனைத்து இறகுகளையும் விரிக்கிறது.

கிறிஸ்துவம்
கிறிஸ்துவ மதத்தில் மயிலிறகு மறுஜென்மம் மற்றும் அமரத்துவத்தின் அடையாளமாகும். அழியாமை பற்றிய போதனைகள் கிறிஸ்துவ மதத்தில் மிகவும் முக்கியமானதாகும்.



Click it and Unblock the Notifications