Just In
- 57 min ago தோசை மாவு இல்லையா? வேர்க்கடலையை வெச்சு இப்படி தோசை சுடுங்க.. வேற லெவல் டேஸ்ட்ல இருக்கும்..
- 4 hrs ago Today Rasi Palan 25 April 2024: இன்று இந்த ராசிக்காரர்களுக்கு புதிய நபர்களுடன் பழகும் போது கவனம் தேவை...
- 9 hrs ago 18 ஆண்டுகளுக்கு பின் உருவாகியுள்ள அங்காரக யோகம்: ஜூன் வரை இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்...
- 10 hrs ago Garlic Peels: பூண்டின் தோலில் இவ்வளவு நன்மைகளா? என்னென்ன-ன்னு தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க..
Don't Miss
- News பாஜகவிற்கு இடியாக வந்து இறங்கிய அகிலேஷ் முடிவு! உ.பியில் தாமரை குலுங்க போகுது! போச்சு எல்லாம் போச்சு
- Technology TDS முழுசா வேணுமா? அப்போ உங்க PAN கார்டுல இது முக்கியம்.. உடனே செஞ்சிடுங்க.. Income Tax-ன் திடீர் உத்தரவு!
- Movies டெய்லர் ஸ்விஃப்டுடன் கச்சேரி நடத்தப் போகிறாரா ஏ.ஆர். ரஹ்மான்?.. அந்த விருது வேற கிடைச்சிருக்கே!
- Sports தோனி கிடையாது! இந்த 28 வயது வீரர் தான் மிகவும் அபாயகரமான வீரர்.. மேத்தீவ் ஹைடன் கருத்து
- Automobiles அன்-ரிசர்வ் இரயில் பெட்டியை எல்லாம் அகற்ற வேண்டிய நேரம் வரும்!! பிரதமர் உறுதியா கூறியிருக்காரு!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
மயிலிறகை உங்கள் வீட்டில் வைப்பதால் உங்கள் வீட்டில் ஏற்படும் அற்புதங்கள் என்னென்ன தெரியுமா?
அதிர்ஷ்டமான பொருள்கள் எனும்போது அதில் முக்கிய இடம் வகிப்பது மயில் இறகுதான். இந்து மதத்தில் மயிலிறகுக்கென தனி முக்கியத்துவம் உள்ளது.
இந்து மதத்தில் ஒவ்வொரு பொருளுக்கும் ஓர் அர்த்தமும், மகிமையும் உள்ளது. பல கடவுள்கள் மிருகங்களையும், பறவைகளையும் தங்களின் வாகனமாக கொண்டுள்ளனர். அவற்றில் பெரும்பாலானவை ஆபத்தான மிருகங்களாக இருக்கும். ஆனால் சில வாகனங்கள் அழகானதாகவும், அதிஷ்டமானதாகவும் இருக்கும்.
அதிர்ஷ்டமான பொருள்கள் எனும்போது அதில் முக்கிய இடம் வகிப்பது மயில் இறகுதான். இந்து மதத்தில் மயிலிறகுக்கென தனி முக்கியத்துவம் உள்ளது. ஏனெனில் அது பல கடவுள்களின் வாகனமாகவும், அடையாளமாகவும் இருக்கிறது. அதனால் அதனை வீட்டில் வைப்பது உங்களுக்கு பல நன்மைகளை ஏற்படுத்தும். இந்த பதிவில் மயிலிறகின் முக்கியத்துவம் மற்றும் அதனால் ஏற்படும் நன்மைகள் என்னவென்பதை பார்க்கலாம்.
பாதுகாப்பு
மயில் பாதுகாப்பு மற்றும் கவசத்தின் அடையாளமாக கருதப்படுகிறது. இது நம்மை மனக்குழப்பங்களில் இருந்து பாதுகாக்கும் என்று கூறப்படுகிறது. இந்து புராணங்களின் படி உங்கள் வீட்டில் மயிலிறகு வைப்பது உங்கள் இல்லத்தை எதிர்மறை சக்திகளில் இருந்து பாதுகாக்கும் என்று கூறப்படுகிறது.
கடவுள்கள்
மயிலிறகுகள் இந்தியாவில் மதிக்கப்படும் அளவிற்கு வேறு எந்த நாட்டிலும் மதிக்கப்படுவதில்லை. தமிழ்க்கடவுள் முருகன், தேவர்களின் அதிபதி இந்திரன் ஆகியோர் மயிலை வாகனமாக பயன்படுத்துகின்றனர். கிருஷ்ணா பரமாத்மா தனது கிரீடத்தில் எப்பொழுதும் மயிலிறகை வைத்திருப்பார். இது அவரின் அடையாளமாகவே கருதப்படுகிறது.
அலங்காரம்
அனைத்து விஷேசங்களிலும் அலங்கார பொருட்களில் மயிலிறகு பயன்படுத்தப்படுகிறது. அதன் முக்கிய நோக்கம் பாதுகாப்புதான். ஒட்டுமொத்த ஆசியாவிலும் மயிலிறகு அதிர்ஷ்டம் மற்றும் பாதுகாப்பிற்காக மயிலிறகு பயன்டுத்தப்படுகிறது. ஆனால் 20ஆம் நூற்றாண்டுகளின் தொடக்கத்தில் மேற்கு நாடுகளில் மயிலிறகு துரதிர்ஷ்டத்தின் அடையாளமாக கருதப்பட்டது.
MOST READ:ஜூன் மாதத்தில் பிறந்தவங்க நல்லவங்களா இல்லை கெட்டவங்களா நீங்களே தெரிஞ்சிக்கோங்க...!
கிரேக்க புராணம்
கிரேக்க புராணத்தில் மயிலிறகு ஹெரா என்னும் கடவுளுடன் தொடர்புடையது. ஹெரா ஆர்கஸ் என்னும் நூறு கண்களை உடைய கடவுளிடம் இருந்து மயிலை உருவாக்கியதாக கிரேக்க புராணங்கள் கூறுகிறது. இது சொர்க்கத்தின் வாசலாகவும், நட்சத்திரத்தின் கண்களாகவும் கருதப்படுகிறது.
இந்து புராணம்
இந்து புராணங்களின் படி மயிலிறகிற்கும், செல்வத்தின் கடவுளான லக்ஷ்மி தேவிக்கும் தொடர்புள்ளது. இது அதிர்ஷ்டம், செல்வம், இரக்கம் மற்றும் பொறுமையின் அடையாளமாக உருவாக்கப்படுத்தப்படுகிறது. இந்த அனைத்து குணங்களும் வேண்டும் என்பவர்கள் பூஜையறையில் இதனை வைத்து வழிபடலாம்.
புத்த மதம்
உலகின் மிகவும் முக்கியமான மதங்களில் ஒன்று புத்த மதமாகும். புத்த மதத்தில் மயிலிறகிற்கு வெளிப்படைத்தன்மை என்று பொருள். ஏனெனில் அவை தங்கள் வாலை காட்டும்போது அனைத்து இறகுகளையும் விரிக்கிறது.
MOST READ:இந்த ரேகை கையில் இருப்பவர்களுக்கு நற்பெயரும், புகழும் எப்பொழுதும் கிடைக்காததாம் தெரியுமா?
கிறிஸ்துவம்
கிறிஸ்துவ மதத்தில் மயிலிறகு மறுஜென்மம் மற்றும் அமரத்துவத்தின் அடையாளமாகும். அழியாமை பற்றிய போதனைகள் கிறிஸ்துவ மதத்தில் மிகவும் முக்கியமானதாகும்.