Latest Updates
-
இந்தியாவின் டாப் 5 பணக்கார முதலமைச்சர்கள் இவங்கதான் - தமிழ்நாடு முதலமைச்சர் எத்தனாவது இடத்தில் உள்ள தெரியுமா? -
காலசர்ப்ப யோகத்தால் இன்று முதல் ஜூன் 23 வரை இந்த 3 ராசிக்கு கஷ்ட காலமா இருக்கும்.. உஷார்.. -
வெயில் மற்றும் மழையால் வீட்டில் புழுக்கமா? இந்த 4 வாஸ்து செடிகள் இருந்தால் குளிர்ச்சியும் பணவரவும் நிச்சயம்! -
கீரை வாங்குனா இந்த மாதிரி வித்தியாசமா மிளகூட்டல் செஞ்சு பாருங்க - ஆரோக்கியமாவும், சுவையாவும் இருக்கும் -
1/2 கிலோ மட்டன் வாங்குனா.. இப்படி ஒருடைம் செய்யுங்க.. ருசி அல்டிமேட்டா இருக்கும்.. -
சூரியன் மிதுன ராசிக்கு செல்வதால் ஜெயிக்கிற குதிரையாக ஜொலிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
மழைக்காலத்தில் வீட்டில் பணமும் ஆரோக்கியமும் குறையாமல் இருக்கணுமா? இந்த 5 வாஸ்து ரகசியங்களை உடனே பின்பற்றுங்க! -
முக்கியமான 5 ஊட்டச்சத்து குறைபாடுகளின் ஆரம்ப அறிகுறிகளும்.. அவற்றை தடுக்கும் உணவுகளும்.. -
சாணக்கியர் கூறும் வெற்றிக்கான 5 அடிப்படை ரகசியங்கள் - இதை பாலோ பண்றவங்க பெரிய ஆளா வருவார்களாம் -
சனி-சுக்கிரனால் உருவாகும் நவபஞ்சம ராஜயோகம்: ஜூன் கடைசி இந்த 4 ராசிக்கு பொற்காலமா இருக்கும்..
காதலியோட கடைங்கிறதால காபி நிறைய குடிச்சு சர்க்கரை நோயால் பாதித்த மனிதர்... அடக்கொடுமையே!
காபி ஷாப்பில் வேலை பார்க்கும் பெண்ணை காதலித்து சர்க்கரை நோயை வாங்கிக் கொண்ட மனிதர் பற்றி தான் இந்த தொகுப்பில் பார்க்கப் போகிறோம்.
'காதல்' இந்த வார்த்தையை கேட்டதுமே ஓர் இனம்புரியாத சிலிர்ப்பு உள்ளத்தில் ஏற்படும். அதுவும், பார்த்த மாத்திரத்திலே காதல் என்றால் பரவசம்தான்! 'அண்ணலும் நோக்கினான்; அவளும் நோக்கினாள்' என்ற பாணி காதல் துடிப்பானது.

வழக்கமாக, காதல் என்று வந்துவிட்டால், தங்கள் மனம் நாடியவரின் கவனத்தை ஈர்க்க மக்கள் என்னென்ன வெல்லாமோ செய்வார்கள். இந்த ஆளு என்னதான் செய்தார்? அதனால் என்ன வந்தது?

ஆஹா... பத்திக்கிச்சு
தைவான் நாட்டில் பிரபலமான சமூக ஊடக கருத்து பரிமாற்றதளம் டிகார்டு (Dcard). 'நம் கனவு கன்னியை கரம்பிடிக்க பொறுமை காக்க வேண்டும்' என்று தலைப்பிட்டு, தம் காதல் கதையை இத்தளத்தில் ஒருவர் பகிர்ந்துள்ளார்.
கதாநாயகனின் வீட்டின் அருகே 7-லெவன் என்று ஒரு கடை உள்ளது. அதில் ஓர் இளம்பெண் பணிபுரிந்து வந்துள்ளார். அந்தப் பெண்ணை பார்த்ததும் நம் ஹீரோவுக்குள் காதல் தீ பற்றிக் கொண்டது.

காஃபியும் காதலும்
அந்த இளம்பெண்ணிடம், "ஐ லவ் யூ" என்று சொல்வதற்கு வெட்கப்பட்டார் ஹீரோ. சரி, பிறகு எப்படித்தான் மனங்கவர்ந்தவளை அணுகுவது? என்று யோசித்தவருக்கு ஒரு ஐடியா கிடைத்தது. அதன்படி, அந்தப் பெண் பணிபுரிந்த கடைக்குச் சென்று தினமும் காஃபி குடிக்கலாம் என்று தீர்மானித்தார்.

ஸ்வீட் ஹார்ட்
வெறுமனே காஃபி வாங்கினால், பல வாடிக்கையாளர்களுள் ஒருவனாக போய்விடுவோமோ என்ற தயக்கம் வந்தது. கடைக்குச் சென்று காஃபி கேட்டார். அந்தப் பெண், காஃபி கொடுக்க வந்தபோது, "அஞ்சு ஸ்பூன் சர்க்கரை போடுங்க" என்றார். "அஞ்சு ஸ்பூனா? ரொம்ப ஸ்வீட்டாயிருமே!" அந்தப் பெண் கூறியதற்கு, "உங்க அளவுக்கு ஸ்வீட்டாகாது..." என்று பதில் கூறினார் ஹீரோ. அந்தப் பெண்ணின் முகத்தில் வெட்கப் புன்னகை தவழ்ந்தது. ஹீரோ, நெஞ்சை நிமிர்த்திக்கொண்டு காஃபியோடு வெளியேறினார். அன்றிலிருந்து தினமும் கடைக்குச் செல்வதும், ஐந்து கரண்டி சர்க்கரை போட்டு காஃபி குடிப்பதும் தொடர்ந்தது.

எழுத மறந்த கதை
தன்னுடைய பதிவில் இறுதி வரியில், "இரண்டு ஆண்டுகள் கடந்தன. எனக்கு சர்க்கரை வியாதி வந்துவிட்டது" என்று எழுதியிருந்தார்.
அவரது பதிவை வாசித்த நெட்டிசன்கள் அத்தனைபேருமே காதல், கல்யாணத்தில் தான் முடிந்திருக்கும் என்ற எதிர்பார்ப்போடு இருந்ததால், கடைசி வரி அவர்களை அதிர்ச்சியடைய வைத்தது. யாரும் எதிர்பாராத முடிவை அவர் எழுதியிருந்தார். கனவு கன்னி அவருக்குச் சொந்தமானாளா என்பதை அவர் சொல்லாமலே விட்டுவிட்டார்.



Click it and Unblock the Notifications