Latest Updates
-
செவ்வாய் மேஷ ராசிக்கு செல்வதால் கோடீஸ்வர யோகத்தை பெறப்போகும் 4 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
இந்தியாவின் தேசிய காய் என்று அழைக்கப்படும் காய்கறி எது? அதற்கான காரணம் என்ன தெரியுமா? -
ஏப்ரல் இறுதியில் குரு-புதன் சேர்க்கையால் உருவாகும் அரிய ராஜயோகம்: இந்த 3 ராசிகளின் வருமானம் உயரும்! -
வெயில் காலத்தில் திருமணமா? இந்த 5 விஷயங்களைச் செய்யாவிட்டால் விசேஷமே வீணாகிவிடும்! -
மட்டன் சுவையை மிஞ்சும் சோயா உருளைக்கிழங்கு குருமா ரெசிபி - செஞ்சு பாருங்க, செமையா இருக்கும் -
பொருளாதாரச் சுரண்டல் இனி குடும்ப வன்முறை! மனைவியிடம் கையேந்த வைக்கும் கணவர்களுக்கு நீதிமன்றம் கொடுத்த செக்! -
செவ்வாயின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டகாத்து வீசும்! உங்க ராசியும் இதுல இருக்கா? -
ஏசி ஓடினாலும் கரண்ட் பில் கம்மியா வரணுமா? ஏசியை இந்த மாதிரி யூஸ் பண்ணுங்க -
வீட்டிலேயே மாம்பழ ஐஸ்க்ரீம்மை ஈஸியாக செய்வது எப்படி-ன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணுங்க.. -
40 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் இந்த உணவுகளில் ஒன்றை தினமும் சாப்பிடணுமாம் - அதான் நல்லது
காதலியோட கடைங்கிறதால காபி நிறைய குடிச்சு சர்க்கரை நோயால் பாதித்த மனிதர்... அடக்கொடுமையே!
காபி ஷாப்பில் வேலை பார்க்கும் பெண்ணை காதலித்து சர்க்கரை நோயை வாங்கிக் கொண்ட மனிதர் பற்றி தான் இந்த தொகுப்பில் பார்க்கப் போகிறோம்.
'காதல்' இந்த வார்த்தையை கேட்டதுமே ஓர் இனம்புரியாத சிலிர்ப்பு உள்ளத்தில் ஏற்படும். அதுவும், பார்த்த மாத்திரத்திலே காதல் என்றால் பரவசம்தான்! 'அண்ணலும் நோக்கினான்; அவளும் நோக்கினாள்' என்ற பாணி காதல் துடிப்பானது.

வழக்கமாக, காதல் என்று வந்துவிட்டால், தங்கள் மனம் நாடியவரின் கவனத்தை ஈர்க்க மக்கள் என்னென்ன வெல்லாமோ செய்வார்கள். இந்த ஆளு என்னதான் செய்தார்? அதனால் என்ன வந்தது?

ஆஹா... பத்திக்கிச்சு
தைவான் நாட்டில் பிரபலமான சமூக ஊடக கருத்து பரிமாற்றதளம் டிகார்டு (Dcard). 'நம் கனவு கன்னியை கரம்பிடிக்க பொறுமை காக்க வேண்டும்' என்று தலைப்பிட்டு, தம் காதல் கதையை இத்தளத்தில் ஒருவர் பகிர்ந்துள்ளார்.
கதாநாயகனின் வீட்டின் அருகே 7-லெவன் என்று ஒரு கடை உள்ளது. அதில் ஓர் இளம்பெண் பணிபுரிந்து வந்துள்ளார். அந்தப் பெண்ணை பார்த்ததும் நம் ஹீரோவுக்குள் காதல் தீ பற்றிக் கொண்டது.

காஃபியும் காதலும்
அந்த இளம்பெண்ணிடம், "ஐ லவ் யூ" என்று சொல்வதற்கு வெட்கப்பட்டார் ஹீரோ. சரி, பிறகு எப்படித்தான் மனங்கவர்ந்தவளை அணுகுவது? என்று யோசித்தவருக்கு ஒரு ஐடியா கிடைத்தது. அதன்படி, அந்தப் பெண் பணிபுரிந்த கடைக்குச் சென்று தினமும் காஃபி குடிக்கலாம் என்று தீர்மானித்தார்.

ஸ்வீட் ஹார்ட்
வெறுமனே காஃபி வாங்கினால், பல வாடிக்கையாளர்களுள் ஒருவனாக போய்விடுவோமோ என்ற தயக்கம் வந்தது. கடைக்குச் சென்று காஃபி கேட்டார். அந்தப் பெண், காஃபி கொடுக்க வந்தபோது, "அஞ்சு ஸ்பூன் சர்க்கரை போடுங்க" என்றார். "அஞ்சு ஸ்பூனா? ரொம்ப ஸ்வீட்டாயிருமே!" அந்தப் பெண் கூறியதற்கு, "உங்க அளவுக்கு ஸ்வீட்டாகாது..." என்று பதில் கூறினார் ஹீரோ. அந்தப் பெண்ணின் முகத்தில் வெட்கப் புன்னகை தவழ்ந்தது. ஹீரோ, நெஞ்சை நிமிர்த்திக்கொண்டு காஃபியோடு வெளியேறினார். அன்றிலிருந்து தினமும் கடைக்குச் செல்வதும், ஐந்து கரண்டி சர்க்கரை போட்டு காஃபி குடிப்பதும் தொடர்ந்தது.

எழுத மறந்த கதை
தன்னுடைய பதிவில் இறுதி வரியில், "இரண்டு ஆண்டுகள் கடந்தன. எனக்கு சர்க்கரை வியாதி வந்துவிட்டது" என்று எழுதியிருந்தார்.
அவரது பதிவை வாசித்த நெட்டிசன்கள் அத்தனைபேருமே காதல், கல்யாணத்தில் தான் முடிந்திருக்கும் என்ற எதிர்பார்ப்போடு இருந்ததால், கடைசி வரி அவர்களை அதிர்ச்சியடைய வைத்தது. யாரும் எதிர்பாராத முடிவை அவர் எழுதியிருந்தார். கனவு கன்னி அவருக்குச் சொந்தமானாளா என்பதை அவர் சொல்லாமலே விட்டுவிட்டார்.



Click it and Unblock the Notifications