Latest Updates
-
சனி-சந்திர சேர்க்கை உருவாக்கும் விஷ யோகம்: நாளை முதல் இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்! -
சனிபகவானின் நட்சத்திர மாற்றத்தால் இந்த 3 ராசிக்காரர்களை துரதிர்ஷ்டம் விடாம துரத்தப்போகுதாம் - ஜாக்கிரதை -
2 குடைமிளகாயும், 2 வெங்காயமும் இருந்தா.. 10 நிமிஷத்துல இந்த கிரேவியை செய்யுங்க.. சப்பாத்திக்கு அள்ளும்.. -
தேங்காய் சட்னியை ஒருதடவை கேரளா ஸ்டைலில் இந்த மாதிரி அரைச்சு பாருங்க - டேஸ்ட் அட்டகாசமா இருக்கும் -
ஜூன் 8-10 கனமழை எச்சரிக்கை! உங்கள் திருமணத்தை மழையிலிருந்து காப்பாற்ற இந்த 5 டிப்ஸ் போதும்! -
பழங்களின் ராணி என்று அழைக்கப்படும் அந்த பழம் எது தெரியுமா? நீங்க இந்த பழத்தை சாப்பிட்டு இருக்கீங்களா? -
இந்த படத்துல உங்க கண்ணுக்கு முதல்ல என்ன தெரிஞ்சதுன்னு சொல்லுங்க.. நீங்க எப்படிப்பட்டவங்கன்னு சொல்றோம்.. -
ஜூன் 8, 9 திருமணமா? மழையால் உங்கள் கனவுத் திருமணம் பாழாகாமல் இருக்க, இந்த மாற்றங்களை உடனே செய்யுங்கள்! -
சுக்கிரன் கடக ராசிக்கு செல்வதால் செல்வத்தையும், புகழையும் குவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
ஃபேஸ் வாஷ் Vs ஃபேஸ் ஸ்க்ரப் - இவற்றில் சிறந்தது எது?
ஜாக்கிரதையா வாங்குங்க... இறால்ல ஜெலட்டின் ஊசிபோட்டு விக்கறாங்களாம்...
சீன விற்பனையாளர்கள் இறாலில் ஜெலட்டின் ஊசி போட்டு விற்பது கண்டுபிடிக்கப்பட்டது பற்றி தான் இந்த கட்டுரை உங்களுக்கு விளக்கமாகக் கொடுக்கப்பட்டுள்ளது. அது பற்றிய விளக்கமான தொகுப்பு தான் இது.
ஆர்கானிக் உணவுகளை சாப்பிட வேண்டும் என்ற ஆர்வம் மக்கள் மத்தியில் ஒரு புறம் பரவி வருகிறது. மறுபுறம் விற்பனையாளர்கள் மக்களை ஏதாவது ஒரு ரூபத்தில் ஏமாற்றிக் கொண்டே இருக்கிறார்கள். இது போல் ஒரு வழக்கு தற்போது சீனாவில் நடந்துள்ளது.

இறால் வாங்கவரும் வாடிக்கையாளர்களுக்கு ஆரோக்கியமாகவும் சாறு நிறைந்ததாகவும் இறால் காணப்பட வேண்டும் என்று நினைத்து இந்த ஏமாற்று வேலை நிகழ்ந்துள்ளது. இறாலை நன்றாக கவனித்துப் பார்த்தால் அதில் ஜெலட்டின் உட்செலுத்தப்பட்டது தெரிய வருகிறது. இதனைப் பற்றி மேலும் தெரிந்துக் கொள்ள இந்த பதிவைப் படியுங்கள்.

பெண் புத்திசாலி
இறாலில் ஜெலட்டின் நிரப்பப்பட்டிருப்பதை ஒரு பெண் கண்டுபிடித்தார். ஒரு பெண் கடையில் இருந்து புதிதாக வாங்கி வந்தார். வீட்டிற்கு வந்ததும் வாங்கி வந்த இறாலை உரிக்கத் தொடங்கினார் .அந்தப் பெரிய இறாலின் தலையை உரிக்கும்போது அதில் ஜெலட்டின் நிரம்பி இருப்பதைக் கண்டு அதிர்ந்துவிட்டார்.

இது முதல் முறை அல்ல
இறாலில் ஜெல்லி போன்ற ஒரு கூறு காணப்படுவது சீனாவில் முதல்முறை அல்ல என்று பல அறிக்கைகள் கூறுகின்றன. குறிப்பாக 2012ம் ஆண்டு முதல் சீனாவின் பல்வேறு இடங்களில் இறாலில் இது போன்ற ஒரு கூறு காணப்படுவதாக அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

என்ன காரணம்?
பல்வேறு காரணங்களுக்காக இறாலில் ஜெலட்டின் உட்செலுத்தப்படுகிறது. இறாலை உலர்த்தி, காய வைத்து, பனி நீக்கம் செய்து, பிறகு அவை ஆரோக்கியமாகவும் புஷ்டியாகவும் காணப்படுவதற்காக வியாபாரிகள் இறாலுக்குள் ஜெலட்டினை ஊசி மூலம் உட்செலுத்துகின்றனர்.
இதனால் இறால் முன்பை விட புஷ்டியாக, ஆரோக்கியமாக வளமாக காணப்படுகிறது. மேலும் இப்படி ஜெலட்டின் உட்செலுத்தப்ட்ட இறால்கள் முன்பை விட 20 முதல் 30 சதவிகிதம் கூடுதல் எடையுடன் விளங்குகிறது. இதனால் வியாபாரிகளுக்கு கூடுதல் லாபம் கிடைக்கிறது.

ஒரே பயம்
இந்த வகை ஜெலட்டின் நிரப்பப்பட்ட இறால்கள் மனிதர்கள் உண்ணக் கூடியதாக இருக்குமா என்பது இதனை வாங்கி உண்ணும் வாடிக்கையாளர்களின் சந்தேகமாக உள்ளது. இதற்குக் காரணம், மலிவான விலையில் தொழிற்சாலை பயன்பாட்டிற்காக கிடைக்கும் ஜெலட்டின் உட்கொள்வதால் தீங்கு ஏற்படும் என்பது நிரூபிக்கப்பட்ட உண்மை.
இனியும் தொடர்ந்து இதே இறால்களை வாங்கி உண்பதா அல்லது இறால் சாப்பிடும் பழக்கத்தை அறவே கைவிடுவதா என்பது வாடிக்கையாளர்களுக்கு இருக்கும் இரண்டு தீர்வுகளாகும்.
இந்த பதிவைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? உங்கள் மேலான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ள மறக்க வேண்டாம்.



Click it and Unblock the Notifications